6/09/2008

அன்னையர் தின உவகை

எங்க குழுமத்தில இருக்கிற எல்லா அன்னையர்க்கும், அன்னையர் தினத்தில, குழுமத்தில இருக்கிற ஆடவர் எல்லாம் சேந்து நளபாகத்துல விருந்து படைச்சோம். ஆனா என்ன, எங்க சகதோழர் ஒருவருக்கு சின்னதா காயம் ஆகி அவர் வரலை. அதுல சின்ன வருத்தம். மத்தபடி நாங்க அசத்திட்டோம். அவங்க தரப்புல இருந்து அழகான கவிதை வெளிப்பட்டது. அந்த மனநிறைவுல எழுதினதுதான் இந்தப் பதிவு.

நிறை
பிதாமாரின் படைப்பாற்றல்
கமலத்தின் கவிதை
சிறுவர் பட்டாளத்தின் ஒத்துழைப்பு

குறை
அவரை உள்வாங்கி
அவரையே மையம் கொண்டு
கற்பனைக்கடலில் மூழ்கி
நகைச்சுவையாய்
நீளக்கதை எழுதி
படைக்கும் ஆவலில்
உள் நுழைந்தால் அங்கே
பெரிய வெற்றிடம்.
அது ஏமாற்றம் அல்ல;
அதையும் மிஞ்சியது அது!
அதையும் மிஞ்சியது அது!!

குணமாகி அக்குழம்படிச்
சத்தம் திரும்பும்
நாள் நோக்கி நாங்கள்!
அந்நாள் நோக்கி நாங்கள்!!

உவகை
வல்லிய நோக்கமே,
புலம் பெயர்ந்த மண்ணில்

தெரிந்த தமிழ் வார்த்தைகள்
நெஞ்சகலா வண்ணம்
இருக்கவே, கிறுக்கல்கள்.
அதில் மற்றவரும் இணையக் கண்டு
மகிழ்கிறோம் மட்டற்று!

ஆனாலும் அது கிறுக்கல் இல்லை,
வார்த்தெடுத்த கவிதையே அது.
படைப்புக்கு நன்றி நவிழ்ந்து,
உவகை உற்றோம் நாம்!
உவகை உற்றோம் நாம்!!

No comments: