கடந்த சில நாட்களாக சென்னை, அதையொட்டி இணையம் முதலான இடங்களில் குடி கொண்டிருந்த மனிதநிலை சிறிது சிறிதாக வலுவிழந்து படிப்படியாக இயல்புவெறிநிலைக்கு முற்றிலுமாகத் திரும்பி, அடுத்த 48 நேரத்திற்கு ஆங்காங்கே உக்கிரமான காழ்ப்பும் அநேக இடங்களில் அரசியல் வாடையும் ஒருசில இடங்களில் மிதமான மனிதமும் ஓரிரு இடங்களில் பலத்த மனிதமும் தமிழகம் முழுதுமுள்ள தொலைக்காட்சிகளில் சீரான பினாத்தலும் இருக்குமென்று மாந்தநிலை இயக்குநர் வாமனன் தெரிவித்தார்.
Showing posts with label புனைவு. Show all posts
Showing posts with label புனைவு. Show all posts
12/09/2015
மாந்தநிலை அறிக்கை
கடந்த சில நாட்களாக சென்னை, அதையொட்டி இணையம் முதலான இடங்களில் குடி கொண்டிருந்த மனிதநிலை சிறிது சிறிதாக வலுவிழந்து படிப்படியாக இயல்புவெறிநிலைக்கு முற்றிலுமாகத் திரும்பி, அடுத்த 48 நேரத்திற்கு ஆங்காங்கே உக்கிரமான காழ்ப்பும் அநேக இடங்களில் அரசியல் வாடையும் ஒருசில இடங்களில் மிதமான மனிதமும் ஓரிரு இடங்களில் பலத்த மனிதமும் தமிழகம் முழுதுமுள்ள தொலைக்காட்சிகளில் சீரான பினாத்தலும் இருக்குமென்று மாந்தநிலை இயக்குநர் வாமனன் தெரிவித்தார்.
12/11/2012
பிறவிக்கடன்
சாதிக்கம்பின் வீச்சில்
அண்ணிக்குக் கல்யாணம்!
மணமகளாக அவர்
மணமகனாக இவன்
வானுலகப் பூச்சொரிகிறது
என் அண்ணனிடமிருந்து!!
9/24/2012
தீர்மானம்

கைவினைப் பொருட்கள் பெருமன்றத்தில்
ஒல்லு
உலக்கை
மத்து
அம்மி
உரல்
இராயிக்கல்
குழவிக்கல்
கொக்கரை
சவடிமுள்
சிவிறி
விசிறி
ஏற்றம்
கமலை
முதலான எல்லாமும்
ஊக்கக் களிப்புடன் பங்கேற்று
நிறைவேற்றி அனுப்பின
ஒருமனதாகத் தீர்மானம் ஒன்றை!
14 மணிநேர மின்வெட்டு
கல்நெய் விலையுயர்வு
முதலானவற்றைப் பாராட்டி
நன்றி தெரிவிப்பதோடு
அவற்றை இன்னும்
அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச் செல்ல
வலியுறுத்துகிறோம் என்று!!
9/09/2012
வேசறவு

நன்றாகப் படிப்பவர்கள்
நல்லவர்களாகவே இருப்பர்
பொய் சொல்ல மாட்டார்கள்
ஒழுக்கம் தவறமாட்டார்கள்
முரட்டுத்தனமாய்
நம்பிய காலமது!
ஊரின் நம்பிக்கைக்கு
வேட்டு வைக்காமல்
நன்றாகப் படிக்கும் மாணவர்களும்
நல்லவர்களாகவே இருந்தனர்!
எட்டாம் வகுப்பு
ஆண்டின் முதல் நாள்
முதல்வரிசையில் இடம்
வகுப்புக்கு சட்டாம்புள்ளை
பேசினால்
பேசியவர் பெயரெழுதும் வேலை
என எல்லாச் சிறப்பும்
ஊர் மணியக்காரர் மகன்
ஏழாம் வகுப்பு அ பிரிவு
சட்டாம்புள்ளை
இரவிக்கே வாய்த்தது
ஏழாம் வகுப்பு ஆ பிரிவு
சட்டாம்புள்ளை
மணியனுக்கு
ஒன்றும் இல்லை!
மெளலி வாத்தியார்
வசந்தா டீச்சர்
கிளப்பிவிட்ட புரளியில்
நொந்துபோன வசந்தாக்கா
நல்லாப் படிக்கிறவங்கள்ல
உங்க மகனும் ஒருத்தன்
அவனுங்கூட
இதை உண்மைன்னு நம்புறானே
வேலூர்ச் சந்தையில்
காய்கறி வாங்கப் போன அம்மாவிடம்
சொல்லிச் சொல்லி அழுதீர்கள்!!
சட்டாம்புள்ளை
ஆகவில்லையெனும்
ஏக்கத்தில்
பொறாமையில்
அறியாமையில்
நானுமதை நம்பிப் பகரம் விட்டேன்
இன்று மனம் கனத்து
இனபத் தமிழெழுத்திடைத் துயின்று
வேசறவு தீர்க்க முயலுகிறேன்!
மன்னிச்சிடுங்க அக்கா!!
இனபத் தமிழெழுத்திடைத் துயின்று
வேசறவு தீர்க்க முயலுகிறேன்!
மன்னிச்சிடுங்க அக்கா!!
9/05/2012
குளக்கரை நேசம்
பச்சைப்பட்டு விரித்தாற்போல்
எங்கும் புல்வெளி
யாருமில்லாப் புல்வெளி
கண்கள் கொள்ளை கொள்ள
இவற்றின் நடுவே
கயல் துள்ளும் நீர்வெளியாக
ஊரோரக் குளம்!!
அன்றாடம் நாட்தவறாது
மாலை ஆறுமணிக்கு
குளக்கரையில் ஓட்டப்பயிற்சி – அங்கே
ஆப்பிரிக்க அமெரிக்க மங்கையொருத்தி
இடவலமாய்ப் போய்க்கொண்டிருக்க
வலமிருந்து இடமாய்ப் போகும்
காக்கேசன் மங்கையவள்!
மூன்றாவதாய்ச் செல்லும் இவனது
ஓட்டத்தின் பாதையினூடாய்
எதிராய்க் கடக்கையில்
சிந்தும் குறுஞ்சிரிப்பு மாத்திரமே
அவளுக்கும் இவனுக்குமான உறவு!!
கோடையின் தாக்கத்தில்
வெம்மை வாட்டியெடுக்க
தடைபட்ட ஓட்டப்பயிற்சியை
மீட்டெடுக்கும் பொருட்டு
திங்கள் பல உருண்டோடிவிட்ட
இன்றைய பொழுதில் சென்றான்
ஓடுவதற்காய் ஊரோரக் குளக்கரைக்கு!!
காக்கேசக் குறுஞ்சிரிப்பின்றி
வெறுமை வாட்டியெடுக்க
ஆப்பிரிக்க அமெரிக்க மங்கையை நாட
அவள் காட்டிய அவளோ
வாய்ப்புற்றின் வதைப்பில்
படுக்கையில் படுகிடையாய்!!
கண்டு விரிந்த கண்கள் பேச
வாஞ்சையாய் அவளது இடக்கை
இவனது வலக்கையைப் பற்றிக் கொள்ள
மெளனத்தினூடே ஓரிரு கணங்கள்
அமைதியாய்க் கடக்க
விடைபெறும் தருணமதில்
தட்டுத்தடுமாறி எழுந்து
நூலொன்றைக் கொடுத்து
முடிந்தும் முடியாமல் உதிர்த்தாள்
குறுஞ்சிரிப்பொன்று – அது அவளுடைய
கடைசியானதாகவும் இருக்கலாம்!
வீடு வந்ததும்தான் பார்த்தானிவன்
நூலின் தலைப்பு
Gandhi: His Life and Message for the World
10/13/2011
வாடா மலர்
தளையத் தளைய பட்டுப்புடவையில் பெண்டிர். தமிழ்நாட்டில் கூட இல்லாத இளம்பச்சைத் தாவணிகளும், இளஞ்சிவப்புத் தாவணிகளும். அவற்றிற்கேற்றாற் போல தங்கக்கம்பி நிற இழைகள் தரித்த ஓரப்பட்டைகள் கூடிய மஞ்சள் மற்றும் கத்தரிப்பூ நிற பாவாடைகளும்! மங்களகரமாய்க் காட்சியளித்தது கூடம்!!
பல்கலைக் கழக வளாகம் என்பதால், இளமீசைகளுடன் கூடிய பதின்ம வயது கடந்த இளங்காளைகளும் உலாப் போய்க் கொண்டிருந்தன.
“வாவ்... வாட் எ ப்யூட்டி மேன் அவர் லேடீசு ஆர்?”, மனம் பொங்கிக் குதூகலித்தது அவ்விளங் காளைகளில் ஒன்று.
குடும்ப சகிதம் சென்று கொண்டிருந்தவனுக்குச் சிறிதான சலனம். அம்முகம் போலத்தான் தெரிகிறது. ஆனாலும் அது அல்ல! அதுவே ஆனாலும் எப்படிப் பார்க்க முடியும்? மறுபடியும் பார்க்கலாம் என முளைத்த எண்ணம் முளையிலேயே கருகிப் போனது.
பார்வையை வேறு கோணத்தில் செலுத்திப் பிள்ளைகளுடன் விழா அரங்கம் நோக்கி முன்னேறினான்.
“ப்பா, என்கு அந்தப் பட்ப் பாவாடை வாணும்.. ப்பா... என்கு...”, குழந்தையின் சில்லுக் குழைவினூடாகவும், புறச்சூழலின் இதத்தினூடாகவும் ’அகக்கிள்ளு’தனை மறந்து இன்புறலானான்.
நுழைவுக் கிரியைகளை முடித்து, பணம் இருபது வெள்ளிகளைக் கொடையாகக் கொடுத்து நிமிர்ந்தான். அதே முகம். கண்களும் கண்களும் பார்த்துக் கொண்டன. அறியாத கண்கள் போலக் கண்டு கொள்ளாது தலை திருப்பிக் கூடத்திற்குள் சென்று மறைந்து கொண்டான்.
எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான் அவன். ஊரின் பிரதான வீதியான, வெண்ணைக்காரர் வீதியில்தான் இவனது வீடு. பள்ளிக்கூடம் விட்டு வந்ததும், திருடன் போலீசு விளையாட்டோ அல்லது மாகாளியம்ம்ன் கோவில் திடலில் மொசப்பந்தடித்து ஆடும் விளையாட்டோ விளையாடுவது வழக்கம். இன்றைக்கும் அப்படித்தான், பள்ளியில் இருந்து வந்ததும் சீருடையைக் களைந்து மடித்து வைத்து விட்டு, மாற்றுடுப்பு அணிந்து கொண்டான். அம்மா கொடுத்த பொரி, கடலை, காபியைக் குடித்து விட்டு மாகாளியம்மன் கோவில் திடலுக்குச் செல்ல வெளியில் வந்தான்.
“எங்கடா போற? அம்மா, வடை சுடலாம்னு இருக்கேன். போடா, பர்வதக்கா ஊட்ல போயி, அம்மா கறுகாப்பெலை ரெண்டு இணுக்கு வாங்கியாறச் சொன்னாங்கன்னு சொல்லி வாங்கியா போ”, என்றாள்.
“ஏம்மா, அது நீ போயி வாங்கிக்க மாட்டியாக்கூ?? நான் வெளையாடப் போகோணும்!”.
“அதாண்டா... மூணும் தறுதலையாப் பெத்துப் போட்ட்டு நான் படாதபாடு படுறேன். இதே, பொட்டைப் புள்ளை ஒன்னப் பெத்திருந்தா, எனக்கு இந்த செரமம் இருக்குமா? என்ற தும்பம் சாகுற வரைக்கும் தீராது. ஆனமலை மாசாணியாத்தா, என்க்கு இப்படி ஒரு கொறையக் குடுத்து வாதிக்கிறயே? நான் ஆருகிட்டச் சொல்லு அழுவேன்? ஆருகிட்டச் சொல்லி அழுவேன்??”.
“செரீம்மா... நானே போறேன். கத்தி ஊரைக் கூட்டாத!”
பர்வதக்காவும் அம்மாவும் நண்பர்கள். வேலூர் சந்தைக்குச் செல்வதானாலும், நெகமத்திற்குச் சேலை வாங்கச் செல்வதானாலும், உடல்நலமின்றி உடுமலைப் பேட்டை மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருக்கும் உள்ளூர்க்காரரைக் காணச் செல்வதானாலும் ஒரு சேரத்தான் போவார்கள், வருவார்கள்.
அடிக்கடி சர்க்கரை குறியாப்பு வாங்குவது, எண்ணெய் குறியாப்பு வாங்குவது என இரு வீட்டாரும் புழங்கிக் கொள்வார்கள். வேறு வேறு சாதியினர் என்றாலும், அவர்களுக்குள் அது ஒரு பொருட்டாக இருந்திருக்கவில்லை.
பர்வதக்கா வீடு, மொக்கு வீட்டுக்கும் ரொட்டிக்கடை மருதாசலண்ணன் வீட்டிற்கும் இடைப்பட்டு இருக்கிறது. தெருமுனைக்குச் சென்று, வலதுபுறம் செல்லும் ஊர்க்கிணற்றுத் தெருவில் இருக்கும் முதல்வீடுதான் மொக்கு வீடு. மொக்கு வீட்டுத் திண்ணைக்கென்று ஒரு சிறப்பு இருக்கிறது.
ஊர்த் தலைவாசலில் இருந்து வருவோர் போவோர் எல்லோரையும் மொக்கு வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கொண்டால் அவதானிக்கலாம். திண்ணையின் ஒரு முனையில் வயதில் மூத்தவர்கள் அமர்ந்து ஊர்நாயம் பேசிக் கொண்டு இருப்பார்கள். மறுமுனையில், விடலைகள் அமர்ந்து நாளிதழ் வாசிப்பது போன்ற தோரணையில் பட்சி பார்த்துக் கொண்டு இருப்பார்கள்.
அப்படியான மொக்கூட்டுத் திண்ணையைக் கடந்துதான் சென்று கொண்டிருந்தான் இவன்.
“என்றா சுந்தரு? எங்க்டா போற??”, அவன் எங்கு போகப் போகிறான் என்பதைத் தெரிந்து கொண்டே வம்புக்கிழுத்தார் கதிர்வேலண்ணன்.
“எங்கம்மா கறுகாப்பெலை பொறிச்சாரச் சொல்லுச்சுங். அதான் பர்வதக்கா ஊட்டுக்குப் போய்ட்டிருக்கணுங்”.
“இம்ம்...ம்ம்ம்... கொடுத்து வெச்சவன்”
கதிர்வேலண்ணன் சொல்வதைக் காதில் வாங்காது சென்று கொண்டிருந்தான். கதிர்வேலண்ணன் அப்படிப் பொருமுவதற்கும் ஒரு காரணமிருந்தது.
பர்வதக்காவிற்கு ஒரு மகனும், ஒரு மகளும். மகன் விஜயகுமார், கொங்குரார் காகித ஆலையில் மேற்பார்வையாளர் வேலை. மகள் உமாதேவி, உடுமலைப் பேட்டை விசாலாட்சி மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலை இரண்டாமாண்டு. பள்ளி விடுதியில் தங்கி இருந்து படிக்கிறாள். நல்ல கோதுமை நிறமும், முகப்பொலிவும் கொண்டவள். ஒரு சில நாட்களில், வீட்டில் இருந்து கொண்டே நான்காம் இலக்கப் பேருந்தில் உடுமலையில் இருக்கும் பள்ளிக்குச் சென்று வருவாள்.
“அக்கா, பர்வதக்கா... எங்கம்மா கறுகாப்பெலை கொஞ்சம் பொறிச்சிட்டு வரச் சொல்லுச்சுங்க்கா. அக்கா, அக்கா!”, அழைத்துப் பார்த்தான். கதவைத் தட்டியும் பார்த்தான். யாரும் பதில் அளிக்கவில்லை. வீட்டில் எவரும் இல்லையென நினைத்தவன், புறக்கொல்லையை நோக்கிச் சென்றான்.
வீட்டின் பின்புறம் மூன்று தென்னை மரங்கள். தென்னை மரங்களுக்கு இடையில் கனகாம்பரச் செடிகள் வளர்ந்து இருந்தன. ஒரு மூலையில் புதராய் மல்லிகைச்செடிகள் மண்டி இருந்த இடத்தில் இருந்து மல்லிகைப்பூ நறுமணம். அந்த மூலையில் இருக்கும் தகரக் கதவு இட்ட அறையைக் கடந்து சென்றால், அதை ஒட்டிய மறுபக்கத்தில் இருக்கும் கறிவேப்பிலைச் செடிகள்.
அறையைக் கடக்க முற்படவும், அறைக்கதவு திறக்கப்படவும் நேரம் பொருந்தி இருந்தது. திடுக்கிட்டவன், செய்வதறியாது நின்றான். தலை, ஈரிழைத் துண்டினால் சுற்றப்பட்டு இருந்தது. மேனி தாவணியால் சூழப்பட்டு இருந்தது. வினாடி நேரம் கூட ஆகியிருக்காது.
“அடச் சீ! நீயுமா? எங்கிட்ட அப்படி என்னதாண்டா இருக்கு??”
அவனுக்கு அழுகை, அழுகையா வந்தது. அச்சமும், ஏமாற்றமும் கலந்து, குற்றமிழைத்து விட்டேனோ எனும் பாங்கில் கதி கலங்கிப் போனான். அப்படியே திரும்பி வேக வேகமாக நடந்து வீட்டினை அடைந்தான்.
“அம்மா, அங்க ஆருமில்லை’, என்று சொன்னவன் எந்த மறுமொழியையும் கேட்க மனமில்லாது வீட்டிற்குள் சென்று, வெற்றுத்தரையில் படுத்துக் கொண்டான்.
இறைவனை இறைஞ்சத் துவங்கினான். “மாசாணியாத்தா, என்னைக் காப்பாத்து! நான் ஒனக்கு அடுத்த அமாவாசை அன்னைக்கு ஒன்னேகால் ருபாய் காணிக்கை செலுத்துறேன். என்னைக் காப்பாத்து!”
திரும்பிப் படுத்தான். ”நான் ஒன்னுமே செய்யிலியே. அந்தக்கா எங்க, அம்மாகிட்டச் சொல்லிறுவாளோ? ச்சே, பின்னாடி போனதும் ஒருக்கா கூப்புட்டுத் தொலைச்சிருக்கலாம். கூப்புடாமப் போனதுதான் தப்பாப் போச்சு. வெளில தெரிஞ்சா, அவ்வளவுதான்!”, குலை நடுக்கம் கண்டது.
“ஆத்தா, மாகாளியாத்தா, அடுத்த வாரச் சந்தையன்னிக்கு அம்மா குடுக்குற காசுல கண்ணடக்கம் வாங்கிச் சாத்துறேன். நீதாங் காப்பாத்தோணும்”, கண்ணீர் மல்க முணுமுணுத்தான்.
உறங்கிப் போனான். அம்மா வந்து எழுப்பினாள், “என்றா இங்க வந்து படுத்துக் கெடக்குறே. ஒரு வேலை ஒழுக்கமாச் செய்யத் துப்பில்லை. செரி வந்து, வடை ரெண்டு தின்னு பாரு வா!”, மறுபிறவி எடுத்தது போல உணர்ந்தான்.
“அம்மா எதும் சொல்லுலை. அப்பிடின்னா, அந்தக்கா என்னைக் காமிச்சிக் குடுக்கலையாட்ட இருக்குது!”, சிறிதாக ஆசுவாசமடைந்தாலும் அடுத்தடுத்த இரு நாட்களும் பதற்றம் கொண்டவனாகவே இருந்தான்.
முழு ஆண்டுத் தேர்வு, அதற்குப் பிறகான விடுப்பில் அமுச்சி ஊருக்குச் செல்லுதல், விடுமுறைக்குப் பின் அவனும் விடுதிக்குச் சென்று பள்ளிப் படிப்பைத் தொடர்தல் என ஆண்டுகள் கழிந்தன.
அண்டி இருக்கும் சூழல் ஓரிருமுறை வாய்த்திருந்தும், ஒருவருக்கொருவர் நேரில் பார்த்துக் கொள்வதைத் தவிர்த்தனர். காலங்கள் கழிந்தன. ஆண்டுகள் பல உருண்டோடி, பருவங்கள் பல கண்டு, கண்டங்கள் கடந்து வந்திருக்கின்றனர்.
விழா நிறைவெய்தி, உண்டிக்கான வேளையது. குடும்பம் குடும்பமாய் ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தில் அளவளாவிக் கொண்டிருந்தனர்.
“ஏனுங் நீங் உடலப்பேட்டைங்ளா?”
அகம் கலக்கம் கொண்டது. மனைவி, குழந்தைகள் எல்லாம் வேறு சூழ இருக்கிறார்கள். இறுக்கம் மனதைக் கப்பியது. இல்லை எனப் பொய் சொன்னாலும், மீண்டும் தவறுக்கு அச்சாரம் இடுவது போலவே ஆகும்.
மெய்யுரைப்பதா, பொய்யுரைப்பதா?? கடைசல்க் கயிற்றில் சிக்கிய மத்துப் போல மனம் கிடந்து அல்லாடியது.
“ஏனுங்... உங்களைத்தானுங்?!”
மீண்டும் வினவியதில், அவனையும் மீறி உண்மை பிரசவித்தது.
“ஆமாங்”
“எம்பேரு விசுவநாதனுங்க. பல்லடமுங்க நானு”
அறிமுகப்படலம் நடந்தேறுவதைக் கண்டு அவனது மனையாள் அவர்களை நெருங்கினாள். பல்லடத்தார் மனையாளும் நெருங்கி வருவது கண்டு குலை நடுக்கம் கண்டது அவனுக்கு. அதே முகம். விடாது கறுப்பு போல இருக்கே என அஞ்சி, கூடத்தில் தொலைந்து போன மூஞ்சூரு போலத் தவித்தது அவனது மனம்.
“உமா, ஐ திங்க்... நீ நெனச்சது சரிதான் போலிருக்கு!”, மனையாளிடம் சொல்லிக் கொண்டே அவனது மனையாளுக்கு வணக்கம் தெரிவித்துக் கொண்டார் பல்லடத்தார்.
இரு குடும்பத்துக் குழந்தைகளும் கூடி விளையாடினர். பல்லடத்தாரின் மூத்த மகள் அவனது குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்தாள். பெண்கள் இருவரும் வாய் நிறையப் பேசிக் கொண்டனர். பல்லடத்தார் அவனிடம் பழமைகள் பல பேசினார். அங்கிருந்த பரப்புக்காலியில் ஒரு குழுவாய் அமர்ந்து உண்டி புசித்தனர். வெகு நேரம் அளவளாவினர்.
சிறிது சிறிதாக அவனுள் இருந்த இறுக்கம் தளர்ந்து கொண்டிருந்தது. முழுதும் தளர்ந்து அகலும் முன்னமே, விடை பெறும் தருணம் வந்து நின்றது. அவனுக்கு ’அப்பாட’ என்றிருந்தது.
அவனது குழந்தையை அவனிடமே திரும்ப ஒப்படைக்கும் பாங்கில், குழந்தையை வாரி அணைத்து முத்தமிட்டுக் கொண்டபடியே த்ன் தோளால் அவனது தோளை இடித்துச் சொன்னது குரல், “சாரிடா சுந்தர். It's been ages due, I apologize...". கண்கள் சிமிட்டிச் சென்றன.
உமையாள் குரல் மட்டுமன்று, வையகத்து இளவேனிற் காற்றும் அவனைத் தழுவிச் சென்றது. “விடுதலை, விடுதலை”, மனம் ஆனந்தப் பள்ளு பாடியது!
பல்கலைக் கழக வளாகம் என்பதால், இளமீசைகளுடன் கூடிய பதின்ம வயது கடந்த இளங்காளைகளும் உலாப் போய்க் கொண்டிருந்தன.
“வாவ்... வாட் எ ப்யூட்டி மேன் அவர் லேடீசு ஆர்?”, மனம் பொங்கிக் குதூகலித்தது அவ்விளங் காளைகளில் ஒன்று.
குடும்ப சகிதம் சென்று கொண்டிருந்தவனுக்குச் சிறிதான சலனம். அம்முகம் போலத்தான் தெரிகிறது. ஆனாலும் அது அல்ல! அதுவே ஆனாலும் எப்படிப் பார்க்க முடியும்? மறுபடியும் பார்க்கலாம் என முளைத்த எண்ணம் முளையிலேயே கருகிப் போனது.
பார்வையை வேறு கோணத்தில் செலுத்திப் பிள்ளைகளுடன் விழா அரங்கம் நோக்கி முன்னேறினான்.
“ப்பா, என்கு அந்தப் பட்ப் பாவாடை வாணும்.. ப்பா... என்கு...”, குழந்தையின் சில்லுக் குழைவினூடாகவும், புறச்சூழலின் இதத்தினூடாகவும் ’அகக்கிள்ளு’தனை மறந்து இன்புறலானான்.
நுழைவுக் கிரியைகளை முடித்து, பணம் இருபது வெள்ளிகளைக் கொடையாகக் கொடுத்து நிமிர்ந்தான். அதே முகம். கண்களும் கண்களும் பார்த்துக் கொண்டன. அறியாத கண்கள் போலக் கண்டு கொள்ளாது தலை திருப்பிக் கூடத்திற்குள் சென்று மறைந்து கொண்டான்.
எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான் அவன். ஊரின் பிரதான வீதியான, வெண்ணைக்காரர் வீதியில்தான் இவனது வீடு. பள்ளிக்கூடம் விட்டு வந்ததும், திருடன் போலீசு விளையாட்டோ அல்லது மாகாளியம்ம்ன் கோவில் திடலில் மொசப்பந்தடித்து ஆடும் விளையாட்டோ விளையாடுவது வழக்கம். இன்றைக்கும் அப்படித்தான், பள்ளியில் இருந்து வந்ததும் சீருடையைக் களைந்து மடித்து வைத்து விட்டு, மாற்றுடுப்பு அணிந்து கொண்டான். அம்மா கொடுத்த பொரி, கடலை, காபியைக் குடித்து விட்டு மாகாளியம்மன் கோவில் திடலுக்குச் செல்ல வெளியில் வந்தான்.
“எங்கடா போற? அம்மா, வடை சுடலாம்னு இருக்கேன். போடா, பர்வதக்கா ஊட்ல போயி, அம்மா கறுகாப்பெலை ரெண்டு இணுக்கு வாங்கியாறச் சொன்னாங்கன்னு சொல்லி வாங்கியா போ”, என்றாள்.
“ஏம்மா, அது நீ போயி வாங்கிக்க மாட்டியாக்கூ?? நான் வெளையாடப் போகோணும்!”.
“அதாண்டா... மூணும் தறுதலையாப் பெத்துப் போட்ட்டு நான் படாதபாடு படுறேன். இதே, பொட்டைப் புள்ளை ஒன்னப் பெத்திருந்தா, எனக்கு இந்த செரமம் இருக்குமா? என்ற தும்பம் சாகுற வரைக்கும் தீராது. ஆனமலை மாசாணியாத்தா, என்க்கு இப்படி ஒரு கொறையக் குடுத்து வாதிக்கிறயே? நான் ஆருகிட்டச் சொல்லு அழுவேன்? ஆருகிட்டச் சொல்லி அழுவேன்??”.
“செரீம்மா... நானே போறேன். கத்தி ஊரைக் கூட்டாத!”
பர்வதக்காவும் அம்மாவும் நண்பர்கள். வேலூர் சந்தைக்குச் செல்வதானாலும், நெகமத்திற்குச் சேலை வாங்கச் செல்வதானாலும், உடல்நலமின்றி உடுமலைப் பேட்டை மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருக்கும் உள்ளூர்க்காரரைக் காணச் செல்வதானாலும் ஒரு சேரத்தான் போவார்கள், வருவார்கள்.
அடிக்கடி சர்க்கரை குறியாப்பு வாங்குவது, எண்ணெய் குறியாப்பு வாங்குவது என இரு வீட்டாரும் புழங்கிக் கொள்வார்கள். வேறு வேறு சாதியினர் என்றாலும், அவர்களுக்குள் அது ஒரு பொருட்டாக இருந்திருக்கவில்லை.
பர்வதக்கா வீடு, மொக்கு வீட்டுக்கும் ரொட்டிக்கடை மருதாசலண்ணன் வீட்டிற்கும் இடைப்பட்டு இருக்கிறது. தெருமுனைக்குச் சென்று, வலதுபுறம் செல்லும் ஊர்க்கிணற்றுத் தெருவில் இருக்கும் முதல்வீடுதான் மொக்கு வீடு. மொக்கு வீட்டுத் திண்ணைக்கென்று ஒரு சிறப்பு இருக்கிறது.
ஊர்த் தலைவாசலில் இருந்து வருவோர் போவோர் எல்லோரையும் மொக்கு வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கொண்டால் அவதானிக்கலாம். திண்ணையின் ஒரு முனையில் வயதில் மூத்தவர்கள் அமர்ந்து ஊர்நாயம் பேசிக் கொண்டு இருப்பார்கள். மறுமுனையில், விடலைகள் அமர்ந்து நாளிதழ் வாசிப்பது போன்ற தோரணையில் பட்சி பார்த்துக் கொண்டு இருப்பார்கள்.
அப்படியான மொக்கூட்டுத் திண்ணையைக் கடந்துதான் சென்று கொண்டிருந்தான் இவன்.
“என்றா சுந்தரு? எங்க்டா போற??”, அவன் எங்கு போகப் போகிறான் என்பதைத் தெரிந்து கொண்டே வம்புக்கிழுத்தார் கதிர்வேலண்ணன்.
“எங்கம்மா கறுகாப்பெலை பொறிச்சாரச் சொல்லுச்சுங். அதான் பர்வதக்கா ஊட்டுக்குப் போய்ட்டிருக்கணுங்”.
“இம்ம்...ம்ம்ம்... கொடுத்து வெச்சவன்”
கதிர்வேலண்ணன் சொல்வதைக் காதில் வாங்காது சென்று கொண்டிருந்தான். கதிர்வேலண்ணன் அப்படிப் பொருமுவதற்கும் ஒரு காரணமிருந்தது.
பர்வதக்காவிற்கு ஒரு மகனும், ஒரு மகளும். மகன் விஜயகுமார், கொங்குரார் காகித ஆலையில் மேற்பார்வையாளர் வேலை. மகள் உமாதேவி, உடுமலைப் பேட்டை விசாலாட்சி மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலை இரண்டாமாண்டு. பள்ளி விடுதியில் தங்கி இருந்து படிக்கிறாள். நல்ல கோதுமை நிறமும், முகப்பொலிவும் கொண்டவள். ஒரு சில நாட்களில், வீட்டில் இருந்து கொண்டே நான்காம் இலக்கப் பேருந்தில் உடுமலையில் இருக்கும் பள்ளிக்குச் சென்று வருவாள்.
“அக்கா, பர்வதக்கா... எங்கம்மா கறுகாப்பெலை கொஞ்சம் பொறிச்சிட்டு வரச் சொல்லுச்சுங்க்கா. அக்கா, அக்கா!”, அழைத்துப் பார்த்தான். கதவைத் தட்டியும் பார்த்தான். யாரும் பதில் அளிக்கவில்லை. வீட்டில் எவரும் இல்லையென நினைத்தவன், புறக்கொல்லையை நோக்கிச் சென்றான்.
வீட்டின் பின்புறம் மூன்று தென்னை மரங்கள். தென்னை மரங்களுக்கு இடையில் கனகாம்பரச் செடிகள் வளர்ந்து இருந்தன. ஒரு மூலையில் புதராய் மல்லிகைச்செடிகள் மண்டி இருந்த இடத்தில் இருந்து மல்லிகைப்பூ நறுமணம். அந்த மூலையில் இருக்கும் தகரக் கதவு இட்ட அறையைக் கடந்து சென்றால், அதை ஒட்டிய மறுபக்கத்தில் இருக்கும் கறிவேப்பிலைச் செடிகள்.
அறையைக் கடக்க முற்படவும், அறைக்கதவு திறக்கப்படவும் நேரம் பொருந்தி இருந்தது. திடுக்கிட்டவன், செய்வதறியாது நின்றான். தலை, ஈரிழைத் துண்டினால் சுற்றப்பட்டு இருந்தது. மேனி தாவணியால் சூழப்பட்டு இருந்தது. வினாடி நேரம் கூட ஆகியிருக்காது.
“அடச் சீ! நீயுமா? எங்கிட்ட அப்படி என்னதாண்டா இருக்கு??”
அவனுக்கு அழுகை, அழுகையா வந்தது. அச்சமும், ஏமாற்றமும் கலந்து, குற்றமிழைத்து விட்டேனோ எனும் பாங்கில் கதி கலங்கிப் போனான். அப்படியே திரும்பி வேக வேகமாக நடந்து வீட்டினை அடைந்தான்.
“அம்மா, அங்க ஆருமில்லை’, என்று சொன்னவன் எந்த மறுமொழியையும் கேட்க மனமில்லாது வீட்டிற்குள் சென்று, வெற்றுத்தரையில் படுத்துக் கொண்டான்.
இறைவனை இறைஞ்சத் துவங்கினான். “மாசாணியாத்தா, என்னைக் காப்பாத்து! நான் ஒனக்கு அடுத்த அமாவாசை அன்னைக்கு ஒன்னேகால் ருபாய் காணிக்கை செலுத்துறேன். என்னைக் காப்பாத்து!”
திரும்பிப் படுத்தான். ”நான் ஒன்னுமே செய்யிலியே. அந்தக்கா எங்க, அம்மாகிட்டச் சொல்லிறுவாளோ? ச்சே, பின்னாடி போனதும் ஒருக்கா கூப்புட்டுத் தொலைச்சிருக்கலாம். கூப்புடாமப் போனதுதான் தப்பாப் போச்சு. வெளில தெரிஞ்சா, அவ்வளவுதான்!”, குலை நடுக்கம் கண்டது.
“ஆத்தா, மாகாளியாத்தா, அடுத்த வாரச் சந்தையன்னிக்கு அம்மா குடுக்குற காசுல கண்ணடக்கம் வாங்கிச் சாத்துறேன். நீதாங் காப்பாத்தோணும்”, கண்ணீர் மல்க முணுமுணுத்தான்.
உறங்கிப் போனான். அம்மா வந்து எழுப்பினாள், “என்றா இங்க வந்து படுத்துக் கெடக்குறே. ஒரு வேலை ஒழுக்கமாச் செய்யத் துப்பில்லை. செரி வந்து, வடை ரெண்டு தின்னு பாரு வா!”, மறுபிறவி எடுத்தது போல உணர்ந்தான்.
“அம்மா எதும் சொல்லுலை. அப்பிடின்னா, அந்தக்கா என்னைக் காமிச்சிக் குடுக்கலையாட்ட இருக்குது!”, சிறிதாக ஆசுவாசமடைந்தாலும் அடுத்தடுத்த இரு நாட்களும் பதற்றம் கொண்டவனாகவே இருந்தான்.
முழு ஆண்டுத் தேர்வு, அதற்குப் பிறகான விடுப்பில் அமுச்சி ஊருக்குச் செல்லுதல், விடுமுறைக்குப் பின் அவனும் விடுதிக்குச் சென்று பள்ளிப் படிப்பைத் தொடர்தல் என ஆண்டுகள் கழிந்தன.
அண்டி இருக்கும் சூழல் ஓரிருமுறை வாய்த்திருந்தும், ஒருவருக்கொருவர் நேரில் பார்த்துக் கொள்வதைத் தவிர்த்தனர். காலங்கள் கழிந்தன. ஆண்டுகள் பல உருண்டோடி, பருவங்கள் பல கண்டு, கண்டங்கள் கடந்து வந்திருக்கின்றனர்.
விழா நிறைவெய்தி, உண்டிக்கான வேளையது. குடும்பம் குடும்பமாய் ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தில் அளவளாவிக் கொண்டிருந்தனர்.
“ஏனுங் நீங் உடலப்பேட்டைங்ளா?”
அகம் கலக்கம் கொண்டது. மனைவி, குழந்தைகள் எல்லாம் வேறு சூழ இருக்கிறார்கள். இறுக்கம் மனதைக் கப்பியது. இல்லை எனப் பொய் சொன்னாலும், மீண்டும் தவறுக்கு அச்சாரம் இடுவது போலவே ஆகும்.
மெய்யுரைப்பதா, பொய்யுரைப்பதா?? கடைசல்க் கயிற்றில் சிக்கிய மத்துப் போல மனம் கிடந்து அல்லாடியது.
“ஏனுங்... உங்களைத்தானுங்?!”
மீண்டும் வினவியதில், அவனையும் மீறி உண்மை பிரசவித்தது.
“ஆமாங்”
“எம்பேரு விசுவநாதனுங்க. பல்லடமுங்க நானு”
அறிமுகப்படலம் நடந்தேறுவதைக் கண்டு அவனது மனையாள் அவர்களை நெருங்கினாள். பல்லடத்தார் மனையாளும் நெருங்கி வருவது கண்டு குலை நடுக்கம் கண்டது அவனுக்கு. அதே முகம். விடாது கறுப்பு போல இருக்கே என அஞ்சி, கூடத்தில் தொலைந்து போன மூஞ்சூரு போலத் தவித்தது அவனது மனம்.
“உமா, ஐ திங்க்... நீ நெனச்சது சரிதான் போலிருக்கு!”, மனையாளிடம் சொல்லிக் கொண்டே அவனது மனையாளுக்கு வணக்கம் தெரிவித்துக் கொண்டார் பல்லடத்தார்.
இரு குடும்பத்துக் குழந்தைகளும் கூடி விளையாடினர். பல்லடத்தாரின் மூத்த மகள் அவனது குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்தாள். பெண்கள் இருவரும் வாய் நிறையப் பேசிக் கொண்டனர். பல்லடத்தார் அவனிடம் பழமைகள் பல பேசினார். அங்கிருந்த பரப்புக்காலியில் ஒரு குழுவாய் அமர்ந்து உண்டி புசித்தனர். வெகு நேரம் அளவளாவினர்.
சிறிது சிறிதாக அவனுள் இருந்த இறுக்கம் தளர்ந்து கொண்டிருந்தது. முழுதும் தளர்ந்து அகலும் முன்னமே, விடை பெறும் தருணம் வந்து நின்றது. அவனுக்கு ’அப்பாட’ என்றிருந்தது.
அவனது குழந்தையை அவனிடமே திரும்ப ஒப்படைக்கும் பாங்கில், குழந்தையை வாரி அணைத்து முத்தமிட்டுக் கொண்டபடியே த்ன் தோளால் அவனது தோளை இடித்துச் சொன்னது குரல், “சாரிடா சுந்தர். It's been ages due, I apologize...". கண்கள் சிமிட்டிச் சென்றன.
உமையாள் குரல் மட்டுமன்று, வையகத்து இளவேனிற் காற்றும் அவனைத் தழுவிச் சென்றது. “விடுதலை, விடுதலை”, மனம் ஆனந்தப் பள்ளு பாடியது!
10/02/2011
சிலந்தி வலை
வேம்பின் நிழலும், மேற்குப் புறமாக இருக்கும் பேரூர் வாளையார் பக்கத்தில் இருந்து மெலிதாய்த் தவழ்ந்து வரும் நீலமலைக் காற்றும், கயிற்றுக் கட்டிலில் படுத்திருக்கும் அங்கண கவுண்டரை ஆற்றுப்படுத்திக் கொண்டிருந்தது. வாஞ்சையுடன் மேல் நோக்கிப் பார்த்தார். வேம்பு நகைத்ததில் பழுத்த பழமொன்று வாயில் விழுந்தது. சுவைத்துக் கொட்டையைத் துப்புவதற்கு இடப்புறமாய்த் தலையைச் சாய்த்தார்.
வெண்சாம்பல் நிறத்தில் இருப்பவள். வாழ்க்கைப்பட்டவள் சின்னியம் பாளையத்து விபத்தில் சிக்குண்டு மாண்டு போன இந்த ஆறு ஆண்டுகளாக, மனைவியின் வெற்றிடத்தை நிரப்பி வருபவளும் இவளே. பெயர் பொன்னி. கட்டிலுக்கு இடப்புறமாகத் தரையில் ஆழ்ந்த நித்திரையில் இருந்தாளவள். துப்பவிருந்த கொட்டையை துப்பாமற்க் கையில் வைத்துக் கொண்டு, பொன்னி தூங்கும் அழகை இரசிக்கத் துவங்கினார் அங்கண கவுண்டர்.
அங்கண கவுண்டருக்கு இன்றைக்கெலாம் ஒரு அறுபது வயதிருக்கலாம். தான் நட்டு, வளர்ந்து, இன்று தனக்கே நிழல் கொடுத்துத் தன்னுள் ஒருவனாக இந்த வேம்பு மரம் ஆகிப் போனது பற்றி உற்றார் உறவினரிடம் உவகையுடன் சொல்லி இன்புறுவார் கவுண்டர். தன்னருகே படுத்துறங்கும் பொன்னியின் அழகில் சொக்குண்டு போனவர், அதிலிருந்து விடுபட்டுப் பேசலானார்.
“சின்னம்மணீ... இந்தா, இந்த பொட்டைப் பொன்னிக்குச் சித்த எதனாப் போடு பாக்குலாம். செனையா இருக்குற நாய்க்குச் சோறு போடாத பொல்லாப்பு நமக்கெதுக்கு?”
“இதென்னங்ப்பா... இதாப் போடுறனுங்.....”, தேன்குழைத்த தேனமுதாய்ப் பதிலளித்தாள் அவள். சின்னம்மணி என அக்கம்பக்கம், உற்றார், உறவினர் என எல்லோராலும் அழைக்கப்படும் பரிமளம்.
பரிமளம், இருபத்து நான்கு வயதாகிறது. அம்மா போன பிறகு, அப்பாவைத் தானே கவனித்துக் கொள்கிறாள். அப்பாவையும் கவனித்துக் கொண்டு, பீளமேட்டில் இருக்கும் ஒரு கல்லூரியில் முதுகலைப் பட்டம் படித்து முடிக்கப் போகிறாள்.
அங்கண கவுண்டருக்கு ஒரே ஒரு கவலைதான். நல்ல இடமாகப் பார்த்து, சின்னம்மணிக்கும் வருகிற வைகாசியில் திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்கிறதுதான். மூத்தவள் சகுந்தலா, சர்க்கார் சாமக்குளத்திற்கு கட்டிக் கொடுத்து, இப்போது சிங்கப்பூரில் மாப்பிள்ளையுடன் வசித்து வருகிறாள். அவளிடமும், நல்ல மாப்பிள்ளை இருந்தால் சொல்லச் சொல்லி இருக்கிறார் அங்கண கவுண்டர்.
காலையில் செய்து, அவர்களிருவரும் உண்டது போக மிஞ்சிப்போன இரவைக் கிளறலைத் தட்டில் போட்டுக் கூவினாள், “ஏ பொன்னீ... வந்து, இந்த இரவையத் தின்னு போட்டுப் போய்ப் படு, வா”
“என்னம்மணீ... நல்லா, சோத்தை அந்த மோர்ல கரைச்சி ஊத்து அம்மணீ”, அங்கண கவுணடர் இரங்கிச் சொன்னார்.
“ஊத்துறனுங்ப்பா...”, சொல்லி முடிக்கவும் மதிர்ச்சுவர் தாண்டி குப்பைகள் விழவும் சரியாக இருந்தது. படுத்துக் கொண்டிருந்த அங்கண கவுண்டரும் அதை ஏறெடுத்துப் பார்க்கலானார்.
“ஏனுங்ப்பா... இவுனுக அலும்பு நாளுக்கு நாள் எச்சாப் போய்ட்டு இருக்குதுங்ப்பா.. நீலம்பூர் மாமங்கிட்டயாவது சொல்லிக் கேக்கச் சொல்லுங்ப்பா”
கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பெல்லாம் ஊரில் நிலபுலன்களை வாங்குவாரே கிடையாது. இன்றைக்கோ நிலைமை தலைகீழ். ஒரு அடி நிலம் உபரியாகக் கிடந்தாலும் கூட, அதன் மேல் ஆயிரமாயிரம் கண்கள். கோயமுத்தூர் ஏரோப்ளேன் காட்டுக்குக் கிழபுறம் எல்லாமே வானம் பார்த்த பூமி. நிலங்களுக்கு அவ்வளவாக விலை இராது. ஆயிரத்து தொளாயிரத்து எழுபதுகளில் சின்னச்சின்னதாக விசைத்தறிகள் ஊருக்குள் வந்தன. பிறகு ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பதுகளில் இலட்சுமி மில்க்காரர்களின் தொழிற்சாலைகள் அரசூருக்கும் கணியூருக்கும் வரலாயின.
அன்றிலிருந்து துவங்கிய நிலங்களின் விலையேற்றம், என்றுமில்லாதபடிக்கு விண்ணை முட்டிக் கொண்டு இருக்கிறது இன்று. விற்பனைக்கான நிலங்களோ அல்லது வீட்டு மனைகளோ சந்தையில் இல்லவே இல்லை எனும் நிலைதான் எங்கும்.
அருகம்பாளையத்துத் தலைவாசலில் முப்பது சென்ட்டு நிலத்துடன் கூடிய பதினாறு அங்கணத்து வீடு, அங்கண கவுண்டருடையது. கிழக்குப்பார்த்த வீடு. ஓட்டு வீடென்றாலும் பார்ப்பதற்கு மிக வடிவாய் அமையப் பெற்றிருக்கும். முப்பது சென்ட் நிலப்பரப்பில், இடது புறமாக வீடு. வீட்டைச் சுற்றியும் ஐந்தரை அடி உயர மதில்ச்சுவர். பின்புறம் மதில்ச்சுவருக்கும் வீட்டிற்கும் இடையே பிறவடையும் உண்டு. முன்புறம் விசாலமான இடத்தில் வேம்பு மரம், பந்தலில் அவரைக் கொடி, முன்புற வாயிலை ஒட்டியே அத்திக்கடவுக் குடிநீர்த் திட்டக் குழாய். அங்கண கவுண்டரின் பராமரிப்பில் அம்சமாய்க் காட்சியளிக்கும் வீடு அது.
வீட்டிற்கு வலதுபுறத்து வீடு, அங்கண கவுண்டரின் கூட்டமான காடன் கூட்டத்தைச் சார்ந்தவ்ரும், ஒன்றுவிட்ட பங்காளியுமான சண்முகவேலுவின் வீடு. அங்கண கவுண்டரும், சண்முகவேல்க் கவுண்டரும் இராணிலட்சுமி நூற்பாலையில்தான் ஒன்றாக வேலை பார்த்து வந்தார்கள். தங்களுக்கான வேலை இல்லை என்றான பிறகு, அங்கண கவுண்டர் விசைத்தறி வேலை பார்த்து வந்தார். சண்முகவேலு சுகவாசியாக இருக்கத் துவங்கினார். விளைவு, தன் மூதாதையர் விட்டுச் சென்ற வீட்டை விற்கத் துணிந்தார்.
அருகம்பாளையத்தில் காகிதப் பொருட்கள் உற்பத்தி செய்யும் ஆலையைத் துவங்கிய சுந்தரப்பாண்டியனுக்கு அவ்வீடு விற்கப்பட்டது. அவ்வீட்டை அடிமாட்டு விலைக்கு விற்றுவிட்டார் சண்முகவேலு என ஊரே பேசியது. என்றாலும் அங்கண கவுணடர் அதைக் கண்டு கொள்ளவில்லை. சண்முகவேலு, வீட்டை விற்றுவிட்டு கருமத்தம்பட்டியில் வாழ்ந்து வருகிறார். நாளடைவில் ஊரும் அவரை மறந்து விட்டது.
“யாரது? முருகேசனா??”, கதவைத் திறந்து உள்ளே வரும் உள்ளூர்ப் பிரமுகர் முருகேசனைப் பார்த்து வரவேற்றார் அங்கண கவுண்டர்.
“ஆமாங் மாமா. ஊட்ல நீங்க மட்டுந்தானா?? சின்னம்மணி மேக்க போயிட்டுதுங்ளாக்கூ?”
“ஆமா, முருகேசா. அஞ்சு மணித் தங்கத்துக்கு வந்துருவா.”
”இவன் எதற்கு சின்னம்மணியைக் கேட்கிறான். திருமணத்திற்கேற்ற இடம் ஏதாவது கொண்டு வந்திருப்பானோ?”, யோசனையில் ஆழ்ந்தார் அங்கணக் கவுண்டர்.
“இல்லீங்க மாமா. பக்கத்துல பேப்பர்க் கம்பெனி சுந்தரப்பாண்டி அண்ணன் வந்திருந்திச்சி. நீங்களும் சின்னம்மணி கண்ணாலத்துக்கோசரம் ஊடுகீடு வித்துக் காசு தேத்துவீங்களோன்னு கேட்ட்டு வரச்சொல்லுச்சு. அதான் வந்தேன். சொல்லுங்க, நல்ல வெலையாப் பார்த்து முடிச்சிறலாம்”.
முருகேசன் சொல்லியது கேட்டுச் சிறிது அதிர்ந்தாலும், சமாளித்துக் கொண்டார் அங்கண கவுண்டர்.
“அப்படி எல்லாம் ஒரு நெனப்பும் இல்ல முருகேசா. அப்படியே கொஞ்சநஞ்சம் பத்துலைன்னாலும், பெரியம்மணியுமு மருமகப் பிள்ளையுமு சிங்கப்பூருல இருக்குறது சகாயமாப் போச்சு பாரு”
“செரீங் மாமா. நீங்க சொல்றதுமு வாசுதவந்தானுங். இருந்தாலும் பக்கத்து ஊட்டுக்காரன் எசைஞ்சி வரும் போது வெலை பண்றது சுலுவு பாருங்”, முருகேசன் இலாகவமாகக் கொக்கியைப் போட்டான்.
“செரிதான் முருகேசா. அப்படி எதனா இருந்தா, தேவைப்பட்டாச் சொல்லி அனுப்புறன் முருகேசா!”, இயல்பாகவே பேசி வழியனுப்பி வைத்தார் அங்கண கவுண்டர்.
முருகேசன் வந்து சென்ற இரு வாரங்களுக்குப் பின் துவங்கியது கொசுக்கடி. பக்கத்துப் பிறவடையில் இருக்கும் சுந்தரப்பாண்டியனின் காகிதக்கிடங்கில் வேலை செய்யும் ஆட்கள், கிடங்குக் கழிவுகளை அங்கண கவுணடரின் இடத்தில் அவ்வப்போது கொட்டத் துவங்கினார்கள். அங்கணக் கவுணடரும் நேரில் சென்று அவருடைய இடத்தில் போட வேண்டாமென்று கேட்டுக் கொண்டார். முருகேசனிடமும் சொல்லிப் பார்த்தார். அத்துமீறல் இன்னும் நின்றபாடில்லை. கிட்டத்தட்ட இப்படியாகவே ஆறு மாதங்கள் கழிந்தன.
திடீரென ஒரு நாள், பொறுமை இழந்தவராய், ”செரிம்மா, நான் நீலம்பூர் மாமங்கிட்டவே சொல்லிப் பார்க்குறேன்”.
“ஆமாங்பா. மாமன் வந்து ஒருக்கா இவிங்களுக்கு வேட்டு வெச்சாத்தான் செரி வரும்!”.
தன் மனைவி இறந்து போனாலுங்கூட, தன் மைத்துனன் இராசகோபாலுடன் நல்ல நட்புப் பேணி வருபவர் அங்கண கவுண்டர். இராசகோபால் சிறிது முன்கோபி. எதற்கும், “அடிடா, புடிடா, வெட்டுடா” எனக் குதியாட்டம் போடுபவர். அவனிடம் சொல்லி, வம்பை விதைக்க வேண்டாமே எனக் காத்திருந்தவர்தாம் அங்கண கவுண்டர்.
“சின்னம்மணீ... அந்த போனைக் கொண்டாம்மா தங்கம்!”
“இந்தாங்பா!”
அலைபேசியை முடுக்கலானார் அங்கணக் கவுண்டர்.
“ஆரூ, இராசா?”
“மச்சே சொல்லுங் மச்சே!”
“தென்றா. இந்த பக்கத்து ஊட்டுக்காரங்கோட ஒரே ஓரியாட்டமா இருக்கு. செத்தைகளை நம்மூட்டுப் பக்கமாவே போட்டுக் கொடைச்சல் தாறாங்க இராசு!”
“கேள்விப்பட்டுனுங் மச்சே. நேத்து சின்னம்மணி சொன்னதா அவளோட அத்தை சொன்னா. நானுமு வெசாரிச்சுப் பார்த்தனுங். அவன், இந்த மந்திரி திங்களூர் திருமலைசாமிக்கு வேண்டியவனுங்ளாமுங் மச்சே!”
“ஓகோ. என்னதாஞ் செய்யுறது இதுக்கு? சூலூர்ப் போலிசுடேசன்ல பிராது கீதூ?”
“அப்பிடிக்கிப்பிடி செஞ்சு போடாதீங்? நம்முளே, நம்முளுக்கு செய்வெனை செஞ்ச மாதர ஆயிரும். கொஞ்ச நாளைக்கு பொறுத்திருங் மச்சே!”
நாட்களும் கடந்தது. எதற்கும் விபரத்தைச் சம்மந்தி வீட்டாரிடம் சொல்லி வைப்போம் என்று சர்க்கார் சாமக்குளம் சென்றார் அங்கண கவுண்டர். ”விபரத்தைச் சொல்லியது போலவும் ஆகும், சின்னம்மணிக்கு ஏற்ற வரன் இருந்தால் தேடிப்பார்க்கச் சொல்லவும் ஒரு வாய்ப்பாக அமையும்” என்ற எண்ணத்தில் சென்றார் அங்கண கவுண்டர்.
“வாங் சம்மந்தி வாங்”
“வாறனுங். சிங்கப்பூர்ல இருக்குற பேரங்கூட தின்மொருவாட்டிப் பேசாட்டி எனக்குத் தூக்கமே வராதுங்”
“இங்கியுமு அப்படித்தானுங்”
“சின்னம்மணி படிப்பு முடிஞ்சிதீமு, கண்ணாலத்தை இந்த வைகாசிலயே செய்யுலாமுன்னு பார்த்தனுங். ஒன்னும் தோதா எசைஞ்சி வர்லீங். இந்தப்பக்கம் எதனா இருந்தாப் பார்த்துச் சொன்னீங்கன்னா....”
“அதுக்கென்னங்... நேத்துகூட அன்னூர்ல நம்ம பங்காளிகிட்டச் சொல்லிப் போட்டுத்தான் வந்தமுங்”
“அப்பொறம் உன்னொரு தாக்கலுங்... பக்கத்து ஊட்டுக்காரன் கொடைச்சல் குடுத்துட்டே இருக்குறானுங்..:
“ஆமாங்... சின்னம்மணி சொல்லுச்சுன்னு எங்கூட்டு மருமக சொன்னா. நானுமு யோசனை செஞ்சி பார்த்தனுங்க. உங்களுக்கு அமைஞ்சதோ ரெண்டு பொட்டைப் புள்ளைக. பேசாம வெலைபேசிக் காசைப் பாத்து, அதை ஆளுக்குப் பாதின்னு குடுத்துட்டு சிவனேன்னு குக்கீட்டுச் சோறு உங்லாம் பாருங்”
அங்கண கவுண்டருக்கு குலை நடுங்கிக் கண்கள் சொருகியது போல இருந்தது. “அண்ணா, அவரு சொல்றாருன்னு நீங்க ரோசனை பண்ணாதீங்”, சொம்புத் தண்ணியுடன் கைநீட்டினார் சம்பந்தியம்மா தெய்வாத்தாள்.
மிகுந்த கவலை கொண்டார் அங்கணக் கவுண்டர். காலை பதினொரு மணிக்குச் சென்றவர், மதிய உணவெதுவும் சம்பந்தி வீட்டில் உண்ணாமலேயே கிளம்பினார். எங்கும் செல்லப் பிடிக்கவில்லை அவருக்கு.
காந்திபுரம் வந்தவர், வீட்டில் சின்னம்மணி என்ன செய்து கொண்டிருக்கிறாளோ என் எண்ணியவர், அலைபேசியில் அழைத்தார்.
“அப்பா, அவிங்க ஊட்டுக்கு வந்த லாரி நம்ம மதில்ச்சுவத்தைப் பூரா இடிச்சித் தள்ளீர்ச்சுப்பா!”, கேவிக் கேவி அழுதாள் சின்னம்மணி.
“அழாதம்மணி. இதா நான் இப்ப காந்தீவரத்துல்தான் இருக்கேன். நேரா ஊட்டுக்குதான் வாறேன்”
மூதாதையர் வாழ்ந்த வீடு. இரு பெண்களையும் நல்லபடியாகத் திருமணம் செய்து கொடுத்துவிட்டு, அம்மண்ணிலேயே வாழ்ந்து சாக வேண்டும் என நினைப்பது என் தவறா? அங்கண கவுண்டரின் மனத்தைச் செல்லரித்துக் கொண்டிருந்தது.
ஆட்சிதான் மாறி விட்டதே. இம்முறை மைத்துனன் இராசுவை அழைத்துக் கொண்டு, காவல் நிலையத்தை நாடிச் சென்று முறையிடுவதைத் தவிர வேறு வழியில்லை என நினைத்தவர், பாதியிலேயே சூலூரில் இறங்கி விட்டார்.
பேருந்து நிலையத்தில் காத்திருந்த மைத்துனன் இராசுவுடன் நேராக ஆளுங்கட்சித் தலைவர் வீராசாமி அலுவலகத்திற்குச் சென்றார் அங்கணன்.
“இராசு, நீங்க சொல்றது நல்லாப் புரியுது. அவிங்க வேணுமின்னே இடிச்சித் தள்ளி இருப்பாங்கன்னு நாங்க நினைக்கல. அப்படியே இருந்தாலும், அந்த டைவரைப் புடிச்சி உள்ள வெச்சிதுல உங்க பிரச்சினை தீந்திருமா??”
“அண்ணே, அப்ப நீங்களே ஒரு வழி சொல்லுங்க இதுக்கு?!”
“நான் நம்ம ஆட்கள்ல யாராவது ஒருத்தரை அனுப்பி வைக்குறேன். நல்ல வெலையா நம்ம ஆளுககிட்டத் தள்ளி உட்றுங்க. அவனை நாங்க பாத்துகுறோம்!”
இது கேட்ட மைத்துனன் இராசுவுக்கு மகிழ்ச்சி. அங்கண கவுண்டருக்கு, இருளோ என்று கண் கலங்கிச் சித்தமும் கலங்கியது.
“வண்டிய ஊருக்கே உடுறா!”, மைத்துனன் இராசுவும், மாமா அங்கண கவுண்டரும் அருகம் பாளையத்துக்கு நேராக வந்தனர்.
வாசலில் வந்திறங்கிய மாமாவைப் பார்த்ததும், சின்னம்மணி ’ஓ’வென்று ஓலமிட்டாள்.
”மாமா, எங்கம்மா என்னைய எப்பிடியெல்லாம் வெச்சி சீராட்டித் தாலாட்டி அழகு பார்த்தா? எங்கம்மா இருந்திருந்தா இந்த நெலமை எனக்கு வந்திருக்குமா?” தலையில் அடித்துக் கொண்டு அலறினாள்.
“அழாதறா செல்லம். மாமன் வந்துட்டன் அல்ல? உனியெல்லாம் நாம் பாத்துகுறேன். அழுகாதறா!”
“எங்கப்பன், டீக் கடைக்காரம்பொண்டாட்டி கூட சாகுவாசமுங்றாங் மாமா. செவுத்த இடிச்சிவங்ககோட நாயம் பேசுனப்ப முருகேசண்ணன் சொல்லித் திட்டுனாருங் மாமா. நேத்து கூட, அவ கூட இவரு இருந்தாருமுங்...”
இராசுவுக்குச் சுர்ரென்று சினம் தலைக்கேறிக் கொலை வெறியோடு மாமனைப் பார்த்தார். “யோவ், சின்னம்மணி சொல்றது உம்மையா? நேத்து அவளோட இருந்தியா?”, சொற்கள் தடித்தன.
நெஞ்சு கலங்கிய கவுண்டர், “டே இராசூ... நான் தெனமும் அவ கடைக்குப் பேப்பர்....”
“நிறுத்துயா... பேப்பர் படிக்கப் போனா பேப்பர் மட்டும் பட்ச்சிட்டு வர வேண்டியதுதான? மணிக்கணக்கா அவகூட என்னய்யா பேச்சு ஒனக்கு?”
அவசர கதியில் கிளம்ப்பிப் போனார் அங்கண கவுண்டர். இங்கே வாசலில் பெருங்கூட்டம் கூடி இருந்தது. வீட்டிற்குள் சின்னம்மணியைச் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தனர் உறவினர்கள். இராசுவோ, டீக்கடையைச் சூறையாடுவதற்கு தன் படை பலத்தைக் கூட்டுவதில் முனைப்பாய் இருந்தான். சுந்தரப் பாண்டியனின் காகிதக் கிடங்கில் பணிகள் மும்முரமாய் நடந்து கொண்டிருந்தன.
திடீரென ஒரு கும்பல் வீட்டை நோக்கி முன்னேறி வந்தது.
”ஏ, என்னப்பா மசமசன்னு நின்னுட்டு இருக்கீங்க? இடிசல்ல சிக்கி இருக்குற அந்த நாயைத் தூக்கி தூரத்துல போட்ட்டு வாங்கப்பா!”. விசைத்தறியில் நூலெடுக்கும் சிறுவர்களில் இருவர், செத்துப் போன பொன்னியைத் தூக்கிச் சென்றனர்.
”அடுத்து, அந்த வேப்ப மரத்துக்குக் கீழ இருக்குற கவுத்துக்கட்டல் அப்படியே இருக்கட்டும். அதுலே படுக்க வெச்சி, அப்படியே எடுத்துட்டுப் போய் எரிச்சிறலாம்!”
வீட்டின் முன் கூட்டம் பெருகிக் கொண்டே இருந்தது. உரையாடல்கள் காற்றில் கரைந்தன. கரையும் ஒலிகளுள் ஒரு ஒலியானது விகாரமாய் ஒலித்துக் கரைந்தது.
“பேசாம சுந்தரப்பாண்டியனுக்கு வித்திருந்தாக் கூட, நில அபகரிப்புல உள்ள போட்டுக் காசு கொஞ்சம் எச்சா வாங்கி இருக்குலாம். எங்க பெரியப்பன் எதையுஞ் செய்யாம இப்பிடி இரயில்ல உழுந்து வீணாப் போயிருக்க வேண்டாம்! தூத்தேறி!!”
மற்றொரு குரல், “ஏ, பால் ஊத்திப் பதினாறு செய்யுற வரைக்குமு வந்த சனம் இருக்குறதுக்கு எடங்காணாது. அந்த வேப்ப மரத்தை வெட்டிப் போட்டு, பந்தலை ஏகத்துக்கும் போட்டுடோணும்”
பொன்னி எறியப்பட்டு விட்டது. இதோ வேம்பும் சாய்கிறது. மற்றுமொரு ஒரு சிலந்தி வலை எங்கோ ஒரு இடத்தில், வெகு நேர்த்தியாய் பின்னப்பட்டுக் கொண்டே இருக்கிறது!
வெண்சாம்பல் நிறத்தில் இருப்பவள். வாழ்க்கைப்பட்டவள் சின்னியம் பாளையத்து விபத்தில் சிக்குண்டு மாண்டு போன இந்த ஆறு ஆண்டுகளாக, மனைவியின் வெற்றிடத்தை நிரப்பி வருபவளும் இவளே. பெயர் பொன்னி. கட்டிலுக்கு இடப்புறமாகத் தரையில் ஆழ்ந்த நித்திரையில் இருந்தாளவள். துப்பவிருந்த கொட்டையை துப்பாமற்க் கையில் வைத்துக் கொண்டு, பொன்னி தூங்கும் அழகை இரசிக்கத் துவங்கினார் அங்கண கவுண்டர்.
அங்கண கவுண்டருக்கு இன்றைக்கெலாம் ஒரு அறுபது வயதிருக்கலாம். தான் நட்டு, வளர்ந்து, இன்று தனக்கே நிழல் கொடுத்துத் தன்னுள் ஒருவனாக இந்த வேம்பு மரம் ஆகிப் போனது பற்றி உற்றார் உறவினரிடம் உவகையுடன் சொல்லி இன்புறுவார் கவுண்டர். தன்னருகே படுத்துறங்கும் பொன்னியின் அழகில் சொக்குண்டு போனவர், அதிலிருந்து விடுபட்டுப் பேசலானார்.
“சின்னம்மணீ... இந்தா, இந்த பொட்டைப் பொன்னிக்குச் சித்த எதனாப் போடு பாக்குலாம். செனையா இருக்குற நாய்க்குச் சோறு போடாத பொல்லாப்பு நமக்கெதுக்கு?”
“இதென்னங்ப்பா... இதாப் போடுறனுங்.....”, தேன்குழைத்த தேனமுதாய்ப் பதிலளித்தாள் அவள். சின்னம்மணி என அக்கம்பக்கம், உற்றார், உறவினர் என எல்லோராலும் அழைக்கப்படும் பரிமளம்.
பரிமளம், இருபத்து நான்கு வயதாகிறது. அம்மா போன பிறகு, அப்பாவைத் தானே கவனித்துக் கொள்கிறாள். அப்பாவையும் கவனித்துக் கொண்டு, பீளமேட்டில் இருக்கும் ஒரு கல்லூரியில் முதுகலைப் பட்டம் படித்து முடிக்கப் போகிறாள்.
அங்கண கவுண்டருக்கு ஒரே ஒரு கவலைதான். நல்ல இடமாகப் பார்த்து, சின்னம்மணிக்கும் வருகிற வைகாசியில் திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்கிறதுதான். மூத்தவள் சகுந்தலா, சர்க்கார் சாமக்குளத்திற்கு கட்டிக் கொடுத்து, இப்போது சிங்கப்பூரில் மாப்பிள்ளையுடன் வசித்து வருகிறாள். அவளிடமும், நல்ல மாப்பிள்ளை இருந்தால் சொல்லச் சொல்லி இருக்கிறார் அங்கண கவுண்டர்.
காலையில் செய்து, அவர்களிருவரும் உண்டது போக மிஞ்சிப்போன இரவைக் கிளறலைத் தட்டில் போட்டுக் கூவினாள், “ஏ பொன்னீ... வந்து, இந்த இரவையத் தின்னு போட்டுப் போய்ப் படு, வா”
“என்னம்மணீ... நல்லா, சோத்தை அந்த மோர்ல கரைச்சி ஊத்து அம்மணீ”, அங்கண கவுணடர் இரங்கிச் சொன்னார்.
“ஊத்துறனுங்ப்பா...”, சொல்லி முடிக்கவும் மதிர்ச்சுவர் தாண்டி குப்பைகள் விழவும் சரியாக இருந்தது. படுத்துக் கொண்டிருந்த அங்கண கவுண்டரும் அதை ஏறெடுத்துப் பார்க்கலானார்.
“ஏனுங்ப்பா... இவுனுக அலும்பு நாளுக்கு நாள் எச்சாப் போய்ட்டு இருக்குதுங்ப்பா.. நீலம்பூர் மாமங்கிட்டயாவது சொல்லிக் கேக்கச் சொல்லுங்ப்பா”
கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பெல்லாம் ஊரில் நிலபுலன்களை வாங்குவாரே கிடையாது. இன்றைக்கோ நிலைமை தலைகீழ். ஒரு அடி நிலம் உபரியாகக் கிடந்தாலும் கூட, அதன் மேல் ஆயிரமாயிரம் கண்கள். கோயமுத்தூர் ஏரோப்ளேன் காட்டுக்குக் கிழபுறம் எல்லாமே வானம் பார்த்த பூமி. நிலங்களுக்கு அவ்வளவாக விலை இராது. ஆயிரத்து தொளாயிரத்து எழுபதுகளில் சின்னச்சின்னதாக விசைத்தறிகள் ஊருக்குள் வந்தன. பிறகு ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பதுகளில் இலட்சுமி மில்க்காரர்களின் தொழிற்சாலைகள் அரசூருக்கும் கணியூருக்கும் வரலாயின.
அன்றிலிருந்து துவங்கிய நிலங்களின் விலையேற்றம், என்றுமில்லாதபடிக்கு விண்ணை முட்டிக் கொண்டு இருக்கிறது இன்று. விற்பனைக்கான நிலங்களோ அல்லது வீட்டு மனைகளோ சந்தையில் இல்லவே இல்லை எனும் நிலைதான் எங்கும்.
அருகம்பாளையத்துத் தலைவாசலில் முப்பது சென்ட்டு நிலத்துடன் கூடிய பதினாறு அங்கணத்து வீடு, அங்கண கவுண்டருடையது. கிழக்குப்பார்த்த வீடு. ஓட்டு வீடென்றாலும் பார்ப்பதற்கு மிக வடிவாய் அமையப் பெற்றிருக்கும். முப்பது சென்ட் நிலப்பரப்பில், இடது புறமாக வீடு. வீட்டைச் சுற்றியும் ஐந்தரை அடி உயர மதில்ச்சுவர். பின்புறம் மதில்ச்சுவருக்கும் வீட்டிற்கும் இடையே பிறவடையும் உண்டு. முன்புறம் விசாலமான இடத்தில் வேம்பு மரம், பந்தலில் அவரைக் கொடி, முன்புற வாயிலை ஒட்டியே அத்திக்கடவுக் குடிநீர்த் திட்டக் குழாய். அங்கண கவுண்டரின் பராமரிப்பில் அம்சமாய்க் காட்சியளிக்கும் வீடு அது.
வீட்டிற்கு வலதுபுறத்து வீடு, அங்கண கவுண்டரின் கூட்டமான காடன் கூட்டத்தைச் சார்ந்தவ்ரும், ஒன்றுவிட்ட பங்காளியுமான சண்முகவேலுவின் வீடு. அங்கண கவுண்டரும், சண்முகவேல்க் கவுண்டரும் இராணிலட்சுமி நூற்பாலையில்தான் ஒன்றாக வேலை பார்த்து வந்தார்கள். தங்களுக்கான வேலை இல்லை என்றான பிறகு, அங்கண கவுண்டர் விசைத்தறி வேலை பார்த்து வந்தார். சண்முகவேலு சுகவாசியாக இருக்கத் துவங்கினார். விளைவு, தன் மூதாதையர் விட்டுச் சென்ற வீட்டை விற்கத் துணிந்தார்.
அருகம்பாளையத்தில் காகிதப் பொருட்கள் உற்பத்தி செய்யும் ஆலையைத் துவங்கிய சுந்தரப்பாண்டியனுக்கு அவ்வீடு விற்கப்பட்டது. அவ்வீட்டை அடிமாட்டு விலைக்கு விற்றுவிட்டார் சண்முகவேலு என ஊரே பேசியது. என்றாலும் அங்கண கவுணடர் அதைக் கண்டு கொள்ளவில்லை. சண்முகவேலு, வீட்டை விற்றுவிட்டு கருமத்தம்பட்டியில் வாழ்ந்து வருகிறார். நாளடைவில் ஊரும் அவரை மறந்து விட்டது.
“யாரது? முருகேசனா??”, கதவைத் திறந்து உள்ளே வரும் உள்ளூர்ப் பிரமுகர் முருகேசனைப் பார்த்து வரவேற்றார் அங்கண கவுண்டர்.
“ஆமாங் மாமா. ஊட்ல நீங்க மட்டுந்தானா?? சின்னம்மணி மேக்க போயிட்டுதுங்ளாக்கூ?”
“ஆமா, முருகேசா. அஞ்சு மணித் தங்கத்துக்கு வந்துருவா.”
”இவன் எதற்கு சின்னம்மணியைக் கேட்கிறான். திருமணத்திற்கேற்ற இடம் ஏதாவது கொண்டு வந்திருப்பானோ?”, யோசனையில் ஆழ்ந்தார் அங்கணக் கவுண்டர்.
“இல்லீங்க மாமா. பக்கத்துல பேப்பர்க் கம்பெனி சுந்தரப்பாண்டி அண்ணன் வந்திருந்திச்சி. நீங்களும் சின்னம்மணி கண்ணாலத்துக்கோசரம் ஊடுகீடு வித்துக் காசு தேத்துவீங்களோன்னு கேட்ட்டு வரச்சொல்லுச்சு. அதான் வந்தேன். சொல்லுங்க, நல்ல வெலையாப் பார்த்து முடிச்சிறலாம்”.
முருகேசன் சொல்லியது கேட்டுச் சிறிது அதிர்ந்தாலும், சமாளித்துக் கொண்டார் அங்கண கவுண்டர்.
“அப்படி எல்லாம் ஒரு நெனப்பும் இல்ல முருகேசா. அப்படியே கொஞ்சநஞ்சம் பத்துலைன்னாலும், பெரியம்மணியுமு மருமகப் பிள்ளையுமு சிங்கப்பூருல இருக்குறது சகாயமாப் போச்சு பாரு”
“செரீங் மாமா. நீங்க சொல்றதுமு வாசுதவந்தானுங். இருந்தாலும் பக்கத்து ஊட்டுக்காரன் எசைஞ்சி வரும் போது வெலை பண்றது சுலுவு பாருங்”, முருகேசன் இலாகவமாகக் கொக்கியைப் போட்டான்.
“செரிதான் முருகேசா. அப்படி எதனா இருந்தா, தேவைப்பட்டாச் சொல்லி அனுப்புறன் முருகேசா!”, இயல்பாகவே பேசி வழியனுப்பி வைத்தார் அங்கண கவுண்டர்.
முருகேசன் வந்து சென்ற இரு வாரங்களுக்குப் பின் துவங்கியது கொசுக்கடி. பக்கத்துப் பிறவடையில் இருக்கும் சுந்தரப்பாண்டியனின் காகிதக்கிடங்கில் வேலை செய்யும் ஆட்கள், கிடங்குக் கழிவுகளை அங்கண கவுணடரின் இடத்தில் அவ்வப்போது கொட்டத் துவங்கினார்கள். அங்கணக் கவுணடரும் நேரில் சென்று அவருடைய இடத்தில் போட வேண்டாமென்று கேட்டுக் கொண்டார். முருகேசனிடமும் சொல்லிப் பார்த்தார். அத்துமீறல் இன்னும் நின்றபாடில்லை. கிட்டத்தட்ட இப்படியாகவே ஆறு மாதங்கள் கழிந்தன.
திடீரென ஒரு நாள், பொறுமை இழந்தவராய், ”செரிம்மா, நான் நீலம்பூர் மாமங்கிட்டவே சொல்லிப் பார்க்குறேன்”.
“ஆமாங்பா. மாமன் வந்து ஒருக்கா இவிங்களுக்கு வேட்டு வெச்சாத்தான் செரி வரும்!”.
தன் மனைவி இறந்து போனாலுங்கூட, தன் மைத்துனன் இராசகோபாலுடன் நல்ல நட்புப் பேணி வருபவர் அங்கண கவுண்டர். இராசகோபால் சிறிது முன்கோபி. எதற்கும், “அடிடா, புடிடா, வெட்டுடா” எனக் குதியாட்டம் போடுபவர். அவனிடம் சொல்லி, வம்பை விதைக்க வேண்டாமே எனக் காத்திருந்தவர்தாம் அங்கண கவுண்டர்.
“சின்னம்மணீ... அந்த போனைக் கொண்டாம்மா தங்கம்!”
“இந்தாங்பா!”
அலைபேசியை முடுக்கலானார் அங்கணக் கவுண்டர்.
“ஆரூ, இராசா?”
“மச்சே சொல்லுங் மச்சே!”
“தென்றா. இந்த பக்கத்து ஊட்டுக்காரங்கோட ஒரே ஓரியாட்டமா இருக்கு. செத்தைகளை நம்மூட்டுப் பக்கமாவே போட்டுக் கொடைச்சல் தாறாங்க இராசு!”
“கேள்விப்பட்டுனுங் மச்சே. நேத்து சின்னம்மணி சொன்னதா அவளோட அத்தை சொன்னா. நானுமு வெசாரிச்சுப் பார்த்தனுங். அவன், இந்த மந்திரி திங்களூர் திருமலைசாமிக்கு வேண்டியவனுங்ளாமுங் மச்சே!”
“ஓகோ. என்னதாஞ் செய்யுறது இதுக்கு? சூலூர்ப் போலிசுடேசன்ல பிராது கீதூ?”
“அப்பிடிக்கிப்பிடி செஞ்சு போடாதீங்? நம்முளே, நம்முளுக்கு செய்வெனை செஞ்ச மாதர ஆயிரும். கொஞ்ச நாளைக்கு பொறுத்திருங் மச்சே!”
நாட்களும் கடந்தது. எதற்கும் விபரத்தைச் சம்மந்தி வீட்டாரிடம் சொல்லி வைப்போம் என்று சர்க்கார் சாமக்குளம் சென்றார் அங்கண கவுண்டர். ”விபரத்தைச் சொல்லியது போலவும் ஆகும், சின்னம்மணிக்கு ஏற்ற வரன் இருந்தால் தேடிப்பார்க்கச் சொல்லவும் ஒரு வாய்ப்பாக அமையும்” என்ற எண்ணத்தில் சென்றார் அங்கண கவுண்டர்.
“வாங் சம்மந்தி வாங்”
“வாறனுங். சிங்கப்பூர்ல இருக்குற பேரங்கூட தின்மொருவாட்டிப் பேசாட்டி எனக்குத் தூக்கமே வராதுங்”
“இங்கியுமு அப்படித்தானுங்”
“சின்னம்மணி படிப்பு முடிஞ்சிதீமு, கண்ணாலத்தை இந்த வைகாசிலயே செய்யுலாமுன்னு பார்த்தனுங். ஒன்னும் தோதா எசைஞ்சி வர்லீங். இந்தப்பக்கம் எதனா இருந்தாப் பார்த்துச் சொன்னீங்கன்னா....”
“அதுக்கென்னங்... நேத்துகூட அன்னூர்ல நம்ம பங்காளிகிட்டச் சொல்லிப் போட்டுத்தான் வந்தமுங்”
“அப்பொறம் உன்னொரு தாக்கலுங்... பக்கத்து ஊட்டுக்காரன் கொடைச்சல் குடுத்துட்டே இருக்குறானுங்..:
“ஆமாங்... சின்னம்மணி சொல்லுச்சுன்னு எங்கூட்டு மருமக சொன்னா. நானுமு யோசனை செஞ்சி பார்த்தனுங்க. உங்களுக்கு அமைஞ்சதோ ரெண்டு பொட்டைப் புள்ளைக. பேசாம வெலைபேசிக் காசைப் பாத்து, அதை ஆளுக்குப் பாதின்னு குடுத்துட்டு சிவனேன்னு குக்கீட்டுச் சோறு உங்லாம் பாருங்”
அங்கண கவுண்டருக்கு குலை நடுங்கிக் கண்கள் சொருகியது போல இருந்தது. “அண்ணா, அவரு சொல்றாருன்னு நீங்க ரோசனை பண்ணாதீங்”, சொம்புத் தண்ணியுடன் கைநீட்டினார் சம்பந்தியம்மா தெய்வாத்தாள்.
மிகுந்த கவலை கொண்டார் அங்கணக் கவுண்டர். காலை பதினொரு மணிக்குச் சென்றவர், மதிய உணவெதுவும் சம்பந்தி வீட்டில் உண்ணாமலேயே கிளம்பினார். எங்கும் செல்லப் பிடிக்கவில்லை அவருக்கு.
காந்திபுரம் வந்தவர், வீட்டில் சின்னம்மணி என்ன செய்து கொண்டிருக்கிறாளோ என் எண்ணியவர், அலைபேசியில் அழைத்தார்.
“அப்பா, அவிங்க ஊட்டுக்கு வந்த லாரி நம்ம மதில்ச்சுவத்தைப் பூரா இடிச்சித் தள்ளீர்ச்சுப்பா!”, கேவிக் கேவி அழுதாள் சின்னம்மணி.
“அழாதம்மணி. இதா நான் இப்ப காந்தீவரத்துல்தான் இருக்கேன். நேரா ஊட்டுக்குதான் வாறேன்”
மூதாதையர் வாழ்ந்த வீடு. இரு பெண்களையும் நல்லபடியாகத் திருமணம் செய்து கொடுத்துவிட்டு, அம்மண்ணிலேயே வாழ்ந்து சாக வேண்டும் என நினைப்பது என் தவறா? அங்கண கவுண்டரின் மனத்தைச் செல்லரித்துக் கொண்டிருந்தது.
ஆட்சிதான் மாறி விட்டதே. இம்முறை மைத்துனன் இராசுவை அழைத்துக் கொண்டு, காவல் நிலையத்தை நாடிச் சென்று முறையிடுவதைத் தவிர வேறு வழியில்லை என நினைத்தவர், பாதியிலேயே சூலூரில் இறங்கி விட்டார்.
பேருந்து நிலையத்தில் காத்திருந்த மைத்துனன் இராசுவுடன் நேராக ஆளுங்கட்சித் தலைவர் வீராசாமி அலுவலகத்திற்குச் சென்றார் அங்கணன்.
“இராசு, நீங்க சொல்றது நல்லாப் புரியுது. அவிங்க வேணுமின்னே இடிச்சித் தள்ளி இருப்பாங்கன்னு நாங்க நினைக்கல. அப்படியே இருந்தாலும், அந்த டைவரைப் புடிச்சி உள்ள வெச்சிதுல உங்க பிரச்சினை தீந்திருமா??”
“அண்ணே, அப்ப நீங்களே ஒரு வழி சொல்லுங்க இதுக்கு?!”
“நான் நம்ம ஆட்கள்ல யாராவது ஒருத்தரை அனுப்பி வைக்குறேன். நல்ல வெலையா நம்ம ஆளுககிட்டத் தள்ளி உட்றுங்க. அவனை நாங்க பாத்துகுறோம்!”
இது கேட்ட மைத்துனன் இராசுவுக்கு மகிழ்ச்சி. அங்கண கவுண்டருக்கு, இருளோ என்று கண் கலங்கிச் சித்தமும் கலங்கியது.
“வண்டிய ஊருக்கே உடுறா!”, மைத்துனன் இராசுவும், மாமா அங்கண கவுண்டரும் அருகம் பாளையத்துக்கு நேராக வந்தனர்.
வாசலில் வந்திறங்கிய மாமாவைப் பார்த்ததும், சின்னம்மணி ’ஓ’வென்று ஓலமிட்டாள்.
”மாமா, எங்கம்மா என்னைய எப்பிடியெல்லாம் வெச்சி சீராட்டித் தாலாட்டி அழகு பார்த்தா? எங்கம்மா இருந்திருந்தா இந்த நெலமை எனக்கு வந்திருக்குமா?” தலையில் அடித்துக் கொண்டு அலறினாள்.
“அழாதறா செல்லம். மாமன் வந்துட்டன் அல்ல? உனியெல்லாம் நாம் பாத்துகுறேன். அழுகாதறா!”
“எங்கப்பன், டீக் கடைக்காரம்பொண்டாட்டி கூட சாகுவாசமுங்றாங் மாமா. செவுத்த இடிச்சிவங்ககோட நாயம் பேசுனப்ப முருகேசண்ணன் சொல்லித் திட்டுனாருங் மாமா. நேத்து கூட, அவ கூட இவரு இருந்தாருமுங்...”
இராசுவுக்குச் சுர்ரென்று சினம் தலைக்கேறிக் கொலை வெறியோடு மாமனைப் பார்த்தார். “யோவ், சின்னம்மணி சொல்றது உம்மையா? நேத்து அவளோட இருந்தியா?”, சொற்கள் தடித்தன.
நெஞ்சு கலங்கிய கவுண்டர், “டே இராசூ... நான் தெனமும் அவ கடைக்குப் பேப்பர்....”
“நிறுத்துயா... பேப்பர் படிக்கப் போனா பேப்பர் மட்டும் பட்ச்சிட்டு வர வேண்டியதுதான? மணிக்கணக்கா அவகூட என்னய்யா பேச்சு ஒனக்கு?”
அவசர கதியில் கிளம்ப்பிப் போனார் அங்கண கவுண்டர். இங்கே வாசலில் பெருங்கூட்டம் கூடி இருந்தது. வீட்டிற்குள் சின்னம்மணியைச் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தனர் உறவினர்கள். இராசுவோ, டீக்கடையைச் சூறையாடுவதற்கு தன் படை பலத்தைக் கூட்டுவதில் முனைப்பாய் இருந்தான். சுந்தரப் பாண்டியனின் காகிதக் கிடங்கில் பணிகள் மும்முரமாய் நடந்து கொண்டிருந்தன.
திடீரென ஒரு கும்பல் வீட்டை நோக்கி முன்னேறி வந்தது.
”ஏ, என்னப்பா மசமசன்னு நின்னுட்டு இருக்கீங்க? இடிசல்ல சிக்கி இருக்குற அந்த நாயைத் தூக்கி தூரத்துல போட்ட்டு வாங்கப்பா!”. விசைத்தறியில் நூலெடுக்கும் சிறுவர்களில் இருவர், செத்துப் போன பொன்னியைத் தூக்கிச் சென்றனர்.
”அடுத்து, அந்த வேப்ப மரத்துக்குக் கீழ இருக்குற கவுத்துக்கட்டல் அப்படியே இருக்கட்டும். அதுலே படுக்க வெச்சி, அப்படியே எடுத்துட்டுப் போய் எரிச்சிறலாம்!”
வீட்டின் முன் கூட்டம் பெருகிக் கொண்டே இருந்தது. உரையாடல்கள் காற்றில் கரைந்தன. கரையும் ஒலிகளுள் ஒரு ஒலியானது விகாரமாய் ஒலித்துக் கரைந்தது.
“பேசாம சுந்தரப்பாண்டியனுக்கு வித்திருந்தாக் கூட, நில அபகரிப்புல உள்ள போட்டுக் காசு கொஞ்சம் எச்சா வாங்கி இருக்குலாம். எங்க பெரியப்பன் எதையுஞ் செய்யாம இப்பிடி இரயில்ல உழுந்து வீணாப் போயிருக்க வேண்டாம்! தூத்தேறி!!”
மற்றொரு குரல், “ஏ, பால் ஊத்திப் பதினாறு செய்யுற வரைக்குமு வந்த சனம் இருக்குறதுக்கு எடங்காணாது. அந்த வேப்ப மரத்தை வெட்டிப் போட்டு, பந்தலை ஏகத்துக்கும் போட்டுடோணும்”
பொன்னி எறியப்பட்டு விட்டது. இதோ வேம்பும் சாய்கிறது. மற்றுமொரு ஒரு சிலந்தி வலை எங்கோ ஒரு இடத்தில், வெகு நேர்த்தியாய் பின்னப்பட்டுக் கொண்டே இருக்கிறது!
2/20/2011
கரும்படிமம்
”என்றா பழனிச்சாமி, ராவோட ராவா ஊரை உட்டே ஓடிப் போன மாடசாமிய நெனச்சு வெசனமாக்கூ?”
“வீணா என்னைச் சீண்டிப் பதம் பாக்காத! போட்டுத் தள்ளிட்டு அந்த வறண்டு கெடக்குற ஊர்க்கிணத்துல வுழுந்து சாகவும் தயங்க மாட்டேன்; சொல்லிப்புட்டேன்!”
ஊர்க்குளத்தின் ஓரத்தில் தனிமையாய் அமர்ந்திருக்கும் பழனிச்சாமி, பதினைந்து, இருபது ஆண்டுகளுக்கும் முந்தைய வாழ்க்கையை நினைத்துப் பார்க்கலானான்.
ஆ.நாகூர்ப் பள்ளியில் பழனிச்சாமியும் மாடசாமியும் வகுப்புத் தோழர்கள் என்பது மட்டுமல்லாமல், ஒரே ஊர்க்காரர்களும் கூட. இவ்விருவரும், வெவ்வேறு சாதிக்காரகள் என்பதையுங் கடந்து நட்பு பாராட்டி வந்தார்கள். வாலிபத்தை அடைந்ததும், பழனிச்சாமி நூற்றாலையில் மேற்பார்வையாளனாக வேலைக்குச் சேர்ந்தான். மாடசாமி, குடும்பத்தாரின் வேளாண்மையில் இணைந்து கொண்டான்.
சாரை சாரையாய் காடு கழனிகளுக்குச் சென்று கொண்டிருந்த ஊர் மக்களின் பற்களில் சிக்கிச் சின்னாபின்னமாகிக் கொண்டிருந்தான் மாடசாமி.
“ஊருக்கெல்லாம் வெளுத்துப் போடுற குருவனுக்கு, ஊர்க்கெணத்துக்கெட்ட இருக்குற அந்த பொறம்போக்கு நிலத்தைப் பட்டாப் போட்டுக் குடுக்குறதுல இந்தக் கட்டித்தின்னிக்கு என்ன நோகுதாமா?”
”அருக்காணி யாரைச் சொல்ற நீயி?”
“அந்த மயிலாத்தா பையன் மாடசாமியத்தான்!”
“ஆமா கழுதை... அவனுக்கு ஊட்டுச் சோத்தைத் தின்னுபோட்டு ஊர் சோலி பாக்குறதேதான் வேலை. எப்பப் பார்த்தாலும் ஒரே பண்ணாட்டு அவனுக்கு!”
“அதான்... இராயர் தோட்டத்து ஆளுகளுக்கும் அவனுக்குமு நேத்து ஒரே அடிதடியாமாக்கா...”
“அப்பிடியா? அப்புறம் என்னாச்சு சின்னக்கண்ணு?”
“மாடசாமியப் போலிசுல புடிச்சுட்டுப் போய்ட்டாங்களாம்!”
அதே நேரத்தில், ஆறரை மணிச் சங்கு ஊதும் முன்பாக நூற்றாலைக்குள் சென்றுவிட வேண்டும் என்கிற முனைப்பில் மிதிவண்டியை வேகமாய் மிதித்துக் கொண்டிருந்தான் பழனிச்சாமி. பின்னிருக்கையில், அதே ஆலையில் வேலைபார்க்கும் ஐ.என்.டி.யு.சி சின்னசாமி.
“ஏண்டா பழனி, எதுக்குடா மாடசாமிக்கு இந்த வேண்டாத வேலை? இப்ப எதுக்கு அவன் இராயர் தோட்டத்துக்காரவங்களோட கட்டுல வுழுறான் அவன்?”
”ஊர்க்காரங்க திட்டுற மாதரயே நீயும் அவனைத் தப்பாவே நெனைக்கிற பாத்தியா?”
“பின்ன, அவஞ்செய்யுறது செரியாடா? என்றா ஒழுக்க நாயம் பேசற??”
“அவன் என்னத்தச் சொல்லிட்டான்? ஊர்க்கிணத்தடியில இருக்குற நிலத்துக்குப் பதுலா, புள்ளார் கோயலுக்குப் பின்னாடி இருக்குற நெலத்தைச் சின்னானுக்குப் பட்டா போட்டுக் குடுத்துறலாம்ங்றான். அதுல என்ன தப்பு? ஊர்க்கிணத்துக்கும் இராயர் தோட்டத்துக்கும் எதோ தொடுப்பு இருக்குன்னு யோசிக்கிறான் அவன். நம்மூர்ல இருக்குற படிச்சவங்கள்ல அவனும் ஒருத்தன். அதை நாம யோசிக்க வேண்டாமா?”
”போடா... கோயிலுக்குப் பின்னாடி துணி வெளுக்குறவனுக்கு குடிசை போடச் சொல்லி யாராவது நெலத்தைக் குடுப்பாங்களாடா?”
“குடுத்தாத்தான் என்னங்றேன்?”
“இராயர்தோட்டத்து மணியன் சொல்றது தப்பா அப்ப? அதைவுடு... இவன் எதுக்கு அவங்க ஆளுகளை கைநீட்டி அடிச்சான்?”
“ஏண்டா, ஊர்க்காரங்களை ஒன்னு சேத்திட்டு வந்து அவனைக் கண்டபடி ஏசுவீங்க? திட்டுவீங்க?? அவங்கையுங்காலும் பூப்பறிச்சுட்டு இருக்குமாக்கூ?”
ஊர் முழுமைக்கும் ஒன்று சேர்ந்து கொண்டு, மாடசாமியையும் அவனது குடும்பத்தையும் தள்ளி வைக்கிறது. இராயர் தோட்டத்து மணியனுக்கு ஆளுங்கட்சியில் செல்வாக்கு. மாடசாமிக்கு உள்ளூர் இளைஞர்கள் ஒருசிலரின் ஆதரவு.
மறுநாள் காலையில், உள்ளூரில் இருக்கும் மற்றொரு விவசாயி ஒருவரின் வீட்டில் திருமணம். ஊர்க்காரர்கள் மட்டுமல்லாது, பக்கத்துக் கிராமத்தினரும் திருமணத்திற்கு வருவார்கள். வருவோர் அனைவரும், மாடசாமி எங்கே எனக் கேட்பார்களே? என்ன சொல்வது. மாடசாமியின் தந்தையாருக்கு மிகுந்த கவலை மற்றும் துயரம். மானப்பிரச்சினையாகப் பார்க்கிறார் மாடசாமியின் தகப்பனார்.
நல்லாம்பள்ளிச் ஜமீனிடம் ஓடுகிறார். கதறுகிறார். இவரிடம் இருக்கும் நிலபுலன்களில் சில கைமாறுகிறது. பிணையில் விடுதலையான் மாடசாமி ஊருக்குள் வர, எதிரணியினர் ஏமாற்றத்தில் சோர்ந்து போகிறார்கள்.
திருமண வீட்டில் வைத்து இணக்கம் பேசுகிறார் நல்லாம்பள்ளிச் ஜமீன் அவர்கள். மாடசாமி சொல்கிறார்,
“இத பாருங் மாமா. அவிங்க திட்டமென்னன்னு எனக்கு நெம்ப நல்லாத் தெரியும். சின்னானுக்கு அந்த நெலத்தைப் பட்டாப் போடணும். கொஞ்ச நாளைக்கு அப்புறம், அவங்கிட்ட இருந்து நெலத்தை வாங்கி கெணறு வெட்டித் தண்ணிய இராயர் தோட்டத்துக்கு கொண்டு போகோணும். ஊர்ச் சனங்களுக்குத் தண்ணி இல்லாமப் போகோணும்; அது மட்டும் இந்த மாடசாமி உசுரோட இருக்குற வரைக்கும் நடக்கவே நடக்காது!”
இணக்கப் பேச்சுகள் முறிகிறது; கூடவே கைகலப்பும் அக்கப்போர்களும் மூளுகிறது. மாடசாமியின் பிணையும் ஒரு சில மணி நேரங்களுக்குள்ளாகவே முடிவுக்கு வர, மாடசாமியின் குடும்பத்தார் நிலைகுலைந்து போனார்கள். ஊராரின் ஏச்சுகளுக்கும் பேச்சுகளுக்கும் அஞ்சி, ஊருக்குள் வருவதையே தவிர்த்து, காடுகழனிகளில் தஞ்சம் புகுந்தார்கள் மாடசாமி குடும்பத்தார்.
நாட்கள் செல்லச் செல்ல, மாடசாமியின் குடும்பத்தில் பூசல்கள் அதிகரித்து, சகோதரர்கள் அனைவரும் மாடசாமியை விட்டுப் பிரிந்தார்கள். என்றாலும், மாடசாமியின் தகப்பனார் தொடர்ந்து வழக்கை எடுத்து நடத்திக் கொண்டிருந்தார். தன்மகன் குற்றமற்றவன் என்பதைக் கடுமையாக நம்பினார் அவர்.
இடைப்பட்ட காலத்தில், சின்னானுக்கு ஊரடி நிலம் பட்டாப் போட்டுக் கொடுக்கப்பட்டது. பழனிச்சாமி மட்டும், தன் நண்பன் மாடசாமியை இன்னும் உறுதியாக நம்பிக் கொண்டிருந்தான். அவனது நம்பிக்கையும் வீண் போகவில்லை.
மாடசாமி சொல்லியதைப் போலவே, ஊர்க்கிணற்றை ஒட்டியே ம்ற்றொரு கிணறும் வெட்டப்பட்டது. ஊர்க் கிணற்றைவிடவும் முப்பது அடிகள் அதிகமாகவே தோண்டப்பட்டது. ஊர்க்காரர்கள், குறிப்பாக, ஏழை எளிய மக்கள் குடிதண்ணீர் இன்றி தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தார்கள்.
இந்நிலையில் வழக்கு பல நீதிமன்றங்களைக் கண்டது. மோகன் குமாரமங்கலம், வானமாமலை எனப் பெரிய அளவிலான வழக்கறிஞர்கள் எதிரெதிர் அணியில் வாதிட்டார்கள். குடி மூழ்கிய தருவாயில், மாடசாமிக்கு விடுதலை கிடைக்கிறது.
ஊர்க்குளத்தில் அமர்ந்திருந்த பழனிச்சாமி, இருபது ஆண்டுகால நினைவுளில் இருந்து விடுபட்டு நடப்புக்குத் திரும்பலானான். ”எப்பேர்ப்பட்ட மனுசன் அவன்? அவஞ்சொல்ப் பேச்சைக் கேட்டிருந்தா, இன்னைக்கு இவ்வளவு தண்ணிப் பஞ்சம் வந்துருக்குமாடா??”
“ஆமாடா... ஆமா, மாடசாமி இப்ப எங்க குடியிருக்கான்?”
“எங்கியோ, வடக்க போயி யாவாரம் செஞ்சி பொழச்சிட்டு இருக்கான். பதினாறு வள்ளந் தோட்டங்காட்டை எல்லாம் கேசு நடத்துறதுலயே தொலைச்சிப் போட்டு, இன்னிக்குப் பஞ்சம் பொழைக்கிறதுக்காக எங்கியோ போய் இருக்குறான். ஆனாலும், போன எடத்துல நெம்ப கவுரதையா இருக்கான்...”, பெருமூச்சு விட்டுக் கொண்டான் பழனிச்சாமி.
காலதேவனின் சுழற்சியில், மாமாங்கம் மூன்று கழிந்து விட்டிருந்தது. மாடசாமிக்கு மூன்று மகன்கள். அவரவர், அவரவர் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள். மூவரில், இருவர் வெளிநாட்டில் வாழ்கிறார்கள். மூத்தவன் மட்டும் பெற்றோரைக் கவனித்துக் கொண்டு கோயம்பத்தூரில் வாழ்கிறான்.
தன் உரிமையை நிலைநாட்டும் பொருட்டு, பெற்ற மகன்களின் உதவியினால் தம்மூதாதையர் வாழ்ந்த வீடு மற்றும் ஒரு சில நிலபுலன்களை மீட்ட மகிழ்ச்சியில், தன் இறுதிக் காலத்தை மனநிறைவோடு கழித்துக் கொண்டிருக்கிறார் மாடசாமி.
பெற்ற மக்களில், அந்த இளையவனுக்கு மட்டும் மாடசாமியின் தாக்கம் சிறிது உண்டு. தமிழ், தமிழ்ச் சங்கம் என்றெல்லாம் அவ்வப்போது அவன் அலைபாய்வதும் உண்டு. அன்றும் அப்படித்தான், அவன் தன் நண்பர்களோடு அளவளாவிக்கொண்டு இருந்தான்.
“ஏண்டா, நீயெல்லாம் படிச்சவனா? நாட்டுல எவ்வளவு அக்குரமம் நடக்குது? அதையெல்லாம் கண்டுக்க மாட்டியா??இப்படி அச்சுறுத்தலுக்கு அஞ்சி அஞ்சிப் பொழைக்கிறதெல்லாம் ஒரு பொழப்பா??”, இவனை இவனது நண்பன் வினவினான்.
“போடாங்... எங்கப்பன் மாதர, நான் என்ன ஒரு இளிச்சவாயனா??”
“வீணா என்னைச் சீண்டிப் பதம் பாக்காத! போட்டுத் தள்ளிட்டு அந்த வறண்டு கெடக்குற ஊர்க்கிணத்துல வுழுந்து சாகவும் தயங்க மாட்டேன்; சொல்லிப்புட்டேன்!”
ஊர்க்குளத்தின் ஓரத்தில் தனிமையாய் அமர்ந்திருக்கும் பழனிச்சாமி, பதினைந்து, இருபது ஆண்டுகளுக்கும் முந்தைய வாழ்க்கையை நினைத்துப் பார்க்கலானான்.
ஆ.நாகூர்ப் பள்ளியில் பழனிச்சாமியும் மாடசாமியும் வகுப்புத் தோழர்கள் என்பது மட்டுமல்லாமல், ஒரே ஊர்க்காரர்களும் கூட. இவ்விருவரும், வெவ்வேறு சாதிக்காரகள் என்பதையுங் கடந்து நட்பு பாராட்டி வந்தார்கள். வாலிபத்தை அடைந்ததும், பழனிச்சாமி நூற்றாலையில் மேற்பார்வையாளனாக வேலைக்குச் சேர்ந்தான். மாடசாமி, குடும்பத்தாரின் வேளாண்மையில் இணைந்து கொண்டான்.
சாரை சாரையாய் காடு கழனிகளுக்குச் சென்று கொண்டிருந்த ஊர் மக்களின் பற்களில் சிக்கிச் சின்னாபின்னமாகிக் கொண்டிருந்தான் மாடசாமி.
“ஊருக்கெல்லாம் வெளுத்துப் போடுற குருவனுக்கு, ஊர்க்கெணத்துக்கெட்ட இருக்குற அந்த பொறம்போக்கு நிலத்தைப் பட்டாப் போட்டுக் குடுக்குறதுல இந்தக் கட்டித்தின்னிக்கு என்ன நோகுதாமா?”
”அருக்காணி யாரைச் சொல்ற நீயி?”
“அந்த மயிலாத்தா பையன் மாடசாமியத்தான்!”
“ஆமா கழுதை... அவனுக்கு ஊட்டுச் சோத்தைத் தின்னுபோட்டு ஊர் சோலி பாக்குறதேதான் வேலை. எப்பப் பார்த்தாலும் ஒரே பண்ணாட்டு அவனுக்கு!”
“அதான்... இராயர் தோட்டத்து ஆளுகளுக்கும் அவனுக்குமு நேத்து ஒரே அடிதடியாமாக்கா...”
“அப்பிடியா? அப்புறம் என்னாச்சு சின்னக்கண்ணு?”
“மாடசாமியப் போலிசுல புடிச்சுட்டுப் போய்ட்டாங்களாம்!”
அதே நேரத்தில், ஆறரை மணிச் சங்கு ஊதும் முன்பாக நூற்றாலைக்குள் சென்றுவிட வேண்டும் என்கிற முனைப்பில் மிதிவண்டியை வேகமாய் மிதித்துக் கொண்டிருந்தான் பழனிச்சாமி. பின்னிருக்கையில், அதே ஆலையில் வேலைபார்க்கும் ஐ.என்.டி.யு.சி சின்னசாமி.
“ஏண்டா பழனி, எதுக்குடா மாடசாமிக்கு இந்த வேண்டாத வேலை? இப்ப எதுக்கு அவன் இராயர் தோட்டத்துக்காரவங்களோட கட்டுல வுழுறான் அவன்?”
”ஊர்க்காரங்க திட்டுற மாதரயே நீயும் அவனைத் தப்பாவே நெனைக்கிற பாத்தியா?”
“பின்ன, அவஞ்செய்யுறது செரியாடா? என்றா ஒழுக்க நாயம் பேசற??”
“அவன் என்னத்தச் சொல்லிட்டான்? ஊர்க்கிணத்தடியில இருக்குற நிலத்துக்குப் பதுலா, புள்ளார் கோயலுக்குப் பின்னாடி இருக்குற நெலத்தைச் சின்னானுக்குப் பட்டா போட்டுக் குடுத்துறலாம்ங்றான். அதுல என்ன தப்பு? ஊர்க்கிணத்துக்கும் இராயர் தோட்டத்துக்கும் எதோ தொடுப்பு இருக்குன்னு யோசிக்கிறான் அவன். நம்மூர்ல இருக்குற படிச்சவங்கள்ல அவனும் ஒருத்தன். அதை நாம யோசிக்க வேண்டாமா?”
”போடா... கோயிலுக்குப் பின்னாடி துணி வெளுக்குறவனுக்கு குடிசை போடச் சொல்லி யாராவது நெலத்தைக் குடுப்பாங்களாடா?”
“குடுத்தாத்தான் என்னங்றேன்?”
“இராயர்தோட்டத்து மணியன் சொல்றது தப்பா அப்ப? அதைவுடு... இவன் எதுக்கு அவங்க ஆளுகளை கைநீட்டி அடிச்சான்?”
“ஏண்டா, ஊர்க்காரங்களை ஒன்னு சேத்திட்டு வந்து அவனைக் கண்டபடி ஏசுவீங்க? திட்டுவீங்க?? அவங்கையுங்காலும் பூப்பறிச்சுட்டு இருக்குமாக்கூ?”
ஊர் முழுமைக்கும் ஒன்று சேர்ந்து கொண்டு, மாடசாமியையும் அவனது குடும்பத்தையும் தள்ளி வைக்கிறது. இராயர் தோட்டத்து மணியனுக்கு ஆளுங்கட்சியில் செல்வாக்கு. மாடசாமிக்கு உள்ளூர் இளைஞர்கள் ஒருசிலரின் ஆதரவு.
மறுநாள் காலையில், உள்ளூரில் இருக்கும் மற்றொரு விவசாயி ஒருவரின் வீட்டில் திருமணம். ஊர்க்காரர்கள் மட்டுமல்லாது, பக்கத்துக் கிராமத்தினரும் திருமணத்திற்கு வருவார்கள். வருவோர் அனைவரும், மாடசாமி எங்கே எனக் கேட்பார்களே? என்ன சொல்வது. மாடசாமியின் தந்தையாருக்கு மிகுந்த கவலை மற்றும் துயரம். மானப்பிரச்சினையாகப் பார்க்கிறார் மாடசாமியின் தகப்பனார்.
நல்லாம்பள்ளிச் ஜமீனிடம் ஓடுகிறார். கதறுகிறார். இவரிடம் இருக்கும் நிலபுலன்களில் சில கைமாறுகிறது. பிணையில் விடுதலையான் மாடசாமி ஊருக்குள் வர, எதிரணியினர் ஏமாற்றத்தில் சோர்ந்து போகிறார்கள்.
திருமண வீட்டில் வைத்து இணக்கம் பேசுகிறார் நல்லாம்பள்ளிச் ஜமீன் அவர்கள். மாடசாமி சொல்கிறார்,
“இத பாருங் மாமா. அவிங்க திட்டமென்னன்னு எனக்கு நெம்ப நல்லாத் தெரியும். சின்னானுக்கு அந்த நெலத்தைப் பட்டாப் போடணும். கொஞ்ச நாளைக்கு அப்புறம், அவங்கிட்ட இருந்து நெலத்தை வாங்கி கெணறு வெட்டித் தண்ணிய இராயர் தோட்டத்துக்கு கொண்டு போகோணும். ஊர்ச் சனங்களுக்குத் தண்ணி இல்லாமப் போகோணும்; அது மட்டும் இந்த மாடசாமி உசுரோட இருக்குற வரைக்கும் நடக்கவே நடக்காது!”
இணக்கப் பேச்சுகள் முறிகிறது; கூடவே கைகலப்பும் அக்கப்போர்களும் மூளுகிறது. மாடசாமியின் பிணையும் ஒரு சில மணி நேரங்களுக்குள்ளாகவே முடிவுக்கு வர, மாடசாமியின் குடும்பத்தார் நிலைகுலைந்து போனார்கள். ஊராரின் ஏச்சுகளுக்கும் பேச்சுகளுக்கும் அஞ்சி, ஊருக்குள் வருவதையே தவிர்த்து, காடுகழனிகளில் தஞ்சம் புகுந்தார்கள் மாடசாமி குடும்பத்தார்.
நாட்கள் செல்லச் செல்ல, மாடசாமியின் குடும்பத்தில் பூசல்கள் அதிகரித்து, சகோதரர்கள் அனைவரும் மாடசாமியை விட்டுப் பிரிந்தார்கள். என்றாலும், மாடசாமியின் தகப்பனார் தொடர்ந்து வழக்கை எடுத்து நடத்திக் கொண்டிருந்தார். தன்மகன் குற்றமற்றவன் என்பதைக் கடுமையாக நம்பினார் அவர்.
இடைப்பட்ட காலத்தில், சின்னானுக்கு ஊரடி நிலம் பட்டாப் போட்டுக் கொடுக்கப்பட்டது. பழனிச்சாமி மட்டும், தன் நண்பன் மாடசாமியை இன்னும் உறுதியாக நம்பிக் கொண்டிருந்தான். அவனது நம்பிக்கையும் வீண் போகவில்லை.
மாடசாமி சொல்லியதைப் போலவே, ஊர்க்கிணற்றை ஒட்டியே ம்ற்றொரு கிணறும் வெட்டப்பட்டது. ஊர்க் கிணற்றைவிடவும் முப்பது அடிகள் அதிகமாகவே தோண்டப்பட்டது. ஊர்க்காரர்கள், குறிப்பாக, ஏழை எளிய மக்கள் குடிதண்ணீர் இன்றி தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தார்கள்.
இந்நிலையில் வழக்கு பல நீதிமன்றங்களைக் கண்டது. மோகன் குமாரமங்கலம், வானமாமலை எனப் பெரிய அளவிலான வழக்கறிஞர்கள் எதிரெதிர் அணியில் வாதிட்டார்கள். குடி மூழ்கிய தருவாயில், மாடசாமிக்கு விடுதலை கிடைக்கிறது.
ஊர்க்குளத்தில் அமர்ந்திருந்த பழனிச்சாமி, இருபது ஆண்டுகால நினைவுளில் இருந்து விடுபட்டு நடப்புக்குத் திரும்பலானான். ”எப்பேர்ப்பட்ட மனுசன் அவன்? அவஞ்சொல்ப் பேச்சைக் கேட்டிருந்தா, இன்னைக்கு இவ்வளவு தண்ணிப் பஞ்சம் வந்துருக்குமாடா??”
“ஆமாடா... ஆமா, மாடசாமி இப்ப எங்க குடியிருக்கான்?”
“எங்கியோ, வடக்க போயி யாவாரம் செஞ்சி பொழச்சிட்டு இருக்கான். பதினாறு வள்ளந் தோட்டங்காட்டை எல்லாம் கேசு நடத்துறதுலயே தொலைச்சிப் போட்டு, இன்னிக்குப் பஞ்சம் பொழைக்கிறதுக்காக எங்கியோ போய் இருக்குறான். ஆனாலும், போன எடத்துல நெம்ப கவுரதையா இருக்கான்...”, பெருமூச்சு விட்டுக் கொண்டான் பழனிச்சாமி.
காலதேவனின் சுழற்சியில், மாமாங்கம் மூன்று கழிந்து விட்டிருந்தது. மாடசாமிக்கு மூன்று மகன்கள். அவரவர், அவரவர் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள். மூவரில், இருவர் வெளிநாட்டில் வாழ்கிறார்கள். மூத்தவன் மட்டும் பெற்றோரைக் கவனித்துக் கொண்டு கோயம்பத்தூரில் வாழ்கிறான்.
தன் உரிமையை நிலைநாட்டும் பொருட்டு, பெற்ற மகன்களின் உதவியினால் தம்மூதாதையர் வாழ்ந்த வீடு மற்றும் ஒரு சில நிலபுலன்களை மீட்ட மகிழ்ச்சியில், தன் இறுதிக் காலத்தை மனநிறைவோடு கழித்துக் கொண்டிருக்கிறார் மாடசாமி.
பெற்ற மக்களில், அந்த இளையவனுக்கு மட்டும் மாடசாமியின் தாக்கம் சிறிது உண்டு. தமிழ், தமிழ்ச் சங்கம் என்றெல்லாம் அவ்வப்போது அவன் அலைபாய்வதும் உண்டு. அன்றும் அப்படித்தான், அவன் தன் நண்பர்களோடு அளவளாவிக்கொண்டு இருந்தான்.
“ஏண்டா, நீயெல்லாம் படிச்சவனா? நாட்டுல எவ்வளவு அக்குரமம் நடக்குது? அதையெல்லாம் கண்டுக்க மாட்டியா??இப்படி அச்சுறுத்தலுக்கு அஞ்சி அஞ்சிப் பொழைக்கிறதெல்லாம் ஒரு பொழப்பா??”, இவனை இவனது நண்பன் வினவினான்.
“போடாங்... எங்கப்பன் மாதர, நான் என்ன ஒரு இளிச்சவாயனா??”
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு!
2/01/2011
தமிழ்நாட் அசெம்பளி எலக்சன்: முதல்வர் பிக்ரம் ஓஜா?!
மே 20, சென்னா.
அடுத்த ஆண்டு 2046ல் நடக்க இருந்த தமிழ்நாட் அசெம்பளித் தேர்தலை அட்வான்சாக நடத்தியதற்கு, ஆளும்கட்சியான ந்யூ காங்கிரஸ்மேளாவுக்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது. காவிரி ரிவர் ஓடிக் கொண்டிருந்த இடங்களைச் சீரமைத்துத் தமிழர்களை அங்கு குடியமர்த்தியதனால், கூடுதலாக 16 இடங்கள் பெற்று ஆளுங்கட்சி மூன்றில் இரண்டு இடங்களைப் பிடித்திருக்கிறது.
பீகார் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டோர் திக்காக வாழும் சூலூர்த் தொகுதியில் போட்டியிட்ட ஆளுங்கட்சியின் இந்நாள்த் தலைவர் பிக்ரம் ஓஜா, தனக்கு அடுத்தபடியாக வந்த மனோஜ் பணிக்கரைக் காட்டிலும் 17000 வோட்ஸ் அதிகம் பெற்று ஜெயித்துள்ளார்.
ந்யூ காங்கிரஸ்மேளாப் பார்ட்டியின் செக்ரட்டரி மொகித் கார்கே, சென்னா டவுனில் இருக்கும் டிநகரில் தன்னையடுத்து வந்த ஜன்ரோஜ் கட்சியின் தலைவர் விக்ரம் சிங்கைப் பனிரெண்டாயிரம் ஓட்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழர்கள் திக்பாப்புலேசனாக வாழும் மதுரா, திருநல்வாலி ஆகிய ட்ஸ்ட்ரிக்டுகளில், தமிழர்களையே கேன்டிடேட்ஸாக நிறுத்திய ஜன்ரோஜ் கட்சிக்கு நல்ல க்ரிடிட் கிடைத்திருக்கிறது. இந்த டிஸ்ட்ரிக்ட்களில் இருக்குற எல்லா சீட்கள்லயும், 12 இடங்கள்லயும் ஜன்ரோஜ் கட்சியே வின் செய்திருக்கிறது.
சிவகங்காத் தொகுதியில் போட்டியிட்ட சினிமா ஏக்ட்ரஸ் ஆதர்ஸ்னா தாக்கர், தனக்கு அடுத்து வந்த ஓல்டு காங்கிரஸ் வேட்பாளர் ஃபர்மா சிதம்பரத்தை விட 46000 ஓட்ஸ் வித்தியாசத்தில் ஜெயித்து இருக்கார். சோசியல் வெல்ஃபேர் மினிஸ்டர் ஆவேன்னு சொல்லியே ஓட்டுக் கேட்டு ஜெயித்துள்ளார் இவர். முன்னாள் மினிஸ்டராக இருந்த தனது தாத்தா வழியில் பப்ளிக் சர்வீசில் ஈடுபடுவேன் என்றும் ப்ராமிஸ் செய்திருக்கிறார்.
லேபர் யூனியன் எலக்சன் ஆபிஸர்களாக, பீகார் மற்றும் ஒரியா மொழி பேசுபவரோடு தமிழ் பேசும் அதிகாரியையும் நியமித்துப் ப்ராப்ளத்துக்கு ஆளான மினிஸ்டர் பரதேஸ் மக்னாலியா, மதுரா சென்ட்ரல் தொகுதியில் படுதோல்வி அடைந்தார். ஜன்ரோஜ் கட்சியின் அனுபவ் த்ரதோஷ் 36000 ஓட்ஸ் வித்தியாசத்தில் ஜெயித்துள்ளார்.
ஃபர்தர் ந்யூசுக்கு 12வது பேஜுக்குச் சென்று பாருங்கள்!
-ஈரோட்டில் கிடைக்கும் ஒரே தமிழ் ந்யூஸ் பேப்பர் ”தமிழ்ச்சேதி” ஜர்னலிஸ்ட் மனோஜ்.
அடுத்த ஆண்டு 2046ல் நடக்க இருந்த தமிழ்நாட் அசெம்பளித் தேர்தலை அட்வான்சாக நடத்தியதற்கு, ஆளும்கட்சியான ந்யூ காங்கிரஸ்மேளாவுக்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது. காவிரி ரிவர் ஓடிக் கொண்டிருந்த இடங்களைச் சீரமைத்துத் தமிழர்களை அங்கு குடியமர்த்தியதனால், கூடுதலாக 16 இடங்கள் பெற்று ஆளுங்கட்சி மூன்றில் இரண்டு இடங்களைப் பிடித்திருக்கிறது.
பீகார் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டோர் திக்காக வாழும் சூலூர்த் தொகுதியில் போட்டியிட்ட ஆளுங்கட்சியின் இந்நாள்த் தலைவர் பிக்ரம் ஓஜா, தனக்கு அடுத்தபடியாக வந்த மனோஜ் பணிக்கரைக் காட்டிலும் 17000 வோட்ஸ் அதிகம் பெற்று ஜெயித்துள்ளார்.
ந்யூ காங்கிரஸ்மேளாப் பார்ட்டியின் செக்ரட்டரி மொகித் கார்கே, சென்னா டவுனில் இருக்கும் டிநகரில் தன்னையடுத்து வந்த ஜன்ரோஜ் கட்சியின் தலைவர் விக்ரம் சிங்கைப் பனிரெண்டாயிரம் ஓட்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழர்கள் திக்பாப்புலேசனாக வாழும் மதுரா, திருநல்வாலி ஆகிய ட்ஸ்ட்ரிக்டுகளில், தமிழர்களையே கேன்டிடேட்ஸாக நிறுத்திய ஜன்ரோஜ் கட்சிக்கு நல்ல க்ரிடிட் கிடைத்திருக்கிறது. இந்த டிஸ்ட்ரிக்ட்களில் இருக்குற எல்லா சீட்கள்லயும், 12 இடங்கள்லயும் ஜன்ரோஜ் கட்சியே வின் செய்திருக்கிறது.
சிவகங்காத் தொகுதியில் போட்டியிட்ட சினிமா ஏக்ட்ரஸ் ஆதர்ஸ்னா தாக்கர், தனக்கு அடுத்து வந்த ஓல்டு காங்கிரஸ் வேட்பாளர் ஃபர்மா சிதம்பரத்தை விட 46000 ஓட்ஸ் வித்தியாசத்தில் ஜெயித்து இருக்கார். சோசியல் வெல்ஃபேர் மினிஸ்டர் ஆவேன்னு சொல்லியே ஓட்டுக் கேட்டு ஜெயித்துள்ளார் இவர். முன்னாள் மினிஸ்டராக இருந்த தனது தாத்தா வழியில் பப்ளிக் சர்வீசில் ஈடுபடுவேன் என்றும் ப்ராமிஸ் செய்திருக்கிறார்.
லேபர் யூனியன் எலக்சன் ஆபிஸர்களாக, பீகார் மற்றும் ஒரியா மொழி பேசுபவரோடு தமிழ் பேசும் அதிகாரியையும் நியமித்துப் ப்ராப்ளத்துக்கு ஆளான மினிஸ்டர் பரதேஸ் மக்னாலியா, மதுரா சென்ட்ரல் தொகுதியில் படுதோல்வி அடைந்தார். ஜன்ரோஜ் கட்சியின் அனுபவ் த்ரதோஷ் 36000 ஓட்ஸ் வித்தியாசத்தில் ஜெயித்துள்ளார்.
ஃபர்தர் ந்யூசுக்கு 12வது பேஜுக்குச் சென்று பாருங்கள்!
-ஈரோட்டில் கிடைக்கும் ஒரே தமிழ் ந்யூஸ் பேப்பர் ”தமிழ்ச்சேதி” ஜர்னலிஸ்ட் மனோஜ்.
1/09/2011
நிக்காத, ஓடிப் போயிரு!
”ஓடுகாலி இராஜேசுவரி செய்த வேலைடா மச்சி... அவளை சும்மா வுடக் கூடாதுடா!”, பாண்டியன் கடை வாசலில் நின்று கத்திக் கொண்டு இருந்தான் சோடாக்கடை மாதவன்.
வீட்டு மாட்டுக்கு மூக்கணாங்கயறு வாங்குவதற்காய்ப் பாண்டியன் கடையில் நின்று கொண்டிருந்த எனக்கு தூக்கிவாரிப் போட்டது.
என் பள்ளி நாட்கள் தொட்டு, மானசீகமாய்க் காதலிக்கும் இராஜேசுவரி ஓடுகாலியாகிப் போனாளா? ஓட்டைப்பல்லு மாதவனெல்லாம் ஏசும்படி ஆகிப் போனாளா என் இராஜேசுவரி?? வீடு சென்றடையும் வரையிலும் மனம் புழுங்கித் தவித்தது.
“அம்மா, தவுட்டுக்கார இரங்கநாதன் வீட்ல எல்லார்த்துக்கும் கண்ணாலம் ஆய்டிச்சாமா?”, மிகுந்த கவனத்துடன் இராஜேசுவரி பெயரைத் தவிர்த்தேன்.
“இன்னும் இல்லியே? பெரியவ சுசீலாவைப் பண்ணைக் கிணத்து ஆறுச்சாமி பையனுக்குக் குடுத்திருக்கு. அவளுக்கு நேர் இளையவன் திருமூர்த்தி. கடைசிப் பொண்ணு இராஜிக்கு கண்ணாலம் ஆனவிட்டுத்தான அவனுக்கு ஆகும்?”, அம்மா வெள்ளந்தியாக அடுக்கினாள் தவுட்டுக்காரவீட்டு நிலவரத்தை. மனம் குதூகலித்தது.
”நாதாரி மாதவன் சொல்றது யாரை?”, குதூகலிப்பு நீடிக்காமல், கொழுகொம்பை நாடும் கொடி போல அல்லாடியது மனம்.
“பாண்டியன் கடை வாசல்ல ஓடுகாலி இராஜேசுவரின்னு சொல்லிச் சொன்னாங்ளேம்மா?”
“அதா? சென்னியப்பன் தங்கச்சி எண்ணெய்க்காரன் மகனோட ஓடிப் போனாளே?? அதைச் சொல்லி இருப்பாங்களாட்ட இருக்கு?”
“ஏன்டா, ஊரெல்லாம் இராஜேசுவரிங்ற பேரையே வெச்சித் தொலையுறீங்க??”, நான் கேட்காவிட்டாலும் என் மனம் வலிந்து கேட்டது. நாளும் கழியத் துவங்கியது. மற்றொரு நாளும் விடிந்தது.
“டே மணியா! போடா, ஊர்த்தலைவர் ஊட்ல போயி, இன்னத்து தினத்தந்திய நாங்கேட்டன்னு சொல்லி வாங்கியா போ!!”, விரட்டினார் ஊர்சோலி பார்க்கும் சித்தப்பா.
“இந்த சித்தப்பனுக்கு வேற வேலையே இல்லை. எப்பப் பார்த்தாலும், எனக்குக் காட்டம்பட்டிக் கந்தசாமியத் தெரியும். ஆலம்பாளையத்துக் கண்ணப்பனைத் தெரியும். ஆனைமலை ஆண்டுவைத் தெரியும்னு சொரபுருடை விட்டுகினு எனக்கு வேலை சொல்றதே பொழப்பாப் போச்சு!” எனப் புலம்பியபடியே ஊராட்சித் தலைவர் பாலு வீட்டுக்கு நடையைக் கட்டினேன்.
”சின்னமணியக்கா, என்ற சித்தப்பன் பேப்பர் வாங்கியாறச் சொல்லுச்சுங்க்கா!”
“கண்ணூ, மாமன் வடவரத்துத் திண்ணையில வெச்சிருப்பாரு பாரு. எடுத்துட்டுப் போயிட்டு கொண்டாந்து வெச்சிரு இராசா!”, பாலண்ணனின் ரெண்டாவது மனைவி சின்னமணியக்கா கனிந்து பேசினாள். சமுத்தூரில் இருந்து இவள் வந்த நேரம், மூத்தகுடி தெய்வாத்தாளுக்கு இரட்டைக் குழந்தைகள். ”அன்பன், ஆனந்தன்”, சாதிக்பாட்சா சூட்டிய பெயர்கள்.
நான் வீட்டுக்குச் செல்லும் வழியில், கையிலிருந்த தினத்தந்தியை மேயத் தலைப்பட்டேன். “ஆசிரியர் மாரிமுத்து படுகொலை. மடத்துக்குளம் வாலிபர் கைது!”, பரபரத்து ஓடினேன்.
“அம்மா, ஒனக்கு விசியந் தெரியுமா? மாரிமுத்து வாத்தியாரை யாரோ கொன்னு போட்டாங்களாம்!”
“டே, கேனக்காத்தானாட்ட உளறாதடா... அக்கம்பக்கம் யாரும் கேட்றப் போறாங்க!”, திண்ணையில் சட்டாம்பிள்ளத்தனம் பார்த்துக் கொண்டிருந்த சித்தப்பா அலற, சின்னம்மா ஓடி வந்து, “யேங்க, சின்னவனை எப்பப் பார்த்தாலும் வெய்யுறீங்க?”, என ஒத்தாசைக்கு வந்தாள்.
”பின்ன? வெய்யாம என்ன பண்றதாமா?? எங்கியோ, எதோ மாரிமுத்தை யாரோ கொன்னு போட்டாங்கன்னு போட்டிருக்கு... அதுக்கு இவன்...”, சித்தப்பா நீட்டி முழக்கினார்.
“ங்கொன்னியா.... ஏன்டா, உங்களுக்கு மாரிமுத்துங்ற பேரைத் தவிர வேறு எதுவுமே கிடைக்காதாடா?? இதுல வேற, ஆசிரியர் மாரிமுத்து... “, இம்முறையும் வலிந்து ஏசத் துவங்கியது என் மனம். சித்தப்பாவின் அலட்டலில் அன்றைய நாளும் கழிந்தது.
இதோ, மற்றொரு நாள்... மற்றொரு பொழுது... “அகில இந்திய வானொலி நிலையம்... மாலை மணி ஆறு முப்பது... மாநிலச் செய்திகள் வாசிப்பது ஆர்.செல்வராஜ்.... கோவை மாவட்டம் சுல்தான் பேட்டையில் அடையாளம் தெரியாத நபர்களால் செஞ்சேரி மணி என்பவர் படுகொலை செய்யப்பட்டார். கொலையாளிகளைக் காவல் துறையினர் வலைவீசித் தேடி வருகிறார்கள்....”.
முழுதாகக் கூட கேட்கவில்லை. பிடித்தேன் ஓட்டம் மந்திரியப்பர் வீட்டுக்கு... “டே கொமாரு... உங்க மாமனை ஆரோ சுல்தான் பேட்டையில வெச்சிக் கொன்னு போட்டாங்களாமாடா... ஆறரை மணிச் சேதில சொன்னாங்க கேட்டியா?....”
பின்மண்டையில் யாரோ தட்டவும், கோபம் சுர்ரென தலைக்கேறி கையை ஓங்கியபடியே பின்னால் திரும்பினேன். குமாரின் அண்டை வீட்டுத் திருமலைசாமி அண்ணன் கொலை வெறியோடு நின்று கொண்டிருந்தார்.
“மணியம் தியேட்டர் மணியனை ஆரோ போட்டுத் தள்ளுனதுக்கு, நம்ம சிவகாமி அக்காவோடப் பொறந்த மணியனைச் சொல்ற நீயி... இரு உங்கம்மாகிட்டச் சொல்லிச் சொல்றேன்...”, விகாரமாய் ஓங்கிப் பேசினார் திருமலையண்ணன்.
“ச்சே... உங்களுக்கு மணிங்ற பேரை உட்டுப் போட்டு வேற பேரே கெடைக்காதாடா?”, மனம் வலிந்து திட்டித் தீர்த்தது இன்றும்.
இதோ மற்றொரு நாள், மற்றொரு பொழுது. ”சித்தூரில் தெரசா கைது!”.
“என்ன எழவுடா இது? தெரசா கைதா??”, இரு எங்க சித்தப்பங்கிட்ட உடனே போய்ச் சொல்றன்.
“சித்தப்பா, பேப்பர் பாத்தீங்களா? தெரசா கைதுன்னு போட்டிருக்கு!”
“எதனாப் போராட்டம் நடத்தி இருப்பாங்களா இருக்கும். அந்தம்மா அப்படி எதும் செய்யாதே?” என்று சொல்லியபடியே வாசலுக்கு வந்தார் ஊர்சுத்தி சித்தப்பா.
“கொண்டாடா அந்த பேப்பரை...”, தோரணைக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை.
“இருங் சித்தப்பா, போயி நாகராசண்ணன் டீக்கடையில இருந்து எடுத்தாறன்.”
நாகராசண்ணன் கடையில் இருந்து அன்றைய தினசரியை கேட்டு வாங்கிப் படித்தபடியே வந்து கொண்டிருந்தேன்.... "அடக் கெரகமே... இந்த இலடசணத்துல ஊட்டுக்குப் போனம்? சித்தப்பன் கொன்னு பொலி போட்ருவாரே?", உதறல் எடுக்கத் துவங்கியது எனக்கு.
”எழவு, ஏன்டா தலைவருக, நல்லவருக பேரையெல்லாம் வெச்சித் தொலையறீங்க? வெச்சாப் போச்சாது; நல்லபடியாவாவது இருந்து தொலையலாம்ல?”, மனம் வலிந்து கடிந்து நொந்து கொண்டது. மீண்டும் தலைப்பைக் கடந்து வாசித்தேன்.
தினசரி பல்லிளித்தது, “சட்டத்துக்கு விரோதமாகப் பெண்களை வைத்து பாலியல் தொழில் புரிந்த, ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த பெண்மணி தெரசா கைது செய்யப்பட்டு, 15 நாள் காவலில் அடைக்கப்பட்டு உள்ளார்!!”.
ஆண்டுகள் பல கடந்தோடின. செலாக்கு எடுப்பதில் கில்லாடியான செலாக்குச் சின்னதுரை ஒருவித பரபரப்புடன் வந்து சொன்னான், ”கருணாநிதி, தன் மனைவியுடன் கட்டிப் புரண்டு சண்டை! எதோ செய்தி போட்டு இருக்காங்டா!!”.
“ஓடிப் போயிரு நாயே... எந்த வட்டச் செயலாளர், பகுதிச் செயலாளர் அவம் பொண்டாட்டிகூட அக்கப் போர் செய்தா எனக்கென்னடா? நிக்காத, ஓடிப் போயிரு நாயே!!”
வீட்டு மாட்டுக்கு மூக்கணாங்கயறு வாங்குவதற்காய்ப் பாண்டியன் கடையில் நின்று கொண்டிருந்த எனக்கு தூக்கிவாரிப் போட்டது.
என் பள்ளி நாட்கள் தொட்டு, மானசீகமாய்க் காதலிக்கும் இராஜேசுவரி ஓடுகாலியாகிப் போனாளா? ஓட்டைப்பல்லு மாதவனெல்லாம் ஏசும்படி ஆகிப் போனாளா என் இராஜேசுவரி?? வீடு சென்றடையும் வரையிலும் மனம் புழுங்கித் தவித்தது.
“அம்மா, தவுட்டுக்கார இரங்கநாதன் வீட்ல எல்லார்த்துக்கும் கண்ணாலம் ஆய்டிச்சாமா?”, மிகுந்த கவனத்துடன் இராஜேசுவரி பெயரைத் தவிர்த்தேன்.
“இன்னும் இல்லியே? பெரியவ சுசீலாவைப் பண்ணைக் கிணத்து ஆறுச்சாமி பையனுக்குக் குடுத்திருக்கு. அவளுக்கு நேர் இளையவன் திருமூர்த்தி. கடைசிப் பொண்ணு இராஜிக்கு கண்ணாலம் ஆனவிட்டுத்தான அவனுக்கு ஆகும்?”, அம்மா வெள்ளந்தியாக அடுக்கினாள் தவுட்டுக்காரவீட்டு நிலவரத்தை. மனம் குதூகலித்தது.
”நாதாரி மாதவன் சொல்றது யாரை?”, குதூகலிப்பு நீடிக்காமல், கொழுகொம்பை நாடும் கொடி போல அல்லாடியது மனம்.
“பாண்டியன் கடை வாசல்ல ஓடுகாலி இராஜேசுவரின்னு சொல்லிச் சொன்னாங்ளேம்மா?”
“அதா? சென்னியப்பன் தங்கச்சி எண்ணெய்க்காரன் மகனோட ஓடிப் போனாளே?? அதைச் சொல்லி இருப்பாங்களாட்ட இருக்கு?”
“ஏன்டா, ஊரெல்லாம் இராஜேசுவரிங்ற பேரையே வெச்சித் தொலையுறீங்க??”, நான் கேட்காவிட்டாலும் என் மனம் வலிந்து கேட்டது. நாளும் கழியத் துவங்கியது. மற்றொரு நாளும் விடிந்தது.
“டே மணியா! போடா, ஊர்த்தலைவர் ஊட்ல போயி, இன்னத்து தினத்தந்திய நாங்கேட்டன்னு சொல்லி வாங்கியா போ!!”, விரட்டினார் ஊர்சோலி பார்க்கும் சித்தப்பா.
“இந்த சித்தப்பனுக்கு வேற வேலையே இல்லை. எப்பப் பார்த்தாலும், எனக்குக் காட்டம்பட்டிக் கந்தசாமியத் தெரியும். ஆலம்பாளையத்துக் கண்ணப்பனைத் தெரியும். ஆனைமலை ஆண்டுவைத் தெரியும்னு சொரபுருடை விட்டுகினு எனக்கு வேலை சொல்றதே பொழப்பாப் போச்சு!” எனப் புலம்பியபடியே ஊராட்சித் தலைவர் பாலு வீட்டுக்கு நடையைக் கட்டினேன்.
”சின்னமணியக்கா, என்ற சித்தப்பன் பேப்பர் வாங்கியாறச் சொல்லுச்சுங்க்கா!”
“கண்ணூ, மாமன் வடவரத்துத் திண்ணையில வெச்சிருப்பாரு பாரு. எடுத்துட்டுப் போயிட்டு கொண்டாந்து வெச்சிரு இராசா!”, பாலண்ணனின் ரெண்டாவது மனைவி சின்னமணியக்கா கனிந்து பேசினாள். சமுத்தூரில் இருந்து இவள் வந்த நேரம், மூத்தகுடி தெய்வாத்தாளுக்கு இரட்டைக் குழந்தைகள். ”அன்பன், ஆனந்தன்”, சாதிக்பாட்சா சூட்டிய பெயர்கள்.
நான் வீட்டுக்குச் செல்லும் வழியில், கையிலிருந்த தினத்தந்தியை மேயத் தலைப்பட்டேன். “ஆசிரியர் மாரிமுத்து படுகொலை. மடத்துக்குளம் வாலிபர் கைது!”, பரபரத்து ஓடினேன்.
“அம்மா, ஒனக்கு விசியந் தெரியுமா? மாரிமுத்து வாத்தியாரை யாரோ கொன்னு போட்டாங்களாம்!”
“டே, கேனக்காத்தானாட்ட உளறாதடா... அக்கம்பக்கம் யாரும் கேட்றப் போறாங்க!”, திண்ணையில் சட்டாம்பிள்ளத்தனம் பார்த்துக் கொண்டிருந்த சித்தப்பா அலற, சின்னம்மா ஓடி வந்து, “யேங்க, சின்னவனை எப்பப் பார்த்தாலும் வெய்யுறீங்க?”, என ஒத்தாசைக்கு வந்தாள்.
”பின்ன? வெய்யாம என்ன பண்றதாமா?? எங்கியோ, எதோ மாரிமுத்தை யாரோ கொன்னு போட்டாங்கன்னு போட்டிருக்கு... அதுக்கு இவன்...”, சித்தப்பா நீட்டி முழக்கினார்.
“ங்கொன்னியா.... ஏன்டா, உங்களுக்கு மாரிமுத்துங்ற பேரைத் தவிர வேறு எதுவுமே கிடைக்காதாடா?? இதுல வேற, ஆசிரியர் மாரிமுத்து... “, இம்முறையும் வலிந்து ஏசத் துவங்கியது என் மனம். சித்தப்பாவின் அலட்டலில் அன்றைய நாளும் கழிந்தது.
இதோ, மற்றொரு நாள்... மற்றொரு பொழுது... “அகில இந்திய வானொலி நிலையம்... மாலை மணி ஆறு முப்பது... மாநிலச் செய்திகள் வாசிப்பது ஆர்.செல்வராஜ்.... கோவை மாவட்டம் சுல்தான் பேட்டையில் அடையாளம் தெரியாத நபர்களால் செஞ்சேரி மணி என்பவர் படுகொலை செய்யப்பட்டார். கொலையாளிகளைக் காவல் துறையினர் வலைவீசித் தேடி வருகிறார்கள்....”.
முழுதாகக் கூட கேட்கவில்லை. பிடித்தேன் ஓட்டம் மந்திரியப்பர் வீட்டுக்கு... “டே கொமாரு... உங்க மாமனை ஆரோ சுல்தான் பேட்டையில வெச்சிக் கொன்னு போட்டாங்களாமாடா... ஆறரை மணிச் சேதில சொன்னாங்க கேட்டியா?....”
பின்மண்டையில் யாரோ தட்டவும், கோபம் சுர்ரென தலைக்கேறி கையை ஓங்கியபடியே பின்னால் திரும்பினேன். குமாரின் அண்டை வீட்டுத் திருமலைசாமி அண்ணன் கொலை வெறியோடு நின்று கொண்டிருந்தார்.
“மணியம் தியேட்டர் மணியனை ஆரோ போட்டுத் தள்ளுனதுக்கு, நம்ம சிவகாமி அக்காவோடப் பொறந்த மணியனைச் சொல்ற நீயி... இரு உங்கம்மாகிட்டச் சொல்லிச் சொல்றேன்...”, விகாரமாய் ஓங்கிப் பேசினார் திருமலையண்ணன்.
“ச்சே... உங்களுக்கு மணிங்ற பேரை உட்டுப் போட்டு வேற பேரே கெடைக்காதாடா?”, மனம் வலிந்து திட்டித் தீர்த்தது இன்றும்.
இதோ மற்றொரு நாள், மற்றொரு பொழுது. ”சித்தூரில் தெரசா கைது!”.
“என்ன எழவுடா இது? தெரசா கைதா??”, இரு எங்க சித்தப்பங்கிட்ட உடனே போய்ச் சொல்றன்.
“சித்தப்பா, பேப்பர் பாத்தீங்களா? தெரசா கைதுன்னு போட்டிருக்கு!”
“எதனாப் போராட்டம் நடத்தி இருப்பாங்களா இருக்கும். அந்தம்மா அப்படி எதும் செய்யாதே?” என்று சொல்லியபடியே வாசலுக்கு வந்தார் ஊர்சுத்தி சித்தப்பா.
“கொண்டாடா அந்த பேப்பரை...”, தோரணைக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை.
“இருங் சித்தப்பா, போயி நாகராசண்ணன் டீக்கடையில இருந்து எடுத்தாறன்.”
நாகராசண்ணன் கடையில் இருந்து அன்றைய தினசரியை கேட்டு வாங்கிப் படித்தபடியே வந்து கொண்டிருந்தேன்.... "அடக் கெரகமே... இந்த இலடசணத்துல ஊட்டுக்குப் போனம்? சித்தப்பன் கொன்னு பொலி போட்ருவாரே?", உதறல் எடுக்கத் துவங்கியது எனக்கு.
”எழவு, ஏன்டா தலைவருக, நல்லவருக பேரையெல்லாம் வெச்சித் தொலையறீங்க? வெச்சாப் போச்சாது; நல்லபடியாவாவது இருந்து தொலையலாம்ல?”, மனம் வலிந்து கடிந்து நொந்து கொண்டது. மீண்டும் தலைப்பைக் கடந்து வாசித்தேன்.
தினசரி பல்லிளித்தது, “சட்டத்துக்கு விரோதமாகப் பெண்களை வைத்து பாலியல் தொழில் புரிந்த, ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த பெண்மணி தெரசா கைது செய்யப்பட்டு, 15 நாள் காவலில் அடைக்கப்பட்டு உள்ளார்!!”.
ஆண்டுகள் பல கடந்தோடின. செலாக்கு எடுப்பதில் கில்லாடியான செலாக்குச் சின்னதுரை ஒருவித பரபரப்புடன் வந்து சொன்னான், ”கருணாநிதி, தன் மனைவியுடன் கட்டிப் புரண்டு சண்டை! எதோ செய்தி போட்டு இருக்காங்டா!!”.
“ஓடிப் போயிரு நாயே... எந்த வட்டச் செயலாளர், பகுதிச் செயலாளர் அவம் பொண்டாட்டிகூட அக்கப் போர் செய்தா எனக்கென்னடா? நிக்காத, ஓடிப் போயிரு நாயே!!”
12/30/2010
அணுவேந்திரன்
”ங்கொய்யால! இந்த ஆண்டு எப்படியும் போயே ஆகணும்!!”, முணு முணுப்புக்கிடையே தன் அலைபேசியை இயக்கலானான் பழமைபேசி.
”ட்ரிங்... ட்ரிங்...”
“அகோ, நான் இளா பேசுறேன்... நீங்க?”
“இளா, நான் மணிதாம் பேசுறேன்”
“சொல்லுங்க மணி... என்ன சமாச்சாரம்?”
“2011 ஈரோடு சங்கமத்துக்குப் போயே ஆகணும் நானு!”
“என்ன வெளையாடுறீங்களா? கூட்டம் ஆரம்பிக்கிறதுக்கு இன்னும் சித்த நேரந்தான இருக்கு? அமெரிக்காவுல இருக்குற நீங்க எப்படி இன்னும் ஒரு மணி நேரத்துல ஈரோடு போக முடியும்?”
“ஒன்னும் பிரச்சினை இல்லை; நான் பக்கத்து ஊர், பெட்ஃபோர்டுலதான் இருக்கேன். கூடவே மின்னுருமாற்றி, synthesizerம் வெச்சி இருக்கேன்...”
“சரி, நான் என்ன செய்யணும் இப்ப?”
”இல்ல, மின்னுருவேற்றம்(encode) செய்யும் போது கூட இருக்க ஆள் யாரும் இங்க இல்ல? நீங்க வந்தீங்கன்னா?”
“ok... got it... I am on my way..."
இளா, வேக வேகமாய்ப் புறப்படுகிறார். அவரது மனைவி திடுக்கிட்டு, “மாமா, எங்க பொறப்புட்டு போறீங்க? சொல்லவே இல்ல??”
“இல்ல, நம்ம மணியண்ணனை ஈரோட்டுக்கு அனுப்பிட்டு வந்தர்றேன்...”
“யாரு, பழமைபேசி மணியண்ணனையா? எப்படிங்க??”
”சிந்தசைசர்ல என்கோடு செஞ்சி, தரவேற்றம்(upload) செய்துவிட்டா.... கோயமுத்தூர் GCTல அவங்க ஒறம்பரக்காரப் பையன் டிகோடு ஆனதுக்கப்புறம் டிசிந்தசைசு செஞ்சிடுவாரு...”
“ஒரு எழவும் புரியலை... சித்த வெவரமாச் சொல்லுங்க...”
”நான் வந்து சொல்றேன்... போய்ட்டு சீக்கிரம் வந்துடுறேன்... நீயும் சூர்யாவும் புறப்பட்டுத் தயாரா இருங்க... நாமளும் வெளிய போறம்”
போசுடன் நகரில் இருந்து, ச்சார்ல்சு நதிக்கரையின் ஓரமாகப் பயணித்து, லோகன் விமான நிலையத்தையும் கடந்து, மான்செசுடர் நகரின் வழியாக பெட்ஃபோர்டு வந்து சேருகிறார் இளா.
"வாங்க இளா; இந்தாங்க இந்த சிந்தசைசர் யூனிட்டை உங்க வண்டியில வையுங்க!”
“சரீங் மணி; இப்ப நாம எங்க போறம்?”
“MITக்குத்தான்... அங்க இருக்குற டேனியல் ஆய்வுக் கூடத்துலதான் தரவேற்றம் செய்யுற வசதி இருக்கு. ஏற்கனவே நண்பர் அலெக்சுக்குத் தெரியப்படுத்தியாச்சு. அவர் அங்க தயாரா இருப்பாரு!”
MIT, Massachusetts Institute of Technology, உலகப் புகழ் பெற்ற ஆய்வுச் சாலை, கேம்பிரிட்ச்சு நகரில் இருக்கிறது. இங்குள்ள ஆய்வுக்கூடத்தில்தான், மனிதர்களை மின்னுருவேற்றம் மற்றும் மின்னுருவிறக்கம் முதன் முதலில் வெளியுலகுக்குச் செய்து காட்டப்பட்டது. மின்னணுவியல் துறைத் தலைவராக இந்நிறுவனத்தில் வேலை செய்யும் டொவ் பாரவ் என்பார் ஒரு யூதர். இவரும், ப்ழமைபேசியின் நண்பரான அலெக்சும் நெருங்கிய நண்பர்கள்.
“தரவேற்றம் செய்யுறதுல இந்த சிந்தசைசரோட பங்கு என்னன்னு நான் தெரிஞ்சிக்கலாமா?”
“அதாவது வந்துங்க இளா, ஆய்வுக்கூடத்துல இருக்குற தரவேற்ற மேடைதான் மனித உடம்புல இருக்குற ஒவ்வொரு அணுவையும் மின்னணுக்களா மாற்றும். உடம்புல இருக்குற டிஎன்ஏ வையும் மாற்றி, தகுந்த மின்னணுக்களா மாத்திடும். அப்படி மாத்தினதுக்கு அப்புறம், இந்த சிந்தசைசரானது மாத்தின அணுக்களை எல்லாம் எலக்ட்ரானிக் டேட்டாவா மாத்தி கணினிக்குள்ள அனுப்பும்”
“ஓ, அப்படியா? அப்ப உங்க பூதவுடல்?”
“அந்த மின்னுருவேற்றத்தின் போது உடலானது கரைஞ்சி மின்னணுக்களா மாறிடும். மின்னுருவேற்ற மேடைக்கு, துல்லியமா மனிதனை மின்னணுக்களாவும், சிக்கலில்லாத மனித மின்னணுத் தொகுதிகளை மனிதனாவும் மீளுருவாக்கம் செய்யக் கூடிய வல்லமை இருக்கு.”
“அப்ப யாரை வேணுன்னாலும், எங்க வேணுன்னாலும் மின்னணுக்களாக மாற்றி அனுப்பி வைக்கப்படலாமா??”
“அதான் முடியாது! அதுக்குன்னு இருக்கிற சர்வதேச அமைப்புகிட்ட இருந்து ஒப்புதல் வாங்கணும். சீரிய மருத்துவப் பரிசோதனை, மரபணு மீளாக்கம், மரபணு மின்னுருவாக்கம் தொடர்பான பல சோதனைகள் செய்ததற்கு அப்புறமாத்தான் ஒப்புதல் தருவாங்க”
“ஓ, அப்படியா? அப்ப இந்த விசா? மத்த நாடுகளுக்குள்ள நுழையுறதுக்கு?”
“நல்ல கேள்வி! நாம அந்தந்த நாடுகள்கிட்ட இருந்து முன்கூட்டியே அனுமதி வாங்கி, அந்த விபரங்களை சிந்தசைசர்லயும், டிசிந்தசைசர்லயும் போட்டு வெச்சிடணும். அப்பத்தான், மின்னுருவேற்றமும் மின்னுருவிறக்கமும் செய்ய முடியும்.”
“ஓ அப்ப, உங்க ஒறம்பரைக்காரப் பையங்கிட்ட அந்தத் தகவல் குடுத்து வெச்சி இருக்கீங்களா?”
“ஆமா; கோயமுத்தூர் GCTல இருக்குற ஆய்வகத்துல என்னோட விசாத் தகவல்கள் அடுத்த மூன்றாண்டுகளுக்கு சேமிப்புல இருக்கும். எங்க மாமா பையன் நந்துகிட்டயும் இருக்கு”
”சரிங்க.. எனக்கு ஒரே பயமா இருக்கு... அதெப்படி, உங்களை எலக்ட்ரானிக் டேட்டாவா மாத்தின அப்புறம், மறுபடியும் டிகோடு செய்வோம்ங்றதுக்கு என்ன உத்தரவாதம்?”
“அதெல்லாம் ஒன்னும் பயப்படத் தேவை இல்லை; MIT ஆய்வுக்கூடமும், GCT ஆய்வுக்கூடமுந்தான் அதுக்குப் பொறுப்பு!”
”சரி, எதோ ஒரு உறுப்பு உடம்புல செரியா வேலை செய்யலை... என்னங்க செய்யுறது?”
“ஒன்னும் பிரச்சினை இல்லை. நம்ம உடம்போட ஒவ்வொரு உறுப்போட மரபணுக்களும் அந்த சர்வதேச அமைப்போட வங்கியில சேம அணுக்களாச் சேமிக்கப்பட்டு இருக்கு. அதை வெச்சிக் குளோனிங் செய்து பொருத்திடுவாங்க இளா!”
“ஓ, இதுக்கெல்லாங் கூடக் காப்பீடு இருக்குங்ளா?”
“நிச்சயமா? அது இல்லாம் எப்படி? சரிங்க, ஆய்வுக்கூட வாயில் வந்திடுச்சி. நான் அலெக்சைக் கூப்புடுறேன்..”
“சரி, நீங்க கூப்பிடுங்க...”
இளாவும், பழமைபேசியும் ஆய்வுக்கூட மனித மின்னுருவாக்க சாலையினுள் நுழைகிறார்கள். ”Hey Mani, come on man...."
“Hey Daniel... whats up?"
"This is Ila, who is my best friend!" என இருவரையும் அறிமுகப்படுத்த, இருவரும் ஒருவருக்கொருவர் வணக்கம் சொல்லி அறிமுகம் செய்து கொள்கிறார்கள்.
அடுத்த கணமே, அணு மின்னுருவாக்கச் சாலையின் பிரதான அறைக்குள் பழமைபேசி நுழைகிறார். இளா அங்கிருக்கும் கண்ணாடித் தடுப்புக்கு வெளியே இருந்தபடியே அவதானிக்கத் துவங்குகிறார்.
உடல் முழுக்க மின்கம்பிகள் நொடி நேரத்தில் வியாபிக்கிறது. மின்கம்பிகளுக்கு இடையே உடல் பொருந்தி இருப்பது தெரியாத அளவுக்கு, மின்கம்பிகள் படர்ந்து இருந்தன. இளாவிடம் இருந்த சிந்தசைசர் பெட்டி, அவரிடம் இருந்து அலெக்சு கைக்கு மாறுகிறது.
அடுத்த சில நிமிடங்களில், “ok... start" எனும் குரல் ஓங்கி ஒலிக்க... கால்கள் இரண்டும் கரையத் துவங்கின. இளாவின் முகம் பேயறைந்தது போலக் காணப்பட்டது. அவரது முகபாவத்தைக் கண்டதும், கண்ணாடிச் சுவர்களின் வெளிப்புறமாகத் திரைச்சீலை இறங்க ஆரம்பித்தது.
(உடல் மின்னுருவாக்கம் பெற்றுக் கோயம்பத்தூர் சென்றடைந்ததா? இல்லையா?? இன்னும் என்னென்ன நுட்ப விழுமியங்கள் இதில் அடங்கி இருக்கின்றன? அடுத்த இடுகையில்...)
”ட்ரிங்... ட்ரிங்...”
“அகோ, நான் இளா பேசுறேன்... நீங்க?”
“இளா, நான் மணிதாம் பேசுறேன்”
“சொல்லுங்க மணி... என்ன சமாச்சாரம்?”
“2011 ஈரோடு சங்கமத்துக்குப் போயே ஆகணும் நானு!”
“என்ன வெளையாடுறீங்களா? கூட்டம் ஆரம்பிக்கிறதுக்கு இன்னும் சித்த நேரந்தான இருக்கு? அமெரிக்காவுல இருக்குற நீங்க எப்படி இன்னும் ஒரு மணி நேரத்துல ஈரோடு போக முடியும்?”
“ஒன்னும் பிரச்சினை இல்லை; நான் பக்கத்து ஊர், பெட்ஃபோர்டுலதான் இருக்கேன். கூடவே மின்னுருமாற்றி, synthesizerம் வெச்சி இருக்கேன்...”
“சரி, நான் என்ன செய்யணும் இப்ப?”
”இல்ல, மின்னுருவேற்றம்(encode) செய்யும் போது கூட இருக்க ஆள் யாரும் இங்க இல்ல? நீங்க வந்தீங்கன்னா?”
“ok... got it... I am on my way..."
இளா, வேக வேகமாய்ப் புறப்படுகிறார். அவரது மனைவி திடுக்கிட்டு, “மாமா, எங்க பொறப்புட்டு போறீங்க? சொல்லவே இல்ல??”
“இல்ல, நம்ம மணியண்ணனை ஈரோட்டுக்கு அனுப்பிட்டு வந்தர்றேன்...”
“யாரு, பழமைபேசி மணியண்ணனையா? எப்படிங்க??”
”சிந்தசைசர்ல என்கோடு செஞ்சி, தரவேற்றம்(upload) செய்துவிட்டா.... கோயமுத்தூர் GCTல அவங்க ஒறம்பரக்காரப் பையன் டிகோடு ஆனதுக்கப்புறம் டிசிந்தசைசு செஞ்சிடுவாரு...”
“ஒரு எழவும் புரியலை... சித்த வெவரமாச் சொல்லுங்க...”
”நான் வந்து சொல்றேன்... போய்ட்டு சீக்கிரம் வந்துடுறேன்... நீயும் சூர்யாவும் புறப்பட்டுத் தயாரா இருங்க... நாமளும் வெளிய போறம்”
போசுடன் நகரில் இருந்து, ச்சார்ல்சு நதிக்கரையின் ஓரமாகப் பயணித்து, லோகன் விமான நிலையத்தையும் கடந்து, மான்செசுடர் நகரின் வழியாக பெட்ஃபோர்டு வந்து சேருகிறார் இளா.
"வாங்க இளா; இந்தாங்க இந்த சிந்தசைசர் யூனிட்டை உங்க வண்டியில வையுங்க!”
“சரீங் மணி; இப்ப நாம எங்க போறம்?”
“MITக்குத்தான்... அங்க இருக்குற டேனியல் ஆய்வுக் கூடத்துலதான் தரவேற்றம் செய்யுற வசதி இருக்கு. ஏற்கனவே நண்பர் அலெக்சுக்குத் தெரியப்படுத்தியாச்சு. அவர் அங்க தயாரா இருப்பாரு!”
MIT, Massachusetts Institute of Technology, உலகப் புகழ் பெற்ற ஆய்வுச் சாலை, கேம்பிரிட்ச்சு நகரில் இருக்கிறது. இங்குள்ள ஆய்வுக்கூடத்தில்தான், மனிதர்களை மின்னுருவேற்றம் மற்றும் மின்னுருவிறக்கம் முதன் முதலில் வெளியுலகுக்குச் செய்து காட்டப்பட்டது. மின்னணுவியல் துறைத் தலைவராக இந்நிறுவனத்தில் வேலை செய்யும் டொவ் பாரவ் என்பார் ஒரு யூதர். இவரும், ப்ழமைபேசியின் நண்பரான அலெக்சும் நெருங்கிய நண்பர்கள்.
“தரவேற்றம் செய்யுறதுல இந்த சிந்தசைசரோட பங்கு என்னன்னு நான் தெரிஞ்சிக்கலாமா?”
“அதாவது வந்துங்க இளா, ஆய்வுக்கூடத்துல இருக்குற தரவேற்ற மேடைதான் மனித உடம்புல இருக்குற ஒவ்வொரு அணுவையும் மின்னணுக்களா மாற்றும். உடம்புல இருக்குற டிஎன்ஏ வையும் மாற்றி, தகுந்த மின்னணுக்களா மாத்திடும். அப்படி மாத்தினதுக்கு அப்புறம், இந்த சிந்தசைசரானது மாத்தின அணுக்களை எல்லாம் எலக்ட்ரானிக் டேட்டாவா மாத்தி கணினிக்குள்ள அனுப்பும்”
“ஓ, அப்படியா? அப்ப உங்க பூதவுடல்?”
“அந்த மின்னுருவேற்றத்தின் போது உடலானது கரைஞ்சி மின்னணுக்களா மாறிடும். மின்னுருவேற்ற மேடைக்கு, துல்லியமா மனிதனை மின்னணுக்களாவும், சிக்கலில்லாத மனித மின்னணுத் தொகுதிகளை மனிதனாவும் மீளுருவாக்கம் செய்யக் கூடிய வல்லமை இருக்கு.”
“அப்ப யாரை வேணுன்னாலும், எங்க வேணுன்னாலும் மின்னணுக்களாக மாற்றி அனுப்பி வைக்கப்படலாமா??”
“அதான் முடியாது! அதுக்குன்னு இருக்கிற சர்வதேச அமைப்புகிட்ட இருந்து ஒப்புதல் வாங்கணும். சீரிய மருத்துவப் பரிசோதனை, மரபணு மீளாக்கம், மரபணு மின்னுருவாக்கம் தொடர்பான பல சோதனைகள் செய்ததற்கு அப்புறமாத்தான் ஒப்புதல் தருவாங்க”
“ஓ, அப்படியா? அப்ப இந்த விசா? மத்த நாடுகளுக்குள்ள நுழையுறதுக்கு?”
“நல்ல கேள்வி! நாம அந்தந்த நாடுகள்கிட்ட இருந்து முன்கூட்டியே அனுமதி வாங்கி, அந்த விபரங்களை சிந்தசைசர்லயும், டிசிந்தசைசர்லயும் போட்டு வெச்சிடணும். அப்பத்தான், மின்னுருவேற்றமும் மின்னுருவிறக்கமும் செய்ய முடியும்.”
“ஓ அப்ப, உங்க ஒறம்பரைக்காரப் பையங்கிட்ட அந்தத் தகவல் குடுத்து வெச்சி இருக்கீங்களா?”
“ஆமா; கோயமுத்தூர் GCTல இருக்குற ஆய்வகத்துல என்னோட விசாத் தகவல்கள் அடுத்த மூன்றாண்டுகளுக்கு சேமிப்புல இருக்கும். எங்க மாமா பையன் நந்துகிட்டயும் இருக்கு”
”சரிங்க.. எனக்கு ஒரே பயமா இருக்கு... அதெப்படி, உங்களை எலக்ட்ரானிக் டேட்டாவா மாத்தின அப்புறம், மறுபடியும் டிகோடு செய்வோம்ங்றதுக்கு என்ன உத்தரவாதம்?”
“அதெல்லாம் ஒன்னும் பயப்படத் தேவை இல்லை; MIT ஆய்வுக்கூடமும், GCT ஆய்வுக்கூடமுந்தான் அதுக்குப் பொறுப்பு!”
”சரி, எதோ ஒரு உறுப்பு உடம்புல செரியா வேலை செய்யலை... என்னங்க செய்யுறது?”
“ஒன்னும் பிரச்சினை இல்லை. நம்ம உடம்போட ஒவ்வொரு உறுப்போட மரபணுக்களும் அந்த சர்வதேச அமைப்போட வங்கியில சேம அணுக்களாச் சேமிக்கப்பட்டு இருக்கு. அதை வெச்சிக் குளோனிங் செய்து பொருத்திடுவாங்க இளா!”
“ஓ, இதுக்கெல்லாங் கூடக் காப்பீடு இருக்குங்ளா?”
“நிச்சயமா? அது இல்லாம் எப்படி? சரிங்க, ஆய்வுக்கூட வாயில் வந்திடுச்சி. நான் அலெக்சைக் கூப்புடுறேன்..”
“சரி, நீங்க கூப்பிடுங்க...”
இளாவும், பழமைபேசியும் ஆய்வுக்கூட மனித மின்னுருவாக்க சாலையினுள் நுழைகிறார்கள். ”Hey Mani, come on man...."
“Hey Daniel... whats up?"
"This is Ila, who is my best friend!" என இருவரையும் அறிமுகப்படுத்த, இருவரும் ஒருவருக்கொருவர் வணக்கம் சொல்லி அறிமுகம் செய்து கொள்கிறார்கள்.
அடுத்த கணமே, அணு மின்னுருவாக்கச் சாலையின் பிரதான அறைக்குள் பழமைபேசி நுழைகிறார். இளா அங்கிருக்கும் கண்ணாடித் தடுப்புக்கு வெளியே இருந்தபடியே அவதானிக்கத் துவங்குகிறார்.
உடல் முழுக்க மின்கம்பிகள் நொடி நேரத்தில் வியாபிக்கிறது. மின்கம்பிகளுக்கு இடையே உடல் பொருந்தி இருப்பது தெரியாத அளவுக்கு, மின்கம்பிகள் படர்ந்து இருந்தன. இளாவிடம் இருந்த சிந்தசைசர் பெட்டி, அவரிடம் இருந்து அலெக்சு கைக்கு மாறுகிறது.
அடுத்த சில நிமிடங்களில், “ok... start" எனும் குரல் ஓங்கி ஒலிக்க... கால்கள் இரண்டும் கரையத் துவங்கின. இளாவின் முகம் பேயறைந்தது போலக் காணப்பட்டது. அவரது முகபாவத்தைக் கண்டதும், கண்ணாடிச் சுவர்களின் வெளிப்புறமாகத் திரைச்சீலை இறங்க ஆரம்பித்தது.
(உடல் மின்னுருவாக்கம் பெற்றுக் கோயம்பத்தூர் சென்றடைந்ததா? இல்லையா?? இன்னும் என்னென்ன நுட்ப விழுமியங்கள் இதில் அடங்கி இருக்கின்றன? அடுத்த இடுகையில்...)
9/22/2010
கொடிய அலைபேசி!
குழந்தைகளையும் பாராமல்
ஓடிப்போன அந்த அண்டை வீட்டு
அத்தையின் வெற்றிடத்தை நினைத்து நினைத்து
அழுது புலம்பும் மாமாவை
வீட்டு வாசலில் இருந்து பார்த்த
அரும்புமொட்டு ஒன்று,
அம்மா, அம்மா...
நீயும்
காணாமப் போயிடுவியாம்மா?
அப்ப நானூ??
அக்கணமே,
சுவற்றில் பட்டுச் சுக்கு நூறாகித் தெறித்தது
தொடுப்பிலிருந்த
அந்தக் கொடிய அலைபேசி!
ஓடிப்போன அந்த அண்டை வீட்டு
அத்தையின் வெற்றிடத்தை நினைத்து நினைத்து
அழுது புலம்பும் மாமாவை
வீட்டு வாசலில் இருந்து பார்த்த
அரும்புமொட்டு ஒன்று,
அம்மா, அம்மா...
நீயும்
காணாமப் போயிடுவியாம்மா?
அப்ப நானூ??
அக்கணமே,
சுவற்றில் பட்டுச் சுக்கு நூறாகித் தெறித்தது
தொடுப்பிலிருந்த
அந்தக் கொடிய அலைபேசி!
8/31/2010
அமெரிக்கத் தலைநகரில் இருந்து அரசி நகருக்கு...
உள்ளூர்ப் பயணிகள் அனைவரும் அடித்துப் பிடித்து, பரிசோதனைகளை எல்லாம் செய்துவிட்டு, நுழைவுப் பரிகாரங்கள் அனைத்தையும் முடித்து ஆயாசமாய் அமர்ந்திருக்கின்றனர்.
வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த அயலகப் பயணிகளோ, வந்த களைப்பினூடாக, இந்த விமானத்தை கிளப்பித் தொலைத்தாலென்ன எனும் பாங்கில் நித்திரையின் பிடியில் அல்லாடிக் கொண்டிருந்தார்கள்.
முதிர்கன்னியவள் முறையான அறிவிப்பை வெளியிடுகிறாள், “Flight US789 is ready to board; we ask those who need extra time and travelling with small children are to board at this time”.
அடுத்ததாக, முதல்வகுப்புப் பயணிகளும் அதிசாரிப் பயணிகளும்(frequent travelers) அழைக்கப்பட, ஒவ்வொருவராக உள்ளே சென்று அமர்கிறார்கள். இப்படியான பயணிகளை இறுதியில் அல்லவா அழைக்கப்பட வேண்டும்? சிறப்புச் சலுகை அளிக்கிறேன் பேர்வழி என்று, முன்னதாகவே அழைத்து அந்த குறுகிய இட்த்தில் போட்டு அடைப்பது என்பது சிறப்புச் சலுகையாகுமா?? அய்யகோ!!
மீதம் இருந்த பயணிகள் எல்லாம் எப்படி ஏறினார்கள், எவ்வளவு விரைவாக ஏறினார்கள் என்றெல்லாம் அவதானித்து இருக்கவில்லை நாம். விமானத்தின் கதவுகள் இழுத்துச் சாத்தப்பட்டன. விமான பணிப் பெண்களாக இருந்த அந்த இரு மூதாட்டிகளும் தத்தம் கடமைகளில் கருத்தாய் இருந்து, இங்குமங்குமாய் ஓடித் திரிந்தனர். முதல்வகுப்பில் இருக்கும் பயணிகள் எல்லாம், தத்தம் நிறுவனங்களுக்கு குறுந்தகவல்களை தடதடவென அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.
மூதாட்டிகளில் ஒருத்தி, விமான ஓட்டிகளின் கருவறையின் கதவை இழுத்திச் சாத்திவிட்டுத் தீர்மானமாய்ச் சொன்னாள், “விமானத்தின் எடையானது சமச்சீராக இல்லை. முதல் வகுப்பில் அமர்ந்திருக்கும் யாராவது ஒருவர், விமானத்தின் கடைசி இருக்கையில் சென்று அமர்ந்தாலொழிய விமானம் புறப்பட வாய்ப்பில்லை; தன்னார்வலர் யாரேனும் உதவலாமே?” என்றாள்.
முதல்வகுப்புச் சீமான்களும் சீமாட்டிகளும் தத்தம் வேலைகளில் மூழ்கி இருப்பதைப் போல பாசாங்கு செய்தார்கள். யாருக்கும் அறிவிப்பானது காதில் விழுந்தது போலத் தெரியவில்லை. சிறிது ஏமாற்றத்துடன், குரலைச் சற்று உயர்த்தியபடி மீண்டும் அலறலானாள் விமான வரவேற்பு மூதாட்டி.
அரைகுறை நித்திரையில் தலையை ஊசலாட விட்டுக்கொண்டிருந்த அவன், திடீரென வெகுண்டவனாய், “என்ன? என்ன??” என வினவினான். மூதாட்டி விபரத்தைச் சொல்லவும், சற்றும் தாமதியாது விமானத்தின் கடைசி இருக்கைக்குச் சென்று அமர்ந்தான். மீதமுள்ள முதல்வகுப்புப் பயணிகளோ, “கேனப்பய... கேனப்பய... முதல்வகுப்பு விருந்தோம்பலை வுட்டுட்டு கடைசி இருக்கைக்குப் போறாம் பாரு கேனயன்” என நினைத்து எக்காளமாய் உள்ளூரச் சிரித்தார்கள்.
விமான ஓட்டியின் சமிக்கைக்குப் பிறகு, மூதாட்டியானவள் ஆயத்த அறிவிப்புகளைச் செயல்முறையோடு ஒப்புவித்தாள். எப்படி இருக்கைப் பட்டையை அணிய வேண்டும், தற்காப்புச் செயல்கள் எப்படியாக அமைய வேண்டும் என்றெல்லாம் செய்து காண்பித்தாள். நூற்றில் ஒருவராவது இதைக் கவனமாக்க் கேட்கிறார்களா என்பது வினவுதலுக்கு உரியதே.
விமானம் சரியான நேரத்திற்குக் கிளம்பி, வழமைக்கு மாறாகச் சற்று முன்கூட்டியே சென்று சேர வேண்டிய இடமான, அரசி நகரமாம் ஃசார்லட் நகரின் விமான நிலைய ஓடுபாதையில் இறங்கிச் சீறி, தவழ்ந்து, பின் நிலைக்கு வந்து சேர்ந்து நின்றது. நின்றதுதான் தாமதம், அனைவரும் ஒருங்கே எழுந்து நின்று, தடதடவென பெட்டிகள் இருக்கும் ஒருங்கின் கதவுகளைத் திறக்கலானார்கள். கடைசி இருக்கையில் இருக்கும் அந்த கேனயன் மட்டும் இன்னும் நித்திரையில்.
முதல்வகுப்புப் பயணிகள் த்த்தம் மேலங்கியை விமானப் பணிப் பெண்ணிடம் கேட்டு வாங்கினார்கள். மற்றவர்கள், த்த்தம் அலைபேசிகளில் வினையாற்றத் துவங்கினார்கள். முதல்வகுப்பில் இருக்கும் பயணிகளோ, அனைவருக்கும் முன்பாக வெளியே சென்றுவிடலாம் எனும்பெருமித்ம்.
முன்கதவின் பார்வையாடியின் வழியாக, மின்பாலத்தை விமானத்தை ஒட்டி நிறுத்த வழிவகை செய்து கொண்டிருந்தாள் விமானப் பணிப் பெண். சரியாக்க் கொண்டு நிறுத்திய பின், முதல்வகுப்புப் பயணிகளை ஏளனமாய்ப் பார்த்தாள் அவள். பார்த்துவிட்டு அறிவிப்புச் செய்யலானாள்,
“I kindly request everyone to be seated in their seat… we got to let go the Gentleman first who helped us to get here… I request the Gentleman to come forward!!”, முதல்வகுப்பில் இருள் சூழ்ந்து தலைகள் கவிழ்ந்தன.
கடைசி இருக்கையில் இருந்தவனுக்கோ, ஒருவிதமான கூச்சமும் தயக்கமும். இருந்தாலும் எழுந்து, மெதுவாக முன்னேறத் துவங்கினான். அவன் முன்னேறி வருவதைக் கண்ட அந்த மூதாட்டி அவனைப் பார்த்து நன்றியுணர்வோடு முகைத்தாள். பதிலுக்கு அவனும் நன்றி சொல்லிவிட்டு நகர முற்பட்டான். அவளோ, அவனை அன்பாக ஆரத் (hug) தழுவினாள்.
வீட்டாரைத் தாயகத்தில் விட்டுப் பிரிந்து வந்தவனுக்கு, அந்தத் தழுவலானது மாமருந்தாக இருந்தது; அதில் உங்களுக்கும் பெருமைதானே? உங்கள் சட்டையின் கழுத்துப் பட்டைகளையும் கிளப்பிவிட்டுக் கொள்ளுங்கள்; பெருமை அடைந்தவன் ஒரு தமிழ்ப் பதிவன் என்ற வகையில்!
வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த அயலகப் பயணிகளோ, வந்த களைப்பினூடாக, இந்த விமானத்தை கிளப்பித் தொலைத்தாலென்ன எனும் பாங்கில் நித்திரையின் பிடியில் அல்லாடிக் கொண்டிருந்தார்கள்.
முதிர்கன்னியவள் முறையான அறிவிப்பை வெளியிடுகிறாள், “Flight US789 is ready to board; we ask those who need extra time and travelling with small children are to board at this time”.
அடுத்ததாக, முதல்வகுப்புப் பயணிகளும் அதிசாரிப் பயணிகளும்(frequent travelers) அழைக்கப்பட, ஒவ்வொருவராக உள்ளே சென்று அமர்கிறார்கள். இப்படியான பயணிகளை இறுதியில் அல்லவா அழைக்கப்பட வேண்டும்? சிறப்புச் சலுகை அளிக்கிறேன் பேர்வழி என்று, முன்னதாகவே அழைத்து அந்த குறுகிய இட்த்தில் போட்டு அடைப்பது என்பது சிறப்புச் சலுகையாகுமா?? அய்யகோ!!
மீதம் இருந்த பயணிகள் எல்லாம் எப்படி ஏறினார்கள், எவ்வளவு விரைவாக ஏறினார்கள் என்றெல்லாம் அவதானித்து இருக்கவில்லை நாம். விமானத்தின் கதவுகள் இழுத்துச் சாத்தப்பட்டன. விமான பணிப் பெண்களாக இருந்த அந்த இரு மூதாட்டிகளும் தத்தம் கடமைகளில் கருத்தாய் இருந்து, இங்குமங்குமாய் ஓடித் திரிந்தனர். முதல்வகுப்பில் இருக்கும் பயணிகள் எல்லாம், தத்தம் நிறுவனங்களுக்கு குறுந்தகவல்களை தடதடவென அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.
மூதாட்டிகளில் ஒருத்தி, விமான ஓட்டிகளின் கருவறையின் கதவை இழுத்திச் சாத்திவிட்டுத் தீர்மானமாய்ச் சொன்னாள், “விமானத்தின் எடையானது சமச்சீராக இல்லை. முதல் வகுப்பில் அமர்ந்திருக்கும் யாராவது ஒருவர், விமானத்தின் கடைசி இருக்கையில் சென்று அமர்ந்தாலொழிய விமானம் புறப்பட வாய்ப்பில்லை; தன்னார்வலர் யாரேனும் உதவலாமே?” என்றாள்.
முதல்வகுப்புச் சீமான்களும் சீமாட்டிகளும் தத்தம் வேலைகளில் மூழ்கி இருப்பதைப் போல பாசாங்கு செய்தார்கள். யாருக்கும் அறிவிப்பானது காதில் விழுந்தது போலத் தெரியவில்லை. சிறிது ஏமாற்றத்துடன், குரலைச் சற்று உயர்த்தியபடி மீண்டும் அலறலானாள் விமான வரவேற்பு மூதாட்டி.
அரைகுறை நித்திரையில் தலையை ஊசலாட விட்டுக்கொண்டிருந்த அவன், திடீரென வெகுண்டவனாய், “என்ன? என்ன??” என வினவினான். மூதாட்டி விபரத்தைச் சொல்லவும், சற்றும் தாமதியாது விமானத்தின் கடைசி இருக்கைக்குச் சென்று அமர்ந்தான். மீதமுள்ள முதல்வகுப்புப் பயணிகளோ, “கேனப்பய... கேனப்பய... முதல்வகுப்பு விருந்தோம்பலை வுட்டுட்டு கடைசி இருக்கைக்குப் போறாம் பாரு கேனயன்” என நினைத்து எக்காளமாய் உள்ளூரச் சிரித்தார்கள்.
விமான ஓட்டியின் சமிக்கைக்குப் பிறகு, மூதாட்டியானவள் ஆயத்த அறிவிப்புகளைச் செயல்முறையோடு ஒப்புவித்தாள். எப்படி இருக்கைப் பட்டையை அணிய வேண்டும், தற்காப்புச் செயல்கள் எப்படியாக அமைய வேண்டும் என்றெல்லாம் செய்து காண்பித்தாள். நூற்றில் ஒருவராவது இதைக் கவனமாக்க் கேட்கிறார்களா என்பது வினவுதலுக்கு உரியதே.

முதல்வகுப்புப் பயணிகள் த்த்தம் மேலங்கியை விமானப் பணிப் பெண்ணிடம் கேட்டு வாங்கினார்கள். மற்றவர்கள், த்த்தம் அலைபேசிகளில் வினையாற்றத் துவங்கினார்கள். முதல்வகுப்பில் இருக்கும் பயணிகளோ, அனைவருக்கும் முன்பாக வெளியே சென்றுவிடலாம் எனும்பெருமித்ம்.
முன்கதவின் பார்வையாடியின் வழியாக, மின்பாலத்தை விமானத்தை ஒட்டி நிறுத்த வழிவகை செய்து கொண்டிருந்தாள் விமானப் பணிப் பெண். சரியாக்க் கொண்டு நிறுத்திய பின், முதல்வகுப்புப் பயணிகளை ஏளனமாய்ப் பார்த்தாள் அவள். பார்த்துவிட்டு அறிவிப்புச் செய்யலானாள்,
“I kindly request everyone to be seated in their seat… we got to let go the Gentleman first who helped us to get here… I request the Gentleman to come forward!!”, முதல்வகுப்பில் இருள் சூழ்ந்து தலைகள் கவிழ்ந்தன.
கடைசி இருக்கையில் இருந்தவனுக்கோ, ஒருவிதமான கூச்சமும் தயக்கமும். இருந்தாலும் எழுந்து, மெதுவாக முன்னேறத் துவங்கினான். அவன் முன்னேறி வருவதைக் கண்ட அந்த மூதாட்டி அவனைப் பார்த்து நன்றியுணர்வோடு முகைத்தாள். பதிலுக்கு அவனும் நன்றி சொல்லிவிட்டு நகர முற்பட்டான். அவளோ, அவனை அன்பாக ஆரத் (hug) தழுவினாள்.
வீட்டாரைத் தாயகத்தில் விட்டுப் பிரிந்து வந்தவனுக்கு, அந்தத் தழுவலானது மாமருந்தாக இருந்தது; அதில் உங்களுக்கும் பெருமைதானே? உங்கள் சட்டையின் கழுத்துப் பட்டைகளையும் கிளப்பிவிட்டுக் கொள்ளுங்கள்; பெருமை அடைந்தவன் ஒரு தமிழ்ப் பதிவன் என்ற வகையில்!
8/13/2010
மொத்தமா ஒரு வெலை போட்டு?!

“ஏங்ணா, இதுக்கு அந்தப் பொறமும் ஊடுக கட்டுறதுக்கு எடம் இருக்குதுங்ளா?”
“க்கும்... அதெல்லாம் வித்து நெம்ப நாளாச்சுங் கண்ணூ”
“அந்த மலைமேல எதனாச்சி?”
“க்கும்... மொத்தமா ஒரு வெலை போட்டு மொத்த மலையுமு ஒரு நாளைக்கு வெல போகத்தான போகுது?!”
Subscribe to:
Posts (Atom)