10/20/2022

நேர்மை

தமிழில் வாய்மை, நேர்மை, உண்மை, மெய் போன்று பல சொற்கள் உள்ளன. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்கின்றது தொல்காப்பியம். அதே வேளையில் ஒரு சொல் ஒரு பொருள் என்பதுதாம் மொழியின் அடிப்படை. ஆகவே நாம் சொல்லுக்கும் சொல்லுக்குமான நுண்ணிய வேறுபாட்டை அறிந்து செயற்பட வேண்டும். அல்லாவிடில் பொருள்மயக்கம், பொருட்சிதைவு என்பன தோன்றி, பொய், பித்தலாட்டம், புரட்டு, திரிபுகளுக்கு ஆட்பட்டு வாழ்வியலே அப்படியானதாக ஆகிவிடும்.

வாய்மை, வாய்ப்புக்கு இடமளிப்பதை மட்டுமே சொல்லுதல். நேர்மை, சொல்லவந்ததை ஒளிவு மறைவின்றி நேரிடையாகச் சொல்லுதல். மெய், நடந்ததை, இடம் பெற்றதை மட்டுமே சொல்லுதல். பொய், நடந்திராததை, இடம் பெறாததைச் சொல்லுதல். உண்மை, நடப்பில் உள்ளதை மட்டுமே குறிப்பிடுதல். இன்மை, நடப்பில் இல்லாததைக் குறிப்பிடுதல். வழக்கில், பொருட்களை இடம் மாற்றிப் புழங்குகின்றோம். அது, மொழிச்சிதைவுக்கே வித்திடும்.

தன் மனத்துக்கு அறிந்ததை ஒளிவு மறைவின்றி உகந்த மொழியில் சுற்றி வளைக்காமல் நேரிடையாகச் சொல்லுதலால் ஒருவர் பலரின் மனத்தாங்கலுக்கு உட்பட நேரிடலாம். இழப்புகளைச் சந்திக்கலாம். தொலைநோக்குப் பார்வையில் நேர்மையே ஒருவருக்குச் சிறப்பைத் தர வல்லது.

1.It shows a lot about your character

2.It makes your life easier

3.It makes you more reliable

4.It shows respect

5.It strengthens relationships

6.Your opinion earns value

7.It provides authenticity

8.It's an admirable trait

9.It may hurt other's feelings; but you end up doing more good than harm

10.It shows courage

11.It provides consistency

அறம்சார் அமைப்புகளில் வெளிப்படைத்தன்மை என்பது மிக அவசியம். அந்த வெளிப்படைத்தன்மைக்கு வித்தாக இருக்க வேண்டியது நேர்மை. இவை இல்லாதவிடத்து, தீங்கு நடந்தே தீரும். Murphy law states, "Anything that can go wrong will go wrong". நமக்கான பொறுப்புக்காலம் முடிந்து விட்டாலும், நாம் விட்டுச் சென்ற பழக்கங்களால் அமைப்புக்கோ அமைப்பின் பொறுப்பாளர்களுக்கோ தீங்கு நேரிடலாம். 

எடுத்துக்காட்டாக, செயற்குழு. செயற்குழு உறுப்பினர்களே நேரிடையாக ஒவ்வொன்றையும் செய்து கொண்டிருக்க முடியாது. அடுத்தடுத்த அணிகள், குழுக்களை நம்பித்தான் ஆக வேண்டும். ஆனாலும், ஏதேனும் தவறு நேர்ந்து விட்டால், அதற்குச் செயற்குழுவே முழுப்பொறுப்பு. ஆக, ஒவ்வொரு செயற்குழு உறுப்பினரும் அமைப்பின் செயல்களில் நாட்டம் கொண்டு, மேலாண்மைப் பாங்குடன் தன்னிச்சையாகச் செயற்பட்டாக வேண்டும். குரூப்பிசம் கொண்டு செயற்படும் போது, கண்கள் மறைக்கப்பட்டு விடும். இது அமெரிக்கா. கோர்ட்டில் வந்து தூக்கிவிட அண்ணன்களால் இயலவே இயலாது!

No comments: