6/11/2008

வாசற்த்தல சாத்திரம் (வாஸ்து சாஸ்திரம்) - பிறழ்ந்தது எப்படி?

நம்ம ஊர்ல சொல்லக் கேள்விப்பட்டு இருப்பீங்க, 'வீட்டக்
கட்டிப்பார், கல்யாணம் செஞ்சி பார்'னு. வீடு கட்டுறது
அவ்வளவு கடினமான வேலை. அப்படி பெரும் தொகை
செலவு பண்ணிக் கட்டும் போது, நாலும் பாத்து யோசனை
பண்ணித்தான் கட்டனும். சரிதான்!

அப்படிக் கட்டும் போது,மலைப் பிரதேசங்கள்ள ஒரு மாதிரி
கட்டனும். பள்ளம்,படுகை நெறஞ்ச பள்ளத்தாக்குல கட்டும்
போது ஒரு மாதிரி கட்டனும். கடலோரம்னா வேற மாதிரி.
பூகம்பம் மற்றும் இயற்கை இடர்பாடுகள் வர்ற இடத்துல
வேற மாதிரி. இப்படி இடம், சூழ்நிலைக்கேத்த மாதிரி
வெளிச்சமும் காத்தும் வர்ற மாதிரி கட்டுறதுக்கு ஒரு பொது
வழி முறைகள பெரியவங்க கொண்டு வந்தாங்க.அதுதான்
வீட்டு மனை சாத்திரம்.

அத வியாபார நோக்கத்துல ஒரு அர்த்தமில்லாத சாத்திரமா
ஆக்கிட்டாங்க பின்னாடி வந்தவங்க. சாத்திரங்கள்லாம் நமக்கு
வழி காமிக்கனும். அதவிட்டுட்டு, நாம நம்ம வாழ்க்கைய,
அதுக, அதுவும் சிதஞ்சி போனதுக கையில, ஒப்படைக்கக்
கூடாது இல்லீங்களா? நீங்களே சொல்லுங்க!

No comments: