6/09/2008

தழுவிய கூத்துப்பாட்டு

(மனசு வெறுமையா இருந்தப்ப, பொழுது போக எழுதியது.......)

தண்ணி போட்டுட்டா,
நானும் கண்ணதாசந்தான்! அட,
'அ' னா வந்துட்டா
அப்புறம் 'ஆ' வன்னா தான்!!

வட்டாளு முகம் பாத்தா,
தமிழ் மனசு கல்லாகுந்தான்!
விசாகன் முகம் பாத்தா,
கல் மனசும் பிஞ்சாகுந்தான்!!

முல்லைக்கொடிக்கு தேரு
குடுத்தவன், வள்ளல் பாரிதான்!
கொடிகள அத்து தேர்
ஓட்டுனவன், அல்லக்கை மாரிதான்!

தண்ணி போட்டுட்டா,
நானும் கண்ணதாசந்தான்! அட,
'அ' னா வந்துட்டா
அப்புறம் 'ஆ' வன்னா தான்!!

அய்யா சரவணனும் சுப்புராவும்,
கூல் கஸ்டமருங்கதான்!
தண்ணி தராத பசங்க
ளெல்லாம், பக்கருங்கதான்!!

சரித்திர வாத்தி சொன்னது,
விடாமுயற்சிக்கு கஜினியத்தான்!
நம்மாளு வணங்குறது,
சூப்பர் ஸ்டாரு ரஜினியத்தான்!!

எம்மவ கேக்குறது,
கைக்
கெட்டாத வான்நிலாவத்தான்!
கட்டுன மனுசி கேக்குறது, ஈசியா
கெடைக்கிற கிரிடிட் கார்டத்தான்!!

தண்ணி போட்டுட்டா,
நானும் கண்ணதாசந்தான்! அட,
'அ' னா வந்துட்டா
அப்புறம் 'ஆ' வன்னா தான்!!

1 comment:

பழமைபேசி said...

இதுல தமிங்கிலம் இருப்பதற்கு நான் காரணம் அல்ல. குழுமத்தின் விளைவு இது!