![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhg3nMALRFvtKYRi05VmJhyphenhyphenJuovRkV37x9usAnIdzXa7txX6kwwfxtO6k2Up9wQFuq2Cg7XZYWXLw5a6hfn9WnudQZfpx83pgZWNe7np_nWCg4uAZnNJD28YMk7paAu8w4qHZ5Uhhu4g3M/s400/obama-relatives-kenya1.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHWyMu4JL5FE-Y_ANELH07gAWUIL2D1s249Wv3TNPeh1yaVS-FE5Cu5jcD9MEz-CWSs1L1S4QMkNzO5qRATRUNZJU_CQ1xM_eRwEj8wbGLHLwALWBQXc3iH5znk0U0k4ypQ0D6l0KPZMU/s400/whitehouse.bmp)
உலகாளும் மாளிகையில்!
எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்!
உலகாளும் மாளிகையில்!
பக்கச் சொல் பதினாயிரம்!
நீர் கிழக்கு முகமாய், ஆற்றங்கரையோரம் அரசமர நிழலில் வீற்றிருப்பீர். அங்கு ஊர் மக்களும் வந்திருந்து,
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்
கோலம்செய் துங்கக்கரிமுகத்துத் தூமணியே
நீ எனக்குச் சங்கத்தமிழ் மூன்றும் தா!
என்று மனதார உருகிப்பாடி, எருக்கைப் பூச்சாத்தி, "தமிழின் சோதரனே! எம்தமிழை எமக்குத் தந்திடுவாய்!!" என்றும், "காத்திடுவாய்!" என்றும் வேண்டி தோப்புக்கரணம் இடுவார் நம்மக்கள். அந்த மக்களும், தமிழும் கூக்குரலிடும் ஓசை உமக்கு எட்டவில்லையா, ஞால முதல்வரே? இல்லை, எட்டியும் எட்டாதது போல் பாவிக்கிறீரா? சக்தி இல்லையேல், சிவம் இல்லை என்றார், உம் பெற்றோர் குறித்து! யாம் சொல்கின்றோம், பக்தன் இல்லையேல் முதல்வர் இல்லை. இந்தத் தொண்டர் இல்லையேல், தலைவரும் இல்லை. வேழ்முகத்து வேந்தே, போதும் உமது பொறுமை!
பிள்ளையார் பிள்ளையார்
பெருமைவாய்ந்த பிள்ளையார்
பிள்ளையார் பிள்ளையார்
எம்மைக் காக்கும் பிள்ளையார்!
ஆற்றங்கரை மீதிலே
அரசமர நிழலிலே
வீற்றிருக்கும் பிள்ளையார்
வினைகள் தீர்க்கும் பிள்ளையார்!
நேரும் துன்பம் யாவையும்
நீக்கிவைக்கும் பிள்ளையார்
கூடிப்பாடும் தொண்டரின்
குறைகள் தீர்க்கும் பிள்ளையார்!
முதல்வா, முத்தமிழே, இந்த கடைக்கோடி பக்தனின் அறைகூவல் இதுதான் வேந்தே! வினைகள் தீர்த்து விடு, இனமான உணர்வு தளைக்க விட்டு, அமைதி எங்கும் பொங்க வழிவகை செய்து விடு!! இல்லாவிடில், வெண்ணெய் திரளும் போது தாழி உடைந்த கதை என்பது, உமக்கு சொல்லித் தெரிவதில்லையன்றோ!?!
குடிக்கிறது கூழுத்தண்ணி,
கொப்புளிக்கிறது பன்னீராம்?!
நல்லது செஞ்சு நடுவழியப் போனா,
பொல்லாதது போற வழியில!
ஆலும் வேலும் பல்லுக்குறுதி!
வில்லும் வேலும் மல்லுக்குறுதி!!
தை பிறந்தால், வழி பிறக்கும்!
அன்னக்கி என்ன பேசுனாங்கன்னு கேளுங்க! (நன்றி: கணேஷ் சந்திரா)
அன்னக்கி என்ன பேசுனாங்கன்னு கேளுங்க-2
இராகவன் நைஜிரியா: நண்பரே...சித்தர்கள் சிவனை நினைத்து தவம் செய்வார்கள். அவர்கள் நினைப்பு முழுவதும் சிவனைப் பற்றி இருக்கும். அவர்களை புரிந்து கொள்வது கடினம் என்று சொல்வார்கள்.சித்தர் போக்கு - சித்தர் நினைவுகள்சிவன் போக்கு - சிவனுடைய நினைவுகள் இது தான் நான் கேள்விபட்ட விஷயம்.
Mahesh : மணியாரே... இப்பிடியும் இருக்கலாம்... ஆனா நான் கேட்ட வரை (சுகி சிவம்) மனத்தைக் கட்டுப்படுத்துவது ஆண்டவன் செயல் என்ற அர்த்தத்தில் "சித்தம் (மனம்) போக்கு சிவன் (ஆண்டவன்) போக்கு". ஆண்டவன் சொல்றான் ; அருணாச்சலம் செய்யறான் மாதிரி...
புதுகை.அப்துல்லா: சிவம் என்பதை இறைநிலை அல்லது இறைவன். பொதுவாக இறைநிலையை அடைய அல்லது உணர முற்படும் ஞானிகள்(சித்தர்கள்) அந்தச் சிந்தனையைத் தவிர வேறு எந்த கவன நிலையிலும் இருப்பதில்லை. அதுமட்டுமின்றி தீட்சை பெற்ற அல்லது முரீது(இஸ்லாமிய வழக்கில் உள்ளது) பெற்ற ஞானிகள் தங்கள் ஒவ்வொரு அசைவையையும் இறைவனே நடத்துவதாக அல்லது தீர்மானிப்பதாக கூறுவார்கள். இறைவனின் போக்கிலேயே சித்தர்கள் போவதால் சித்தன் போக்கு சிவன் போக்கு என்றானது என அறிஞர் கருதுகின்றார்.