6/22/2008

சமையல் அறையில்.......

சின்ன வெங்காயம்

முதல்ல, சின்ன வெங்காயத்தை அதிகமா சாப்பிடணும். இது இதயநோய், ஆஸ்துமா இவற்றையெல்லாம் கட்டுப்படுத்தும். பனிக்காலத்துல வர்ற சுவாசத்தடையை சீராக்கும்.

தேன்

இது மாதிரி ஒரு இயற்கையான மருந்து உலகத்திலே வேறு எதுவும் இல்லை! நாம தேனை சாப்பிடும்போதே ரத்தத்தில் கலந்துவிடும் அரிய மருந்து இது, அதனால்தான் மாத்திரைகளை தேனில் கலந்து சாப்பிடச் சொல்றாங்க வைத்தியருங்க..! இதை தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தா நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாவது மட்டுமல்ல, நினைவாற்றலும் அதிகமாகும். மேலும் உற்சாகம் அதிகரிக்கும். ராத்திரி தூங்குறதுக்கு முன்பு, ஒரு ஸ்பூன் தேனை, மிதமான சூட்டில் உள்ள பாலில் கலந்து சாப்பிட்டால் நல்லா தூக்கம் வரும். அதத்தான் மனுசி சொல்றாங்க, தேன கடவுளுக்கு படச்சா ஆயுள் கூடும்னு. (அவங்களுக்கு கடவுள் நாம தான?!)


தக்காளி

பழங்களில், நாம தினமும் சாப்பாட்டில் சேர்க்கிற தக்காளியைத் தான் முதல்ல சொல்லணும். தக்காளியில் சிவப்பு நிறம்தான் நல்லது. அதுல 'லைஸோபீன்' என்ற மூலப்பொருள் இருக்கு. இது உடலுக்கு ரொம்ப ரொம்ப நல்லது. அதோட, போலிக் ஆசிட், இரும்பு சத்து, வைட்டமின் சி ஆகிய சத்துக்களும் இருப்பதால் தக்காளியை தினமும் சேர்ப்பது நல்லது.

முட்டைகோஸ்

காய்கறியில முட்டைக்கோஸில் நிறைய சத்துக்கள் இருக்கு. கண்ணுக்கு மிகவும் நல்லது, நினைவாற்றலையும் அதிகரிக்குது.


மஞ்சள்

மஞ்சளை அடிக்கடி சேர்த்துக்கிட்டா, மறதியை கட்டுப்படுத்தும், நினைவாற்றலை வளர்க்கும். தோலுக்கும், குடலுக்கும் ரொம்ப நல்லது. அப்புறம், இது ஒரு கிருமி நாசினி.

பூண்டு

அடிக்கடி நம்ம சாப்பாட்டுல பூண்டு சேர்த்துக்கிட்டா. வாயு தொந்தரவு இருக்காது. உடம்பில இருக்குற கொழுப்பை தடுக்கும். இடிச்சு சாறும் குடிக்கலாம், உப்போடு சேர்த்து கடிச்சு தின்னலாம். தீயில் சுட்டும் சாப்பிடலாம். வேக வைத்து சாப்பிடுவதும் நல்லதுதான். விடுமுறை நாட்கள்ள மட்டும் தான் இது உகந்தது. வாய் மணம் அடுத்தவங்கள படுத்தும். அதான்!

அடிக்கடி மீன் சாப்பிடுவதும் நல்லது. இதயநோய் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் ரத்தம் கெட்டியாவதை தடுக்கும். குறிப்பா, கடலில் கிடைக்கும் மீனில், அதிக ஒமேகா 3 சத்துக்கள் இருக்குது. நாம சொன்னதை எல்லாம் அடிக்கடி சாப்பிட்டாலே போதும். நோய் எதிர்ப்பு சக்தியும் கூடிடும். ஆரோக்கியமும் கூடும். எந்த நோயும் நம்மை அண்டாது!

பழங்களில் வாழைப்பழமும், மாம்பழமும் அதிகமாக சாப்பிடலாம். திராட்சைப் பழம் ஜீரணத்தை அதிகரிக்கும். உடம்பில் இருக்கும் விஷத்தன்மையை, வெளியேற்றும். உடம்பை புஷ்டியாக்கும். பப்பாளி, அன்னாசி போன்ற பழங்களையும் அடிக்கடி சாப்பிடலாம். பப்பாளி, ஜீரணத்தை வேகப்படுத்தும். அதில் சத்துக்கள் அதிகமாக இருக்கு. மேலும் வாயு தொந்தரவை குறைக்கும்.


2 comments:

கபீஷ் said...

பழமபேசி,
ஒமேகா 3 பத்தி எழுதுனதுல நீங்க அது ஒரு வகை மீன் அப்படின்ற மாதிரி அர்த்தம் வருது. சமயம் இருந்தா கரெக்ட் பண்ணுங்க. அது non saturated fatty acid னு நினைக்கறேன்.

பழமைபேசி said...

//
கபீஷ் said...
பழமபேசி,
ஒமேகா 3 பத்தி எழுதுனதுல நீங்க அது ஒரு வகை மீன் அப்படின்ற மாதிரி அர்த்தம் வருது. சமயம் இருந்தா கரெக்ட் பண்ணுங்க. அது non saturated fatty acid னு நினைக்கறேன்.
//
சரியாச் சொன்னீங்க, எப்படியோ எழுத்துப் பிழை நடந்து போச்சு. நொம்ப நன்றிங்க.