1/19/2022

மாற்றான் தோட்டத்து மல்லிகை

நான் முருகனுக்காக கதவருகேயே வெகுநேரமாகக் காத்திருந்தேன். என்னைக் கண்டதும் அவனுக்கு ஒரே மகிழ்ச்சி. -விநாயகன்

என்னைக் கண்டதும் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த விநாயகனுக்கு ஒரே மகிழ்ச்சி. -முருகன்

இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது, ”விநாயகனும் முருகனும் சந்தித்துக் கொண்டனர். இருவருக்கும் மகிழ்ச்சி” என்பதுதான்.

விநாயகனுடைய கதையை மட்டும் கேட்டால் நமக்கு ஏற்படும் புரிதல்: வெகுநேரமாகக் காத்திருந்தான். பாவம். ஆனால் தாமதமாக வந்தவனுக்கு மகிழ்ச்சி, ஒரு சாரி கூடச் சொல்லவில்லை. என்ன மனுசனோ?

முருகனுடைய கதையை மட்டும் கேட்டால் நமக்கு ஏற்படும் புரிதல்: முருகனின் வருகையை எதிர்பார்த்திருக்கவில்லை போலிருக்கின்றது. திடுமென இவனைக் கண்டதில் விநாயகனுக்கு மகிழ்ச்சி. பார்க்க வந்தமைக்கு நன்றி சொல்லிப் பாராட்டி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

இத்தகைய புரிதலும் கூட, ஆளுக்காள் மாறுபடும். விநாயகன் கதையை 100 பேருக்கும், முருகன் கதையை 100 பேருக்கும் கொடுத்து அவரவர் புரிதலைக் கேட்கிறோமென வையுங்கள். நமக்கு 200 விதமான கதைகள் கிடைக்க வாய்ப்பிருக்கின்றது. ஆனால் சந்திப்பு ஒரே சந்திப்புதான். இருவரும் அவரவர் அனுபவத்தை உண்மையோடுதான் சொல்லி இருக்கின்றனர். இருந்தும், ஏனப்படி?

ஒவ்வொருவருடைய புரிதலும், அவரவருடைய கடந்தகால அனுபவங்கள், வாசிப்பு, இருக்கும் இடம், இப்படி எண்ணற்ற பண்புகளை அடிப்படையாகக் கொண்டது. இவையெல்லாம் நிமிடத்துக்கு நிமிடம் மாறிக் கொண்டே இருப்பவை. ஒன்றைப் பற்றி ஒருவர் ஒரு கருத்தைச் சொல்கின்றார். அதேநபரிடம், அதே விசயத்தைச் சென்ற வாரம் கேட்டிருந்தால் வேறுமாதிரி சொல்லி இருக்கக் கூடும். காரணம், இந்த ஒருவாரத்தில் அவர் கற்றுக் கொண்டவை, தற்போதைய மனநிலை என்பதெல்லாம் வேறாக இருந்திருக்கக் கூடும்.

அனுபவம் கூடக் கூட, மனிதன் இப்படியான பன்முகத்தன்மை(ஒரே விசயத்துக்கான பல்வேறு புரிதல்கள்) கொண்டவனாக ஆக வேண்டும். The only thing you sometimes have control over is perspective. You don't have control over your situation. But you have a choice about how you view it. புரிதல்களைக் கட்டமைக்க இப்படியானதொரு பொதுப்புரிதல் அவசியமாகின்றது. நம்முடைய புரிதலைக் காட்டிலும் மாறுபட்ட புரிதலை எதிர்கொள்ளும் போது, வெகுண்டெழுவது நம் மனத்துக்குத்தான் தீங்கானது.

I settle with what I understood; You may settle with what I failed to understand. That's okey, share the perspective and let others to learn if they are interested. பார்வைகள் பலவிதம். வைக்கப்படும் போதுதான் அவற்றினின்று கற்கவும் அறிந்து கொள்ளவும் முடியும். வைக்கப்படவே கூடாதென்பது கற்காலத்துக்கே இட்டுச் செல்லும்.

No comments: