6/07/2008

கதை சொல்லப்போய்.....

நாம:

ஒருவன் வெள்ளத்தில் மாட்டி கொள்கிறான். இரவு முழுக்க கடவுளிடம் விடாமல் வேண்டுகிறான். கடவுளும் மனமிரங்கி, அவனிடம் "காலையில் உன்னை காப்பாற்றுகின்றேன்" அப்படினு சொல்றாரு. சரினு
காத்திருக்கிறான். காலையில்,அந்த பக்கம் ஒரு கட்டை மிதந்து வருது. அவன் நாம் என் கட்டையை பிடித்து போக வேண்டும், நம்மை தான் கடவுள் காப்பாற்றுவதாக சொன்னாரே என்று எதுவும் செய்யலை. கட்டை வெள்ளத்தில் விலகி போய் விடுகின்றது. சற்று நேரம் கழித்து அந்த பக்கம் ஒரு படகு வருது - அது ஒரு மீட்புப்படகு. அதில் உள்ளவர்கள் இவனை வர சொல்கிறார்கள். இவனோ, கடவுள் என்னை காப்பாற்றுவார் என்று எதுவும் செய்யலை. இன்னும் சற்று நேரம் கழித்து மீட்பு வாணுலங்கு(rescue helicoptor)வருது. நம்மாளு அதிலும் போகலை(அதான் கடவுள் காப்பாற்றுவாரே). அப்பறம் அவன் வெள்ளத்தில் இறந்து போறான்.அப்புறம் போயி சொர்க்கத்தில கடவுளிடம் கேட்கறான் "என்னை காப்பாற்றுவேன் என்று சொல்லி விட்டு இப்படி ஏமாற்றிவிட்டாயே"என்று. கடவுள் அவனிடம், மூன்று முறை நான் வந்தேன்... நீ தான் உன்னையே ஏமாற்றிக்கொண்டாய் அப்படினு சொன்னாரு.

நாம: அப்புறம் இதுல இருந்து என்ன தெரியுது ஸ்ரீநிதி(அஞ்சு வயசு மவ)?


ஸ்ரீநிதி: ஜியா பக்கம் போகக்கூடாது, போகவே கூடாது.

நாம: ஸ்சூ.... நம்ம வாழ்க்கை நம்ம கைல.... தெரியுதா?

ஸ்ரீநிதி: வாழ்க்கைனா என்னப்பா? You don't have any thing in your hand?!

நாம: ஹையோ! ஹயோ!! வந்தவளும் படுத்துரா?! வந்து
பொறந்தவளும் படுத்துராளே?!?!

முன்னாடி கதைக்கு இலவச இணைப்பு இது:

மன்னன்: என்ன இராமா,எதுக்கெடுத்தாலும் "நாம நாம"னு இங்க அவைல இருக்கிற எல்லாரயும் சேத்தே சொல்லுரீரு?


இராமன்: மண்டு மன்னா, "நான் நான்"னு சொல்லிப்பேசினா, பேசுற அவனுக்கே தெரியாம அகந்தை அவன் மேல பாஞ்சிடுமாம். அதனாலதான் "நானு"க்கு பதிலா "நாம"னு பேசுறேன். புரியலயா? மண்டைல மண்ணாவது இருக்கும்னு நினைச்சேன். அதயும் எவனோ களவாடிட்டு போய்ட்டா ன் போலிருக்கு.

மன்னன்: என்னது?! இந்த மன்னன் கிட்ட களவா?

இராமன்: இந்த மன்னன் கிட்ட மண்டை உடைக்கிற நேரம், நாம எங்காவது போயி சாவலாம்.

அவையோர்: இராமா, இந்த தடவை "நாம"ன்னு சொன்னதுல நாங்களும் சேத்தி தானே?

இராமன்: ???!

1 comment:

venkatx5 said...

சூப்பர் மச்சி.. கலக்கலா இருக்கு..