9/24/2012

ஆதரம்


எங்கள் வீட்டில்
பையன்கள் மட்டுமே!
மிதிவண்டியில்
குடிதண்ணீருக்காய்
கிணற்றடிக்குச் 
சென்றிருந்தேன்!!

எவருமில்லாமல்
இறைக்கக் கயிறுமில்லாமல்
கிணறு மட்டுமே தனித்திருந்தது!

தண்ணி சேந்துறதுக்கு
கவுறு கொஞ்சம் வேணும்!
கேட்டதற்கு
மரகதத்தையும்
உடன் அனுப்பிவைத்தாள்
மச்சுவீட்டு செல்வி அத்தை!!

2 comments:

மதுரை சரவணன் said...

kinary mattum thaniththirunthathu...super...valththukkal

மதுரை சரவணன் said...

kinary mattum thaniththirunthathu...super...valththukkal