2/26/2023

வரிகளுக்கிடையே

read between the lines: look for or discover a meaning that is hidden or implied rather than explicitly stated.

வாசிக்கும் போது, காட்சிகளைக் காணும் போது, செவியுறும் போதென, எல்லாச்சூழலுக்கும் இது பொருந்தும். குழுவில் இடம் பெற்ற இரு உள்ளீடுகள் குறித்துக் கருத்துகளைப் பகிர விழைகின்றேன்.

முதலாவது, உலகத் தாய்மொழி நாள் காணொலியைக் கண்டு இன்புற்றேன். நல்லதொரு முயற்சி. வட்டாரத் தமிழில் பேசி அவற்றை அறிமுகப்படுத்தியமை நன்று. சீர்நிலை போற்றுதலும் அவசியம். தமிழ் மொழி பரவலாக ஆட்சி புரிந்து வருகின்றது. எல்லாப் பகுதிகளுக்கும் சீராக நேரம் இருந்து விட்டால் நலம். அல்லாவிடில் கூடுதலாக இடம் பெறுகின்ற உள்ளீடு இன்னபிற தகவலுக்கு வித்திட்டு விடும். When everything comes together, life is in balance.

அடுத்தது, மருத்துவர் ஷாலினி அவர்களிடம் விடுக்கப்பட்ட வினா: நம்மவர்கள் முன் பிள்ளைகள் அப்படி இப்படி நடந்து கொள்கின்றனர். ஆனால் பொதுயிடத்தில் நன்றாக நடந்து கொள்கின்றனர். இது நம்முடைய தாக்கத்தினாலா? சிரிப்புக்கிடையே, ஆமாம் என்கின்ற விடை அமைகின்றது.

நாம் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய பற்றியம் இது. தமிழ் அமைப்புகள் அமெரிக்க விழுமியத்தை இயன்றமட்டிலும் ஒழுக முற்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, ஒரு கூட்டத்தில், பொதுக்குழு உறுப்பினர், ‘வார்னிங்’ எனும் சொல்லைப் பயன்படுத்துகின்றார். உடனே தலைவர் பொறுப்பில் இருப்பவர் தனிநபர்த் தாக்குதலில் ஈடுபடுகின்றார். என்ன காரணம்? சொல்லைக் காதில் வாங்கியதுமே, மனத்தில் படிநிலை மனப்பான்மை சட்டெனத் தோன்றுகின்றது. மேல், கீழ் என்றெல்லாம் எண்ணம் விரிவடைந்து கொந்தளிப்புக் கொள்கின்றது. இப்படியான செயற்பாடுகள்தாம் கசடான பண்பாட்டுச் சீர்கேட்டுக்குக் காரணம். பிள்ளைகளின் மீதும் இதன் தாக்கம் படிய நேர்கின்றது. Because, American Kids read in between lines as they are trained that way since childhood.

2/19/2023

மயிலே மயிலே

இந்திரன் எழுதிய பதிவைப் படிக்கையில் பொன் விஜயன் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று புரிகிறது. இந்நாட்டில் பணமில்லாமல் அரூபமான லட்சியங்களுக்காக வாழவே கூடாது. லௌகீகமே நிஜம். அதற்காகவே வாழ வேண்டும். அதற்கும் அப்பால் நேரமிருந்தால் எழுதலாம், படிக்கலாம். ஏனென்றால் நம்மைச் சுற்றி உள்ள கணிசமானவர்கள் பண்பில்லாதவர்கள், அறிவை விட சாப்பாடும் பொழுதுபோக்குமே பிரதானம் என நம்புகிறவர்கள். இந்தியர்கள் அடிப்படையில் நாகரிகமடையாத பாதி-மிருகங்கள். படித்தவர்கள்தான் அதிக மிருமாக வாழ்கிறார்கள். இந்திய ஜனத்தொகையில் 1% மக்களே புத்தகம் படிப்பவர்கள். பளபளப்பாக ஆடையணிந்த, காரிலும் பைக்கிலும் பயணிக்கிற காட்டுமிராண்டிகள் இந்திய மக்கள். இவர்கள் மத்தியிலே நாம் வாழ்கிறோம்.

அவர்கள் பணமில்லாதவர்களை கரப்பான்பூச்சியைப் போன்றே பார்ப்பார்கள். சாரு சொல்வதைப் போல இது ஒரு சீரழிந்த சமூகம். இங்கு சுயநலமாக வாழ்ந்தால் உங்களை பெரிய ஆளாக நினைத்து அன்பு பாராட்டுவார்கள். பணமும் இருந்து தியாகமும் செய்தால் உங்களைக் கடவுளாகப் பார்ப்பார்கள். எல்லாவற்றுக்கும் - அன்பு, கருணை, சமூக மரியாதை - அடிப்படை இங்கு பணம் தான். இவர்கள் நடுவில் நாமும் நம்மை காளகேயர்களாகவே காட்டிக்கொள்ள வேண்டும். பொன் விஜயனைப் போல் எல்லாம் வாழவே கூடாது. வேலூர் இப்ராஹிமே சரணம்!

- ஆர். அபிலாஷ்

இதழியலாளர் பொன் விஜயன் அவர்கள் சமூக மேம்பாட்டுக்காக உழைத்து தன்னையே அதற்காக இழந்தவர். அது குறித்து எழுத்தாளர் ஆர்.அபிலாஷ் அவர்கள் எழுதியதுதான் மேற்கொடுக்கப்பட்டிருக்கும் பதிவு. இக்குழுமத்தில் பல நிகழ்வுகளின் விளம்பரப் பதாகைகள் இடம் பெறுகின்றன. அப்படியானதில், ஒன்றில் கலந்து கொள்ள விரும்பி அலைபேசியில் அறிவுறுத்துக்குறிப்பு பதியப்பட்டு குறித்த நேரத்துக்கு உள்நுழைய முற்பட்டேன். கிட்டத்தட்ட 40 மணித்துளிகள் இருந்தும் என்னால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை.

1. சக கலைஞரின் மறைவினால் விருந்திநர் வருகையும் நிகழ்வும் தள்ளிப்போடப்பட்டிருக்கலாம். அல்லது

2. எனக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கலாம், கடந்த கூட்டமொன்றுக்கு மறுக்கப்பட்டதைப் போலவே!

முதலாவது காரணமாக இருப்பின், தள்ளிவைப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்க வேண்டும். இரண்டாவது காரணமாயின், அதுவும் பொது அமைப்பில் இடம் பெறக்கூடாத புறம்பானவொன்று. இப்படியான ஒழுங்கீனமான செயல்களுக்குக் காரணமானவர்கள்தாம், “ஒழுங்கு” என்பதற்கான இலக்கண வகுப்பெடுக்கின்றனர். மீண்டும் எழுத்தாளர் அபிலாஷ் அவர்களின் பதிவைப் படிக்க வேண்டுகின்றேன்.

2/18/2023

warning

"unfortunately அதுதான்  சென்றமுறை பைலா ரிவியூ செய்தப்ப, அவசர அவசரமா பைலா பாஸ் செய்தமாரிதான் எல்லாருடைய அனுபவமும்கூட. சென்றமுறை போர்டு இருந்தப்பவந்து, ஒரு வருசம் போர்டு இநேக்டிவா இருந்திட்டு, கடைசில தேர்தலுக்காக அவசர அவசரமா  240 பேருல் ரொம்ப ரொம்ப கொறஞ்சு பேரு ஓட்டுப் போட்டு தீர்மானங்களும் பைலா சேஞ்சஸ்மு நிறைவேற்றப்பட்டு இருக்கு. கான்ஸ்டியூசன் ஆக இருக்கட்டு, பைலா சேஞ்சஸாக இருக்கட்டும், they make it very difficult to change it. இருங்க, let me finish it... I have the floor.. anyway, coming back to point... ... கூட்டம் போட்டுப் பேசி பலரோடு கருத்துகளும் கேட்கப்பட்டுத்தான் பைலா சேஞ்ச் ஆகணும். சும்மா மெயில்ல yes or no கேட்டுப் பாஸ் ஆகக் கூடாது. அதுதான் டெமாக்ரடிக் வே. I may kind of a warning. state of Illinios law supersedes our bylaw. so what is happening, earlier bylaws is unethical, it was not the correct way to do, so that was a warning; நடந்தது நடந்து போகட்டும். இனிமேலும் நடக்கப் போற changes வந்து, அது முறைப்படி நடக்கலைனு சொன்னா, am challenging, and warning, and this should be challenged in court of law, and we don't want to face another court of law, and I am serious about this. And, I talked to sevral experts on this, they agreed with me on this. Thank you for the time."  -முன்னாள்தலைவரின் பேச்சு.

பதிலளித்துப் பேசிய இந்நாள் தலைவரும் நாகரிகமாக, முறையான பதில்தான் கொடுத்துக் கொண்டிருந்தார். அதாவது, மாற்றங்களைக் கொண்டு வந்து செயற்குழுவின் முன்னாள் வைத்தால், இருக்கும் பைலாவை மாற்ற பொதுக்குழுவுக்கு 30 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டு, மாற்றலாமெனச் சொல்லிக் கொண்டிருந்தவர், திடுமென அவரது பேச்சில் மாற்றம் ஏற்பட்டு, “மாற்றத்துக்கு பைலால ஆர்டிகிள் 12ல இடம் இருக்கு. அதெல்லாம் நீங்க படிச்சீங்ளா என்னானு தெரியலை. அதனாலத்தான் தடித்த வார்த்தைகளை பேசிட்டு இருக்கீங்க. This is not a place to do warning. அப்படிப் பண்றதுன்னா உங்களுக்குத் தெரிஞ்ச வழியில நீங்க பண்ணுங்க. இந்தமாரியெல்லாம் பேசிட்டு இருக்காதீங்க. உங்க வயதுக்கு இதெல்லாம் நல்லது கிடையாது. நீங்க நாலு பேரு சேர்ந்து மிரட்டலாம்னு நினைச்சா அது நடக்காது.” செயலர் இடைமறித்து பேச்சின் போக்கினை மாற்றுகின்றார்.

என்னுடைய நயாப்பைசா: நான் பலமுறை என்னுடைய இந்த குறிப்பினை மீண்டும் மீண்டும் வாசித்து, யோசித்தும் விட்டேன். அமைப்பின்பால் நாட்டம் கொண்ட எவனொருவனும் முன்னாள்தலைவரைப் போலத்தான் பேசியாக வேண்டும். அந்த இடத்தில் நான் இருந்திருந்தாலும் அப்படித்தான் பேசி இருப்பேன். ”அறிவுறுத்துகின்றேன் அல்லது எச்சரிக்கிறேன்” என்பது அப்படியானதொரு தடித்த சொல்லா? அக்கறையின்பாற்பட்ட சொல்லாக ஏன் இருக்கக் கூடாது? சரி, அது முறையற்ற சொல் என்றே வைத்துக் கொள்வோம். பொறுப்பில் இருக்கும் தலைவரது பேச்சு சரியானதா? தனிநபர்த் தாக்குதலுக்கு மடைமாற்றிச் செல்வது ஏன்? காரணம், prejudice. அண்மையில் அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டுக்குழுக் கூட்டத்தின் போது பிரசிடெண்ட் பேசுவார். எதிர்க்கட்சி உறுப்பினர் உரத்த குரலில், “பொய்யர்” எனக் குரல் எழுப்புவார். அதற்குப் பிரசிடெண்ட்டும் எதிர்த்துக் குரலெழுப்பி அக்கப்போரில் இறங்கினால் அவரது மாண்பு எப்படி இருக்கும்? A fiduciary duty is the legal responsibility to act solely in the best interest of another party. “Fiduciary” means trust, and a person with a fiduciary duty has a legal obligation to maintain that trust. இதற்குக் கட்டுப்பட்டவர்தாம் பொறுப்பில் இருப்பவர்.

விழாக்கள் நடத்துவதும் பணம் பண்ணுவதும் புகழ்மாலை பாடுவதும் அல்ல தமிழ்ப்பணி. பண்பாட்டில், வாழ்வின் விழுமியத்தில் மேம்பாடு கொள்வதுதான் தமிழ்ப்பணி.

2/14/2023

காதல்நாள்

பிணைப்பில் இருக்கும்
பேச்சுமடத்தின்மீது காதல்

பச்சிளங்காற்றைப் புசிக்க
சுமந்துசெல்லும் சைக்கிளின்மீது காதல்

சாளரக்கதவைத் திறந்ததும்
மறுபக்கம்வரும் குருவியின்மீது காதல்

அஞ்சலெடுக்கச் செல்லும் போதெலாம்
அகோ சொல்லும் எதிர்வீட்டுத் தாத்தாவின்மீது காதல்

கணக்குவழக்குகளில் பிழைகள் இருப்பினும்
சகித்துத்திருத்திக் கொள்ளும் அட்மின்பாட்டிமீது காதல்

மூன்றுதிங்களுக்கொருமுறை பல்மராமத்து செயும்
தூய்மைக்கலைஞர் டேவிட்காக்ஸ்மீது காதல்

வீட்டுப்பிறவடையின் புற்தரையினைப் பேணும்
அழகுநர் ஆன்செரகோவின்மீது காதல்

காதலுக்குக் கண்ணில்லை
வீட்டுநாயின் மீது காதல்
அமர்ந்து கதைகள்பல பேசும்
மொட்டப்பாறையின்மீது காதல்

காலைக்காஃபிகுடித்து உட்கார்ந்ததும்
கழிபடுசுகத்தைக் கொடுக்குமந்த பேசின்மீது காதல்

உற்றார்மீது காதல் உறவினர்மீது காதல்
நட்பின்மீது காதல் கேட்பின்மீது காதல்
புல்லின்மீது காதல் பூண்டின்மீது காதல்
மரத்தின்மீது காதல் மனிதனின்மீது காதல்

காதலைப் போற்றுவோம்!
வாழிய காதல்! வாழியநலம்!!

💓💓💓💓💓💓💓💓💓

2/09/2023

Bandwagon Fallacy

நண்பர் அழைத்திருந்தார். ஒரு தமிழ்ப்பள்ளி. செயற்பாட்டில் முன்பின் முரண். தன் கருத்துகளைச் சொல்லி ஆற்றாமையை வெளிப்படுத்தினார். ஆறுதல்களைச் சொல்லி, என் கருத்துகளையும் சொன்னேன். நிலைமை காரசாரமாகி விட்டது.

நண்பர் செயற்குழுவில் இருப்பவர். பல்லாண்டு காலமாகத் தமிழ்ப்பணி செய்து வருபவர். அமைப்பில் சில செயற்பாடுகளைத் தொன்று தொட்டுச் செய்து வருகின்றனர். புதிதாக வந்த சிலர் அவற்றைக் கேள்விக்குள்ளாக்கி விட்டனர். நானும் அதை ஒட்டியே கருத்துச் சொல்லப் போய், அவருக்கு என்மீதும் சினம் கிளர்ந்து விட்டது.

செயற்குழு, பொதுக்குழு, துணைக்குழு, எதுவானாலும் சரி, கொள்கை முடிவுகளில் பெரும்பான்மை எந்தப் பக்கமோ அந்தப் பக்கமாக முடிவு மேற்கொள்வது சரி. ஆனால் அமைப்பின் செயற்பாட்டு விதிகளை, குழுவில் பெரும்பான்மை என்பதற்காகவே அதுதான் சரியென்பது பத்தாம் பசலித்தனம். எல்லாருக்கும் எல்லாமும் தெரிந்திருக்க வேண்டுமென்பதும் இல்லை. எதிர்ப்பு, மாற்றுக் கருத்து வருகின்றதென்றால், அதுகுறித்த விழைவும் தேடலும் நாடலும் நாம் கொள்ள வேண்டும். தரவுகளின் அடிப்படையில் முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

வரிவிலக்குப் பெற்ற அமைப்பாக இருக்கும் போது, அவ்வமைப்பின் செயற்பாட்டாளர்கள் மிகவும் கண்ணியத்தோடும் கடமையுணர்வோடும் இருந்தாக வேண்டும். ஒன்றிய அரசின் compliance guide (https://www.irs.gov/pub/irs-pdf/p4221pc.pdf), அடுத்து, பதிவு செய்யப்பட்டிருக்கின்ற மாகாணத்தின் நிறுவன அமைப்பு நெறிமுறைகள் இவற்றுக்குத்தான் முன்னுரிமை.

Transparency

Public charities are encouraged to adopt and monitor procedures to ensure that information about their mission, activities, finance and governance is made publicly available.

எந்தக் குடிமகனும் எந்தவொரு இலாபநோக்கற்ற அமைப்பின் எந்தவொரு தகவலையும் அறிந்து கொள்ள முற்படலாம். கூடுமானவரை அவர்களும் பகிர்ந்து கொள்ளலாம். தகவலே கேட்கக் கூடாதென நினைப்பதும், அமைப்பின் பெரும்பான்மை என்ன சொல்கின்றதோ அதுதான் சரியென்பதெல்லாம் கூட்டுக்குழுவாத மேட்டிமைத்தனம். அறிவார்ந்த செயலாக இருக்க முடியாது. இதற்கும் இவர்களிடம் வினவியவர் ஒரு சக ஆசிரியர்.

Bandwagon Fallacy: The bandwagon fallacy describes believing something is true or acceptable only because it is popular. 

அந்த ஆசிரியர் அப்படி என்ன கேட்டுவிட்டார்? தைப்பொங்கல் கொண்டாடுவது இந்த ஆண்டுக்கு இல்லை என்பது செயற்குழுவின் முடிவு. அந்த முடிவுக்கான கோப்பு கேட்டிருக்கின்றார். அது இவர்களிடத்திலே இல்லை என்பதாக நான் புரிந்து கொண்டேன். அல்லது, இவர் கேட்டு நாம் ஏன் கொடுக்க வேண்டுமென்கின்ற ஒரு போக்கு.

How are minutes approved?

Meeting minutes should be approved by the appropriate body at its next meeting. So, for a board meeting, the board would approve those minutes at its next meeting. For a membership meeting, the membership body would approve the minutes at its next meeting.

The organization should carefully review the meetings to ensure that it is an accurate record of the previous meeting. Make sure that not too much time passes between meetings so that mistakes can be caught.

Do we have to keep copies of minutes?

Yes, your organization must keep copies of all meeting minutes.

https://cullinanelaw.com/nonprofit-board-minutes/

இத்தகைய பிணக்குகளின் அடிப்படை என்ன?

குறுங்குழுவாதமும் வணிகநோக்கமும்தான். வணிகநோக்கத்தைக் கூட சகித்துக் கொண்டு விடலாம். குறுங்குழுவாத மனப்பான்மை என்பது மற்றவருக்குத் தீங்கானது என்பது மட்டுமேயல்ல. அத்தகைய போக்குடையவருக்குத்தான் மிகவும் தீங்கானது. கூட்டமாகச் சென்று குழியில் விழ வேண்டி வரும். Americans usually view every person as self-sufficient individual, and this idea is important to understanding the American value system.