வெங்கலக்கடையில் யானை
அடுக்களையில் மனைவி
பாத்திரங்கள் கழுவியபடி!
உரிமைக்காய்ப் போராடும் போராளிகள்
உடுத்திருக்கும் உடுப்பு மாற்ற
அடம் பிடிக்கும் குழந்தைகள்!
கூட்டாஞ்சோறு நிகழ்வில்
அடுத்தடுத்து குண்டு வெடிப்பு
யாருக்கோ காற்றுப் பிரிகை!
என்ன அத்தை, ஆச்சா?
அமெரிக்க விசாரணைக்கு அலறும்
ஆண்டிபட்டி மாமியார்!!
அமெரிக்க ஆணைக்குப் பணிந்தார்
அமிஞ்சிக்கரை நாட்டாமை
நேத்தே அனுப்பிட்டேன் மருமகளே!!
Showing posts with label மொக்கை. Show all posts
Showing posts with label மொக்கை. Show all posts
10/13/2012
8/17/2012
படைப்பாளிகள் எளிய வழியில் பணமீட்ட "கவிமாலா"
மாதம் நீங்கள் இரண்டு கவிதைகள் அனுப்பலாம். ஒவ்வொரு கவிதைக்கும் தலா ஐந்தாயிரம் ரூபாய் தரப்படும். ஆக ஆண்டுக்கு ஒரு இலட்சத்து இருபதனாயிரம் ஈட்டுவதற்கான நல்லதொரு வாய்ப்பு. தங்கள் படைப்புகள் பாரெங்கும் பிரபலமடைவதோடு கை நிறையப் பணமும் கிடைக்க அரியதொரு வாய்ப்பு. தவறவிடாதீர்!!
ஒருவர் எத்தனை கணக்குகள் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் ஒவ்வொரு கணக்குத் துவங்கவும் ஒரு இலட்சம் ரூபாய் மட்டுமே வைப்பு நிதியாகும். தமிழ் வளர்க்கவும் உங்கள் படைப்பாற்றல் பெருக்கவும் பொருளாதாரம் கூட்டவும் இது அருமையான வழி. அப்படியான படைப்புகள், கன்னிமாரா நூலகம், கனடா நாட்டுல இருக்குற வாட்டர்லூ பல்கலைக்கழக நூலகம், நியூயார்க் பொதுநூலகம், எகிப்து அலெக்சேண்ட்ரா நூலகம் போன்ற நூலகங்களில் உங்கள் படைப்புகள் இடம் பெற்றுச் சிறப்பெய்தவும் இது ஒரு நல்வாய்ப்புதானே? தகவலை அகிலமெங்கும் பரப்புங்கள். தமிழர்கள் எல்லாரும் பயனடையட்டும். கவிமாலா திட்டத்துல சேருங்க! கனவெல்லாம் நனவாகும்!!
கவிமாலா நிறுவனத்தின் இத்தகைய நல்ல திட்டத்தினைச் செயல்படுத்த உலகமெங்கும் முகவர்கள் தேவைப்படுகிறார்கள். விருப்பமுள்ளோர் அணுகலாம்.
அணுக வேண்டிய முகவரி:
திரு.பொருளீட்டன்,
கருவூலகச் செயலர்,
கவிமாலா பன்னாட்டு நிறுவனம்,
முதலிலி வணிகப்பாளையம்,
ஆக்கப்பாடனூர் வட்டம்,
கொங்குநாடு - ௮௲௧
12/29/2011
இலகான் புயல்
இலகான் புயல்
இன்னுஞ்சிறிது நேரத்தில்
வங்கங்கடற்கரையில்
புறப்பட்டு
பாரசீகவளைகுடா
கருங்கடல்
செங்கடல்
கடந்து
அட்லாண்டிக் பெருங்கடலைக்
கடக்க இன்னும்
இருபத்து நான்கு மணித்தியாலங்களுக்கு
குறைவாகவே உள!!
இன்னுஞ்சிறிது நேரத்தில்
வங்கங்கடற்கரையில்
புறப்பட்டு
பாரசீகவளைகுடா
கருங்கடல்
செங்கடல்
கடந்து
அட்லாண்டிக் பெருங்கடலைக்
கடக்க இன்னும்
இருபத்து நான்கு மணித்தியாலங்களுக்கு
குறைவாகவே உள!!
12/28/2011
பிரச்சினை
"ஏங்க... எனக்குப் பிரச்சினையாக் கெடக்கு... பிரச்சினையக் கொஞ்சம் இல்லாமப் பண்ணியுடுங்களேன்?”
“யோவ்... என்னையா பிரச்சினை உனக்கு?”
“ஒரு பிரச்சினையும் இல்லாம வெறுமையாக் கெடக்கு...அதான் பிரச்சினை”
“என்னயா சொல்றே? ஒரு பிரச்சினையும் இல்லையா... நெம்ப நல்லது... நிம்மதியா இரு அப்ப”
”பிரச்சினை இல்லேங்குறதுதான் பிரச்சினையே எனக்கு”
“செரி அப்ப... அந்த பிரச்சினைய வெச்சி மல்லுக்கட்டு பின்ன?”
“என்னங்க நீங்க... பார்த்தா பெரிய மனுசனாட்ட இருக்கீங்க? எனக்கு ஒரு தீர்வு சொல்லச் சொன்னா இப்படிச் சொல்றீங்களே? அதான் பிரச்சினையே இல்லைன்னு சொல்றேனில்ல? என்னதான் படிச்சுப் பட்டம் வாங்குனீங்களோ? விளங்கலையா உங்களுக்கு??”
“குழப்புறடா நீ! என்ன பிரச்சினை ஒனக்கு??”
“ஒரு பிரச்சினையும் இல்லாம வெறுமையாக் கெடக்கு...அதான் பிரச்சினை”
“அதான் சொன்னனேடா! பிரச்சினை இல்லத்தானே? நிம்மதியா இரு அப்ப”
“யோவ்... நானே பிரச்சினை எதுவும் இல்லாமப் பிரச்சினையாக் கெடக்குங்றேன்... எழவு, நீயெல்லாம் என்ன படிச்ச நீ?”
“சதக்... சதக்”
“யோவ்... என்னையா பிரச்சினை உனக்கு?”
“ஒரு பிரச்சினையும் இல்லாம வெறுமையாக் கெடக்கு...அதான் பிரச்சினை”
“என்னயா சொல்றே? ஒரு பிரச்சினையும் இல்லையா... நெம்ப நல்லது... நிம்மதியா இரு அப்ப”
”பிரச்சினை இல்லேங்குறதுதான் பிரச்சினையே எனக்கு”
“செரி அப்ப... அந்த பிரச்சினைய வெச்சி மல்லுக்கட்டு பின்ன?”
“என்னங்க நீங்க... பார்த்தா பெரிய மனுசனாட்ட இருக்கீங்க? எனக்கு ஒரு தீர்வு சொல்லச் சொன்னா இப்படிச் சொல்றீங்களே? அதான் பிரச்சினையே இல்லைன்னு சொல்றேனில்ல? என்னதான் படிச்சுப் பட்டம் வாங்குனீங்களோ? விளங்கலையா உங்களுக்கு??”
“குழப்புறடா நீ! என்ன பிரச்சினை ஒனக்கு??”
“ஒரு பிரச்சினையும் இல்லாம வெறுமையாக் கெடக்கு...அதான் பிரச்சினை”
“அதான் சொன்னனேடா! பிரச்சினை இல்லத்தானே? நிம்மதியா இரு அப்ப”
“யோவ்... நானே பிரச்சினை எதுவும் இல்லாமப் பிரச்சினையாக் கெடக்குங்றேன்... எழவு, நீயெல்லாம் என்ன படிச்ச நீ?”
“சதக்... சதக்”
12/23/2011
கலக்கமா இருக்கு!
கலக்கமா இருக்கு!
இன்னும் ஒருவாரந்தேன்
இதே கிழமை
வந்திருவாங்க!!
சுத்து முத்தும் அல்லாம்
பார்த்தாச்சு
அல்லாமும் செரியா இருக்கு
ஆனாலும் ஒன்னை நெனைச்சா
கலக்கமா இருக்கு!
இன்னும் ஒருவாரந்தேன்
இதே கிழமை
வந்திருவாங்க!!
துணிகெல்லாம் துவச்சி
மடிச்சும் வெச்சிருக்கேன்
சமையலறை கழுவி
துடைச்சிம் வெச்சிருக்கேன்
குளியல்தொட்டி ரெண்டும்
கழுவிப் பளபளன்னு ஆக்கியிருக்கேன்
சுத்து முத்தும் அல்லாம்
பார்த்தாச்சு
அல்லாமும் செரியா இருக்கு
ஆனாலும் ஒன்னை நெனைச்சா
கலக்கமா இருக்கு!
இன்னும் ஒருவாரந்தேன்
இதே கிழமை
வந்திருவாங்க!!
ஊர்தி ரெண்டும் பழுதுபார்த்து
கீலெண்ணெய்யும் போட்டு வெச்சிருக்கு
பாப்பாவோட பள்ளிக்கூடத்து ஆட்களுக்கு
பரிசு நல்லாக் கொடுத்தும் வெச்சிருக்கு
சுத்து முத்தும் அல்லாம்
பார்த்தாச்சு
அல்லாமும் செரியா இருக்கு
ஆனாலும் ஒன்னை நெனைச்சா
கலக்கமா இருக்கு!
இன்னும் ஒருவாரந்தேன்
இதே கிழமை
வந்திருவாங்க!!
ஆமா; அந்த ஒன்னை நெனைச்சா
கலக்கமா இருக்கு!
இப்பத்தான் சித்த முன்னாடி பார்த்தேன்
வவுறு கொஞ்சம்
ரெண்டு சுத்து
பெருத்தா மாதர இருக்கே?
வவுறு கொஞ்சம்
ரெண்டு சுத்து
பெருத்தா மாதர இருக்கே?
ஏது சொல்வாளோ?
என்னென்னு வைவாளோ??
கலக்கமா இருக்கு!
இன்னும் ஒருவாரந்தேன்
இதே கிழமை
வந்திருவாங்க!!
இன்னும் ஒருவாரந்தேன்
இதே கிழமை
வந்திருவாங்க!!
சுத்து முத்தும் அல்லாம்
பார்த்தாச்சு
அல்லாமும் செரியா இருக்கு
ஆனாலும் ஒன்னை நெனைச்சா
கலக்கமா இருக்கு!
இன்னும் ஒருவாரந்தேன்
இதே கிழமை
வந்திருவாங்க!!
துணிகெல்லாம் துவச்சி
மடிச்சும் வெச்சிருக்கேன்
சமையலறை கழுவி
துடைச்சிம் வெச்சிருக்கேன்
குளியல்தொட்டி ரெண்டும்
கழுவிப் பளபளன்னு ஆக்கியிருக்கேன்
சுத்து முத்தும் அல்லாம்
பார்த்தாச்சு
அல்லாமும் செரியா இருக்கு
ஆனாலும் ஒன்னை நெனைச்சா
கலக்கமா இருக்கு!
இன்னும் ஒருவாரந்தேன்
இதே கிழமை
வந்திருவாங்க!!
ஊர்தி ரெண்டும் பழுதுபார்த்து
கீலெண்ணெய்யும் போட்டு வெச்சிருக்கு
பாப்பாவோட பள்ளிக்கூடத்து ஆட்களுக்கு
பரிசு நல்லாக் கொடுத்தும் வெச்சிருக்கு
சுத்து முத்தும் அல்லாம்
பார்த்தாச்சு
அல்லாமும் செரியா இருக்கு
ஆனாலும் ஒன்னை நெனைச்சா
கலக்கமா இருக்கு!
இன்னும் ஒருவாரந்தேன்
இதே கிழமை
வந்திருவாங்க!!
ஆமா; அந்த ஒன்னை நெனைச்சா
கலக்கமா இருக்கு!
இப்பத்தான் சித்த முன்னாடி பார்த்தேன்
வவுறு கொஞ்சம்
ரெண்டு சுத்து
பெருத்தா மாதர இருக்கே?
வவுறு கொஞ்சம்
ரெண்டு சுத்து
பெருத்தா மாதர இருக்கே?
ஏது சொல்வாளோ?
என்னென்னு வைவாளோ??
கலக்கமா இருக்கு!
இன்னும் ஒருவாரந்தேன்
இதே கிழமை
வந்திருவாங்க!!
12/07/2011
இணையம்
வாசிப்பு
மாங்கு மாங்கென்று
வாசித்தேன் கவிதைகளை
ஒவ்வொரு கவிதைக்குள்ளும்
ஏதோ ஒன்றை
இவர்கள்
ஒளித்தே வைத்திருக்கிறார்கள்
இவர்கள் கவிஞர்களா?
கள்வர்களா??
தங்கமணி நிலவரம்
நாளொருமுறை
கேள்விக்கணைகள்
துளைத்தெடுத்தே
பழக்கப்பட்டவன்
இன்று நல்லதொரு
கேடயத்தோடே
அழைத்தேன்!
வ்ஞ்சிக்காரி
எப்படியோ
மோப்பம் பிடித்து
வீசினாள்
மலர்க்கணையை!!
பரவாயில்ல
வேணுங்றப்ப வாங்கிக்குங்க
கவிதாகிட்ட
தோசை மாவு!!!
மாங்கு மாங்கென்று
வாசித்தேன் கவிதைகளை
ஒவ்வொரு கவிதைக்குள்ளும்
ஏதோ ஒன்றை
இவர்கள்
ஒளித்தே வைத்திருக்கிறார்கள்
இவர்கள் கவிஞர்களா?
கள்வர்களா??
தங்கமணி நிலவரம்
நாளொருமுறை
கேள்விக்கணைகள்
துளைத்தெடுத்தே
பழக்கப்பட்டவன்
இன்று நல்லதொரு
கேடயத்தோடே
அழைத்தேன்!
வ்ஞ்சிக்காரி
எப்படியோ
மோப்பம் பிடித்து
வீசினாள்
மலர்க்கணையை!!
பரவாயில்ல
வேணுங்றப்ப வாங்கிக்குங்க
கவிதாகிட்ட
தோசை மாவு!!!
12/01/2011
கிளிப்பிள்ளை
- வேளா வேளைக்குச் சாப்பிடணும். நாளொன்னுக்கு நாலுவாட்டி, ஆனா அரை வயித்துக்குதான் சாப்பிடணும்.
- எப்பவும் போல, மதியச் சாப்பாட்டுல எதனா ஒரு பழம் கட்டாயமாச் சேர்த்துகிடணும்.
- உடற்பயிற்சி செய்யுறதுல எந்த சுணக்கமும் இருக்கக் கூடாது. ஒரு நாள் அப்படி இப்படி தவறினாலும் மறுநாள் சரியாச் செய்திடணும்.
- தனக்கு வர்ற தோழிகளோட அழைப்பை எடுக்காம விட்டு, அழைப்புக் கிடக்கத்து(voice mail)க்கு போக வுட்டுடணும். மாறா, எடுத்துப் பேசுறது கூடாது.
- விசாழக்கெழமை தவறாம பள்ளிக்கூடத்துக்குப் போயி, பாப்பாவோட வீட்டுப்பாடத்தை வாங்கி மின்நகலா மின்னஞ்சல்ல அனுப்பி வெச்சிடணும்.
- எக்காரணம் கொண்டும் இருத்தாத(press) உடுப்புகளை வேலைக்குப் போகும் போது உடுத்திட்டுப் போயிடக்கூடாது.
- அன்றாடம், உறக்கத்துக்குப் போறதுக்கு முன்னாடி வீட்டுல இருக்கிற கழிவுகளைக் கட்டி வெளியில வெச்சிடணும். அல்லாட்டா வீட்டுல நாத்தம் அடிக்கத் துவங்கிடும்.
- வர்றதுக்குள்ள, எல்லாக் குளியலறைத் தொட்டிகளும் கழுவப்பட்டு இருக்கணும்.
- சமையலறையில எடுத்ததை எடுத்த இடத்துலயே வெச்சிடணும்.
- பால் காலாவதி ஆயிடிச்சின்னா கழிச்சிக் கட்டிட்டு வேற பால் வாங்கிக்கணும்.
- சாம்பார் தூள் சம்படத்தை திறந்து வெக்கவே கூடாது. நிறைய நேரம் திறந்து வெச்சா, தூளுக்குண்டான சுவை பறிபோயிடும்.
- எண்ணெயக் கிண்ணத்துல ஊற்றித்தான் வாடணும். கொள்கலத்தை அப்பிடியே சாய்ச்சி ஊத்தி வாடக்கூடாது.
- பாத்திரங்களுக்குள்ள நெகிழி அகப்பைகளை மட்டுந்தான் பாவிக்கணும். அப்படிச் செய்யாம உள்பூச்சை உரசிக் கீறல் செய்து வெச்சா, வேற பாத்திரங்கள்தான் வாங்கணும்.
- பின்னலாடைத் துணிகளைக் கையால துவைச்சிப் போடணும். அல்லாட்டி நெறம் வெளுத்து வீணாப் போகும். துவைக்க முடையின்னா துவைக்காமயே கிடக்கட்டும். நான் வந்து துவைச்சிக்கிறேன்.
- காலையில எழுந்ததும், சாக்குப்போக்கு சொல்லாம ஊருக்கு அழைச்சிப் பேசிடணும்.
- தன்னோட வண்டிய ரெண்டு, மூணு நாளைக்கொருக்கா மறக்காம அஞ்சு பத்து மணித்துளிக்காவது இயக்கத்துல வுட்டு வைக்கணும்.
- எக்காரணம் கொண்டும் இரவு பத்து மணிக்கு மேல உறக்கத்தைக் கெடுத்துட்டு வெட்டி வேலை பார்க்கக் கூடாது. அதுக்கு முன்னாடி பாத்திரங்களைக் கழுவாம வுட்டு வைக்கக் கூடாது.
- ஆண்டு முடியப் போகுது; அதனால பல்மருத்துவர்கிட்டயும் கண் மருத்துவர்கிட்டயும் தவறாமக் காட்டிட்டு வந்திடணும். அங்க தேமேன்னு கடன் அட்டையப் பாவிக்கக் கூடாது. வரிக்கழிவு அட்டையப் பாவிக்கணும். அல்லாங்காட்டி, அட்டையில இருக்குற நூத்தி இருவது வெள்ளி நமக்கு நட்டமாப் போய்டும்.
- டிசம்பர் 23ந் தேதிக்கு முன்னால, மறக்காம, நத்தார்நாள்(Christmas) பரிசுகளை, பாப்பாவோட பள்ளி ஊர்தி ஓட்டுநருக்கும் அவங்க வகுப்பு ஆசிரியருக்கும் கொண்டு போய்க் கொடுத்திடணும்.
- இந்த மாத மின்கட்டணம், பற்றுச்சீட்டுக் கட்டணம் எல்லாம் நானே செலுத்திட்டேன். அடுத்த மாதத்திற்கான கட்டணம் டிசம்பர் 27ல செலுத்துற மாதிரி தானியக்கச் செலுத்திக்கு ஊட்டங்கொடுத்திடுங்க. நான் வந்ததுக்கு அப்புறமா அந்த ஊட்டத்தை மறுபடியும் நிறுத்திடலாம்.
விமானம் இஃகூசுடன்ல அமெரிக்க மண்ணிலிருந்து இன்னும் எழும்பக் கூட இல்லை. ஆனா, நாங்க துவக்கிட்டம்ல ஆட்டத்தை?!
போகவுட்டுப் பண்ணையம் பாக்குற வித்தகம் எங்களுக்குத் தெரியாததா என்ன?! இஃகி இஃகி!!
9/07/2011
5/18/2011
கொசு!!
கொசு என்கிற நுளம்புவைத் தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதிலும் குறிப்பாக, ஆசிய நாடுகளில் வாழ்பவர்களுக்கு நுளம்புகளுடனான நெருக்கம் மிக அதிகம். இவற்றால் பெருந்தொல்லைக்கு ஆட்பட்டு, எரிச்சல் உறாதவர்களே இல்லை எனும் அளவுக்கு அதனால் பாதிக்கப்பட்டோர் ஏராளம்.
இவர்களுக்கு இடையே சற்று மாறுபட்டவர் இவர். பரிகோஷ் எனும் பெயரை, நுளம்புநாதன் என மாற்றி வைத்துக் கொண்டவர். நுளம்பண்ணா, நுளம்பண்ணா என, அப்பகுதி மக்களால் அன்பாக விளிக்கப்படுபவர்.
இதோ, நுளம்பண்ணன் பழமை பேச வருகிறார் நம் வாசகர்களுக்காக!
“அண்ணா, வணக்கங்ணா!”
“வணக்கங் தம்பி! நலந்தானே?”
“எங்கீங்ணா... ஒரே கொசுத் தொல்லை!”
“தொல்லைன்னா தொல்லை. இல்லைன்னா இல்லை. எல்லாம், மனசுதான் காரணம்!”
“சரி, அதைவுடுங்க. உங்களுக்கும் கொசுக்கும் என்ன தொடர்பு? உங்க பெயரை மாத்தி வெச்சிகிட்டதுக்கு என்ன காரணம்? அதைக் கொஞ்சம், எங்க எழிலாய்ப் பழமை பேசும் வாசகர்களுக்கு எடுத்துச் சொல்லுங்களேன்!”
”தூயதமிழ்ல இருக்குற பெயர்களைக் கேள்விப்படும் போதெல்லாம், என்னைய யாரோ கிள்ளுற மாதிரியே இருக்கும். இதை நான் எங்க தமிழ்ப் புலவர் கோணகிரி ஐயாகிட்டச் சொன்னப்ப, அவர்தான் இந்தப் பெயரை எனக்குத் தெரிவு செய்து கொடுத்தாரு. அன்றைய தினத்தில இருந்து, நான் நுளம்புநாதன்ங்ற பேருக்கு மாறிட்டேன்.”
“கிள்ளுற மாதிரி இருந்த உணர்வுக்கும், இந்தப் பெயருக்கும் என்ன தொடர்பு? ஒன்னும் புரியலையே?”
“கிள்ளலை, நுள்ளல்ன்னும் சொல்லலாம். எந்தவொரு பற்றியத்தையும், அதுக்குள்ள ஆழமாப் போயி அறிஞ்சுக்கும் ஆற்றல் நுளம்பம்னு சொல்றது. அதையொட்டித்தான் நுளம்புநாதன்ங்ற பேரு எனக்கு அமைஞ்சது!”
”முடியலை. நீங்களா சொல்வீங்க... அதையும் நாங்க நம்பணும். எப்படி இது?”
”நாங்களா சொல்றது கெடையாது. குறுந்தொகையில கூட வருதே?
சிறைபனி உடைந்த சேயரி மழைக்கண்
பொறையரு நோயொடு புலம்பலைக் கலங்கிப்
பிறருங் கேட்குநர் உளர்கொல் உறைசிறந்து
ஊதை தூற்றம் கூதிர் யாமத்து
ஆன் நுளம்பு உலம்புதொறு உளம்பும்
நாநவில் கொடுமணி நல்கூர் குரலே!
கடுங்குளிர்காலமதில், ஊதக்காற்று பெரும் வேகமெடுத்து வீசும் நள்ளிரவு நேரம். புறக்கொல்லையில் இருக்கும் பசு, வேகமெடுத்து வீசும் ஊதக்காற்று தன் மேல் படுவதால் நடுநடுங்கிக் கொண்டிருக்கிறது. அந்நடுக்கத்தின் ஊடாக நுளம்பு ஒன்று அப்பசுவினைக் கடிக்க, அப்பசுவோ தன் தலையைத் திருப்பி வாலால் வீசியடித்து அந்நுளம்பினைத் தூரத் துரத்தி விடுகிறது.
அப்படியாகத் தன் தலையைத் திருப்பும் போது, கழுத்து மணியின் ஓசையானது தலைவியின் காதில் விழுந்து நித்திரையைக் கலைத்துவிடுகிறது.
’கார்காலத்துப் பனியானது எம்மைக் குளிர்ச் சிறையில் ஆழ்த்துகிறது. அச்சிறையினை உடைத்துக் கொண்டு, என் கண்கள் மழை பொழிகிறது. என் தலைவன் உடன் இருப்பின், இந்நிலை வருமா எனக்கு?’ எனப் பசலை நோய் கண்டவளாய்த் தன் தோழியிடம் தலைவி கூறுவதாக அமைந்த பாடல்தான் இது.
இதிலே நுளம்பு எனும் சொல் வருகிறது கண்டாயா?”
“ஆகா! அருமையான தகவலுங்க நுளம்பண்ணே! அப்புறம் ஏன் நுளம்பைக் ’கொசு’ங்றாய்ங்க?”
“கொசு அப்படின்னா, சின்னது அப்படிங்ற அர்த்தம் வரும். கொசுவம், கொசுறு மாதிரியான சொற்கள் எல்லாம் அதனோட நீட்சிதான். சின்னதான தொங்கல், கொசுவம். சின்ன சின்ன சில்மிசம், கொசுறு! இப்படி நிறைய கொசுங்ற வேர்ச்சொல்லுல இருந்து வரும்.”
“நுளம்புன்னே சொல்ல வேண்டியதுதானே? அப்புறம் எதுக்கு கொசுன்னு இனியொரு சொல்?”
“தமிழறியா அரைகுறைகள் செய்யுற வேலைதான் இது. Mosquito அப்படிங்ற நுளம்பம், Culicidaeங்ற குடும்பத்தைச் சார்ந்த ஒரு பூச்சி. Culicidaeங்ற இலத்தீன் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் கொசு. ஆக, கொசுக் குடும்பத்தைச் சார்ந்த நுளம்பம் அப்படின்னு வரணும். ஆனா, Mosquito அப்படிங்றதுக்கே கொசுன்னு சொல்லாக்கம் செய்துட்டாங்க யாரோ!”
“கேட்கிறேன்னு கோவிச்சுக்க கூடாது நீங்க. ’குசு’வுக்கும், ’கொசு’வுக்கும் எதனா தொடர்பு இருக்கா?”
“இருக்கு. ஆனா, இல்லை. குசு அப்படின்னா, மறைபொருளா ஊடுவது. ஆசனவாயில்ல இருந்து வெளியில் ஊடுவதும் குசுதான்.
காதும் காதும் வெச்ச மாதிரி, ஒரு பற்றியத்தை ஊடால விடுவதும் குசுதான். இதைத்தான் குசுகுசுன்னு சொல்றதுன்னும் சொல்றோம். குசுன்னு சொல்லத் தயங்கறவங்க கிசு கிசு ஆக்கிப்புட்டாங்க. தெலுங்குலயும் குசு குசுதான்; சப்பானிய மொழியிலயும் குசு குசுதான். வட மொழியில, உசிர் குசுர்ங்றாங்க.
குசு நாற்றம் கொசுவுக்கு ரொம்பப் பிடிக்கும். குசுன்னு மட்டும் அல்ல, கரியுமில வாயு அடங்கிய எதுவும் அதற்குப் பிடித்தமான ஒன்னு. ஆக, தூய்மையா இருக்கும் போது நுளம்பத்தின் இடைஞ்சல் குறைவா இருக்கும்.”
”நுளம்பண்ணே, குசுவுக்கும் கொசுவுக்கும் உண்டான வேறுபாட்டை நல்லாச் சொன்னீங்க. பொதுவா, கொசுங்ற நுளம்பு ஏன் நம்மைக் கடிக்குது?”
“ஆண் நுளம்பு நம்மைக் கடிக்காது. கடிப்பது எல்லாமே பெண்தான். நான் கொசு குடும்பத்தைப் பத்தி சொல்றேன். ஆண் நுளம்புகள் பொதுவா, தாவர அமிழ்தம்(nector) மற்றும் தாவர இரசங்களைத்தான் பருகும்.
பெண் கொசுக்களுக்கு, முட்டை வைப்பதற்காக, proteinங்ற புரதச் சத்து தேவைப்படுது. அதனால, இரத்தத்தை உறிஞ்சுகுழலால உறிஞ்சிக் குடிக்குது அது. அப்படி உறிஞ்சிக் குடிக்கும் போது என்ன ஆகுதுன்னா, அந்த பெண் கொசுவோட உமிழ்நீர், எச்சில், நம்மை உடம்புல இறங்கிடுது. அது, பல நோய் மற்றும் அசெளகரியங்களுக்குக் காரணமாப் போய்டுது.”
”சரிங்ணே, உங்களுக்கு கொசுனால எந்தத் தொல்லையுமே இல்லையா? நீங்க எப்படி அதை, எதிர் கொள்றீங்க?”
“நான் பொதுவா, தூய்மையாகவும் சுகாதாரமாவும் இருக்குறதை விரும்புறவன். அதனால அவ்வளவா என்னை அதுக கடிக்காது. ஆனா, நித்திரையில இருக்கும் போது காதுல புகுந்துட்டு, உர்ர்ர்ர்ன்னு சத்தம்வுட்டு மனுசனுக்கு எரிச்சலூட்டும்”
“அப்ப, அதை எப்படி சமாளிப்பீங்க?”
“பெண் கொசுக்கள்தான நம்மகிட்ட வருது? அதனால, பக்கத்துல படுத்துட்டு இருக்குற பொண்டாட்டிக்கு நல்லா நாலு அறை, ரய்ய்ய்யுன்னு உடுவேன். எனக்கு இருக்குற கோவம் எல்லாம் தாழ்ந்து போயிரும்.”
“என்னண்ணே சொல்றீங்க? அப்புறம் உங்களுக்கு எதும் நடந்துறாதா?”
“அதையெல்லாம் வெளில சொல்ல முடியுமா?”
“சரி விடுங்கண்ணே! அப்புறம் இந்த நுளம்பு, கொசு, தினாசு எல்லாம் ஒன்னுதானா?”
“கெடையாது, கெடையாது! கொசுக் குடும்பத்துல வர்றது நுளம்பும், தினாசும். தினாசுன்னா, நாய், ஆடு, மாடுகள்ள இருக்குற சிறு பூச்சி.”
“ஓ, ஆடு, மாடுகள்ல இருக்குறது? அப்ப, தினாசும் உன்னியும் ஒன்னா?”
“வேற, வேற!”
"சரிங்ணா. அப்புறம் கொசுவைப் பத்தின வேற தகவல்கள்?”
“கொசுக்கள் ஒரு அபூர்வமான பிறவின்னுதான் சொல்லணும். ஐந்து மாதங்கள் வரை வாழக் கூடியது. ஒரு வினாடிக்கு, முந்நூறுல இருந்து அறுநூறு முறை தன் சிறகுகளை வேகமா அடிக்கும் வல்லமை கொண்டது. ஒரு மணி நேரத்துல கிட்டத்தட்ட இரண்டு மைல் தூரம் பறக்க வல்லது.
ஒருவனுக்கு ஒருத்திங்ற முறைப்படிதான் கொசுக்கள் வாழ்க்கை நடத்தும். தன்னுடைய இணை எங்க இருக்குன்னு, அந்த பெண் கொசுவினுடைய சிறகடிப்பின் அதிர்வை வெச்சே கண்டுபிடிக்கும் தன்மை கொண்டவை ஆண் கொசுக்கள்.
ஒரு மனிதனின் சஞ்சாரத்தை, அம்மனிதன் வெளியேற்றும் கரியுமில வாயுவை மோப்பம் கொண்டு, எழுபத்தி அஞ்சு அடி தூரத்திலிருந்தே கண்டுபிடிச்சிடும் பெண் கொசுக்கள். பொதுவா, கொசுக்கள் பெண்களைத்தான் அதிகம் விரும்பிக் கடிக்கும்”
“நுளம்பண்ணே, நல்ல தகவல்களை அறியக் கொடுத்தீங்க. மிக்க நன்றி!”
”குசுவும், கொசுவும் இல்லாம நல்ல வாழ்க்கை வாழ வாழ்த்துகள்! நன்றி!!
இவர்களுக்கு இடையே சற்று மாறுபட்டவர் இவர். பரிகோஷ் எனும் பெயரை, நுளம்புநாதன் என மாற்றி வைத்துக் கொண்டவர். நுளம்பண்ணா, நுளம்பண்ணா என, அப்பகுதி மக்களால் அன்பாக விளிக்கப்படுபவர்.
இதோ, நுளம்பண்ணன் பழமை பேச வருகிறார் நம் வாசகர்களுக்காக!
“அண்ணா, வணக்கங்ணா!”
“வணக்கங் தம்பி! நலந்தானே?”
“எங்கீங்ணா... ஒரே கொசுத் தொல்லை!”
“தொல்லைன்னா தொல்லை. இல்லைன்னா இல்லை. எல்லாம், மனசுதான் காரணம்!”
“சரி, அதைவுடுங்க. உங்களுக்கும் கொசுக்கும் என்ன தொடர்பு? உங்க பெயரை மாத்தி வெச்சிகிட்டதுக்கு என்ன காரணம்? அதைக் கொஞ்சம், எங்க எழிலாய்ப் பழமை பேசும் வாசகர்களுக்கு எடுத்துச் சொல்லுங்களேன்!”
”தூயதமிழ்ல இருக்குற பெயர்களைக் கேள்விப்படும் போதெல்லாம், என்னைய யாரோ கிள்ளுற மாதிரியே இருக்கும். இதை நான் எங்க தமிழ்ப் புலவர் கோணகிரி ஐயாகிட்டச் சொன்னப்ப, அவர்தான் இந்தப் பெயரை எனக்குத் தெரிவு செய்து கொடுத்தாரு. அன்றைய தினத்தில இருந்து, நான் நுளம்புநாதன்ங்ற பேருக்கு மாறிட்டேன்.”
“கிள்ளுற மாதிரி இருந்த உணர்வுக்கும், இந்தப் பெயருக்கும் என்ன தொடர்பு? ஒன்னும் புரியலையே?”
“கிள்ளலை, நுள்ளல்ன்னும் சொல்லலாம். எந்தவொரு பற்றியத்தையும், அதுக்குள்ள ஆழமாப் போயி அறிஞ்சுக்கும் ஆற்றல் நுளம்பம்னு சொல்றது. அதையொட்டித்தான் நுளம்புநாதன்ங்ற பேரு எனக்கு அமைஞ்சது!”
”முடியலை. நீங்களா சொல்வீங்க... அதையும் நாங்க நம்பணும். எப்படி இது?”
”நாங்களா சொல்றது கெடையாது. குறுந்தொகையில கூட வருதே?
சிறைபனி உடைந்த சேயரி மழைக்கண்
பொறையரு நோயொடு புலம்பலைக் கலங்கிப்
பிறருங் கேட்குநர் உளர்கொல் உறைசிறந்து
ஊதை தூற்றம் கூதிர் யாமத்து
ஆன் நுளம்பு உலம்புதொறு உளம்பும்
நாநவில் கொடுமணி நல்கூர் குரலே!
கடுங்குளிர்காலமதில், ஊதக்காற்று பெரும் வேகமெடுத்து வீசும் நள்ளிரவு நேரம். புறக்கொல்லையில் இருக்கும் பசு, வேகமெடுத்து வீசும் ஊதக்காற்று தன் மேல் படுவதால் நடுநடுங்கிக் கொண்டிருக்கிறது. அந்நடுக்கத்தின் ஊடாக நுளம்பு ஒன்று அப்பசுவினைக் கடிக்க, அப்பசுவோ தன் தலையைத் திருப்பி வாலால் வீசியடித்து அந்நுளம்பினைத் தூரத் துரத்தி விடுகிறது.
அப்படியாகத் தன் தலையைத் திருப்பும் போது, கழுத்து மணியின் ஓசையானது தலைவியின் காதில் விழுந்து நித்திரையைக் கலைத்துவிடுகிறது.
’கார்காலத்துப் பனியானது எம்மைக் குளிர்ச் சிறையில் ஆழ்த்துகிறது. அச்சிறையினை உடைத்துக் கொண்டு, என் கண்கள் மழை பொழிகிறது. என் தலைவன் உடன் இருப்பின், இந்நிலை வருமா எனக்கு?’ எனப் பசலை நோய் கண்டவளாய்த் தன் தோழியிடம் தலைவி கூறுவதாக அமைந்த பாடல்தான் இது.
இதிலே நுளம்பு எனும் சொல் வருகிறது கண்டாயா?”
“ஆகா! அருமையான தகவலுங்க நுளம்பண்ணே! அப்புறம் ஏன் நுளம்பைக் ’கொசு’ங்றாய்ங்க?”
“கொசு அப்படின்னா, சின்னது அப்படிங்ற அர்த்தம் வரும். கொசுவம், கொசுறு மாதிரியான சொற்கள் எல்லாம் அதனோட நீட்சிதான். சின்னதான தொங்கல், கொசுவம். சின்ன சின்ன சில்மிசம், கொசுறு! இப்படி நிறைய கொசுங்ற வேர்ச்சொல்லுல இருந்து வரும்.”
“நுளம்புன்னே சொல்ல வேண்டியதுதானே? அப்புறம் எதுக்கு கொசுன்னு இனியொரு சொல்?”
“தமிழறியா அரைகுறைகள் செய்யுற வேலைதான் இது. Mosquito அப்படிங்ற நுளம்பம், Culicidaeங்ற குடும்பத்தைச் சார்ந்த ஒரு பூச்சி. Culicidaeங்ற இலத்தீன் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் கொசு. ஆக, கொசுக் குடும்பத்தைச் சார்ந்த நுளம்பம் அப்படின்னு வரணும். ஆனா, Mosquito அப்படிங்றதுக்கே கொசுன்னு சொல்லாக்கம் செய்துட்டாங்க யாரோ!”
“கேட்கிறேன்னு கோவிச்சுக்க கூடாது நீங்க. ’குசு’வுக்கும், ’கொசு’வுக்கும் எதனா தொடர்பு இருக்கா?”
“இருக்கு. ஆனா, இல்லை. குசு அப்படின்னா, மறைபொருளா ஊடுவது. ஆசனவாயில்ல இருந்து வெளியில் ஊடுவதும் குசுதான்.
காதும் காதும் வெச்ச மாதிரி, ஒரு பற்றியத்தை ஊடால விடுவதும் குசுதான். இதைத்தான் குசுகுசுன்னு சொல்றதுன்னும் சொல்றோம். குசுன்னு சொல்லத் தயங்கறவங்க கிசு கிசு ஆக்கிப்புட்டாங்க. தெலுங்குலயும் குசு குசுதான்; சப்பானிய மொழியிலயும் குசு குசுதான். வட மொழியில, உசிர் குசுர்ங்றாங்க.
குசு நாற்றம் கொசுவுக்கு ரொம்பப் பிடிக்கும். குசுன்னு மட்டும் அல்ல, கரியுமில வாயு அடங்கிய எதுவும் அதற்குப் பிடித்தமான ஒன்னு. ஆக, தூய்மையா இருக்கும் போது நுளம்பத்தின் இடைஞ்சல் குறைவா இருக்கும்.”
”நுளம்பண்ணே, குசுவுக்கும் கொசுவுக்கும் உண்டான வேறுபாட்டை நல்லாச் சொன்னீங்க. பொதுவா, கொசுங்ற நுளம்பு ஏன் நம்மைக் கடிக்குது?”
“ஆண் நுளம்பு நம்மைக் கடிக்காது. கடிப்பது எல்லாமே பெண்தான். நான் கொசு குடும்பத்தைப் பத்தி சொல்றேன். ஆண் நுளம்புகள் பொதுவா, தாவர அமிழ்தம்(nector) மற்றும் தாவர இரசங்களைத்தான் பருகும்.
பெண் கொசுக்களுக்கு, முட்டை வைப்பதற்காக, proteinங்ற புரதச் சத்து தேவைப்படுது. அதனால, இரத்தத்தை உறிஞ்சுகுழலால உறிஞ்சிக் குடிக்குது அது. அப்படி உறிஞ்சிக் குடிக்கும் போது என்ன ஆகுதுன்னா, அந்த பெண் கொசுவோட உமிழ்நீர், எச்சில், நம்மை உடம்புல இறங்கிடுது. அது, பல நோய் மற்றும் அசெளகரியங்களுக்குக் காரணமாப் போய்டுது.”
”சரிங்ணே, உங்களுக்கு கொசுனால எந்தத் தொல்லையுமே இல்லையா? நீங்க எப்படி அதை, எதிர் கொள்றீங்க?”
“நான் பொதுவா, தூய்மையாகவும் சுகாதாரமாவும் இருக்குறதை விரும்புறவன். அதனால அவ்வளவா என்னை அதுக கடிக்காது. ஆனா, நித்திரையில இருக்கும் போது காதுல புகுந்துட்டு, உர்ர்ர்ர்ன்னு சத்தம்வுட்டு மனுசனுக்கு எரிச்சலூட்டும்”
“அப்ப, அதை எப்படி சமாளிப்பீங்க?”
“பெண் கொசுக்கள்தான நம்மகிட்ட வருது? அதனால, பக்கத்துல படுத்துட்டு இருக்குற பொண்டாட்டிக்கு நல்லா நாலு அறை, ரய்ய்ய்யுன்னு உடுவேன். எனக்கு இருக்குற கோவம் எல்லாம் தாழ்ந்து போயிரும்.”
“என்னண்ணே சொல்றீங்க? அப்புறம் உங்களுக்கு எதும் நடந்துறாதா?”
“அதையெல்லாம் வெளில சொல்ல முடியுமா?”
“சரி விடுங்கண்ணே! அப்புறம் இந்த நுளம்பு, கொசு, தினாசு எல்லாம் ஒன்னுதானா?”
“கெடையாது, கெடையாது! கொசுக் குடும்பத்துல வர்றது நுளம்பும், தினாசும். தினாசுன்னா, நாய், ஆடு, மாடுகள்ள இருக்குற சிறு பூச்சி.”
“ஓ, ஆடு, மாடுகள்ல இருக்குறது? அப்ப, தினாசும் உன்னியும் ஒன்னா?”
“வேற, வேற!”
"சரிங்ணா. அப்புறம் கொசுவைப் பத்தின வேற தகவல்கள்?”
“கொசுக்கள் ஒரு அபூர்வமான பிறவின்னுதான் சொல்லணும். ஐந்து மாதங்கள் வரை வாழக் கூடியது. ஒரு வினாடிக்கு, முந்நூறுல இருந்து அறுநூறு முறை தன் சிறகுகளை வேகமா அடிக்கும் வல்லமை கொண்டது. ஒரு மணி நேரத்துல கிட்டத்தட்ட இரண்டு மைல் தூரம் பறக்க வல்லது.
ஒருவனுக்கு ஒருத்திங்ற முறைப்படிதான் கொசுக்கள் வாழ்க்கை நடத்தும். தன்னுடைய இணை எங்க இருக்குன்னு, அந்த பெண் கொசுவினுடைய சிறகடிப்பின் அதிர்வை வெச்சே கண்டுபிடிக்கும் தன்மை கொண்டவை ஆண் கொசுக்கள்.
ஒரு மனிதனின் சஞ்சாரத்தை, அம்மனிதன் வெளியேற்றும் கரியுமில வாயுவை மோப்பம் கொண்டு, எழுபத்தி அஞ்சு அடி தூரத்திலிருந்தே கண்டுபிடிச்சிடும் பெண் கொசுக்கள். பொதுவா, கொசுக்கள் பெண்களைத்தான் அதிகம் விரும்பிக் கடிக்கும்”
“நுளம்பண்ணே, நல்ல தகவல்களை அறியக் கொடுத்தீங்க. மிக்க நன்றி!”
”குசுவும், கொசுவும் இல்லாம நல்ல வாழ்க்கை வாழ வாழ்த்துகள்! நன்றி!!
11/03/2010
மாமலை
எதேச்சையாய்
ஆடியைப் பார்க்கையில்
காண நேரிட்டது
Respected Teacher
I am
suffering from fever
So I am unable
to come to school
Please grant me a
leave for one day.
Yours Obediently,
Pazhamaipesi என
அன்று சொல்லத் துவங்கி
இன்று மலையாய்க் குவிந்து
முகத்தில் வழிகிறது பொய்!
ஆடியைப் பார்க்கையில்
காண நேரிட்டது
Respected Teacher
I am
suffering from fever
So I am unable
to come to school
Please grant me a
leave for one day.
Yours Obediently,
Pazhamaipesi என
அன்று சொல்லத் துவங்கி
இன்று மலையாய்க் குவிந்து
முகத்தில் வழிகிறது பொய்!
6/23/2010
தாவல்
மேலிடத்தை முன்னிறுத்தி.......
வேட்டி சட்டை தேடினான்
அள்ளக்கைகள் தேற்றினான்
செய்து தருவதாய்ச் சொன்னான்
முன்பணம் முடிவாய் வாங்கினான்
கும்பிடுபவன் ஆனான்
வாக்குறுதி கொடுத்தான்
கணக்கில் ஒன்றினான்
சாதி பார்த்து நின்றான்
நன்றாகவே கவனித்தான்
நல்லபடியாய் வென்றான்
பெட்டி பெட்டியாய்ப் பெற்றான்
பட்டி பட்டியாய் வளைத்தான்
பார்ப்பதற்குச் சென்றான்
எல்லாவற்றையும் இழந்தான்
கடைசியாக......
அந்த மடம் புளித்து
இந்த மடம் புகுந்து
குவியாய்க் குவித்து
காறிக் காறித் துப்பினான்!!
வேட்டி சட்டை தேடினான்
அள்ளக்கைகள் தேற்றினான்
செய்து தருவதாய்ச் சொன்னான்
முன்பணம் முடிவாய் வாங்கினான்
கும்பிடுபவன் ஆனான்
வாக்குறுதி கொடுத்தான்
கணக்கில் ஒன்றினான்
சாதி பார்த்து நின்றான்
நன்றாகவே கவனித்தான்
நல்லபடியாய் வென்றான்
பெட்டி பெட்டியாய்ப் பெற்றான்
பட்டி பட்டியாய் வளைத்தான்
பார்ப்பதற்குச் சென்றான்
எல்லாவற்றையும் இழந்தான்
கடைசியாக......
அந்த மடம் புளித்து
இந்த மடம் புகுந்து
குவியாய்க் குவித்து
காறிக் காறித் துப்பினான்!!
இது தாவல்..... ஆனாக் காவல் இங்க இருக்கு!!!
6/04/2010
இது உண்மையா??

”நேற்று முன்தினம் அபுதாபியிலுள்ள முத்துத்தீவில் இறந்த நிலையில் ஒரு கடற்கன்னி சடுதியாகக் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இங்கிருந்த உல்லாசப் பிரயாணிகள் அதிர்ச்சிக்குள்ளானதோடு அத்தீவை விட்டும் உடனடியாக வெளியேறியுள்ளனர்”
உலக வரலாற்றில் முதன் முதலான கடற்கன்னியின் உண்மை நிழற்படம் அப்படின்னு ஒரு மின்னஞ்சல் வந்ததுங்க. இது நெசமுங்ளா??
4/06/2010
நயமான மொக்கை!
சண்டமாருதம்
நீர் பெரிய சண்டமாருதமோ?
அடிச்சிக் காலி செய்திடுவீரோ??
இரைச்சல் இட்டவனைப்
பெருஞ்சத்தம் எதுவுமின்றி
குண்டுக் கட்டாய்க் கட்டி
தூக்கிக் கொண்டு போய்
இருத்தினான்
மாதா கோயிலடியில!
மறுகணமே
அவனிருந்த வீடு பறக்க
வளைந்தடித்தது
ஏசப்படாத
சண்டமாருதம்!!
சுயமுரண்
நயமான மொக்கை
மழுங்கிய கூர்வாள்
தொலைந்த கண்டுபிடிப்பு
உண்மையான பொய்
பெரியார் பூசனை
நீண்ட சிறுகதை
உண்மைக் கதை
ஏழை அமைச்சர்
கருத்தொற்றுமைமிகு பதிவர்கள்
சிங்காரச் சென்னை?!
(மூலம்: மின்தமிழ்க் குழுமம்)
நீர் பெரிய சண்டமாருதமோ?
அடிச்சிக் காலி செய்திடுவீரோ??
இரைச்சல் இட்டவனைப்
பெருஞ்சத்தம் எதுவுமின்றி
குண்டுக் கட்டாய்க் கட்டி
தூக்கிக் கொண்டு போய்
இருத்தினான்
மாதா கோயிலடியில!
மறுகணமே
அவனிருந்த வீடு பறக்க
வளைந்தடித்தது
ஏசப்படாத
சண்டமாருதம்!!
சுயமுரண்
நயமான மொக்கை
மழுங்கிய கூர்வாள்
தொலைந்த கண்டுபிடிப்பு
உண்மையான பொய்
பெரியார் பூசனை
நீண்ட சிறுகதை
உண்மைக் கதை
ஏழை அமைச்சர்
கருத்தொற்றுமைமிகு பதிவர்கள்
சிங்காரச் சென்னை?!
(மூலம்: மின்தமிழ்க் குழுமம்)
3/21/2010
பூலவாக்கு!
நிமிர்ந்து மிடுக்காய் அமர்ந்தான். ’இம்’மெனச் செருமினான். என்ன இருக்கிறது எழுத? சொல்வதற்கு என்ன கிடக்கிறது இங்கே?? எனக்குள் எதுவுமே சொல்லத் தோணவில்லையே?? அதை எழுதலாமோ? அதிலே என்ன சுவராசியம் இருக்கிறது???
தினமும் எழுகிறோம். அடிப்படைக் காரியங்களை விரும்பியோ விரும்பாமலோ செய்து தொலைக்கிறோம். நாளும் கழிகிறது. இந்தக் கழிவுகளின் எச்சங்களை எழுதுவதிலே என்ன கிடக்கிறது??
புதுமையாய் எழுத வேண்டுமாம்! என்ன புதுமை வேண்டிக் கிடக்கிறது?? எப்படியும் எதையோ செய்யப்போய் அதிலே வழுக்கள் பல கண்டு அல்லலுறத்தான் போகிறோம். இதிலே என்ன புதுமை?? அதற்கான விதைகள் எழுத்திலே வர வேண்டுமாம். அப்படி எழுதி என்ன செய்து விடமுடியும் நம்மால்?
மலர் என்றால் அதன் வாசத்தை நுகர்ந்துதான் அறிந்து கொள்ள வேண்டும். அதை எழுத்தில் சொல்வதால் நுகர முடியுமா? அதையும் எழுத்தால் நுகர வைக்க முடியும் என்கிறார்கள் பைத்தியங்கள். அது எப்படி முடியும்??
எழுகதிரவன் எழ, அதன் பிம்பம் அருணவத்தில் பட்டுத் தெரியும் அழகை எழுத்திலே விரியச் செய்து காட்சிப்படுத்த முடியுமா என்ன? அதை நிர்வாணக் கண்களால் கண்டு மகிழ்வதை எப்படி எழுத்தால் காட்சிப்படுத்த முடியும்? அப்படி என்ன எழுதிக் கிழித்துவிட முடியும்??
கற்பனை வளம் பெருகினால் எழுதி விடலாமா? கற்பனை என்பதே ஒரு சோடிப்புதானே? சோடித்துச் சோடித்துச் செய்வதென்ன கண்டோம்? சோடித்து எழுத வேண்டுமாம். சோடிப்பது எதுவும் தோற்பதற்குக் கைச்சாத்திடுவது அன்றோ? இதைப்போய் எழுதி, என்ன கிழித்து விட முடியும்??
சுயசிந்தனை இருந்தால் எழுதலாமாம். சுயசிந்தனை? சிந்தனையில் எழுத்தைத் தருவிக்க இயலுமா? அப்படியானால் எழுதியே உண்ணுவதும், உறங்குவதும், உய்ப்பதுமென இருக்க வேண்டியதுதானே? உழைப்பது எதற்கு?? ஆக உழைப்பது இருக்க, இந்த எழுத்து எதற்கு??
ங்கொய்யால, யார்றா இவன்? இவனுக்கு எழுத்தூறு (writer's block) முத்திப் போச்சு போல.... அந்தப்பக்கமா இழுத்துட்டுப் போயி சரக்கு கிரக்கு வாங்கிக் கொடுத்து தேத்தி விடுங்க... இஃகிஃகி!!
தினமும் எழுகிறோம். அடிப்படைக் காரியங்களை விரும்பியோ விரும்பாமலோ செய்து தொலைக்கிறோம். நாளும் கழிகிறது. இந்தக் கழிவுகளின் எச்சங்களை எழுதுவதிலே என்ன கிடக்கிறது??
புதுமையாய் எழுத வேண்டுமாம்! என்ன புதுமை வேண்டிக் கிடக்கிறது?? எப்படியும் எதையோ செய்யப்போய் அதிலே வழுக்கள் பல கண்டு அல்லலுறத்தான் போகிறோம். இதிலே என்ன புதுமை?? அதற்கான விதைகள் எழுத்திலே வர வேண்டுமாம். அப்படி எழுதி என்ன செய்து விடமுடியும் நம்மால்?
மலர் என்றால் அதன் வாசத்தை நுகர்ந்துதான் அறிந்து கொள்ள வேண்டும். அதை எழுத்தில் சொல்வதால் நுகர முடியுமா? அதையும் எழுத்தால் நுகர வைக்க முடியும் என்கிறார்கள் பைத்தியங்கள். அது எப்படி முடியும்??
எழுகதிரவன் எழ, அதன் பிம்பம் அருணவத்தில் பட்டுத் தெரியும் அழகை எழுத்திலே விரியச் செய்து காட்சிப்படுத்த முடியுமா என்ன? அதை நிர்வாணக் கண்களால் கண்டு மகிழ்வதை எப்படி எழுத்தால் காட்சிப்படுத்த முடியும்? அப்படி என்ன எழுதிக் கிழித்துவிட முடியும்??
கற்பனை வளம் பெருகினால் எழுதி விடலாமா? கற்பனை என்பதே ஒரு சோடிப்புதானே? சோடித்துச் சோடித்துச் செய்வதென்ன கண்டோம்? சோடித்து எழுத வேண்டுமாம். சோடிப்பது எதுவும் தோற்பதற்குக் கைச்சாத்திடுவது அன்றோ? இதைப்போய் எழுதி, என்ன கிழித்து விட முடியும்??
சுயசிந்தனை இருந்தால் எழுதலாமாம். சுயசிந்தனை? சிந்தனையில் எழுத்தைத் தருவிக்க இயலுமா? அப்படியானால் எழுதியே உண்ணுவதும், உறங்குவதும், உய்ப்பதுமென இருக்க வேண்டியதுதானே? உழைப்பது எதற்கு?? ஆக உழைப்பது இருக்க, இந்த எழுத்து எதற்கு??
ங்கொய்யால, யார்றா இவன்? இவனுக்கு எழுத்தூறு (writer's block) முத்திப் போச்சு போல.... அந்தப்பக்கமா இழுத்துட்டுப் போயி சரக்கு கிரக்கு வாங்கிக் கொடுத்து தேத்தி விடுங்க... இஃகிஃகி!!
ஆனால் அச்சில்; ஆகாவிட்டால் கொப்பரையில்!
3/13/2010
மச்சிதானந்தா!
வளையவரும் தென்றல்
நெளிந்து செல்லும் நதி
மச்சிதானந்தாவோ
மஞ்சிதாவைக் காண
பவித்ரமாய்ப் பெரியதொரு படகில்!
கண்டுங் காணமுடியாத
தூரத்தில் ஒரு
வண்ணப் பதாகை!
படிக்கத்தான் முயலுகிறார்
ஆனாலும் முடியவில்லை!
படகை அதனருகில் செலுத்த
ஆழமும் போதவில்லை!
எட்டிப்பாய்ந்து
தவளைப் பாய்ச்சலாய்
நீச்சலினூடே அதனருகே!!
பதாகையில் வாசகம் சொல்கிறது,
எச்சரிக்கையாய் இரு!
விழுங்கு முதலைகள் அதிகம் இங்கு!!
நெளிந்து செல்லும் நதி
மச்சிதானந்தாவோ
மஞ்சிதாவைக் காண
பவித்ரமாய்ப் பெரியதொரு படகில்!
கண்டுங் காணமுடியாத
தூரத்தில் ஒரு
வண்ணப் பதாகை!
படிக்கத்தான் முயலுகிறார்
ஆனாலும் முடியவில்லை!
படகை அதனருகில் செலுத்த
ஆழமும் போதவில்லை!
எட்டிப்பாய்ந்து
தவளைப் பாய்ச்சலாய்
நீச்சலினூடே அதனருகே!!
பதாகையில் வாசகம் சொல்கிறது,
எச்சரிக்கையாய் இரு!
விழுங்கு முதலைகள் அதிகம் இங்கு!!
2/27/2010
வெள்ளை மனசு!
நளினமாய்ப் பேசி
நல்லது பல சொல்லி
இசைவும் துலங்குகிற
தருணமது!
ஓடியாடுவதினின்றும்
மிகுதியான குதூகலத்துடன்,
அய்... ஜாலி...
ரோட்டுல, ரோட்டுல நின்னு போற
எங்க காரை
இந்த மாமா வாங்கறாங்க!
==============================
தானே பரிமாறுவதும்
துடைக்கத் துணிதருவதுமாய்
மாய்ந்து மாய்ந்து
விருந்தோம்பல்!
ரேவதிக்கு உடம்பு சரியில்ல;
இல்லன்னா
இதைவிட இன்னும்
நல்லாக் கவனிச்சிருப்பா!!
ஆமாங்க அங்க்கிள்...
நீங்கெல்லாம் ஏன் வர்றீங்கன்னு
சணடை போட்டு
அழுதுட்டே இருந்ததால
தலை வலிக்குதுன்னு
உள்ள படுத்திட்டு இருக்காங்க
அம்மா!!!
நல்லது பல சொல்லி
இசைவும் துலங்குகிற
தருணமது!
ஓடியாடுவதினின்றும்
மிகுதியான குதூகலத்துடன்,
அய்... ஜாலி...
ரோட்டுல, ரோட்டுல நின்னு போற
எங்க காரை
இந்த மாமா வாங்கறாங்க!
==============================
தானே பரிமாறுவதும்
துடைக்கத் துணிதருவதுமாய்
மாய்ந்து மாய்ந்து
விருந்தோம்பல்!
ரேவதிக்கு உடம்பு சரியில்ல;
இல்லன்னா
இதைவிட இன்னும்
நல்லாக் கவனிச்சிருப்பா!!
ஆமாங்க அங்க்கிள்...
நீங்கெல்லாம் ஏன் வர்றீங்கன்னு
சணடை போட்டு
அழுதுட்டே இருந்ததால
தலை வலிக்குதுன்னு
உள்ள படுத்திட்டு இருக்காங்க
அம்மா!!!
2/24/2010
பழமைங்றது ரொம்ப முக்கியம் இராசா!
ஒருத்தர் சொன்னாரு, இறந்த காலம்ங்றது இறந்து போன ஒன்னு; எதிர்காலம்ங்றது இன்னும் கைக்கே வந்து சேராத ஒன்னு! ஆக, ஒருத்தங் கையில இருக்கிறது நிகழ்காலம் மட்டுமே. அந்த நிகழ்காலத்தை இனிமையாக்கி வாழறதுதான் மிக முக்கியம் அப்படின்னு!
ஆமாங்க, இதை ஏற்ற இறக்கத்தோட நயம்பட எழுதினா, படிக்க நல்லாதான் இருக்கும். ஆனா, வாழ்க்கைக்கு எது ஆதாரம்? எது மூலம்?? எது அடிப்படை???
பழமைதான் மூலம்; பழமைதான் ஆதாரம்; பழமைதான் அடிப்படை! ஒவ்வொருத்தரும், அவங்கவங்க வாழ்க்கையச் சக்கரம் கண்டுபிடிக்கிறதுல இருந்து ஆரம்பிக்க முடியுமா? முடியாது!
எழுதி வெச்சதைக் கத்துகிட்டு, லெளகீகங்றது எந்த நிலையில இருக்கோ, அதுல இருந்து மேம்பட முயற்சிக்கணும். சரிதானே? அப்ப, எழுதி வெச்சதை, பதிஞ்சி வெச்சதைப் படிச்சு ஆகணும். அப்பத்தான் புதுமைகள் மலரும்! இல்லாட்டி, பழசுலயேதான் திரும்பத் திரும்ப உழண்டுகிட்டு இருக்கணும்!
சரி, பழசைக் கத்துகிறதால என்ன அனுகூலம்?
பழமையான நினைவுகளை அசைப்போட்டுக் கூட, நிகழ்காலத்தை இனிமையாக்க முடியும். பழைய தவறுகளை நினைச்சு, அதுல இருக்கிற வழுக்களைக் களைந்து, நிகழ்காலத்தை இனிமையாக்க முடியும்.
அதேபோல, எதிர்காலத்தைப் பற்றிய அவதானமும், முன்னெச்சரிக்கையும் மிக அவசியம். வருமுன் காப்பது சாலச் சிறந்தது அப்படின்னு சொல்லிப் படிக்கிறமே?
இப்படி, எதிர்காலத்தைப் பற்றிய முன்னெச்சரிக்கைக்கு மூலதனம் பழமை. இந்த முன்னெச்சரிக்கைக்காக, பழமைங்ற மூலதனத்தைப் போட்டு விளைச்சல் மேற்கொள்றது நிகழ்காலம். ஆக, எதிர்காலத்துக்கும் இன்றியமையாதது இந்தப் பழமை!
முத்தாய்ப்பா நாம சொல்றது என்னன்னா, பழமைய மேம்படுதலோட கூட்டிப் புதுமை காணுறதுதாங்க வாழ்க்கைக்கு வளம் சேர்க்கும்! பழமை, பழமைன்னு ஒதுக்கி வைக்கிறதாலப் புதுமை வந்திடாதுங்க இராசா!!
ஆமாங்க, இதை ஏற்ற இறக்கத்தோட நயம்பட எழுதினா, படிக்க நல்லாதான் இருக்கும். ஆனா, வாழ்க்கைக்கு எது ஆதாரம்? எது மூலம்?? எது அடிப்படை???
பழமைதான் மூலம்; பழமைதான் ஆதாரம்; பழமைதான் அடிப்படை! ஒவ்வொருத்தரும், அவங்கவங்க வாழ்க்கையச் சக்கரம் கண்டுபிடிக்கிறதுல இருந்து ஆரம்பிக்க முடியுமா? முடியாது!
எழுதி வெச்சதைக் கத்துகிட்டு, லெளகீகங்றது எந்த நிலையில இருக்கோ, அதுல இருந்து மேம்பட முயற்சிக்கணும். சரிதானே? அப்ப, எழுதி வெச்சதை, பதிஞ்சி வெச்சதைப் படிச்சு ஆகணும். அப்பத்தான் புதுமைகள் மலரும்! இல்லாட்டி, பழசுலயேதான் திரும்பத் திரும்ப உழண்டுகிட்டு இருக்கணும்!
சரி, பழசைக் கத்துகிறதால என்ன அனுகூலம்?
- பழமையைக் கற்பதால், அடையாளத்தைத் தெரிவு செய்து, முகாந்திரம் வெளிப்படுகிறது.
- பழமையைக் கற்பதால், முடிவெடுத்தல் மறறும் தருக்க வழிமுறைகள் செம்மைப்படுகிறது.
- பழமையைக் கற்பதால், சமூகக் கோட்பாடுகளின் நிறை குறைகளை அறிய முடிகிறது.
- பழமையைக் கற்பதால், கடந்த காலத் தவறுகளில் இருந்து பாடங்கள் கற்க முடிகிறது.
- பழமையைக் கற்பதால், தன்னைப் பிறரோடு ஒப்பிட்டுச் செம்மைப்படுத்த ஏதுவாகிறது.
பழமையான நினைவுகளை அசைப்போட்டுக் கூட, நிகழ்காலத்தை இனிமையாக்க முடியும். பழைய தவறுகளை நினைச்சு, அதுல இருக்கிற வழுக்களைக் களைந்து, நிகழ்காலத்தை இனிமையாக்க முடியும்.
அதேபோல, எதிர்காலத்தைப் பற்றிய அவதானமும், முன்னெச்சரிக்கையும் மிக அவசியம். வருமுன் காப்பது சாலச் சிறந்தது அப்படின்னு சொல்லிப் படிக்கிறமே?
இப்படி, எதிர்காலத்தைப் பற்றிய முன்னெச்சரிக்கைக்கு மூலதனம் பழமை. இந்த முன்னெச்சரிக்கைக்காக, பழமைங்ற மூலதனத்தைப் போட்டு விளைச்சல் மேற்கொள்றது நிகழ்காலம். ஆக, எதிர்காலத்துக்கும் இன்றியமையாதது இந்தப் பழமை!
முத்தாய்ப்பா நாம சொல்றது என்னன்னா, பழமைய மேம்படுதலோட கூட்டிப் புதுமை காணுறதுதாங்க வாழ்க்கைக்கு வளம் சேர்க்கும்! பழமை, பழமைன்னு ஒதுக்கி வைக்கிறதாலப் புதுமை வந்திடாதுங்க இராசா!!
பழமை அறியாதவன் பாழ்!
11/09/2009
பல் வுழுந்திரிச்சி!
"அப்பா... அப்பா... வந்தூ”
“சொல்றா தங்கம், என்றா?”
“ம், பல் வுழுந்திரிச்சி!”
“அட, இதுக்குள்ளயா?
“ஆமாங்ப்பா!”
“சரி, சரி, தாத்தாகிட்டச் சொல்லிப் பணம் பத்தோ, நூறோ வாங்கிக்கடா!”
“ம்க்கும்! தாத்தாவுக்குதான் பல் வுழுந்திரிச்சி!!”
அடக் கடவுளே! மனுசன் இங்க பனிரெண்டு மணி நேரம் இந்த ஆந்திராக்காரப் பசங்களைக் கட்டி மேய்ச்சுட்டு, ஆய்ஞ்சி, ஓய்ஞ்சி போய் வந்து, நித்திரையால ஆவுறதுக்கு முன்னாடி, சித்த மனசாரப் பெத்த குழந்தைகூடப் பேசலாமுன்னா? நீங்களே பாருங்க, என்னா வில்லத்தனம்?! இதுல போயி நான் என்னத்த இடுகையப் போட்டு, பின்னூட்டம் போட்டு??
மக்கா, வேலை சடவு இடுப்பை முறிக்குது! இடுகையுங் கிடையாது, பின்னூட்டுங் கெடையாது இன்னைக்கு. நாளா, மக்கா நாள் பாத்துகுலாஞ் செரியா? செரி அப்ப, போயிட்டு வாங்க!!
“சொல்றா தங்கம், என்றா?”
“ம், பல் வுழுந்திரிச்சி!”
“அட, இதுக்குள்ளயா?
“ஆமாங்ப்பா!”
“சரி, சரி, தாத்தாகிட்டச் சொல்லிப் பணம் பத்தோ, நூறோ வாங்கிக்கடா!”
“ம்க்கும்! தாத்தாவுக்குதான் பல் வுழுந்திரிச்சி!!”
அடக் கடவுளே! மனுசன் இங்க பனிரெண்டு மணி நேரம் இந்த ஆந்திராக்காரப் பசங்களைக் கட்டி மேய்ச்சுட்டு, ஆய்ஞ்சி, ஓய்ஞ்சி போய் வந்து, நித்திரையால ஆவுறதுக்கு முன்னாடி, சித்த மனசாரப் பெத்த குழந்தைகூடப் பேசலாமுன்னா? நீங்களே பாருங்க, என்னா வில்லத்தனம்?! இதுல போயி நான் என்னத்த இடுகையப் போட்டு, பின்னூட்டம் போட்டு??
மக்கா, வேலை சடவு இடுப்பை முறிக்குது! இடுகையுங் கிடையாது, பின்னூட்டுங் கெடையாது இன்னைக்கு. நாளா, மக்கா நாள் பாத்துகுலாஞ் செரியா? செரி அப்ப, போயிட்டு வாங்க!!
நடைன்னு நடப்பனா? வடைன்னு சுடுவனா??
வந்த விருந்தாடிக்கி இந்தான்னு குடுப்பனா??
11/04/2009
கொழுத்தவனுக்குக் கொள்ளு! எளைச்சவனுக்கு எள்ளு!!
”ஆறை நாட்டானின் அலம்பல்கள் எழுத கால அவகாசம் இல்லை; புத்தகம் படிக்க நேரம் இல்லை; கடுமையான களைப்பு, ஆமாங்க பனிரெண்டு மணி நேர வேலை இன்னைக்கு! ஆமா, காலம் அப்படின்னா என்ன? நேரம் அப்படின்னா என்ன?? இஃகிஃகி, அதை நீங்க சித்த, பின்னூட்டத்துல சொல்லிட்டுப் போங்க மாப்பு!”
“மழை பேயுது மழை பேயுது நெல்லை வாருங்கோ,
முக்காப்படி அரிசி போட்டு முறுக்கு சுத்துங்கோ,
ஏரு ஓட்டுற மாமனுக்கு எண்ணி வையுங்கோ,
சும்மா இருக்குற மாமனுக்குச் சூடு போடுங்கோ!”
“பாத்தீகளா? நாந்தேன் வேலையால இருந்து இப்பத்தான் வர்றேன்னு சொல்லுறேன். கேட்காமக் கொள்ளாம, சூடுகீடுன்னு சொல்லிகிட்டு? இதுக்கு எல்லாம் என்னான்னு சொல்லுங்க பாக்குலாம்?!”
“என்ன, பவானி சம்பைன்னா உங்களுக்கு இளக்காரமா? எதுக்கு என்னான்னு சொல்லோணும்??”
“நண்டுக்கு?”
“குஞ்சு”
“கிளிக்கும் கீரிக்கும்?”
“பிள்ளை”
“அணிலுக்கும் முயலுக்கும்?”
”குட்டி”
“யானைக்கு?”
“களபம்”
“பேனுக்கு?”
“செள்”
“பயிருக்கு?”
“நாற்று”
“மரத்துக்கு?”
“கன்று”
“தென்னைக்கு?”
“பிள்ளை”
“தேங்காய்க்கு?”
“குரும்பை”
“மாங்காய்க்கு?”
“வடு”
“அவரைக் காய்க்கு?”
“பிஞ்சு”
“வாழைக்கு?”
“கச்சல்”
“அட, நயமாத்தேன் சொல்லிப்புட்டீங்களே மாப்பு?”
”நித்திரை நேரத்துல, உங்க குணஞ் சித்தங்கூட ஓயுலியா?”
“அது ஓயுறதெல்லாம் இருக்கட்டு;
வெட்டினதால் த்ப்பி விட்டேன்,
வெட்டாவிட்டால் செத்திருப்பேன்!
செத்ததனால் தப்பிவிட்டேன்
சாகாவிட்டால் செத்திருப்பேன்!
வந்ததனால் வரவில்லை
வராவிட்டால் வந்திருப்பேன்!
நான் யாரு?”
கோயமுத்தூர் வந்த மாப்புளை, நான் யாருன்னு சொல்லாமக் கொள்ளாம ஈரோட்டுக்கு ஓடுறதைப் பாருங்க...இஃகிஃகி!!
“மழை பேயுது மழை பேயுது நெல்லை வாருங்கோ,
முக்காப்படி அரிசி போட்டு முறுக்கு சுத்துங்கோ,
ஏரு ஓட்டுற மாமனுக்கு எண்ணி வையுங்கோ,
சும்மா இருக்குற மாமனுக்குச் சூடு போடுங்கோ!”
“பாத்தீகளா? நாந்தேன் வேலையால இருந்து இப்பத்தான் வர்றேன்னு சொல்லுறேன். கேட்காமக் கொள்ளாம, சூடுகீடுன்னு சொல்லிகிட்டு? இதுக்கு எல்லாம் என்னான்னு சொல்லுங்க பாக்குலாம்?!”
“என்ன, பவானி சம்பைன்னா உங்களுக்கு இளக்காரமா? எதுக்கு என்னான்னு சொல்லோணும்??”
“நண்டுக்கு?”
“குஞ்சு”
“கிளிக்கும் கீரிக்கும்?”
“பிள்ளை”
“அணிலுக்கும் முயலுக்கும்?”
”குட்டி”
“யானைக்கு?”
“களபம்”
“பேனுக்கு?”
“செள்”
”அட, மனுசனுக்கு?”
”மகவு!”“பயிருக்கு?”
“நாற்று”
“மரத்துக்கு?”
“கன்று”
“தென்னைக்கு?”
“பிள்ளை”
“தேங்காய்க்கு?”
“குரும்பை”
“மாங்காய்க்கு?”
“வடு”
“அவரைக் காய்க்கு?”
“பிஞ்சு”
“வாழைக்கு?”
“கச்சல்”
“அட, நயமாத்தேன் சொல்லிப்புட்டீங்களே மாப்பு?”
”நித்திரை நேரத்துல, உங்க குணஞ் சித்தங்கூட ஓயுலியா?”
“அது ஓயுறதெல்லாம் இருக்கட்டு;
வெட்டினதால் த்ப்பி விட்டேன்,
வெட்டாவிட்டால் செத்திருப்பேன்!
செத்ததனால் தப்பிவிட்டேன்
சாகாவிட்டால் செத்திருப்பேன்!
வந்ததனால் வரவில்லை
வராவிட்டால் வந்திருப்பேன்!
நான் யாரு?”
கோயமுத்தூர் வந்த மாப்புளை, நான் யாருன்னு சொல்லாமக் கொள்ளாம ஈரோட்டுக்கு ஓடுறதைப் பாருங்க...இஃகிஃகி!!
8/31/2009
கனவில் கவி காளமேகம் - 16
நேற்றைக்கு இட்ட காணொளியப் பார்த்திட்டு, என்னுடைய 12 ஆண்டுகால நண்பர், வகுப்பறைத் தோழர், கனடாவில் இருக்கும் சண்டிலிப்பாய் சகோதரன் சதீசு எழுதி இருக்கிற கடிதம் பாருங்க மக்களே! சந்தடி சாக்குல jokerனு சொல்லிப் போட்டாரே? அவ்வ்வ்வ்வ்.............
இதுல வேற நான் உடம்பு போட்டுட்டன்னு சொல்லி... அடக் கடவுளே... நெசமாலுமே போட்டுட்டனா? அல்லது, அப்ப அவ்வளவு ஒல்லியா இருந்தனா?? நல்லா இருடாப்பா மகராசா....
************************************************
Hello Sir,
I was wondering how did you get this tremendous interest in Tamil and making poems, speaches and other research in Tamil. I saw you before like a joker, human, helper, friend etc .. but I did not imagine you have such potential and influence person on Tamil literacy and language. Once in a while I see your blog and read "palamoli" translations. Keep it up your work.
I was wondering how did you get this tremendous interest in Tamil and making poems, speaches and other research in Tamil. I saw you before like a joker, human, helper, friend etc .. but I did not imagine you have such potential and influence person on Tamil literacy and language. Once in a while I see your blog and read "palamoli" translations. Keep it up your work.
You have putup some weight it seems.
Thanks.
Sathis
************************************************
சரி, நாம விசயத்துக்கு வரலாம் வாங்க. இப்பதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி விமானத்துல இருந்து எறங்கி வந்தேன். பயணத்தின் போது வழக்கம் போல, ஏன் நம்ம பெரியவங்க தா, கொடு, அளி, ஈ, வீசு இப்படி பல சொற்களை ஒரே அர்த்தத்தைக் கொடுக்கிறதுக்கு வெச்சிருக்காங்கங்ற கேள்வி தோணிச்சு.
யோசனையால இருக்க இருக்கவே நித்திரை வந்திட்டுது. குறிப்பறிஞ்சு, நித்திரையில எண்ட அப்பிச்சி கவி காளமேகம் வந்திட்டாரென்ன? வந்து, ஏண்டாப்பா மண்டையிடியே? நாஞ்சொல்றன் உனக்கு விசியமண்டு, கதைக்க வெளிக்கிட்டாரென்ன?
நானுஞ் சொல்லிட்டுத்தான் போங்கோவனென்டு சொல்லைக்க, அவர் சொன்னவர், ”நாங்கள் காரண காரியமாத்தான் பிரிம்பா ஒன்டு ஒன்டுக்கும் ஒரு சொல் பாவிக்கக் கொடுத்து வெச்சம். நீங்கள்தான்டாப்பா, எல்லாத்தையும் ஒன்டாப் போட்டு குழப்பியடிச்சுப் பாவிக்கிறீங்கள் என்டு” சொன்னவர் அவர். பேந்து சொன்னார்,
”இந்த சொற்கள் அனைத்தும் இரத்தலுக்கு பாவிக்கும் சொற்கள். உயர்ந்தவன் இடத்தே இரப்பது ’ஈ’யென. ஒப்பானவன் இடத்தே இரப்பது (யாசிப்பது) ’தா’வென. வறியவன் இடத்தே யாசிப்பது ‘கொடு’வென. கொடையில் கருணையுடன் செயல்படுவது, ‘அளிப்பது’. கொடையில் கருணையற்றுச் செயல்படுவது ’வீசுதல்’”.
அவர் சொல்லைக்கே வடிவா விளங்கிட்டது, ஆனா விமானத்துல இருந்த பெட்டை கதைக்கவும் கனவு கலைஞ்சிட்டதென்ன? ஆனால்டப்பா, நாம இனி இந்த சொல்லுகளைப் பாத்து பாவிக்கணுமென்ன?? குடுங்கோவென்டெல்லாம் சொல்லப்படாதென்ன? தாங்கோ என்டு சொல்லப் பழகிக்கணும்.
அவர் சொன்ன பாட்டு இதுதான்:
ஈதா கொடுஎனக் கிளக்கும் மூன்றும்
இரவின் கிளவி யாகிடன் உடைய!
அவற்றுள் ஈயென் கிளவி இழிந்தோன் கூற்றே!
தாவென் கிளவி ஒப்போன் கூற்றே!
கொடுவென் கிளவி உயர்ந்தோன் கூற்றே!
சரி நான் வரட்டே, பேந்து நாளைக்கி வந்து வேற புதினம் எதன்டாலும் கதைப்பமென்ன? வாறன்ஞ் செரியே?!
Subscribe to:
Posts (Atom)


