8/30/2022

விபூதி அடிப்பவர்களைக் கண்டு கொள்வது எப்படி?

Rule 1: Con Artists Like To Blend In

Rule 2: Con Artists Dress For Success

Rule 3: Con Artists Often Push Poorly Understood or Little-Known Products

Rule 4: Con Artists Bring Out The Worst In You

Rule 5: Con Artists Are Fair Weather Friends

Rule 6: For Every Silver Lining, There Is A Cloud

Rule 7: Don’t be afraid to “sleep on it.”

source: https://www.nasaa.org/2700/how-to-spot-a-con-artist/

விதி 1

Often, con artists like to blend in with others in your group whether that group be political, community (such as the local senior center), religious or other. They quickly get to know a lot of people in the group so they can count on this common bond to spread the word about their questionable investments and reel in unsuspecting investors. தனிமனிதர்களோடு அவ்வளவாகத் தொடர்பில் இருக்க மாட்டார்கள். மாறாக, குழுக்கள், பொதுவெளியில் இருக்கும் சிலரைக் கவர்ந்து அவர்கள் மூலமாகவே தன்னை நிலைநிறுத்திக் கொள்வர்.

விதி 2

They work very hard to come across as smooth, professional and successful. Con artists may dress like they are wealthy and work out of impressive looking offices. தம் கடுமையான உழைப்பின்வழி திறமையாளரைப் போலவே கட்டமைத்துக் கொள்வர். அறிவார்ந்தவராக, செல்வத்தில் திளைப்பவராக, வல்லுநராக, உயர் அலுவலராக, பேராசிரியராக, சமூக சேவகராக, நன்கு நேரிய வழியில் உடுப்புகளை அணிந்து கொண்டு தோற்றம் கொள்வர். கோட் சூட் என்பது உக்கிர வெயிலிலும் அணிபவராக இருப்பர்.

விதி 3

பொதுமக்களின் புழக்கத்தில் இல்லாததும் அறியப்படாததுமான பொருட்களை அறிமுகப்படுத்திப் பேசி, மக்களின் மனத்தை கவர்வதின்வழி தம் பொருட்கள் அல்லது சேவையை விற்பவராக இருப்பார். Feeding them too many details about false experiences in order to distract their victims from the obvious fact that the person doesn't know them at all. தேவைக்கும் அதிகமான தகவல்களைத் திணிப்பதின்வழி, வாடிக்கையாளர்களின் கண்களைக் கட்டித் திசை திருப்பி ஆசைகாட்டி மோசம் செய்பவர்களாக இருப்பர்.

விதி 4

Skilled con artists can bring out your worst traits, particularly greed, fear, and insecurity. Con artists try to make you feel inadequate if you don’t believe them or ask too many questions. வாடிக்கையாளர்களின் உணர்வுகளைக் கிளறிக் கிளறிக் கொந்தளிப்பிலேயே வைத்திருப்பர். பெருமை பேசிக் கொண்டே தாழ்வுநிலை, எதிரிகள் என்பதாக வாடிக்கையாளர்களைத் தம் பிடிக்குள்ளேயே வைத்திருப்பர். பிடிக்கு வராதோரை, வசைபாடி, அவமானப்படுத்தி, திறமையைக் குறைத்துப் பேசி அல்லது நிராகரித்து விடுவர்.

விதி 5

Con artists are very friendly. They take a personal interest in you out of the blue. They call back when they promised they would. Each time, they tell you even more good things. வாடிக்கையாளர்களின்பால் அதீதப் பற்றுக் கொள்பவராக இருப்பார். உரிமைகள், நலம், இலாபம் என்பதாகக் கட்டமைத்துக் கொள்வார். You may feel you’re being pressured into investing. உடன் இருப்பவர்கள் அவரைப் புகழப் புகழ, நீங்களும் உங்கள் நேரம், பணம் முதலானவற்றைக் கொடுத்தால்தான் என்னயெனும் நிலைக்கு ஆட்படுவீர்கள். Peer Pressure!

விதி 6

Con artists usually are not very good at answering important questions. முக்கியமான வினாக்கள் மேலெழுந்தால், இசை, விளையாட்டு, சிரிப்பு, நாட்டுப்பற்று இப்படி ஏதாகிலும் ஒன்றைக் கூட்டத்தினரில் பரவலாக விரும்புமொன்றை நிகழ்த்திக் காண்பிப்பவராக இருப்பார்.

விதி 7

Many con artists rely on a big, grandiose background story. Others don’t share much of anything at all so that they don’t have to worry about keeping their lies straight. தனிப்பட்ட தகவல்கள் கிடைக்காவண்ணம் இருந்து கொள்வர். Never invest in anything based on the enthusiasm or charisma. கவர்ச்சி, எழுச்சியூட்டம், உணர்வூட்டம் போன்றவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும்.

8/11/2022

நதியெங்கே செல்கின்றது? கடலைத் தேடி...


நமக்கெல்லாம் தெரிந்ததுதான்

வளைந்து நெளிந்து

கொந்தளிப்புகளினூடாக 

பதற்றத்துடன் பாய்கின்றது நதி

திரும்பிப் பார்க்கின்றது

வந்த பாதையை

மலை உச்சிகளை

தான்வீழ்ந்த பள்ளத்தாக்குகளை

காடுகளை மலையோர ஊர்களை

தனக்குமுன்னே எதிரே பார்க்கின்றது

போக வேண்டியதூரம் தொலைதூரம்

பரந்து விரிந்த பெருங்கடல்

மீளமுடியாதபடிக்கு அமிழ்ந்துவிடப்போகின்றோம்

தனக்குமுன்னே எதிரே பார்க்கின்றது

போக வேண்டியதூரம் தொலைதூரம்

பரந்து விரிந்த பெருங்கடல்

மீளமுடியாதபடிக்கு மூழ்கிவிடப்போகின்றது

வேறுவழியில்லை நதிக்கு வேறுவழியில்லை

நதி திரும்பிச் சென்றுவிட முடியாது

எவரும் திரும்பிச் சென்றுவிட முடியாது

துணிச்சலோடு எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்

கடலுக்குள் நுழைவதை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்

அப்போதுதான் அச்சம் விலகியோடும்

அப்போதுதான் நதிக்குத் தெரியவரும்

கடலுக்குள் மூழ்கிப் போவதல்ல அது

கடலுக்குள் மூழ்கிப் போவதல்ல அது

கடலாகவே ஆவதுதான் அது!!


[ஜமுனா மாப்ள அவர்கள், ’கடலைத் தேடி ஓடும் நதி’ என்கின்ற தலைப்பில் கட்டுரை எழுதச் சொன்னார். யோசிக்கத் தலைப்பட்ட போது எப்போதோ படித்த கலீல் ஜிப்ரான் அவர்களின், ‘திரும்பச் செல்லமுடியாது நதிக்கு’ எனும் படிமக் கவிதைதான் நினைவுக்கு வந்தது. நம் ஒவ்வொருவருக்கும் விருப்பமானவை இருக்கும். தம் வாழ்வில் இன்னின்னதைச் செய்தால் மனம் நிறைவு கொள்ளுமென்கின்ற இலக்குகள் இருக்கும். அவற்றை எப்படி அடையப் போகின்றோமென எண்ணும் போது, அச்சமாக இருக்கும். வாழ்க்கைப் பயணம் என்பது நதியைப் போல. எப்படியாக மடிந்தோமென்பதல்ல; எப்படியாக வாழ்ந்தோமென்பதுதானே? எதிர்காலத்தைத் துணிச்சலுடன் எதிர்கொள்வோம்! சியர்ஸ்!!]

8/10/2022

வாழ்வுநிலை vs வாழ்க்கைத்தரம்

வாழ்வுநிலை, வாழ்க்கைத்தரம், இவற்றை முறையே ஆங்கிலத்தில் standard of living, quality of life என்பர். இவையிரண்டுமே கிட்டத்தட்ட ஒன்றுதான், ஆனால் வெவ்வேறானவை.

சொத்து, வருமானம், அந்தஸ்து, உணவு, உடை, உறையுள் எல்லாமும் செழிக்க இருந்தால் அவருக்கான வாழ்வுநிலை மேம்பட்டதாகக் கருதலாம் ஒப்பீட்டளவில். ஒருவருக்கொருவர் ஒப்பீடுகள் நடக்கின்றன. ஏழை, பணக்காரன், நடுத்தரக்காரன் என்றெல்லாம் மதிப்பீடுகள் இடம் பெறுகின்றன. இயல்பாகவே, பணமிருப்பவருக்கு மருத்துவம், கல்வி, வாய்ப்புகள் என்பவை எளிதில் கிட்டிவிடும். ஆகவே அவரின் வாழ்வுநிலை மேம்பட்டது என்பதாகக் கருதப்படுகின்றது.

பண்புகள், விழுமியம்(வேல்யூஸ்), இன்பம், உடல்நலம் முதலானவை நன்றாக இருப்பதாகக் கருதினால், அவரின் வாழ்க்கைத் தரம் சிறப்பு என்பதாகக் கொள்ளப்படும். வாழ்வுநிலை மேம்பட்டதாக இருந்தால், வாழ்க்கைத்தரமும் சிறப்பாகத்தானே அமைந்தாக வேண்டும்? உடல்நலம், இன்பம் இவற்றுக்கெல்லாம் வாழ்வுநிலைதானே அடிப்படை? ஆமாம்.

எனினும், வசதிகள் இருந்த மாத்திரத்திலேயே ஒருவரின் வாழ்க்கைத்தரம் அமைந்து விடாது. நீர்நிலை இருந்தால்தான் நீச்சல் அடிக்கமுடியும். ஆனால் நீர்நிலை இருப்பதாலேயே ஒருவர் நீச்சல்காரர் ஆகிவிட முடியாது. அதைப்போன்றதுதான் இவையிரண்டும்.

கடலளவு நீர் இருந்தால்தான் நீச்சல்காரர் ஆக முடியுமென்பதும் இல்லை. போதிய அளவுக்கான நீர்நிலை இருக்க, அவர் நீச்சல் பழகியிருக்க, அவர் நீச்சல்காரராக உருவெடுப்பார். அதே போன்றதுதான் வாழ்க்கைத்தரம் என்பதும். போதிய அளவு, தேவைப்படும் அளவுக்கான வாழ்வுநிலை அமையப் பெற்று, பண்புநலம், உடல்நலம், பயிற்சி, தன்னுமை(லிபர்ட்டி), இலக்கியம், கலை, சிந்தனையாற்றல், கேளிக்கை முதலானவையும் அமையப் பெறும் போது, அவருக்கான வாழ்க்கைத்தரம் மேம்பட்டதாக அமையும்.

”The quality of life is more important than life itself. Quality of life actually begins at home - it's in your street, around your community.” -Charles Kennedy

வாழ்வுநிலையெனும் வர்க்கபேதத்தில் புதையுண்டு விடாமல், வாழ்க்கைத்தரம் நோக்கிய பயணம் இன்புறுகவே!

8/06/2022

பன்னாட்டு விமானப்பயணம்

பன்னாட்டு விமானப்பயணம் என்பது வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றது. என்ன காரணம்?

விமானப்போக்குவரத்து என்பது கிட்டத்தட்ட 180 துறைகளை உள்ளடக்கியது. ஒன்றுடன் ஒன்று கோக்கப்பட்டிருக்கின்றது. ஒரு போக்குவரத்து நிறுவனத்துக்கும் இன்னொரு போக்குவரத்து நிறுவனத்துக்கும் தொடர்புண்டு. விமானத்தை குத்தகைக்கு விடும் நிறுவனம் வேறு; விமானப் பயணிகளின் கட்டணங்களை நிர்வகிக்கும் நிறுவனம் வேறு. விமானப் பணியாளர்களை நிர்வகிக்கும் துறை வேறு. விமானப் போக்குவரத்தை நிர்வகிக்கும் நிறுவனம் வேறு. சரக்குகளைக் கையாளும் துறை வேறு. அந்தத் துறைக்குள்ளாக ஒப்பந்தப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் வேறு. விமானநிலைய ஓடுதளங்களைப் பராமரிக்கும் நிறுவனம் வேறு. கட்டுப்பாட்டு அறைகளைக் கண்காணிப்பது வேறு துறை. ஒரு பயணம் நல்லபடியாக நிகழ, இந்தத்துறைகளெல்லாம் ஒன்றுக்கொன்று இயைந்து செயற்பட்டாக வேண்டும். நிற்க.

கோவிட் தொற்றுக்காலம் வருகின்றது. விமானங்கள் பறப்பதினின்று மட்டுப்படுகின்றன. வேலை இழப்புச் செய்யக் கூடாதெனச் சொல்லி, விமான நிறுவனங்களுக்கு சலுகைத் தொகை கொடுக்கப்படுகின்றது. அதை வைத்துக் கொண்டு மாதாமாதம் சம்பளம் கொடுத்துக் கொண்டிருக்க முடியாது. எனவே, ’பெருந்தொகை கொடுக்கப்பட்ட முன்கூட்டிய பணி ஓய்வு’ என்பதைக் கையிலெடுக்கின்றன நிறுவனங்கள். நிறையப் பேர் பணி ஓய்வு பெற்று விடுகின்றனர்.

தொற்று சரியாகி தளர்வுகள் செயற்பாட்டுக்கு வந்தவுடனேயே ஒரே நேரத்தில் பயணிகள் பயணிக்கத் தலைப்படுகின்றனர். மளமளவென விமானங்கள், டிக்கெட்டுகள் என பயணங்கள் துவங்குகின்றன. ஆனால் களத்தில், பணிகளைத் துவக்குவதில் சிக்கல்கள். புதிய பணியாளர்களுக்கு முறையான பயிற்சி இல்லை. போதிய பைலட்டுகள் இல்லை. வேலையற்றுக் கிடந்த தளபாடங்களை மீளக்கட்டமைத்துச் செயற்பாட்டுக் கொண்டு வருவதில் தாமதம். துறைகளுக்கும் துறைகளுக்குமான ஒருங்கிணைப்பில் தொய்வு. விளைவு, விமானங்கள் கேன்சல் ஆகின்றன. போதாக்குறைக்கு, கடுமையான வெப்பம், புயல் முதலான காரணங்களும் சேர்ந்து கொள்கின்றன. ஒருநாளைக்கு அமெரிக்காவில் மட்டும் 1500 விமானங்கள் வரை கேன்சல் ஆகின்றன. 1800 விமானங்கள் வரை காலதாமதம் ஆகின்றன. நாம் என்ன செய்யலாம்?

1. கேளிக்கை, பொழுதுபோக்கு என்பதற்கான பயணங்களைத் தற்காலிகமாக ஒத்தி வைக்கலாம்.

2. நிலைமையைப் புரிந்து கொண்டு, பொறுமையுடன் தன் பயணத்திட்டத்தை எதிர்கொள்தல் நலம்.

3. போதிய தின்பண்டங்களைக் கைவசம் கொண்டு செல்தல் நலம். மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்களும்.

4. அதிகாலைப் பயணங்கள் குறைவான தடங்கலுக்கு உரித்தானது. ஆகவே அப்படியானவற்றைத் தெரிவு செய்தல் நலம்.

5. ஒருவிமானத்துக்கும் இன்னொருவிமானத்துக்குமான கனெக்சன் இருக்குமாயின் போதிய இடைவெளியுடன் பயணத்தை அமைத்துக் கொள்வது உசிதம்.

6.சரக்குப் பெட்டிகள் வந்து சேர்வதற்கு காலதாமதமாகலாம். ஆகவே அதற்கேற்றபடி தயார்படுத்திக் கொள்தல் நலம். ஃபோட்டோ எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். தேவையானவற்றை கேரி-ஆன் லக்கேஜ்ஜில் வைத்துக் கொள்ள வேண்டும். பெட்டி கிடைக்காவிடில் பதற்றம் கொள்ளத் தேவையில்லை. டிக்கெட்டுகளை உரிய கிரிடிட் கார்டில் வாங்குவது நலம். அதில் இன்சூரன்சு இருக்கும். மேலும் கூடுதல் கட்டணத்துடன், இன்சூர் செய்து கொள்வதும் மன அமைதியைக் கொடுக்கும். Lost luggage insurance reimburses the value of what you lost, assuming you can document what’s inside (pro tip: take a picture of the interior contents before you leave home). 

7. செல்ஃபோன் சார்ஜ் செய்வதற்கான உபகரணங்கள் அவசியம் கைவசம் இருத்தல் நன்று.

8. செவ்வாய், புதன், டிராஃபிக் குறைவான நாட்கள்.

பணம் இரண்டாவது. பாதுகாப்பு, உடல்நலம், மனநலத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதற்கேற்ப தங்கள் பயணத்தை அமைத்துக் கொள்ள வாழ்த்துகள்.