10/28/2022

பேரவைப் பொதுக்குழுக் கூட்டம் 10/27/2022 பகுதி-1

1.திருவாசகத்தின் மீது கைவைத்துப் பேசுவதாக நினைத்துக் கொள்ளவும். பொய், புரட்டு பேசுவதால் எனக்குக் கிடைக்கப் போவது எதுவுமில்லை.

2. கூட்டத்தில் அறநெறிக் கோப்பு காண்பிக்கப்பட்டு, நாகரிகமாக, பண்பாட்டுடன் செயற்பட அறிவுறுத்தப்பட்டது.

3. செயற்குழுவால் பணிக்கப்பட்ட முன்னாள் தலைவர் பேசியது, சுயவிளம்பரம், பொய், புரட்டு, தனிமனிதத்தாக்குதல், வன்மம் மிக்கது. அனுமதித்த செயற்குழுவின் செயல், ‘படிப்பது இராமாயணம்; இடிப்பது பெருமாள்கோவில்’ என்பதாக இருந்தது. 

4. காப்பீட்டுடன் பணம் பாதுகாக்கப்பட வேண்டுமென்பது அமைப்புவிதி. சுட்டிக்காட்டியவுடன், தலைவர் சொன்னது, “fdic insured எனப் பார்த்தமாரி எனக்குத் தெரியலை.”. by-law: The bank or the trust company in which the Federation’s account is opened and maintained must be an insured one. வினா எழுப்பிய முன்னாள் தலைவர் FDIC Insured எனக்குறிப்பிட்டார். சொல்ல வந்தது காப்பீடு குறித்து, சிறுகுழப்பம்.

5. ”பைலால எங்க இருக்குங்ணா” ”பணம் கொண்டு வந்தவங்களுக்கும் கொண்டு வராவதுங்களுக்கும்... பணம் கொண்டு வந்ததைப் பாராட்ட ஆட்கள் இல்லை. ஆனா கேள்வி கேட்க வந்துட்டாங்க. கேள்வி கேட்கும் நீங்கள், எவ்வளவு பணம் திரட்டினீங்கன்னு யோசிச்சுப் பாருங்க. நீங்கதா நிதிதிரட்டும் குழுவில் இருந்தீங்க”, முன்னாள் தலைவரின் பேச்சு. இவர் என்ன சொல்ல வருகின்றார்? கொண்டு வந்த பணத்தை அவர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். கேள்வி கேட்கக் கூடாது என்கின்றாரா? தொடர்ந்து தனிமனிதத் தாக்குதலில் ஈடுபட முனைவதின் நோக்கம் என்னவோ?  ’மணி லாண்டரிங்’ என்பதன் அடிப்படை அறிந்தோர் எவருக்கும் கேள்வி கேட்கும் உரிமை உண்டு. அமைப்புக்குத் தொடர்பே இல்லாத வரிசெலுத்துநருக்கும் கூட.

6. ”ஒப்புதல் வாங்கிட்டு செய்யுங்க என்பதுதான் எங்கள் கருத்து. பைலா எங்க இருக்குன்னு நீங்க போயிப் பாருங்க. பார்க்காமலே செய்துட்டு, அதை நீங்க எங்ககிட்டக் கேட்காதீங்க”, வினா விடுத்த முன்னாள் தலைவர்.

7. மின்னஞ்சல்கள் அத்துமீறிப் பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டுடன் கூடிய கேள்வி. சைபர் செக்யூரிட்டிக்கும் இதற்கும் யாதொரு தொடர்புமில்லை. இரண்டையும் ஏன் முடிச்சுப் போடுகின்றனர் எனத் தெரியவில்லை. பொது அமைப்பு என வந்து விட்டால், விபரங்களும் பொதுதான். நான் வாக்காளன் என்கின்றபடியாலே, என் வீட்டு முகவரி உட்படப் பலதும் அரசாங்கமே பொது வெளியில்தான் போட்டு வைத்திருக்கின்றது. அமைப்பின் பல்வேறு குழுக்களில் பணியாற்றியதன் நிமித்தம் 3000+ மின்னஞ்சல்கள் என்னிடம் உள்ளன. இஃகிஃகி, அவற்றிலிருந்து எப்படியும் ஒரு 500+ தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளை நான் சேகரம் செய்யலாம். சின்னப்புள்ளத்தனமான கேள்வி. why don't you open up the same groupid to all delegates? Dare to be democratic and transparent.

8. பொது அமைப்புகள், பணி என வந்து விட்டால் காட்டமான, கேலிக்குரிய மின்னஞ்சல்கள் வரத்தான் செய்யும். குடியரசுத் தலைவருக்கு நடுவிரல் காட்டிய நாடு அமெரிக்கா. அதற்காக, பொதுப்பணியில் இருப்போரும் அப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதுமில்லை. அது கண்டு வெகுண்டெழவும் தேவையில்லை.

9. ’புதுசா வர்றவங்களை அச்சுறுத்தும் விதமா கேசு போட்டு ஏன் பிரச்சினை செய்யுறீங்க?’ என்பது கேள்வி. சின்னப்புள்ளத்தனமான கேள்வி. கேசு போடுவது ஒவ்வொரு தனிமனிதனின் உரிமை. அவருக்கு அமைப்பின் மேல் அக்கறை இல்லைன்னு நீங்க எப்படி ஒரு முடிவுக்கு வந்தீங்க? Just go, learn what fiduciary duty and whistleblower is. ஏன் கேசு போட்ற அளவுக்கு செயற்குழு நடந்துக்குதுன்னு கேட்கலாமே?!

10. ’பொதுக்குழுக் கூட்டமா அல்லது அரசியற்கூட்டமா இது? ஒரே சுயவிளம்பரமா இருக்குது? இன்சூரன்சுன்னாலே FDICங்றதுதானே? நாங்களும் எங்க நேரத்தை, பணத்தைச் செலவுதான் கடந்த 35 ஆண்டுகளாக அமைப்பை நடத்திட்டு வர்றம்.’, நிறுவனத்தலைவரின் கருத்து.

தொடரும்...


No comments: