9/27/2012

முத்தக்குஞ்சு


சாப்புட்டீங்களாப்பா
உதிர்ந்த வாஞ்சையான
சொல்லோடு
நெஞ்சுக்கதகதப்பில்
பொரிந்தது!

பொரிந்து உயிர்த்த
முத்தக்குஞ்சினை
தன்னுள் வாங்கியபின்
யாதுமறியாததாய்
துள்ளிக்குதித்து உள்ளே ஓடி
அம்மா இங்கே வா வா...
சொல்லிக்கொண்டிருக்கிறது
தாய்ப்பறவை!!


1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான சிந்தனை வரிகள்... பாராட்டுக்கள்...