10/07/2022

மேலடுக்கு உணர்வுநிலை

 காத்திரமான கருத்துகளை முன்வைக்கும் போது அதற்கான எதிர்வினைகள் வருவது இயல்பு. மாற்றுக் கருத்து வைக்கப்படலாம். தொடுக்கப்பட்ட வினாக்களுக்கு விடை அளிக்க முற்படலாம். தொடுக்கப்பட்ட வினாவின் உண்மைத்தன்மையையே கேள்விக்குள்ளாக்கலாம். ஆனால்? இஃகிஃகி. பழமைபேசி என்பவன் யார்? எழுத்துலக ஜாம்பவான்களான ஜெயகாந்தன், நாஞ்சில்நாடன், அகிலன் போன்றவர்களையே விமர்சித்து எழுதி, விமர்சகப்பிதாமகன் என வர்ணிக்கப்படும் வெங்கட் சாமிநாதன் அவர்களாலேயே, ‘பழமைபேசிக்கென்று ஒரு சமூக அக்கறை இருக்கின்றது; ஒரு பார்வை இருக்கின்றது’ என்று பாராட்டுப் பெற்றவன். https://madhavan-elango.blogspot.com/2015/02/34.html பேரவைச் செயற்குழுவுக்கான நம் கேள்வி இதுதான்.

தமிழ் இலக்கிய வட்டம் எனும் பெயரில் வாசிங்டன் டி.சி பகுதியிலிருந்து மாதமிருமுறை கூட்டம் நடக்கும். அதுவே பின்னாளில் பேரவையிடம், இலக்கியக்குழு எனும் பெயரில் கையளிக்கப்பட்டது. அப்படியான குழுவுக்குத் தலைவராக, ஆலோசகர்களாக சரியானவர்களைத்தான் பணித்திருக்கின்றீர்களா என்பதுதான். ஏனென்றால், அப்படியான பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு, சகிப்பும் நிதானமும் மிக மிக அவசியம். மேலடுக்கு உணர்வுநிலை(impulsive) கொண்டவர்களாக இருத்தல் ஆகாது.



No comments: