அப்பா
வீட்டுப் போர்டிகோவில்
அத்துமீறி நீட்டிக்கொண்டிருக்கும்
மாமரத்துக் கிளையிலிருந்து
இலையொன்று உதிர்ந்தால்கூட
தரைசேரோசை காதில் விழும் அமைதி!
கிறீச் சத்தத்துக்கு மறு’கிறீச்’
சின்னமாய் இருந்தால்
திறந்த கதவை மூடிவிட்டு வருபவர்
மூத்தமகனாய்த்தான் இருக்கும்!
கிறீச் சத்தத்துக்கு மறு’கிறீச்’
சின்னமாய் மெலிதார இருந்து
திறந்த கதவும் மூடப்பட்டு
சலசல தண்ணீர் அலம்பும் சத்தமா?
கால் கழுவி நுழைபவர் மனையாள்தான்!
கிறீச் சத்தத்தோடு
மறு’கிறீச்’ சத்தமெதுவுமின்றி
நிலமதிர டக்டக் ஓசையா?
வருவது பேரப்பயல்தான்!
முன்கதவடியிலிருந்து கொண்டே
டாமி குரைக்கிறானா?
தெருவுக்குப் பரிச்சயமில்லாத ஆளொன்று
தடத்தில் ஊசாட்டம்!
முன்கதவடியிலிருந்து ஓடிப்போய்
கிறீச் கதவின் மேலேறியபடி
குரைக்கிறானா டாமி?
ஒறம்பரை எவரோ நடமாட்டம்!
வீட்டின் உள்ளோங்கிய அறைமூலையில்
படுத்த படுக்கையாய்ப் படுத்திருக்கும்
அவரின் ஊரளக்கும்கண்கள் காதுகளில்!
திடுமெனப் பேசுகிறார்,
போய்ப்பாரு அதென்னன்னு!!
ஐந்துவீடு கடந்து ஆறாவது வீட்டுமுகப்பில்
தண்ணீர்க்குடத்தோடு வீழ்ந்து கிடக்கிறார்
கல்தடுக்கிச் சாய்ந்த பேங்க்கார அம்மா!!
-பழமைபேசி.
Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts
12/15/2018
7/15/2018
காந்திமுள்
ஊருக்குச் சென்றேன்
கொடித்தடத்தில்
நடந்து போனேன்
நாயுருவி பார்த்தேன்
ஆடா தோடை
அலர்ந்திருக்கக் கண்டேன்
ஊமத்தை மலர்
மலர்ந்திருக்கக் கண்டேன்
கண்டங்கத்தரி மலர்
கண்களை பறிக்கக் கண்டேன்
எல்லாமும் பார்த்தேன்!!
சூரியனையே சுற்றிவரும்
அச்சிறுமஞ்சள் மலரைத்தவிர!
மனத்தில் இன்னமும்
முள்ளாய்த் தைக்கிறது
அந்த சிறுநெருஞ்சி!!
o0o0o0o0
தும்பைச் செடியைப் பிடுங்கு
உன்னிலும் உயரே போகும்
விடாதே, துரத்திப் போ
பொறுமைகொள் விட்டுப்பிடிக்கலாம்
தேனுண்ணத் தாழவந்தே தீரும்
வந்தே விட்டது அமர்ந்தும் விட்டது
அடித்துப் பிடிக்க மனம்கொள்ளாமல்
சிறகடிப்பதை இலயித்துப்
பார்த்து வாழ்ந்து கொண்டிருக்கிறாள்
வாட்ச்மேன் தாத்தாவின் பேத்தி!!
o0o0o0o0
குயிலின் ஓசைக்கு
உம்ம்... உம்ம்ம்ம்ம்...
இழுத்து இழுத்து விடுகின்றது
புங்கமரத்தடித் தொட்டிலில்
கிடக்கும் சித்தாள் குழந்தை!
o0o0o0o0
தொட்டிச் செடிக்கு
உரமாய்ப் போட்ட
முட்டை ஓடுகளை
மண்புழு தின்கின்றது!
பரவசம்
அந்த மண்புழுவுக்கா?
அடிக்கடி எட்டிப்பார்த்து
வியப்புக் கொள்ளும்
இந்த கடைக்குட்டிக்கா??
o0o0o0o0
அதிகாலை மூன்றரை மணிக்கு
எழும்பிய அந்த முதற்குயிலோசை
எந்த மரத்தில் இருந்து வந்தது?
இராமர் கோயிலடி புங்கனிலிருந்தா?
ஃபிரண்ட்சு கேட்டரிங் வேம்புவிலிருந்தா??
வீட்டடியிலிருக்கும் வாதநாராயணிலிருந்தா??
o0o0o0o0
இந்த குட்டி குட்டி
தெருவோரத்து மலரை
கண்டும் காணாமற் போகின்ற
இவனுக்கு
அங்கு
அப்படியென்ன வேலை?
o0o0o0o0
இன்று
எந்தக் குழந்தைக்காவது
குட்டி போடுகிறதா
நோட்டுப்புத்தகத்து மயிலிறகு?
o0o0o0o0
நீ
கும்புடுகிற சாமியும் மலைதான்!
சாமியிருக்கிற கட்டிடக்கற்களும் மலைதான்!!
விட்டுவிடலாம், அந்த மலையே தெய்வம்தான்!!
o0o0o0o0
நினைவிருக்கின்றதா?
காவிரியாற்று இடைத்தீவில்
பொறுக்கித் தின்ற
நாவலின் உருசி?!!
o0o0o0o0
விருட்டென
கிளம்பிப் போனார்!
தண்ணீர் விட்டபடி
அங்கிருந்த
துளசிச் செடியின்
இலைகளில்
ஒன்றைக் கிள்ளி
வாயில் போட்டு
மென்று கொண்டே
பார்த்துக் கொண்டிருக்கின்றார்
செடிகளை செடிகளை செடிகளை!!
o0o0o0o0
அம்மா அறியாததல்ல
இந்த
ஆடிக் காற்று!
பிறகு ஏன்
இந்த அங்கலாய்ப்பு??
ஒடிந்து விழுந்திருக்கும்
இந்த முருங்கைக் கிளையைப் பார்த்து!!
o0o0o0o0
காந்தியை
யாருக்குத்தான் பிடிக்காது?
இந்த ஆட்டுக்கும் பிடித்திருக்கின்றது!
குறுநாக்கில் பிடித்துப் பிடித்து
தின்கின்றது காந்தி முட்செடியிலைகளை!!
-பழமைபேசி.
10/24/2017
காட்டைப் பார்
வெளியே போ
காட்டைப் பார்
குருவி
கொத்தித்தின்னும்
அழகைப் பார்
கோரைப் புல்லின்
மலரைப் பார்
தடத்தின் குறுக்கேவோடும்
அணிலைப் பார்
தலைக்கு மேலே போகும்
பட்டாம்பூச்சியைப் பார்
வெடித்து
விதைகளைத் துப்பும்
காயைப் பார்
காற்றில் தவழும்
கொடியைப் பார்
போகிறபோக்கில்
புணர்ந்து போகும்
தட்டான் பார்
வேலியில் பூத்திருக்கும்
கள்ளிப்பூவைப் பார்
வெளியின் ஊடாய்
விதையைச் சுமக்கும்
பஞ்சைப் பார்
ஊர்ந்து செல்லும்
கரையான் பார்
கொம்பின் கீழே
தொங்கும் அந்த
கூட்டைப் பார்
தாவிப் போகும்
முயலைப் பார்
கண்டங்கத்திரி
முள்ளைப் பார்
தும்பைச்செடியின்
இலையைப் பார்
மரத்தைக் கொத்தும்
கொண்டைலாத்தி பார்
இன்று இருக்கும்
நாளை இருக்காது
வெளியே போ
காட்டைப் பார்
காட்டைப் பார்
-பழமைபேசி
12/29/2015
முதற்பார்வையில்...
முதற்பார்வை கண்டதும்
விரல்களைக் காட்டுவேன்!
விரல்களைக் காட்டுவேன்!
ஐந்து விரல்களெனில்
நான்குதான் சொல்லி
இட்டுச் செல்வாள்!
நான்குதான் சொல்லி
இட்டுச் செல்வாள்!
நான்கு விரல்களெனில்
மூன்றுதான் சொல்லி
இட்டுச் செல்வாள்!
மூன்றுதான் சொல்லி
இட்டுச் செல்வாள்!
மூன்று விரல்களெனில்
இரண்டுதான் சொல்லி
இட்டுச் செல்வாள்!
இரண்டுதான் சொல்லி
இட்டுச் செல்வாள்!
குறைத்துச் சொல்லி
பிகு செய்வதில்
ஒரு கிரக்கம் ஒரு இது!
பிகு செய்வதில்
ஒரு கிரக்கம் ஒரு இது!
இன்று,
நானறியாமலே
ஏதோ நினைப்பில்
ஆட்காட்டி மட்டும்
காண்பித்து விட்டேன்
மீன்குளங்களிரண்டும்
நிரம்பி வழிய
மென்பூமியின்
விசும்பலொலி!!
மென்பூமியின்
விசும்பலொலி!!
நானறியாமலே
ஏதோ நினைப்பில்
ஆட்காட்டி மட்டும்
காண்பித்து விட்டேன்
மீன்குளங்களிரண்டும்
நிரம்பி வழிய
மென்பூமியின்
விசும்பலொலி!!
மென்பூமியின்
விசும்பலொலி!!
11/29/2015
அவரைக் காணவில்லை!!
அவரைக் காணவில்லை!!
நம்மில் ஒருவராக அவர்
இருக்க வாய்ப்பேயில்லை!
நம்மிலும் மேலானவராக
நம்போல் மனிதரல்லவராக
இருப்பதினாலேயே அவர் கடவுள்!
ஏரணம் பகர்கிறாள் மூத்தவள்!!
இருக்க வாய்ப்பேயில்லை!
நம்மிலும் மேலானவராக
நம்போல் மனிதரல்லவராக
இருப்பதினாலேயே அவர் கடவுள்!
ஏரணம் பகர்கிறாள் மூத்தவள்!!
இம்ஃகூம்.... நாம் பார்க்கிறோமே?
சமையலறையில் அம்மா
வைத்திருக்கும் சாமி படத்தில்
அம்மா போல ஒரு பொம்பள சாமி
அப்பா போல ஒரு ஆம்பள சாமி
ஆதலின் அம்மா அப்பா போல
நம்மைப் போன்றவர்தான் கடவுள்!!
சமையலறையில் அம்மா
வைத்திருக்கும் சாமி படத்தில்
அம்மா போல ஒரு பொம்பள சாமி
அப்பா போல ஒரு ஆம்பள சாமி
ஆதலின் அம்மா அப்பா போல
நம்மைப் போன்றவர்தான் கடவுள்!!
கிடையாது கிடையாது மூன்றாமவள்!
ஏதாகினும் தேவை ஏற்படும்போது
கோயிலில் இருக்கும் சாமி
வர வேண்டிய நேரத்துக்கு வந்து
செய்ய வேண்டியதைச் செய்பவர்
நம்மைப் போன்றவர், ஆனால்
அவ்வப்போது வந்து போகிறவர்!!
ஏதாகினும் தேவை ஏற்படும்போது
கோயிலில் இருக்கும் சாமி
வர வேண்டிய நேரத்துக்கு வந்து
செய்ய வேண்டியதைச் செய்பவர்
நம்மைப் போன்றவர், ஆனால்
அவ்வப்போது வந்து போகிறவர்!!
குழப்பம் முகமேகுகிறது!!
அப்பா நீங்க சொல்லுங்ப்பா!
கடவுள்ங்றவர் யாரு?!
ப்ச்... பேசாமல் இருங்களேன்?!
ஒன்பது நாள் விடுப்பும்
ஓடிப் போன வருத்தம்
பேசும் மனநிலையிலில்லை நான்!!
அப்பா நீங்க சொல்லுங்ப்பா!
கடவுள்ங்றவர் யாரு?!
ப்ச்... பேசாமல் இருங்களேன்?!
ஒன்பது நாள் விடுப்பும்
ஓடிப் போன வருத்தம்
பேசும் மனநிலையிலில்லை நான்!!
அவரவர் அவரவர்பாட்டில்
திசை கலைந்து போக
உற்று நோக்குகிறேன்!
அந்நேரம் அங்கிருந்த
அவரைக் காணவில்லை!!
மூத்தவள் மட்டும் இன்னும்
முறைத்துக் கொண்டே இருக்கிறாள்!!
திசை கலைந்து போக
உற்று நோக்குகிறேன்!
அந்நேரம் அங்கிருந்த
அவரைக் காணவில்லை!!
மூத்தவள் மட்டும் இன்னும்
முறைத்துக் கொண்டே இருக்கிறாள்!!
9/08/2015
அனாதிகாரணம்
அனாதிகாரணம்
சத்தமின்றி வெடித்த
பலூனைப் பார்த்து அழுது வெடிக்கிறாள்!
அக்கா, உள்ளிருந்த சத்தத்தை உடைச்சிட்டாப்பா!
அக்கா, உள்ளிருந்த சத்தத்தை உடைச்சிட்டாப்பா!!
கனவின் கனவு
நான் கனவு கண்டு கொண்டிருப்பதாக
நேற்று இரவு எனக்கு ஒரு கனவு!
அங்கென்ன செய்றீங்கயெனும்
குரலில் தகர்ந்து போகிறது
கனவும் கனவின் கனவும்!!
இன்று வருமா?
இன்னொரு நாளைக்கு
வாங்கித்தர்றதாச் சொன்ன நாளு
எப்ப வரும்?
இன்னிக்கு வருமாப்பா?
நாளுக்குள் நாள் வருவதும் சாத்தியமானது!
முப்பது வெள்ளி கொடுத்து வாங்கியவுடன்!!
-பழமைபேசி
10/25/2014
கதிரேசன் பொண்டாட்டி
கதிரேசன் பொண்டாட்டி
இந்நேரமும் வந்து பேசிக்கொண்டிருந்த
கதிரேசன் பொண்டாட்டி
எடுத்துக் கொண்டு
போய் விட்டாள் மொத்த வீட்டையும்!
விட்டுச் சென்ற இடத்தில் அவ்வளவு அமைதி!!
எழு
எழு
வீதிகளில் நடந்து போ
சுற்றும் முற்றும் பார்
நீ, நீயாக இருப்பாய்!!
சமூகநீதி
மகளுடனான கருத்தாடலில்
தோற்பது ஒரு பிரச்சினையேயல்ல!
அந்நேரத்தில் தகப்பன் அங்கேயிருப்பது
ஆகப்பெரிய குற்றம்!!
’அ’சிங்கம்
எனக்கென்ன?
நான் நல்லா இருக்கேன்
நீ நல்லா இருக்கல்ல??
நானும் நல்லாத்தான் இருக்கேன்!!
உளமாரப் பரிமாறப்படுகின்றன!
அழுதுவிட்டால் அசிங்கம்!!
யோசனை
என்னவோவொன்று
யோசிக்கத் துவங்கினேன்!
ஆமாம்
அதென்னவென்றுதான்
யோசித்துக் கொண்டிருக்கிறேன்!!
மழை
மழை மழை மழை
எழுதித் தள்ளியது போதும்!
தாங்கள் பார்த்த
சாதாக் கப்பல்கள் எத்தனை?
கத்திக் கப்பல்கள் எத்தனை??
சிறு வினா
சிறு வினாதான்!
வாழ்கிறோமா?
பிழைக்கிறோமா??
இருக்கிறோமா??
உதிர்காலம்
ஏம்ப்பா
மரம் மொட்டையாய்ட்டிருக்கு?
ஊரெங்கும் உதிரும் இலைகள்
பிரிவின் வலி மரத்துக்குமட்டல
வினவிய பாப்பா
பாப்பாவை அண்டியிருக்கும் இவன்
இவனிதைப்படிக்கும் நீங்களென
எல்லாருக்கும்தான்!!
ஏம்ப்பா
மரம் மொட்டையாய்ட்டிருக்கு??
பால்யகால வழங்கி
அஞ்சு பைசா
பத்து பைசா
நாலணா
எட்டணா
ஒத்த ரூபா
கொடுவாய் செடி பீடி
எப்போதாவது ஒரு சிகரெட்
மூலையறைச் சுவற்றாணியில்
குறட்டையொலி புசித்துப் பணிபுரியும்
பால்யகால களவுப் பெட்டகம்!
அப்பாவின் சட்டைப்பை!!
உப்பல்
வாயுமண்டலத்திலிருந்து வந்திறங்குகிறது
நீலவண்ணப் பலூன்!
எங்கு நின்று, என்ன சொல்லி அழுகிறதோ
அந்தக் குழந்தை!!
மூப்பு
ஓயாத நினைவலைகள்
தீர்ந்து போன கடலினிலே!!
சாவு நோக்கிய பயணத்தில்..
வட்டத்துக்குள்
இருப்பவன்
குதிக்கிறான்!
வெளியில்
இருப்பவன்
சிரிக்கிறான்!!
மனிதன்
இயற்கை
தனக்குத்தானே
சொருகிக் கொண்ட ஆப்பு
-அந்தியூரன் பழமைபேசி
இந்நேரமும் வந்து பேசிக்கொண்டிருந்த
கதிரேசன் பொண்டாட்டி
எடுத்துக் கொண்டு
போய் விட்டாள் மொத்த வீட்டையும்!
விட்டுச் சென்ற இடத்தில் அவ்வளவு அமைதி!!
எழு
எழு
வீதிகளில் நடந்து போ
சுற்றும் முற்றும் பார்
நீ, நீயாக இருப்பாய்!!
சமூகநீதி
மகளுடனான கருத்தாடலில்
தோற்பது ஒரு பிரச்சினையேயல்ல!
அந்நேரத்தில் தகப்பன் அங்கேயிருப்பது
ஆகப்பெரிய குற்றம்!!
’அ’சிங்கம்
எனக்கென்ன?
நான் நல்லா இருக்கேன்
நீ நல்லா இருக்கல்ல??
நானும் நல்லாத்தான் இருக்கேன்!!
உளமாரப் பரிமாறப்படுகின்றன!
அழுதுவிட்டால் அசிங்கம்!!
யோசனை
என்னவோவொன்று
யோசிக்கத் துவங்கினேன்!
ஆமாம்
அதென்னவென்றுதான்
யோசித்துக் கொண்டிருக்கிறேன்!!
மழை
மழை மழை மழை
எழுதித் தள்ளியது போதும்!
தாங்கள் பார்த்த
சாதாக் கப்பல்கள் எத்தனை?
கத்திக் கப்பல்கள் எத்தனை??
சிறு வினா
சிறு வினாதான்!
வாழ்கிறோமா?
பிழைக்கிறோமா??
இருக்கிறோமா??
உதிர்காலம்
ஏம்ப்பா
மரம் மொட்டையாய்ட்டிருக்கு?
ஊரெங்கும் உதிரும் இலைகள்
பிரிவின் வலி மரத்துக்குமட்டல
வினவிய பாப்பா
பாப்பாவை அண்டியிருக்கும் இவன்
இவனிதைப்படிக்கும் நீங்களென
எல்லாருக்கும்தான்!!
ஏம்ப்பா
மரம் மொட்டையாய்ட்டிருக்கு??
பால்யகால வழங்கி
அஞ்சு பைசா
பத்து பைசா
நாலணா
எட்டணா
ஒத்த ரூபா
கொடுவாய் செடி பீடி
எப்போதாவது ஒரு சிகரெட்
மூலையறைச் சுவற்றாணியில்
குறட்டையொலி புசித்துப் பணிபுரியும்
பால்யகால களவுப் பெட்டகம்!
அப்பாவின் சட்டைப்பை!!
உப்பல்
வாயுமண்டலத்திலிருந்து வந்திறங்குகிறது
நீலவண்ணப் பலூன்!
எங்கு நின்று, என்ன சொல்லி அழுகிறதோ
அந்தக் குழந்தை!!
மூப்பு
ஓயாத நினைவலைகள்
தீர்ந்து போன கடலினிலே!!
சாவு நோக்கிய பயணத்தில்..
வட்டத்துக்குள்
இருப்பவன்
குதிக்கிறான்!
வெளியில்
இருப்பவன்
சிரிக்கிறான்!!
மனிதன்
இயற்கை
தனக்குத்தானே
சொருகிக் கொண்ட ஆப்பு
-அந்தியூரன் பழமைபேசி
5/27/2014
அவள்
நீ நல்லாயிருக்கியா
எனக் கேட்டேன்?
நீ எப்பிடியிருக்கே
என்றாள் அவள்!
நான் நல்லா இருக்கேன்
என்றதும் துளிர் புன்னகை;
நலமாய் இராதவள்
நலமானதைப் போல!!
நீ எப்பிடியிருக்கே
என்றாள் அவள்!
நான் நல்லா இருக்கேன்
என்றதும் துளிர் புன்னகை;
நலமாய் இராதவள்
நலமானதைப் போல!!
-அந்தியூரன்
11/21/2013
எப்பிடிப்பா நீங்க சமாளிக்கிறீங்க??
வட்ட மேசை!!
அனைவருக்குமான
பொதுப்புரிதல் வேண்டி
யாராவது பேசுபொருள் குறித்து
சுருக்கமாய்ச் சொல்லுங்கள்!!
ஒருமனதாய்
ஏற்றுக் கொள்ளப்பட்டது
ஏதுமறியாமல் வந்துவிட்ட
அலுவலக அம்மணியின் சமாளிபிகேசன்!!
சுகந்தம்
ஒருவருக்கொருவர்
பேசிக் கொள்ளவில்லை!
கைகோத்தபடி
இருவருமாய்
ஒரு முறை சுற்றி வந்தார்கள்!
இதழ் பதித்து
தனித்தனி
கார்களில் புறப்பட்டுப் போனார்கள்!!
வெறுமையாகிப் போன
குளக்கரையெங்கும்
சிநேகித வாசம்!!
வாய் திறவாமல்...
சீக்கிரம்
வாய மூடிட்டு
சாப்பிடு!
மறுபக்கம் திரும்பி
மெளனமாய் வீசப்படும்
அந்தப் பார்வைக்குப் பொருள்
எப்பிடிப்பா நீங்க சமாளிக்கிறீங்க??
நேற்று நான்...
நேற்று
நான்
குளக்கரைக்குச் சென்றிருக்கவில்லை!
குளத்திலிருக்கும்
அந்த
ஒற்றை நாரைக்கு
தெரிந்திருக்க நியாயமில்லை
தன்னையே
நினைத்துக் கொண்டிருக்கும்
ஓர் உயிரினம் உண்டென!!
நேற்று
நான்
குளக்கரைக்குச் சென்றிருக்கவில்லை!
அந்த ஒற்றை நாரை குறித்த
எனக்கான அக்கறை பற்றி
என்ன சொன்னாலும்
புரியப் போவதில்லை மனையாளுக்கு!
எனவேதான்
நினைத்துக் கொண்டே இருக்கிறேன்!!
நேற்று
நான்
குளக்கரைக்குச் சென்றிருக்கவில்லை!
குளத்திலிருக்கும்
அந்த
ஒற்றை நாரைக்கு
தெரிந்திருக்க நியாயமில்லை
தன்னையே
நினைத்துக் கொண்டிருக்கும்
ஓர் உயிரினம் உண்டென!!
பற்றற்று இரு
உலகம் உய்விக்கும்
என்றான் புத்தன்!
பற்றுக் கொள்
சகல உயிரினங்களும்
உவப்பினுள் உய்விக்கும்
அந்த ஒற்றை நாரை குறித்த
எனக்கான அக்கறை பற்றி
என்றோ வாழ்ந்த புத்தனுக்கு
தெரிந்திருக்க வேண்டுமென்பதில்
எந்தவொரு நியாயமுமில்லை
நேற்று
நான்
குளக்கரைக்குச் சென்றிருக்கவில்லை!
குளத்திலிருக்கும்
அந்த
ஒற்றை நாரைக்கு
தெரிந்திருக்க நியாயமில்லை
தன்னையே
நினைத்துக் கொண்டிருக்கும்
ஓர் உயிரினம் உண்டென!!
நேற்று
நான்
குளக்கரைக்குச் சென்றிருக்கவில்லை!
தற்காப்பு
அடுக்களையில்
இலாகவமாய் ஒரு பேச்சு
அம்மா
இன்னிக்கி யாரையும்
திட்டக்கூடாது சரியா??
பிணக்கு
வரைபலகையும்
வண்ணக்கோல்களும்
கொடுத்துவிட்டால்
எதையாவது வரைந்து
வாழ்ந்து கொண்டிருப்பர்
வீட்டுக் குழந்தைகள்!
அப்படியான வாழ்வில்
இப்படியானதொரு பிணக்கு!!
நான் வரைஞ்ச வீட்டுல
அவ வந்து போறதுக்கு
கதவு திறந்து வெச்சிருந்தேன்!
அவ வரைஞ்ச வீட்டுல
கதவு மூடியே இருந்துச்சுன்னு
நான் கேட்டதுக்கு
வீட்டையே இடிச்சிட்டாப்பா!!
நான் கேட்டதுக்கு
வீட்டையே இடிச்சிட்டாப்பா!!
அனைவருக்குமான
பொதுப்புரிதல் வேண்டி
யாராவது பேசுபொருள் குறித்து
சுருக்கமாய்ச் சொல்லுங்கள்!!
ஒருமனதாய்
ஏற்றுக் கொள்ளப்பட்டது
ஏதுமறியாமல் வந்துவிட்ட
அலுவலக அம்மணியின் சமாளிபிகேசன்!!
சுகந்தம்
ஒருவருக்கொருவர்
பேசிக் கொள்ளவில்லை!
கைகோத்தபடி
இருவருமாய்
ஒரு முறை சுற்றி வந்தார்கள்!
இதழ் பதித்து
தனித்தனி
கார்களில் புறப்பட்டுப் போனார்கள்!!
வெறுமையாகிப் போன
குளக்கரையெங்கும்
சிநேகித வாசம்!!
வாய் திறவாமல்...
சீக்கிரம்
வாய மூடிட்டு
சாப்பிடு!
மறுபக்கம் திரும்பி
மெளனமாய் வீசப்படும்
அந்தப் பார்வைக்குப் பொருள்
எப்பிடிப்பா நீங்க சமாளிக்கிறீங்க??
நேற்று நான்...
நேற்று
நான்
குளக்கரைக்குச் சென்றிருக்கவில்லை!
குளத்திலிருக்கும்
அந்த
ஒற்றை நாரைக்கு
தெரிந்திருக்க நியாயமில்லை
தன்னையே
நினைத்துக் கொண்டிருக்கும்
ஓர் உயிரினம் உண்டென!!
நேற்று
நான்
குளக்கரைக்குச் சென்றிருக்கவில்லை!
அந்த ஒற்றை நாரை குறித்த
எனக்கான அக்கறை பற்றி
என்ன சொன்னாலும்
புரியப் போவதில்லை மனையாளுக்கு!
எனவேதான்
நினைத்துக் கொண்டே இருக்கிறேன்!!
நேற்று
நான்
குளக்கரைக்குச் சென்றிருக்கவில்லை!
குளத்திலிருக்கும்
அந்த
ஒற்றை நாரைக்கு
தெரிந்திருக்க நியாயமில்லை
தன்னையே
நினைத்துக் கொண்டிருக்கும்
ஓர் உயிரினம் உண்டென!!
பற்றற்று இரு
உலகம் உய்விக்கும்
என்றான் புத்தன்!
பற்றுக் கொள்
சகல உயிரினங்களும்
உவப்பினுள் உய்விக்கும்
அந்த ஒற்றை நாரை குறித்த
எனக்கான அக்கறை பற்றி
என்றோ வாழ்ந்த புத்தனுக்கு
தெரிந்திருக்க வேண்டுமென்பதில்
எந்தவொரு நியாயமுமில்லை
நேற்று
நான்
குளக்கரைக்குச் சென்றிருக்கவில்லை!
குளத்திலிருக்கும்
அந்த
ஒற்றை நாரைக்கு
தெரிந்திருக்க நியாயமில்லை
தன்னையே
நினைத்துக் கொண்டிருக்கும்
ஓர் உயிரினம் உண்டென!!
நேற்று
நான்
குளக்கரைக்குச் சென்றிருக்கவில்லை!
தற்காப்பு
அடுக்களையில்
இலாகவமாய் ஒரு பேச்சு
அம்மா
இன்னிக்கி யாரையும்
திட்டக்கூடாது சரியா??
பிணக்கு
வரைபலகையும்
வண்ணக்கோல்களும்
கொடுத்துவிட்டால்
எதையாவது வரைந்து
வாழ்ந்து கொண்டிருப்பர்
வீட்டுக் குழந்தைகள்!
அப்படியான வாழ்வில்
இப்படியானதொரு பிணக்கு!!
நான் வரைஞ்ச வீட்டுல
அவ வந்து போறதுக்கு
கதவு திறந்து வெச்சிருந்தேன்!
அவ வரைஞ்ச வீட்டுல
கதவு மூடியே இருந்துச்சுன்னு
நான் கேட்டதுக்கு
வீட்டையே இடிச்சிட்டாப்பா!!
நான் கேட்டதுக்கு
வீட்டையே இடிச்சிட்டாப்பா!!
11/03/2013
மாமழை
மூத்தவள்
இரண்டாமவள்
கடைச்செல்லம்
கூட நானும்!
மெளனத்தை உடைத்து
சொற்சோழி பரப்பியவள்
அந்த துடுக்கு மூன்றாமத்துதான்!!
எல்லாரும் ஒவ்வொரு விரலா
எல்லா விரலையும் நீட்டுங்க
தலைக்கு மேல தூக்குங்க
வீடெல்லாம் மரம் முளைச்சாச்சு
ஆட்டுங்க ஆட்டுங்க வேகமா
இப்ப எல்லா மரமும் ஆடுது
வாங்க வெளியில ஓடிடலாம்!
பெருசா மழை வரப்போகுது
வாங்க வெளியில ஓடிடலாம்!!
பேசாம இருக்க மாட்டீங்க?
மழை வருதாம் மழை?!
சும்மா வீட்டுக்குள்ள ஓடிகிட்டு?!
கூப்பாட்டு அம்மாவையும் மீறி
கதவுகள் திறபட்டுக் கிளம்பின
நாலிரு கழல்களும் விருட்டென!
அய்ய்ய் மழை! அய்ய்ய் மழை!!
அம்மா நெசமாலுமே மழைம்மா!!
அடித்த சாரலில் சட்டெனப் பூத்தது
11/02/2013
விதி
மனசஞ்சலம் தலையெடுத்து
முடிவெடுக்கவியலாத் தருணமெல்லாம்
நாடுவதென்பது அவர்களுள் ஒருவரைத்தான்!
செய்யலாமா? வேண்டாமா??
இரண்டில் ஒரு பதில் கிடைக்கும்.
அதன்வழியே பயணிப்பேன் நான்
விளைவுகளைப் பற்றிய கவலையின்றி!
இதன் பின்னணியில் இன்றொரு சம்பவம்!!
செய்ய நினைத்த செயலின் தலைவிதி
தீர்மானிக்கப்பட்டது பூங்காவின் நிமித்தம் கொண்டு!!
செய்யலாமா? வேண்டாமா??
பார்க்குக்கு விளையாடப் போறேன்னு
சொல்லியும் வேண்டாம்ன்னு சொன்ன நீங்க
என்ன ஏதுன்னு ஒன்னுமே சொல்லாம
செய்யலாமா, வேண்டாமான்னு கேட்கிறீங்களே?
போங்க, வேண்டாம்தான் என்னோட பதில்!!
10/13/2013
ஏளனக்குருவி
Tennessee Mockingbird
ஞாயிற்றுக் கிழமை
காலை ஏழுமணி
தெருவில் யாருமே இல்லை
கடைக்கோடி மரங்கள் கூட அசையவில்லை
எப்போதும் கீச்சிடும் அந்த
சில்வண்டுகள் எங்கு போயின?
கிழ் வானத்து வெளுப்பு
கதிரவன் ஆகும் வித்தை இன்னும்
கொஞ்ச நேரத்தில் நிகழப் போகிறது!
பனித்துளிகள் வெடிப்பதைக் கூட
யாரோ நிறுத்தி வைத்திருக்கிறார்கள்!
அப்படியானதொரு மெளனம் ஏகாந்தம்!
சகவுயிரினங்கள் சொப்பனந்தரித்திருக்க
அந்த ஒற்றை ஏளனக்குருவி மட்டும்
கிடைகொள்ளாமல் இங்குமங்குமாய்
இப்பேரமைதியில் விருப்பின்றி
அல்லாடிக் கொண்டிருக்கிறது
என்னைப் போலவே!!
காலை ஏழுமணி
தெருவில் யாருமே இல்லை
கடைக்கோடி மரங்கள் கூட அசையவில்லை
எப்போதும் கீச்சிடும் அந்த
சில்வண்டுகள் எங்கு போயின?
கிழ் வானத்து வெளுப்பு
கதிரவன் ஆகும் வித்தை இன்னும்
கொஞ்ச நேரத்தில் நிகழப் போகிறது!
பனித்துளிகள் வெடிப்பதைக் கூட
யாரோ நிறுத்தி வைத்திருக்கிறார்கள்!
அப்படியானதொரு மெளனம் ஏகாந்தம்!
சகவுயிரினங்கள் சொப்பனந்தரித்திருக்க
அந்த ஒற்றை ஏளனக்குருவி மட்டும்
கிடைகொள்ளாமல் இங்குமங்குமாய்
இப்பேரமைதியில் விருப்பின்றி
அல்லாடிக் கொண்டிருக்கிறது
என்னைப் போலவே!!
7/10/2013
பசுங்கொழுந்து
பழுப்பிலைக்கு உயிரூட்டி
அதை உன் மகளாக்கி
கொஞ்சி மகிழ்ந்தவளே!
அதை உன் மகளாக்கி
கொஞ்சி மகிழ்ந்தவளே!
நீ வாரிக் கொஞ்சுகையில்
கொஞ்சமாயது கசங்கிவிட
நர்சுக்கு போனைப் போடு
சொல்லி அழுதவளே!!
பசுங்கொழுந்து வந்திருக்கும்
வேளை பார்த்துத்தானா,
என் பசுங்கொழுந்து வந்திருக்கும்
வேளை பார்த்துத்தானா
பாதகர் வந்து வெட்ட வேணும்
அந்த ரோட்டோர பூவரசனை?!
கொஞ்சமாயது கசங்கிவிட
நர்சுக்கு போனைப் போடு
சொல்லி அழுதவளே!!
பசுங்கொழுந்து வந்திருக்கும்
வேளை பார்த்துத்தானா,
என் பசுங்கொழுந்து வந்திருக்கும்
வேளை பார்த்துத்தானா
பாதகர் வந்து வெட்ட வேணும்
அந்த ரோட்டோர பூவரசனை?!
7/09/2013
இணையகூலம்
என்ன சொல்லித் திட்டினாலும்
பேசாமல் போவதன் நிமித்தம்
இணையத்தின் மீது பொருமல்!
இன்ட்டர்நெட்ல கெடந்து கெடந்து
உங்கப்பனுக்கு சொரணையே
இல்லாமப் போச்சு பாரு!!
பேசாமல் போவதன் நிமித்தம்
இணையத்தின் மீது பொருமல்!
இன்ட்டர்நெட்ல கெடந்து கெடந்து
உங்கப்பனுக்கு சொரணையே
இல்லாமப் போச்சு பாரு!!
7/06/2013
புவியைக் காப்பாற்றும் பொருட்டு...
எழுந்து
காலைக்கடன் முடித்து
மின்னஞ்சல் பார்த்து
தட்சுடமில் பார்த்து
சிஎன்என் பார்த்து
காலைக்கடன் முடித்து
மின்னஞ்சல் பார்த்து
தட்சுடமில் பார்த்து
சிஎன்என் பார்த்து
தினமலர் பார்த்து
பிபிசி கண்ணுற்று
நக்கீரன் பார்த்து
புதியதலைமுறை பார்த்து
தமிழ்மணம் பார்த்து
பேசுபுக் மேலிருந்து கீழாக இறக்கியபின்
கூகுள்+க்குச் சென்று பார்த்து
குழுமப் பக்கங்களுக்குச் சென்று கண்டு
இவையாவினின்று கிளைத்த பக்கங்களுக்கு
போய் அவையாவும் படித்தறிந்து
எதைக் கையிலெடுப்பது என
தீர்மானிப்பதற்குள் நண்பகல் வந்துவிடுகிறது!
பசித்ததற்கேற்ப புசித்தான பின்
மீண்டும் முதலிலிருந்தே துவங்க
வேண்டி இருக்கிறது எல்லாமும்!!
இப்படியாய் அனைத்தும் அறிந்து
சிக்கலுக்குத் தீர்வு இது என நினைக்கும் போதே
இருள் சூழ்ந்து உறக்கம் வந்து கவ்வி விடுகிறது!
எனக்கு எப்போது உகந்த நேரம் கிடைக்கும்?
இந்த உலகம் எப்போது சுபிட்சமடையும்??
நக்கீரன் பார்த்து
புதியதலைமுறை பார்த்து
தமிழ்மணம் பார்த்து
பேசுபுக் மேலிருந்து கீழாக இறக்கியபின்
கூகுள்+க்குச் சென்று பார்த்து
குழுமப் பக்கங்களுக்குச் சென்று கண்டு
இவையாவினின்று கிளைத்த பக்கங்களுக்கு
போய் அவையாவும் படித்தறிந்து
எதைக் கையிலெடுப்பது என
தீர்மானிப்பதற்குள் நண்பகல் வந்துவிடுகிறது!
பசித்ததற்கேற்ப புசித்தான பின்
மீண்டும் முதலிலிருந்தே துவங்க
வேண்டி இருக்கிறது எல்லாமும்!!
இப்படியாய் அனைத்தும் அறிந்து
சிக்கலுக்குத் தீர்வு இது என நினைக்கும் போதே
இருள் சூழ்ந்து உறக்கம் வந்து கவ்வி விடுகிறது!
எனக்கு எப்போது உகந்த நேரம் கிடைக்கும்?
இந்த உலகம் எப்போது சுபிட்சமடையும்??
7/04/2013
7/03/2013
இராவெல்லாம்!!
இராவெல்லாம்!!
நேற்றைய மாலையின்
தெருச்சந்தையில்
சகாய விலைக்கு
படப்பிடிப்பான் ஒன்று
வாங்கி வந்தேன்!
அங்கிங்கெனாது சுற்றி வந்து
இடையறா இராவெல்லாம்
எடுத்துத் தள்ளினேன்!
அந்த பூத்தடாகத்தில்
குளித்துக் கொண்டிருந்த
கானகத்து மங்கை!
இதழ்கள் நொந்துவிடாதபடிக்கு
அனுசரணையாய் அமர்ந்து
உண்டு மகிழ்ந்த பட்டாம்பூச்சி!
இந்த மலரின் மகரந்தம்
அந்த மலரின் சூலில்
துளிர்க்கும் அந்த மரவட்டை!
மூக்கும் மூக்கும் உரசி
மாமன் மகன்
அத்தை மகள்
விளையாட்டு விளையாடிய
அந்த இளந்தாரிச் சிட்டுகள் இரண்டு!!
விடிந்ததும் போய்
ஆவற்கண்களில் பார்க்கிறேன்
அதில் ஒன்றுமேயில்லை!!
நேற்றைய மாலையின்
தெருச்சந்தையில்
சகாய விலைக்கு
படப்பிடிப்பான் ஒன்று
வாங்கி வந்தேன்!
அங்கிங்கெனாது சுற்றி வந்து
இடையறா இராவெல்லாம்
எடுத்துத் தள்ளினேன்!
அந்த பூத்தடாகத்தில்
குளித்துக் கொண்டிருந்த
கானகத்து மங்கை!
இதழ்கள் நொந்துவிடாதபடிக்கு
அனுசரணையாய் அமர்ந்து
உண்டு மகிழ்ந்த பட்டாம்பூச்சி!
இந்த மலரின் மகரந்தம்
அந்த மலரின் சூலில்
துளிர்க்கும் அந்த மரவட்டை!
மூக்கும் மூக்கும் உரசி
மாமன் மகன்
அத்தை மகள்
விளையாட்டு விளையாடிய
அந்த இளந்தாரிச் சிட்டுகள் இரண்டு!!
விடிந்ததும் போய்
ஆவற்கண்களில் பார்க்கிறேன்
அதில் ஒன்றுமேயில்லை!!
7/02/2013
வயிறேகும் பேராறு!!
கரைகரைந்த பெருவெள்ளம்
நங்கூரம் பாய்ச்சிவிட
வாரம் அறுபது டாலர்
பேசி முடிவானது
மெம்ஃபிசு வழித்தங்கல்!
கூதற்கால வெள்ளத்தினால்
வயிறேகி வீதி வருகிறாள்
சுட்டெரிக்கும் கோடையில்!!
அடுத்த கூதலுக்கும்
தப்பாமல் அமைந்து வரும்
மற்றுமொரு வீடுதன்னில்
வழித்தங்கலும் வயிறுதங்கலும்!
இந்த அப்பனறியாப் பிள்ளைகளும்
தாவளம் போட்டுக்கொள்ள
நாள் ஓட்டி நாளையும்
ஓடிக்கொண்டுதான் இருக்கும்
சீற்றமிகு மிசிசிப்பி பேராறு!!
6/29/2013
கண்ணாடி வளையல்
என்றோ ஒரு நாள்!
க.மு இரண்டாம் ஆண்டு
எனக்குப் பிடித்தது
கண்ணாடி வளையலும்
தாவணியும்தானென்று
நான் உன்னிடத்தில் சொன்னதை
நினைவில் வைத்திருந்து
நோகடிக்க வேண்டுமென்பதற்காகவே
அந்த பச்சை வண்ண வளையல்களை
கண்ணில் தெரிகிறாற் போல
வைத்துச் சென்றிருக்கிறாய்!!
தொடக்கூட பயமாயிருக்கிறது
ஏமாந்து விழுந்து உடைந்து விட்டால்
அன்புக் குடம் குறைகுடமானதோ?
கேட்டுச் சுளுக்கு எடுப்பாய்
கண்ணுக்குப் புலப்படாப் பிரம்பும் நீளும்!
தொடாமலும் இருக்க முடியவில்லை!!
தொட்டுப் பார்ப்பதா வேண்டாமா?
கொஞ்சமாய் ஒசந்து
ஒசந்த வேகத்திலேயே தாழ்ந்து
மீண்டும் ஒசறப் பார்க்கும் எண்ணவூசலில்
மெல்ல நகர்கின்றன நத்தை நாட்கள்!!
Subscribe to:
Posts (Atom)










