9/09/2012

வேசறவு


நன்றாகப் படிப்பவர்கள்
நல்லவர்களாகவே இருப்பர்
பொய் சொல்ல மாட்டார்கள்
ஒழுக்கம் தவறமாட்டார்கள்
முரட்டுத்தனமாய் 
நம்பிய காலமது!

ஊரின் நம்பிக்கைக்கு
வேட்டு வைக்காமல்
நன்றாகப் படிக்கும் மாணவர்களும்
நல்லவர்களாகவே இருந்தனர்!

எட்டாம் வகுப்பு
ஆண்டின் முதல் நாள்
முதல்வரிசையில் இடம்
வகுப்புக்கு சட்டாம்புள்ளை
பேசினால்
பேசியவர் பெயரெழுதும் வேலை
என எல்லாச் சிறப்பும்
ஊர் மணியக்காரர் மகன்
ஏழாம் வகுப்பு அ பிரிவு
சட்டாம்புள்ளை
இரவிக்கே வாய்த்தது
ஏழாம் வகுப்பு ஆ பிரிவு
சட்டாம்புள்ளை
மணியனுக்கு
ஒன்றும் இல்லை!

மெளலி வாத்தியார்
வசந்தா டீச்சர்
கிளப்பிவிட்ட புரளியில்
நொந்துபோன வசந்தாக்கா
நல்லாப் படிக்கிறவங்கள்ல
உங்க மகனும் ஒருத்தன்
அவனுங்கூட
இதை உண்மைன்னு நம்புறானே
வேலூர்ச் சந்தையில்
காய்கறி வாங்கப் போன அம்மாவிடம்
சொல்லிச் சொல்லி அழுதீர்கள்!!

சட்டாம்புள்ளை
ஆகவில்லையெனும்
ஏக்கத்தில்
பொறாமையில்
அறியாமையில்
நானுமதை நம்பிப் பகரம் விட்டேன்
இன்று மனம் கனத்து
இனபத் தமிழெழுத்திடைத் துயின்று
வேசறவு தீர்க்க முயலுகிறேன்!
மன்னிச்சிடுங்க அக்கா!!

இனபத் தமிழெழுத்திடைத் துயின்று
வேசறவு தீர்க்க முயலுகிறேன்!
மன்னிச்சிடுங்க அக்கா!!

3 comments:

வருண் said...

***மன்னிச்சிடுங்க அக்கா!!***

ஆமாக்கா, தயவு செய்து மன்னிச்சுடுங்க!

நம்பள்கி said...

த.ம. 1

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வித்தியாசமான சிந்தனை