4/07/2026

கொண்டாட்டம்

 கொண்டாட்டம்

சற்றேறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இதேகாலகட்டம். தேர்தல் முடிவுகள் வெளியாகி, பத்து பதினைந்து மணித்துளிகள் கடந்திருக்கும். அழைப்பில் கலந்து கொண்டேன். நிறையப் பேர் அழைப்பில் இருந்தனர். வெற்றிக் களிப்புடன் நண்பரொருவர் பேசிக் கொண்டிருந்தார். நாம் சொன்னோம், “அன்புகூர்ந்து நாம் இதை ஒரு வெற்றியாகக் கொள்ள வேண்டாம். இரண்டு ஆண்டுகள் நம் பணிகள் நிறைவடைந்த பின் கொண்டாடுவதே சரியாக இருக்கும்!”.

நமக்கான வாய்ப்புக்கு ஆதரவளிக்காதவரின் மனத்தையும், தணிந்த மனத்தோடு வென்றெடுத்து முடிப்பதுதான் வெற்றியாக இருக்க முடியுமென்பது நம் கணக்கு. கணக்குப் பிழைத்து விட்டது.  தோல்வி அடைந்து விட்டதாக, நான் என்னளவில் தோற்றுவிட்டதாக, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகான இந்தக் காலகட்டத்தில் உணர்கின்றேன்.

நேரிடையாகக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. ஆறு மணி நேரப் பயணம், வீடு வந்து சேரவே காலத்தாழ்ச்சி ஆகியிருந்தது. குடும்பத்தார் ஊரில். அவர்களுடன் பேசிவிட்டு வரும்போது முக்கால்வாசிக் கூட்டம் முடிந்திருந்தது. பிற்பாடு, கூட்டத்தின் ஒலிப்பதிவு கிடைக்கப் பெற்றுக் கேட்டு முடித்தேன்.

2022 தேர்தலில் வெளியிட்ட காணொலியில் சொல்லி இருப்பேன், மேலாதிக்கமும் மேட்டிமைத்தனமும் களையப்பட தேர்தலில் இன்னாருக்கு வாக்களியுங்களென. குழுவில், பெரும்பான்மை வலு இருந்துவிட்டால், எதுவும் செய்து கொள்ளலாமென்பதுதான் பெரும்பான்மைவாதம், மேட்டிமைத்தனம், மேலாதிக்கமென்பதாகும்.

காலமெல்லாம் எதிர்க்குரலாக இருந்து, இருந்து, சமர்புரிவதே எழுத்தாளனின் அறமாக இருக்கின்றது. அப்படித்தான் இருந்தாக வேண்டும்.

முன்னாள் தலைவர் அவர்கள், 2012ஆம் ஆண்டுக்கால கட்டத்தில் நிகழ்ந்த ஒரு பிணக்கினைக் குறிப்பிட்டுப் பேசி இருந்தார்கள். அதில் நானும் தொடர்புடையவன். 2012-2014 செயற்குழுவில் இடம் பெற்றிருந்தேன். எங்கள் செயற்குழு பொறுப்பேற்கு முன்பேவும், இணையதளத்தில், ”Beware of இன்னார்” எனும் தலைப்பில் ஒரு சுற்றறிக்கை இணையதளத்தில் இடம் பெற்றிருந்தது. அதனை எதிர்த்து, தமக்கு அது மானபங்கத்தை ஏற்படுத்துகின்றதெனச் சொல்லி, ஒட்டுமொத்த செயற்குழுவின் மீதும் 100 மில்லியன் டாலர்கள் ஈடு கேட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாகச் சொல்லி, எங்கள் பெயர்களையெல்லாம் தனித்தனியாகக் குறிப்பிட்டு, தாக்கீது அனுப்பப்பட்டிருந்தது. எண்ணிப்பாருங்கள், தன்னார்வத் தொண்டு புரிய வந்த நாங்கள் மன உளைச்சலை எதிர்கொண்டதோடு, பணமும் செலவு செய்து கொள்ள வேண்டுமா? இல்லை, இல்லவே இல்லை. இல்லினாய் மாகாண அரசின் சட்டம் சொல்கின்றது, நிறுவனமே பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்படி இடம் பெற்ற சுற்றறிக்கையென்பது, பழங்குடி ஃபட்வாதான். அப்படிச் செய்வது அமெரிக்க வாழ்வியலன்று!

சிறப்புக்கூட்டத்துக்கான அடிப்படை குறித்து ஏற்கனவே நாம் பேசிவிட்டோம். கூட்டம் நடத்தப்பட்ட விதத்தைத்தான் நாம் தற்போது பேச வேண்டியுள்ளது. நிகழ்ச்சி நிரலில் பேசுவதற்கு வாய்ப்பு இருக்கின்றதென்பதற்காக, 45 மணித்துளிகள் பேச வேண்டியதையெல்லாம் பேசிவிட்டு, இப்படியானவர்கள் பொறுப்புகளுக்கு வர வேண்டுமா, வேண்டாமா என்பதையெல்லாம் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் எனும் பாணியில் பேசிவிட்டு, ஆவணங்களைப் பகிர்வதற்கென  முன்கூட்டியே சொல்லவில்லையென்பதல்லாம் கொடூர நகைச்சுவை. கேள்வி/பதில் நேரமென்பது கூட நிரலில் இல்லைதாம். ஆனால் கேள்வி பதில் நேரம் கடைபிடிக்கப்படுகின்றது. உறுப்பினர் பேசுவது தொடரும் போது, சட்டக்கோப்பில் இல்லையெனச் சொல்லப்படுகின்றது. பெரும்பான்மை இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாமெனும் போக்கு மிகவும் ஆபத்தானது.

கூட்டம் நடத்தப்பட்ட விதமென்பது மிகவும் வருத்தத்தையும் கவலையையும் அளிக்கக் கூடியதாகும். தீர்மானமெனும் சொல்லே, பெரும்பான்மை உறுப்பினர்கள் வாக்கு அளித்தபின்புதான் உச்சரிக்கப்படவே வேண்டும். செயற்குழுவில் நிறைவேறி இருந்தால், செயற்குழுக் கூட்டக்குறிப்பில் இடம் பெற்றிருந்திருக்க வேண்டும். பொதுக்குழுத் தீர்மானமென்றால், பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதலளித்திருக்க வேண்டும். இப்படி, ஒவ்வொன்றைப் பற்றியும் பேச முற்படுவோமேயானால், அன்பும் அறமும் பெருந்தோல்வி அடைந்திருக்கின்றது. ஒழுங்கில் பெருவீழ்ச்சியென்பதே காலத்தின் கணங்களில் இடம் பெறும் நம் பதிவாக இருக்க முடியும்.

எதுவும் நிரந்தரமில்லை. இதுவும் கடந்து போகும்!



4/05/2026

இலக்கிய மாண்பு

ஓர் இலக்கியவாதியின் மறைவுக்குப்பின் எழுதப்படும் வணக்கக்கட்டுரை என்பது, வெறும் தகவல்களின் தொகுப்பாக இல்லாமல், அந்தப் படைப்பாளி உலாவிய கற்பனை உலகையும் அவர் விதைத்த சிந்தனைகளையும் வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும். கட்டுரையின் தொடக்கத்தில், அந்த ஆளுமையின் மறைவு இலக்கியச் சூழலில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை உணர்வுப்பூர்வமாகப் பதிவு செய்ய வேண்டும். அவர் மறைந்த செய்தியை மட்டும் கூறாமல், ஒரு வாழ்வு அல்லது ஒரு தனித்துவமான குரல் ஓய்ந்துவிட்டதை வாசகர்கள் உணரும் வகையில் முன்னுரை அமைய வேண்டும்.

அடுத்ததாக, அவரது படைப்புலகம் குறித்த ஆழமான பார்வையை முன்வைக்க வேண்டும். அவர் கையாண்ட கருப்பொருள், அவரது மொழிநடை, சமூகத்தில் அவரது எழுத்துக்கள் ஏற்படுத்திய தாக்கம் முதலானவற்றை விவரிக்க வேண்டும். அவர் எந்த இலக்கிய இயக்கத்தைச் சார்ந்தவர் அல்லது எந்தப் புதிய பாணியைத் தொடங்கி வைத்தார் என்பதைச் சுட்டிக்காட்டுவது அவசியம். வெறும் புத்தகப் பட்டியலாக இல்லாமல், அந்தப் புத்தகங்கள் வாசக மனங்களில் எத்தகைய மாற்றத்தை உண்டாக்கின என்பதை ஆய்வு ரீதியாக அணுக வேண்டும்.

தொடர்ந்து, அந்த இலக்கியவாதியின் தனிப்பட்ட ஆளுமை, கொள்கைகளைப் பற்றி எழுதலாம். அவருடன் பழகிய தருணங்கள் அல்லது அவருடைய நேர்காணல்கள் வழி வெளிப்பட்ட அவரது வாழ்க்கைச் சிந்தனைகளை இங்கே பகிரலாம். அவர் சந்தித்த விமர்சனங்கள், அவருக்கு இருந்த இலக்கியப் பிடிவாதம் அல்லது எளிமை போன்ற பண்புநலன்களைச் சுருக்கமாகக் குறிப்பிடுவது, அந்த ஆளுமையை ஒரு முழுமைக் காட்சியாக வாசகர் கண்முன் நிறுத்தும்.

நிறைவாக, அவர் விட்டுச் சென்ற இலக்கிய வாரிசுகள், அவரது படைப்புகள் எதிர்காலத் தலைமுறைக்கு எவ்விதம் வழிகாட்டும் என்பதை வலியுறுத்தி முடிக்க வேண்டும். உடல் மறைந்தாலும் ஒரு கலைஞன் தனது சொற்களின் வழியாக என்றென்றும் வாழ்வான் என்ற உண்மையை உரக்கச் சொல்லி, அவருக்கு உரிய மரியாதையைச் செலுத்தும் விதமாக இறுதியுரை அமைய வேண்டும். அஞ்சலிக் கட்டுரை என்பது ஒருவருக்கு நாம் செய்யும் இறுதிப் புகழஞ்சலி மட்டுமல்ல, அது ஒரு படைப்பாளியின் வாழ்வை ஆவணப்படுத்தும் ஒரு வரலாற்றுச் சான்றும் கூட.

ஊடகங்களில் ஆண்டுக்கணக்கில் ஒரு தனியிடத்தைப் பெற்று வந்த பொருண்மியம் அது. சமூகம் கொந்தளிப்போடும் சினத்தோடும் இருந்தது. ஆட்டோ சங்கர் 1995ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார். உடல் அடக்கத்தின் போது, அவரது தாயின் பிரிவாற்றாமையைக் கண்டு அந்தப் பகுதி மக்களெல்லாம் சோகத்தில் ஆழ்ந்திருந்ததாகவும் அந்தத் தருணங்கள் எப்படிப்பட்டதாக இருந்ததென்பதையும் இதழ்கள் படம் பிடித்துக் காண்பித்தன. அதைக் கண்டு, சினம் தணிந்த தமிழ்நாட்டுச் சமூகம் கலங்கியது. காரணம், சக மனிதனின் துக்கம், அவர்களது துயர் கண்டு மனம் நோவதென்பது மாந்தநேயத்தின் குறியீடு. சமூக அமைதிக்கு அது இன்றியமையாதது.

2005 - 2012ஆம் ஆண்டு வரையிலும், தனித்துவமான தமிழ் இணையவுலகமென ஒன்று இருந்தது. தமிழ்மணத்தின் பங்கு அதில் முதன்மையாகும். உலகெங்கும் இருக்கும் தமிழர்கள், தம் எழுத்துகளால் பிணைந்திருந்தார்கள். அப்படியான உலகில், பதிவர் டோண்டு என்பவர் நன்கறியப்பட்டவராக இருந்தார். காரணம், அவரது அதிதீவிர வலதுசாரித்தன எழுத்தும், விமர்சனப்பாங்கும். கடுமையான எதிர்ப்புக்கு ஆட்பட்டவராக இருந்தார். அவர் மறைந்து விட்டாரெனும் செய்தியறிந்து, ஒட்டுமொத்த தமிழ்ப்பதிவுலகும் இழப்பின் தாக்கத்தில் சிக்குண்டு போய், செய்வதறியாமல், சொல்வதறியாமல் கனத்த மெளனத்தைக் கடைபிடித்தது. அதை உணர்ந்த இதழ்கள், அத்தகு நிலையைக் குறிப்பிட்டு அவருக்கான இரங்கல் செய்திகளை வெளியிட்டன.

முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் மறைவின் போழ்து, காலமெல்லாம் தீவிரமாகவும் கடுமையாகவும் விமர்சித்த, எதிர்த்துவந்த இதழ்களெல்லாம், நினைவு இதழ்களைத் தத்தம் சொந்த செலவில் பக்கம் பக்கமாக வெளியிட்டுத் தத்தம் ஆழ்ந்த இழப்பினையும் உணர்வுகளையும் வெளிப்படுத்திக் கொண்டன.

ஞானபீடவிருதுச் சிறப்புக் கொண்ட ஜெயகாந்தன் மறைவின் போது, அவர் யாரையெல்லாம் காலமெல்லாம் விமர்சித்து வந்தாரோ அவர்களெல்லாம் வந்திருந்து மலர்வணக்கம் செலுத்தியது; அரசு இயந்திரமோ மேல்தட்டு வர்க்கமோ கண்டு கொள்ளாமலே விட்டுவிட்டதென்கின்ற அகங்கலாய்ப்புகள் இணையமெங்கும் இடம் பெற்றதென்பதையும் கண்டோம். https://daily.navinavirutcham.in/?p=23653 காரணம், மாந்தநேய மாண்பு.

இத்தகு சூழலில்தாம், தற்போது,  30 ஆண்டுகாலம் தமிழ் எழுத்துக்காகப் பங்காற்றிய ஒருவர், எம்மைப் போன்றவர்களையெல்லாம் அணுகி, எழுதுங்கள், எழுதிக்கொண்டே இருங்களென ஊக்கப்படுத்திய ஒருவர் மறைந்து விடுகின்றார். ஒவ்வொருவரின் சாவுக்கான பயணமும் பிறக்கும் போதேவும் துவங்கி விடுகின்றதெனச் சொன்னார் கவியரசர். நாம் எல்லாருமே சாவுக்கான பயணத்தில்தாம் இருக்கின்றோம். அவரவருக்கான நேரம் வந்ததும் பயணம் முடிவுக்கு வருகின்றது. அப்படியான இலக்கியப் பங்களிப்பின் முடிவுக்கு அபத்தமான ஓர் அஞ்சலிக்குறிப்பு. இலக்கிய உலகம் நொந்து கொள்கின்றது. 

நியூயார்க், இலண்டன், ரொறண்ரோக்களில் தமிழ்விழாக்கள் நடந்தால் மட்டும் போதுமா? இலக்கிய மாண்பென்பது, இலக்கியவாதியிடமிருந்தே பிறக்க வேண்டும்.


4/02/2026

தொடர்மருந்தின் அவசியம், தற்போதைய நிலை

நண்பர் சிலநாட்களாகத் தொடர்பில் வரவில்லை. ஏனென வினவியதற்கு அவர் சொன்னது, “அண்ணா, துயர சம்பவம். அக்கா, தம்பி, ரெண்டு பேரும் இங்க பக்கத்துலதா இருக்காங்க. அவங்க அம்மா ஒருவேளை மருந்து எடுக்கத் தவறவிட்டுப் போயி, நினைவிழந்துட்டாங்க. அவரால இப்ப ஊருக்குப் போக முடியாது. அக்கா கிரீன்கார்டு, அவங்களை இப்பதா ஃபிளைட் ஏத்திவுட்டுட்டு வந்தன்”.

தமிழ்நாட்டின் இன்றைய சூழலில், பல குடும்பங்களில் உயர் இரத்த அழுத்தம் என்பது ஒரு பொதுவான உடல்நலப் பிரச்சனையாக மாறிவிட்டது. ஆனால், இதற்கான மருந்துகளை வாழ்நாள் முழுவதும் உட்கொள்ள வேண்டும் என்ற புரிதல் இன்னும் முழுமையாக ஏற்படவில்லை. பல பெற்றோர்கள் "உடல்நிலை நன்றாகத்தான் இருக்கிறது" அல்லது "இன்று தலைவலி இல்லையே" என்று நினைத்து, தாங்களாகவே ஒரு நாள் அல்லது சில நாட்கள் மருந்து உட்கொள்வதை நிறுத்தி விடுகின்றனர். இந்தச் சிறு கவனக்குறைவு, உடலில் இரத்த அழுத்தத்தின் அளவைச் சீரற்றதாக்கி, எதிர்பாராத நெருக்கடிகளை உருவாக்குகிறது.

மறதிக்கான காரணங்களும் குடும்பச் சூழலும்

வயதான காலத்தில் ஏற்படும் நினைவாற்றல் குறைபாடு ஒருபுறமிருக்க, பல நேரங்களில் மாத்திரைகளைச் சரியாக அடுக்கிக் கொடுக்க ஆளில்லாத சூழலும் ஒரு முக்கியக் காரணமாகிறது. கூட்டுக்குடும்பச் சிதைவு , பிள்ளைகள் வேலை நிமித்தமாக வெளியூர்களில் அல்லது வெளிநாடுகளில் வசிக்கும் சூழலில், பெற்றோர்கள் தங்களின் மருந்து அட்டவணையைத் தாங்களே நிர்வகிப்பதில் சிரமம் கொள்கின்றனர். "மாத்திரை சாப்பிட்டோமா இல்லையா?" என்ற சந்தேகம் வரும்போது, தெரியாமல் இரண்டாவது முறை உட்கொள்வது அல்லது பயத்தில் தவிர்ப்பது என இரண்டுமே ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

மருந்து விடுபடுவதால் ஏற்படும் மறைமுக ஆபத்துகள்

இரத்த அழுத்த மருந்து என்பது இரத்தக் குழாய்களின் விரிவு , சுருக்கத்தைச் சீராக வைக்கும் ஒரு கவசம் போன்றது. ஒருநாள் மருந்து விடுபடும்போது, இரத்த அழுத்தம் திடீரென உயர்ந்து, அது மூளைக்குச் செல்லும் மெல்லிய இரத்தக் குழாய்களைப் பாதிக்கலாம். இதுவே பக்கவாதம் ஏற்படுவதற்கு முதன்மைக் காரணியாக அமைகிறது. மேலும், அவ்வப்போது மருந்தைத் தவிர்ப்பது இதயத் தசைகளின் அழுத்தத்தை அதிகரித்து, பிற்காலத்தில் இதயச் செயலிழப்பு அல்லது சிறுநீரகப் பாதிப்புகளுக்கு விதையிடுகிறது.

தீர்வுகளும் விழிப்புணர்வும்

இந்த சிக்கலைத் தவிர்க்க எளிய தொழில்நுட்ப , மேலாண்மை முறைகளைக் கையாளலாம். வாராந்திர மாத்திரை பெட்டிகளை பயன்படுத்துவதன் மூலம், அந்தந்த நாளுக்கான மாத்திரை உட்கொள்ளப்பட்டதா என்பதை எளிதாகக் கண்டறியலாம். பிள்ளைகள் அருகில் இல்லாத பட்சத்தில், கைபேசி அலாரங்கள் அல்லது மருந்துகளை நினைவூட்டும் செயலிகள் பெரியவர்களுக்குப் பேருதவியாக இருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, இரத்த அழுத்தம் என்பது அறிகுறி தெரிந்தபின் குணப்படுத்தும் ஒன்றல்ல, மாறாக அறிகுறிகள் வராமல் தற்காத்துக் கொள்ள வேண்டிய ஒன்று என்பதைப் பெற்றோர்களுக்குப் புரிய வைப்பது கட்டாயம்.

கடந்தவாரம்

நண்பர் சிலநாட்களாகத் தொடர்பில் வரவில்லை. ஏனென வினவியதற்கு அவர் சொன்னது, “அண்ணா, துயர சம்பவம். அக்கா, தம்பி, ரெண்டு பேரும் இங்க பக்கத்துலதா இருக்காங்க. அவங்க அம்மா ஒருவேளை மருந்து எடுக்கத் தவறவிட்டுப் போயி, நினைவிழந்துட்டாங்க. அவரால இப்ப ஊருக்குப் போக முடியாது. அக்கா கிரீன்கார்டு, அவங்களை இப்பதா ஃபிளைட் ஏத்திவுட்டுட்டு வந்தன்”.

அன்றாடம் நாம் அம்மாவை அழைத்துச் சிறுப்பிள்ளை போல ஒவ்வொன்றையும் கேட்டறிந்து கொள்வது உண்டு. போனவாரம்தான் கேட்டேன், “மருந்தெல்லா இருக்கா தீர்ந்து போயிருச்சா?”, “எல்லாம் இருக்கு”. இந்த சம்பவத்தை முன்னிட்டு மீண்டும் கேட்கலானேன், “அண்ணிய ஃபோன் செய்யச் சொல்லி இருக்கன். இன்னிக்கிதா வாங்கணும், தீர்ந்து போச்சி”. ”அம்மா, போன வாரம்தான கேட்டன், எல்லா இருக்குனு சொன்னியே?”. “ஆமா, அப்ப இருந்துச்சி. இப்ப இல்லை”. நாம் என்ன பேசமுடியும்?  மனைவியாரிடம் இது குறித்துச் சொன்னேன். “ஆமா, எங்க அம்மாவும், மருந்து வாங்கி, எங்க வெச்சோம்னே தெரியாம... தலைவலி வந்திருச்சாம். பிற்பாடு புதுசா வாங்கித் தின்னாங்ளாம். வாங்கின மருந்து, மதில்சுவர்மேலயே மறந்து வெச்சிருக்க, இன்னிக்கிக் கிடைச்சுதாம். இவங்களுக்கு எவ்ளோ சொன்னாலும் தவறுகள் நடந்துட்டேதா இருக்கூ”.

திடீரென முழிப்புத் தட்டிவிட்டது. காலை 3 மணி. உறக்கமே வரவில்லை. ஆழ்மனத்தில் அம்மா மருந்து வாங்கினார்களா இல்லையாயெனும் அழுத்தம். அழைத்தேன், “அம்மா எங்க இருக்க?”. “நான் கலா கூட தாயம் விளையாடிட்டு இருக்கன்”. “அந்த மருந்து?”. “வாங்கியாச்சு வாங்கியாச்சு”. “எப்ப?” “காலையில பத்துமணிக்கே”. நிம்மதியாகப் படுத்தேன். சற்று நேரத்துக்கும் முன், காலை 8 மணிக்குத்தான் எழுந்தேன்.

மாமானார் அவர்கள், ஏதோ யோகா செய்திருக்கின்றார். மூளைச்சலவையில் ஆட்கொள்ளப்பட்டிருந்திருக்க வேண்டும். யோகா செய்வதால எல்லாம் நல்லா இருக்கு. காலையில இப்பெல்லாம் தவறாம வாங்கிங் போகின்றேன். விளைவு, மருந்து உட்கொள்வதை இவராக நிறுத்திக் கொண்டுவிட, அடுத்தடுத்த வாரங்களில் ஒரு நாள், குளியலறையில் கீழே விழுந்து, நினைவு தப்பி, பிரிவுக்கு இட்டுச் சென்றுவிட்டது.

மற்றொரு உறவினர், வேறெதற்கோ மருத்துவரிடம் சென்றிருந்திருக்கின்றார். இவர் தாம் உட்கொள்ளும் மருந்து குறித்துச் சொல்லவில்லை. மருத்துவரும் பரிசோதனைகள் செய்துவிட்டு, உங்களுக்கு இரத்த உயரழுத்தமெல்லாம் இல்லை எனச் சொல்லி இருக்கின்றார். அதையே வாக்காக எடுத்துக் கொண்டு மருந்து உட்கொள்வதை நிறுத்திக் கொண்டுவிட, கட்டிலில் இருந்து எழும் போது கீழே விழுந்து, பரிசோதனை செய்யும் போது, மூளையில் இரத்தக்கசிவு. கை கால் செயலிழப்பு.

புலம்பெயர் மண்ணில் இருந்து கொண்டு, நாம் இக்கதைகளைத் தொடர்ந்து எதிர்கொண்டபடியேதாம் இருக்கின்றோம். பெரியவர்களைக் குழந்தைகளாகப் பாவித்துப் பேணுவது நம் கடமை. 𝐓𝐡𝐞 𝐡𝐚𝐧𝐝𝐬 𝐭𝐡𝐚𝐭 𝐨𝐧𝐜𝐞 𝐡𝐞𝐥𝐝 𝐮𝐬 𝐝𝐞𝐬𝐞𝐫𝐯𝐞 𝐭𝐨 𝐛𝐞 𝐡𝐞𝐥𝐝 𝐰𝐢𝐭𝐡 𝐜𝐚𝐫𝐞.

-பழமைபேசி.

3/29/2026

குருவிகாண்பு நோன்பு


குருவிகாண்பு( Bird Watching ) என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமன்று; அது நம் வாழ்வியலோடு பிணைந்த ஒரு கலை. இயற்கையின் விந்தைகளை ரசிக்கவும், மன அழுத்தத்தைப் போக்கவும் இது ஒரு சிறந்த வழியாகும். இயற்கையோடு உரையாடும் கலை இஃது!

1. விழிப்புணர்வும் ஒருமைப்பாடும்

குருவிகாண்பு என்பது ஒரு வகை 'தியானம்'. ஒரு மரக்கிளையில் அசையும் சிறிய இலையையோ அல்லது மெல்லிய ரீங்காரத்தையோ கவனிக்க நமக்கு மிகுந்த பொறுமையும், கூர்மையான பார்வையும் தேவை. இன்றைய அவசர உலகில், நம் கவனம் சிதறாமல் ஒரு புள்ளியில் நிலைக்க இது உதவுகிறது. ஒரு பறவையை உற்று நோக்கும்போது, நாம் கடந்த காலக் கவலைகளையும் வருங்கால பயத்தையும் மறந்து, அந்த 'நொடியில்' வாழப் பழகுகிறோம்.

2. வாழ்வின் சுழற்சியும் நம்பிக்கையும்

பறவைகளின் வாழ்க்கை நமக்கு ஒரு பெரிய பாடத்தைக் கற்பிக்கிறது. ஆயிரக்கணக்கான மைல்கள் கடந்து வரும் வலசைப் பறவைகள் (Migratory Birds), தங்களின் இலக்கை அடைய காட்டும் உறுதி அசாத்தியமானது. ஒரு சிறிய சிட்டுக்குருவி தன் கூட்டை மீண்டும் மீண்டும் கட்டுவதைப் பார்க்கும்போது, தோல்விகளைக் கண்டு துவளாமல் முன்னேறும் தன்னம்பிக்கை நமக்குள் பிறக்கிறது. இயற்கையின் சுழற்சிக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளும் பறவைகள், நாமும் மாற்றங்களை ஏற்று வாழப் பழக வேண்டும் என்பதை உணர்த்துகின்றன.

3. மனநலமும் அமைதியும்

காலை வேளையில் பறவைகளின் கீச்சலோசையைக் கேட்பது மனதிற்கு ஓர் இனிய மருந்தாகும். ஆய்வுகளின்படி, பறவைகளின் ஒலியும் அவற்றின் வண்ணமயமான தோற்றமும் நம் மூளையில் மகிழ்ச்சியைத் தூண்டும் ஹார்மோன்களை சுரக்கச் செய்கின்றன. நகர்ப்புற நெரிசலில் வாழும் நமக்கு, ஒரு மரங்கொத்தியின் சத்தமோ அல்லது ஒரு மைனாவின் துள்ளலோ ஒருவித அமைதியையும், புத்துணர்ச்சியையும் தருகின்றன.

4. சுற்றுப்புற சூழல் ஆர்வம்

பறவைகளை கவனிக்கத் தொடங்கும்போதுதான், நம்மைச் சுற்றியுள்ள மரங்கள், நீர்நிலைகள் , செடி கொடிகளின் முக்கியத்துவம் நமக்குத் தெரியவரும். ஒரு குறிப்பிட்ட பறவை ஏன் ஒரு குறிப்பிட்ட மரத்திற்கு வருகிறது என்று ஆராயும்போது, இயற்கைப் பாதுகாப்பு (Conservation) குறித்த அக்கறை தானாகவே நமக்குள் வளரும். நம் தாய்மொழி , பண்பாட்டில் பறவைகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தை உணர்ந்து, அவற்றை அழியாமல் காப்பது நம் கடமையாகும்.

"பறவைகளைக் கவனிப்பது என்பது இயற்கையின் ரகசியப் பக்கங்களைப் புரட்டிப் பார்ப்பது போன்றது. குருவிகாண்பு என்பது ஒரு தேடல். அது நம் வாழ்வை மேலும் பொலிவானதாகவும் அழகாகவும் மாற்றுகிறது".

வடக்கத்திய கார்டினல் (Northern Cardinal)

இது வட கரோலினாவின் மாநிலப் பறவை. அடர் சிவப்பு நிறத்தில், தலையில் ஒரு கொண்டையுடன் காணப்படும் ஆண் பறவைகள் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். இவை ஆண்டு முழுவதும் இங்கேயே இருப்பதால், உங்கள் வீட்டுத் தோட்டத்திலேயே இவற்றை எளிதாகக் காணலாம்.

கரோலினா சிகாடீ (Carolina Chickadee)

சிறிய உருவம், கருப்பு நிறத் தொப்பி மற்றும் வெள்ளை நிறக் கன்னங்களுடன் துறுதுறுவென இயங்கும் பறவை இது. இதன் மெல்லிய குரல் ஒலியை வைத்து இதை எளிதில் அடையாளம் காணலாம். இவை மனிதர்களுடன் எளிதில் பழகக்கூடியவை.

கிழக்கு புளூபேர்ட் (Eastern Bluebird)

வசந்த காலத்தின் தொடக்கமான மார்ச் மாதத்தில் இவை மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். பிரகாசமான நீல நிற முதுகும், துருப்பிடித்த சிவப்பு நிற மார்பும் கொண்ட இவை, புல்வெளிகளிலும் தோட்டங்களிலும் உள்ள கூடுகளுக்கு வந்து செல்வதைக் காணலாம்.

அமெரிக்கன் ராபின் (American Robin)

இவை வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் பறவைகள். மார்ச் மாத இறுதியில் இவை அதிக அளவில் தரைப்பகுதியில் புழுக்களைத் தேடி ஓடுவதைப் பார்க்கலாம். இதன் ஆரஞ்சு நிற மார்புப் பகுதி தனித்துவமானது.

ஊதா நிற ஜே (Blue Jay)

அறிவுக்கூர்மை மிக்க இந்தப் பறவை, அழகான நீல நிற இறக்கைகளையும் கருப்பு நிறக் கழுத்து வளையத்தையும் கொண்டது. மற்ற பறவைகளின் ஒலியைப் போலப் பாடி ஏமாற்றுவதில் இவை வல்லவை.

மரங்கொத்திகள் (Red-bellied Woodpecker)

வட கரோலினாவின் மரங்கள் நிறைந்த பகுதிகளில் தலைப்பகுதியில் சிவப்பு நிறம் கொண்ட இந்த மரங்கொத்திகளை நீங்கள் அடிக்கடி பார்க்கலாம். மரங்களைத் தட்டும் சத்தத்தை வைத்தே இவற்றை அடையாளம் கண்டுவிடலாம்.

அதிகாலை 6 மணி முதல் 9 மணி வரை பறவைகள் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். வீட்டுத் தோட்டம், அருகில் உள்ள பூங்காக்கள் போன்றவை சிறந்த இடங்கள். அரும்புக்காலம் துவங்கி விட்டது. கிளைகளில் துளிர்களும் பூக்களும் குருவிகளும் பூக்கும் காலமிது. காண்பு நோன்பில் இன்புறுவோம்!


-பழமைபேசி.

3/27/2026

𝐅𝐞𝐓𝐍𝐀 𝟐𝟎𝟐𝟓: 𝐏𝐮𝐫𝐞 𝐞𝐱𝐭𝐫𝐚𝐯𝐚𝐠𝐚𝐧𝐳𝐚


 𝐅𝐞𝐓𝐍𝐀 𝟐𝟎𝟐𝟓: 𝐏𝐮𝐫𝐞 𝐞𝐱𝐭𝐫𝐚𝐯𝐚𝐠𝐚𝐧𝐳𝐚

உள்ளடக்கிய தன்மை என்பது வெறும் நாகரிகசொல் அன்று; அது ஒரு நாகரிகத்தின் முதிர்ச்சி. 

ஒரு தோட்டத்தில் ஒரே ஒரு வகை மலர் மட்டும் பூத்திருப்பதை விட, பல வண்ண மலர்கள் பூத்திருப்பதே கண்களுக்கு விருந்து. அதுபோலவே, ஒரு சமூகத்தில் வெவ்வேறு பின்னணி, மொழி, உடல் அமைப்பு , சிந்தனை கொண்ட மனிதர்கள் பாகுபாடின்றி ஒன்றிணைந்து செயல்படும்போதுதான் அந்தச் சமூகம் முழுமையடைகிறது. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற தமிழரின் பழமொழி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இந்த உள்ளடக்கிய தன்மையைத்தான் உலகிற்குப் போதித்தது.

ஒரு நிறுவனத்திலோ அல்லது பொது இடத்திலோ 'பல்வகைமை' (Diversity) இருப்பது ஒரு தொடக்கம் மட்டுமே. எடுத்துக்காட்டாக, ஒரு விருந்துக்கு எல்லாத் தரப்பு மக்களையும் அழைப்பது பல்வகைமை. ஆனால், அந்த விருந்திற்கு வந்திருக்கும் ஒவ்வொருவரும் எந்தவிதத் தயக்கமும் இன்றி உணவருந்தவும், உரையாடவும், தங்களை அந்த இடத்தின் ஒரு அங்கமாக உணரவும் வைப்பதுதான் 'உள்ளடக்கிய தன்மை'. எங்கே ஒரு மனிதன் "நானும் இங்கே மதிக்கப்படுகிறேன்”, ”என் குரலும் இங்கே கேட்கப்படுகிறது" என்று உணர்கிறானோ, அங்கேதான் உள்ளடக்கிய தன்மை உயிர்பெறுகிறது.

இன்றைய நவீன உலகில் உள்ளடக்கிய தன்மை என்பது ஒரு சமூகத் தேவையாக மாறியுள்ளது. வெவ்வேறு துறைகளில் இருக்கும் வல்லுநர்கள், மாற்றுத்திறனாளிகள், பல்வேறு மொழிகளைப் பேசுபவர்கள் என அனைவரும் ஒன்றாக அமர்ந்து ஆலோசிக்கும்போது, அங்கே புதிய சிந்தனைகள் பிறக்கின்றன. ஒரே மாதிரியான சிந்தனை கொண்டவர்கள் ஒரு சிக்கலுக்கு ஒரே மாதிரியான தீர்வையே தருவார்கள். ஆனால், மாறுபட்ட பின்னணி கொண்டவர்கள் அந்தச் சிக்கலை வெவ்வேறு கோணங்களில் அணுகி, யாரும் எதிர்பாராத ஒரு புதுமையானத் தீர்வை முன்வைப்பார்கள். இதுதான் ஒரு அமைப்பின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணியாகும்.

தனிப்பட்ட ரீதியில் நாம் இந்த உள்ளடக்கிய தன்மையை எளியச் செயல்கள் மூலம் பழகலாம். ஒரு விவாதத்தில் எப்போதும் அமைதியாக இருப்பவரிடம் "உங்கள் கருத்து என்ன?" என்று கேட்டுப் பார்ப்பது ஒரு சிறந்தத் தொடக்கம். மற்றவர்களின் குறைகளைத் துருவித் துருவிப் பார்ப்பதை விட, அவர்களின் தனித்துவமானத் திறமைகளை அங்கீகரிப்பது அவசியம். ஒருவரை அவர் சார்ந்த அடையாளங்களை வைத்து எடைபோடாமல், ஒரு சக மனிதராக அரவணைக்கும்போது ஒரு ஆரோக்கியமானச் சூழல் உருவாகிறது. வார்த்தைகளில் மென்மையும், பார்வையில் சமத்துவமும் இருந்தால் உள்ளடக்கிய தன்மை தானாகவே மலரும்.

உள்ளடக்கிய தன்மை என்பது ஒரு சட்டமோ அல்லது விதியோ அல்ல; அது நம் மனப்பான்மையில் ஏற்பட வேண்டிய மாற்றம். "நான்" என்ற குறுகிய வட்டத்தில் இருந்து வெளியே வந்து "நாம்" என்ற விரிந்தத் தளத்தில் இயங்கும்போதுதான் உலகம் இன்னும் அழகாகிறது. மற்றவர்களுக்குக் கதவுகளைத் திறந்து விடுவது என்பது அவர்களை உள்ளே அழைப்பது மட்டுமல்ல, நமக்கானப் புதிய வாய்ப்புகளையும், அனுபவங்களையும் உள்ளே அனுமதிப்பதாகும். சமத்துவமான ஒரு உலகைப் படைக்க உள்ளடக்கியத் தன்மையே முதற்படி.

’வீட்டிலிருந்தே வேலை செய்கின்றேன். வீட்டில் இருப்பதால் இரண்டு தொடுதிரைகளுடன் கூடிய தனிப்பட்ட கணினியில் பேரவை விழா வேலைகள், மடிக்கணினியில் நிறுவன வேலை, தவிர வீட்டு வேலைகளென இருக்கலாம். விழா வளாகம் வந்தால், எமக்குக் கையும் ஓடாது காலும் ஓடாதென முன்கூட்டியே விழா ஒருங்கிணைப்பாளர்கள், குழுத்தலைவர்களென எல்லாருக்கும் சொல்லி இருந்தேன். இருந்தாலும், அழைப்பு மேல் அழைப்புகள். கச்சை முதற்கொண்டு, பாதித் துணிமணிகளை வீட்டிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டோம்.

பேரவைக்கான குழுக்கள் அமைத்ததிலிருந்து, பல்வேறு பணிகளில் ஈடுபட்டது வரையிலும், கனடாவிலிருந்து ஃபுளோரிடா, கீழ்க்கரையிலிருந்து மேல்க்கரை வரையிலும், எல்லாமும் பரவல்தான். எதுவும் ஓரிடத்தில் குவிந்திருக்கவில்லை. தன்னார்வத் தொண்டர்கள் தட்டுப்பாடு எனப் பேசிக் கொண்டார்கள். நான் சொன்னேன், “வெளியூர்களிலிருந்து குறைந்தது 150 தம்பிமார்கள் வருகின்றார்கள், அது போதும், எவருக்கும் அடிபணியத் தேவையில்லை”. 

வேலையிடத்திலிருந்து புறப்பட்டு விட்டதாக மனைவியார் அழைத்துச் சொன்னதுமே, புறப்படத் துவங்கினேன். அழைப்புகளோ அழைப்புகள். ’வாசிங்டன் டிசி விமானம் நிலையத்தில் இருந்து மாறி வரவேண்டும், என்ன செய்வது?’, ‘இன்ன போட்டிக்கு எந்த அறை?’, இப்படி நிறைய. முன்னாள் செயலாளர் அழைத்து, ’தமது விமானம் கிரீன்ஸ்பரோவுக்குத் திருப்பி விட்டுவிட்டனர்; இங்கிருந்து யாராவது தம்மை அழைத்துச் செல்ல முடியுமா?’. குழுக்களில் விபரத்தைப் பதிந்ததுமே, முன்னாள் செயற்குழு உறுப்பினர் அவர்கள் அழைத்து, ‘அட்லாண்டாவிலிருந்து கிரீஸ்பரோ நோக்கித்தான் வந்து கொண்டிருக்கின்றேன். பிக்-அப் செய்து கொள்கின்றேன்’. இப்படி, பலப்பல.

இத்தனைக்கும் நடுவில்தான் புறப்பட்டு வந்து கொண்டிருந்தோம். மீண்டும், மழை, புயல், போக்குவரத்து நெரிசல்; மாலை 7 மணிக்கு நான் அங்கிருப்பேன், சந்திக்கலாமெனச் சொல்லி இருந்தேன். இரவு 9.15 மணிக்குத்தான், விடுதி வளாகம் சென்று சேர்ந்தோம். அத்தனை பேர் வந்து சூழ்ந்து கொண்டனர். கிட்டத்தட்ட 50+ பேர் வரையிலும் எனக்காகக் காத்திருந்தனராம். அந்த அன்புக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்? அதிலும் பெரும்பாலும், பெண்கள். 

4 நாட்கள் இருந்து விட்டுக் கிளம்பும் வரையிலும், தன்னார்வலர் தட்டுப்பாடு என்பதே எம் கண்களுக்குத் தட்டுப்படவில்லை.  வாய்ப்புகள் தருவதன் மூலம் ஒரு கூட்டத்தை ஒருங்கிணைப்பது என்பது, வெறும் நிர்வாகச் செயல்முறை மட்டுமல்ல, அது ஆழமான உளவியல் ரீதியான பிணைப்பை உருவாக்குவதாகும். ஒரு மனிதனுக்கு ஒரு அமைப்பில் அங்கீகாரமும், அவனது திறமையை வெளிப்படுத்த ஒரு பொறுப்பும் வழங்கப்படும்போது, அவன் அந்த அமைப்பைத் தனது சொந்த அமைப்பாகக் கருதத் தொடங்குகிறான். "நான் இங்கே வெறும் பார்வையாளன் அல்ல, இந்த இயக்கத்தின் ஒரு அங்கம்" என்கிற உணர்வு அவனுள் ஒரு பிணைப்பை ஏற்படுத்துகிறது. இத்தகைய பொறுப்புகள் ஒருவருக்குத் தன்னாட்சி உணர்வையும், சமூகமதிப்பையும் தருவதால், அவர் அந்த இலக்கை நோக்கி மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்படுகிறார். இவ்வாறு பலருக்கும் சிறு சிறு வாய்ப்புகளைப் பகிர்ந்தளிக்கும்போது, அவர்கள் ஒவ்வொருவரும் அந்த வெற்றியின் பங்காளிகளாக மாறி, ஒரு வலுவான, அர்ப்பணிப்புள்ள கூட்டமாகத் தானாகவே திரள்கிறார்கள்.  [படம்: விருந்தோம்பலில் பழமைபேசிக் குடும்பம்]

𝐖𝐞 𝐫𝐢𝐬𝐞 𝐡𝐢𝐠𝐡𝐞𝐫 𝐰𝐡𝐞𝐧 𝐞𝐯𝐞𝐫𝐲𝐨𝐧𝐞 𝐢𝐬 𝐥𝐢𝐟𝐭𝐞𝐝.

-பழமைபேசி.

3/23/2026

எழுத்தாளன்

சமூகத்தில் ஓர் எழுத்தாளரின் கடமைகள் மிக முக்கியமானவை. காலத்தின் கண்ணாடியாகவும், மாற்றத்திற்கான விதையாகவும் எழுத்தாளர்கள் கருதப்படுகிறார்கள். அவர்களின் முதன்மையான கடமைகளாகப் பின்வருவனவற்றைச் சொல்லலாம்:

1. உண்மையை உரக்கச் சொல்லுதல்

சமூகத்தில் நடக்கும் அநீதிகள், முரண்பாடுகள் , எளிய மக்களின் வலிகளை மறைக்காமல் வெளிச்சத்திற்குக் கொண்டு வருவது எழுத்தாளரின் அடிப்படை அறம். அதிகாரத்திற்கு உண்மையைச் சொல்லும் துணிச்சல் அவருக்கு அவசியம்.

2. விழிப்புணர்வு ஏற்படுத்துதல்

மக்களிடையே நிலவும் மூடநம்பிக்கைகள், சமூக ஏற்றத்தாழ்வுகள் , அறியாமையைப் போக்கி, பகுத்தறிவு , சிந்திக்கும் ஆற்றலைத் தூண்டுவது எழுத்தாளரின் பணியாகும்.

3. பண்பாட்டுப் பாதுகாப்பு

ஒரு மொழியின் இலக்கியத்தையும், அந்த இனத்தின் பண்பாட்டையும் அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதில் எழுத்தாளருக்குப் பெரும்பங்கு உண்டு. வரலாற்றையும் கலாச்சாரத்தையும் சிதையாமல் பதிவு செய்வது அவர் கடமை.

4. புதிய சிந்தனைகளை உருவாக்குதல்

சமூகம் தேக்க நிலையில் இருக்கும்போது, புதிய கோணங்களில் சிந்திக்க வைப்பதன் மூலம் மாற்றத்தை நோக்கி மக்களை நகர்த்துவது எழுத்தாளரின் எழுத்துகளாக இருக்க வேண்டும்.

5. அறநெறி ஊட்டம்

நேரடியாக அறிவுரை கூறாமல், தனது படைப்புகளின் (கதை, கவிதை, கட்டுரை) வாயிலாக அறம் சார்ந்த வாழ்வியலை வாசகர்களுக்கு உணர்த்துவது சிறந்த எழுத்தாளரின் அடையாளம்.

6. நம்பிக்கையளித்தல்

துயரமான காலங்களில் மக்களுக்கு மனவலிமையையும், எதிர்காலத்தைப் பற்றிய நேர்மறையான நம்பிக்கையையும் தன் எழுத்துகளின் மூலம் வழங்க வேண்டும்.

"எழுத்தாளன் என்பவன் வெறும் வார்த்தைகளை அடுக்குகிறவன் அல்ல; அவன் சமூகத்தின் ஆன்மாவைச் செதுக்குகிறவன்".

பேனாவின் தீப்பந்தம்

சமூகத்தின் இருள்மூடிய பாதைகளில்
விடியலைத் தேடும் கலங்கரைவிளக்கம் நீ!
மௌனமாய் வீழ்ந்து கிடக்கும் நீதியின் குரலாய்
மக்களின் மனசாட்சியாய் எழுக நீ!
கண்ணாடி உடைக்கும் கல்லாக இன்றி
சமூகம் தன்னைத்தானே திருத்திக்கொள்ளும்
திறந்த கண்ணாடியாய் இரு!
ஏழையின் கண்ணீரைத் துடைக்கும் விரலாய்,
அநீதிக்கு எதிராகக் கொதிக்கும் எரிமலையாய்,
அறிவுப்பசி தீர்க்கும் ஊற்றாய் இரு!
வரலாற்றின் பக்கங்களில்
உன் எழுத்துகள் அழியாத சுவடுகளாய்!
காலத்தின் மாற்றத்தை விதையிடும்
பாங்கான உற்ற உழவனாய் இரு!
வார்த்தைகள் வெறும் ஒலிகளல்ல,
விழிப்புணர்வூட்டும் அறைகூவல்கள்!
உன் பேனா முனையில் உயிர் பெறட்டும்
புதியதோர் உலகம், நீதமான சமூகம்!

[ஒரு சொல்கூட நாம் எழுதியதன்று. எல்லாமும் ஜெமினியார்தான்!]

-பழமைபேசி.

3/21/2026

𝐅𝐞𝐓𝐍𝐀: 𝐟𝐨𝐫𝐜𝐞 𝐜𝐨𝐧𝐬𝐞𝐧𝐬𝐮𝐬, 𝐧𝐨𝐭 𝐣𝐮𝐬𝐭 𝐦𝐚𝐣𝐨𝐫𝐢𝐭𝐲 𝐫𝐮𝐥𝐞

பேரவையின் வரலாறு என்பது, தொன்றுதொட்டு நிகழ்ந்து வருவது. ”இன்னார் தலைவராக இருக்கும் போது, வீதிக்கே சென்று திரிசாவை வரவழைத்தார்கள்”, இப்படியெல்லாம் சுவடுகள் வழிவழியாகத் தொடர்ந்து கொண்டிருக்கும். அவற்றுக்கு எவரும் அணை போட்டு விட முடியாது.

”மேன்மை அணி வரலாற்று வெற்றி கொள்கின்றது. குழுக்கள் அமைக்கப்படுகின்றன. பெருந்திரளாகத் தன்னார்வலர்கள் முனைந்து வருகின்றனர். குழுக்கள், உறுப்பினர்கள் பட்டியல் வெளிப்படையாகப் பொதுவெளியில் பகிரப்படுகின்றது. கூட்ட அறிக்கைகள் பகிரப்படுகின்றன. விழாக்கள் வெற்றிகரமாக நிகழ்கின்றன. குழுக்கள் இயங்குகின்றன. தரவு சேமிப்பு. முதன்முதலாக மாவீரர்நாள் கடைபிடிப்பு. தகவல் தொடர்பில் முனைப்பு”, இப்படியாக ஒரு தோற்றம்.

“ஒருமித்த வெற்றி. வாட்சாப் குழுவில் நீக்கம். ஆயுள் உறுப்பினர் நீக்கம்.  சலசலப்பு. விழாவில் சலசலப்பு. சிலர் தத்தம் பணிகளில் இருந்து ஒதுங்கல். முதலாம் ஆண்டைப் போல, இரண்டாம் ஆண்டில் குழுக்கள் இயங்காமை. எழுத்தாளர் அழைப்பு குறித்த சர்ச்சை. இலக்கியக்குழு சலசலப்பு. பழைய அருவி, மலர்கள் காணக்கிடைக்காமை. பேரவையின் அறிவுசார் சொத்துகள் தனிக்கடைகளாக இருப்பது, உறுப்பினர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை”, இப்படியாக ஒரு தோற்றம்.

முதலாவது தோற்றத்தின்கண் இருப்பவருக்கு, இரண்டாவது தோற்றம் கிடைக்கப் பெறுவதில்லை. இரண்டாவது மனத்தோற்றம் கொண்டிருப்பவருக்கு, முதலாவது தோற்றம் தோன்றுவதில்லை. ஏன்? முன்பிருந்த திறந்தவெளி உரையாடல் தற்போது கொல்லப்பட்டுவிட்டதுதான் காரணம்.  இது யாருக்கான தோல்வி?

தேர்தல் மாண்பின் விதையான நண்பர் சிவானந்தம், சென்றமுறை செயற்குழுவினரிடம் அழகாகச் சொன்னார், “தேர்தலில் யார் யாரெல்லாம் போட்டியிடத் தகுதியானோர் என்பதனைப் பேரவையே தேர்தல் அறிவிப்பின் ஒருபகுதியாக வெளியிட வேண்டும். அல்லாவிடில், எல்லோரும் தகுதியானவர்களேயென அறிவித்து, எல்லோரையும் போட்டிக்குள் கொண்டுவர ஊக்குவிக்க வேண்டும்”. விழுமியமார்ந்து இருப்பதுதான் ஒரு மனிதனுக்கான வெற்றியென்பதுதான் அடிப்படை.

𝐇𝐢𝐞𝐫𝐚𝐫𝐜𝐡𝐲 𝐨𝐟 𝐚𝐮𝐭𝐡𝐨𝐫𝐢𝐭𝐲 𝐢𝐧 𝐚 𝐧𝐨𝐧𝐩𝐫𝐨𝐟𝐢𝐭:

  1. Federal Law/Tax Law (e.g., IRS regulations)
  2. State Statute/Law (e.g., State Nonprofit Corporation Act)
  3. Articles of Incorporation (Charter)
  4. Bylaws
  5. Board Policies/Procedures (e.g., Robert's Rules of Order)

தணிக்கைக்குழு அமைக்கப்படுகின்றது. வரிசையில் நான்காவதாக இடம்பெற்றுள்ள அமைப்பின் சட்டக்கோப்பில் உள்ள ஒரு சரத்தினை மட்டும் கருத்தில் கொண்டு, ஒரு முடிவு. அந்த முடிவினைச் சான்றாகக் கொண்டு, செயற்குழுவில் ஒரு கதையாடல். அந்தக் கதையாடலின் தீர்வாக, நான்கு பேர் வரிசைப்படுத்தப்படுகின்றனர். அந்தக் கதையாடல் கோப்பு உறுப்பினர்களுக்குச் சென்று சேர்கின்றது. அவர்கள் இன்னபிறருக்கு அனுப்பி வைப்பர். சமூகத்தில், அந்த நான்கு பேரின் மீதான அளவளாவல். ஒழுங்கைக் கட்டமைக்கிறோமெனும் பேரில், ஒழுங்கு தவறுவது சரியா?

இல்லினாய் மாகாண அரசின் சட்டம் சொல்கின்றது, இலாபநோக்கற்ற அமைப்புகளில் வேலை செய்யும் தன்னார்வலருக்கான சட்டப்பாதுகாப்பினை அந்தந்த அமைப்புகள் உறுதி செய்யும் பொருட்டு, சட்டக்கோப்பு விதியை வைத்திருக்க வேண்டும். அதன்படிக்கு, பேரவையின் சட்டக்கோப்பில் ஈட்டுறுதிக்கான சரத்தும் உள்ளது. “Board Member of the Federation shall be indemnified by the Federation, பணிகளைச் செய்யும்போது ஏற்படும் சட்டச் சிக்கல்களுக்கு, சம்மேளனம் அந்த உறுப்பினருக்கு இழப்பீடு வழங்கும்” என்பதனை, மூன்றில் இரு பங்கு உறுப்பினர்கள் ஏற்கனவே ஏற்றுக் கொண்டுவிட்ட சட்டப்பூர்வ உடன்படிக்கைதான் சட்டக்கோப்பு. இதனைச் சற்றும் கருத்தும் கொள்ளாமல் செயற்படுவது, நீண்டகாலப் பார்வையில் பெரும் தீங்காகவே அமையும். “shall be" எனும் பதத்தின் தன்மையானது, கட்டாயத்தன்மையை வலியுறுத்துவதாகும்.

தங்களுக்குள் மட்டும் ஓங்கிய ஒற்றுமையை வைத்துக்கொண்டு, மற்றவர்களை ஒதுக்கி வைக்கும் போக்கினை, ’பழங்குடி மனப்பான்மை’ என உளவியலாளர்கள் குறிப்பிடுவர். அது உள்ளார்ந்த, ஒருங்கமைந்த சமூகவிழுமியத்தை ஒருபோதும் ஈட்டித்தராது. எல்லோரையும் இயங்கவிட்டு, அதிலிருந்து சிறப்பினை கடைந்தெடுப்பதுதான், பேரின்ப வெற்றியாக ஒருவருக்கான சுவடு(legacy) அமைய வேண்டுமேவொழிய, அதிகாரத்தின் குரலில் அமைவதாக இருக்கலாகாது; அது காலத்தின் பிற்பகுதியில் ஏசும்!

நெறிமுறைப் பிறழ்வுகள் (procedural violations) இனம்காணப்பட வேண்டும். திருத்தப்பட வேண்டும். மாறாக, ’திருத்துகிறேன்’ என்ற போர்வையில் ஒழுங்குப் பிறழ்வுகள்(wilful violations) இடம்பெற்றுவிடக் கூடாது. முதலில் திருத்தப்பட வேண்டியது அமைப்பின் சட்டக்கோப்புதான்!

𝐑𝐞𝐚𝐥 𝐜𝐨𝐧𝐬𝐞𝐧𝐬𝐮𝐬 𝐢𝐧𝐯𝐢𝐭𝐞𝐬 𝐯𝐨𝐢𝐜𝐞𝐬; 𝐟𝐨𝐫𝐜𝐞𝐝 𝐜𝐨𝐧𝐬𝐞𝐧𝐬𝐮𝐬 𝐞𝐫𝐚𝐬𝐞𝐬 𝐭𝐡𝐞𝐦!

-பழமைபேசி.