6/09/2008

அன்னையர்க்கு நன்றி தெரிவித்து

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, பெரிய கலை நிகழ்ச்சி நல்லபடியா நடந்தது. அதுல எங்க குழுமத்தை சேந்த குழந்தைகளும் கலந்துகிட்டு ரொம்ப பிரமாதமா, அவங்க திறமைகள வெளிப்படித்தினாங்க. எல்லா குழந்தைகளுக்கும் நேர்த்தியா சொல்லி குடுத்து, பல தடவை ஒத்திகை பாத்து கடினமா உழைச்செதெல்லாம், குழுமத்தை சேந்த அன்னையர் அணியினர் தான். நிகழ்ச்சி முடிஞ்ச பின்னாடி, உவகைல அவங்களுக்கு நன்றி நவிழ்ந்து எழுதியது தான் இந்தப் பதிவு.


நவசக்தி தமிழ்ப் பண்பாட்டுக்குழு

ன்புச் சிறாரை நன்கே,
யத்தப் படுத்தி, வசனங்கள் பல
தயத்தில் புகுத்தி,
டற்ற முயற்சிதனை மூலதனமாக்கி,
ற்சாகத்தை உரிய தருணத்தில்,
ட்டி ஊட்டி எண்ணிய,
தையும் சாதிப்போம்,
ற்றம் பல காண்போமென,
யம் ஏதுமின்றி, இலக்கு
ன்றையே முன் நிறுத்தி,
ய்வைப் பணயம் வைத்து,
டதம் எனும் நிறைவை எட்டிய

அன்னையர் அணியினர்க்கு நன்றிகள் போய்ச்சேரட்டும்!
இளசுகள் மேலும் பல சாதிக்கட்டும்!!
அப்பாசாமிகள் பெருமைகள் பல கொள்ளட்டும்!!!

No comments: