6/08/2008

அந்த நாள் ஞாபகம்....

தண்ணிக் கொடமெடுத்து தல நனஞ்சு,
ஒடல் நனஞ்சு அன்ன நடநடந்து - கண்ணம்மா
அடயாளம் தெரிய வேணும் பொன்னம்மா!

அடயாளமும் தெரியுதுங்க அத்தான்னும் புரியுதுங்க
மச்சான்; சடங்கா இருக்கயிலே சந்திச்சு இப்படிப் பேசலாமா

கண்ணே பொன்னே என்று சொல்லி கண்ணம்மா - நீ
வழியொதிங்கிப் போகலாமா பொன்னம்மா

வழியொதிங்கிப் போகவில்லை வாய்முத்துச்
சிந்தவில்லை; வீதியில கண்டாக்க - கண்னய்யா,
வித்தியாசமாய் எண்ணுவாக; பொன்னிற மச்சான,
சுலுவுல மறந்துற மாட்டேன் மணி மாமா


பேச்சு மறக்க வேண்டாம் பெத்தவளக் கேக்க வேண்டாம்
பொறந்தது உனக்காக கண்ணம்மா - அப்படி பேதலிக்க
வேண்டாமடி அஞ்சலை; சாருலட் ஓடிருவோம்
சாலியாத் தான் இருந்துருவோம் புள்ள

போவது ஞாயமில்ல;போகுமுன்ன நல்ல கொண்டாட்டம்!
போனாத்தெரியும் சாமி,திண்டாட்டம்!பரதேசம் என்னக்கூட்டி,
தனியா வழிகாட்டி போவது ஞாயமில்ல!!


ஆல மரமுறங்க, அடி மரத்துக் கொப்பு உறங்க,
உம்மடிமேல நானுறங்க, நீலக் கருங்குயிலே
நிக்கட்டுமா போகட்டுமா

திரிஞ்ச நாளும் போதுமய்யா
ஊடு போய்ச் சேருமய்யா

No comments: