9/29/2012

உச்சி மாநாடு


அந்தி ஒளிவதற்குச்
சற்று முன்பாக
எங்கள் தெருமுனை
மின்கம்பத்தில்
கருஞ்சிட்டுகளின்
உச்சி மாநாடு!
ஒருசிலர் மட்டும்
இடம் மாறி இடம் மாறி
அமர்ந்து கொண்டிருக்க
அவர்களின் அடாவடியைத்
தட்டிக்கேட்கப் போய்
தம்மீது நம்பிக்கையில்லாத்
தீர்மானம் வந்துவிடுமோ
எனும் அச்சத்தில்
பாவம்
சிட்டுகளின் ஊர்த்தலைவர்!!

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... அழகான சிந்தனை...