10/04/2015

தகுதி

தகுதி

நினைவு தெரிந்த நாள்
அதற்கு அடுத்த நாள்
அதற்கு அடுத்த நாள்
அதற்கு அடுத்த நாள்
அதற்கு அடுத்த நாள்
அதற்கு அடுத்த நாள்
அதற்கு அடுத்த நாள்
அதற்கு அடுத்த நாள்
அதற்கு அடுத்த நாள்
அதற்கு அடுத்த நாள்
அதற்கு அடுத்த நாள்
அதற்கு அடுத்த நாள்
அதற்கு அடுத்த நாள்
அதற்கு அடுத்த நாள்
அதற்கு அடுத்த நாள்
அதற்கு அடுத்த நாள்
அதற்கு அடுத்த நாள்
அதற்கு அடுத்த நாள்
அதற்கு அடுத்த நாள்
அதற்கு அடுத்த நாள்
அதற்கு அடுத்த நாள்
* * *
* * *
நேற்றைக்கு முந்நாள்
நேற்றைய அந்நாள்
இன்றைய விடியல்
இன்றைய புலர்பொழுது
ஒரு மணிநேரத்துக்கு முன்
இவ்வண்ணம் யாவற்றுக்கும்
நீ வைத்தாயா விமர்சனம்?
அப்படியானால்
இதையும்
நீ விமர்சிக்கலாம்!!

# சும்மா வரித்துண்டுகள்... நோ உள்குத்து

10/01/2015

வரிக்கதைகள்

கறந்த பாலை சுமதிடீச்சர் வீட்டிலூற்றி விட்டு வந்த சின்னத்தாயம்மாவுக்குத் தலையில கல்! ஆதர்ச நடிகனின் கட் அவுட்டுக்குப் பாலூற்றும் போது தவறி விழுந்த மகன் பலி!!

$@#********$@#

பக்கத்துல டீனா படுத்திருக்கா. சும்மா போனைப் போட்டு தொந்திரவு செய்யாதே என்றதற்கு எகிறுகிறாள் மேத்யூசின் ஒரே மனைவி மேரி, என்னை விட அந்த நாய்தான் உங்களுக்கு எச்சாப் போச்சா??

$@#********$@#

தாசி வீட்டில் காணாமற்போயிருந்த செருப்புகள் தம் வீட்டு வாசலிலிருப்பதைக் கண்ட மாதவன் ஆயத்தமானான்! மண்டகப்படிக்கு!!

$@#********$@#

நடனப் பெண்கள் மீது பணத்தை வாரி இறைத்த போலீசார்! ஊர்க்காசு நமக்கெதுக்கு? காற்றில் பறந்தன கரன்சிகள்!!

$@#********$@#

வெளிநாட்டுக்கு வந்து சேர்ந்திருந்த இருபக்கக் கடிதம், அன்புள்ள அப்பாவுக்கு எனத்துவங்கி தங்கள் அன்புள்ள மனைவி மல்லிகா என முடிந்திருந்தது! மனைவிக்கும் அப்பாவாகலாம்!!

$@#********$@#

தமிழ்ச்சங்கத் தலைவர் பதவி நீக்கம்! கூட்டத்தில் அடிக்கடி தமிழில் பேசுவதாகக் குற்றச்சாட்டு!!

$@#********$@#

மாவட்ட ஆட்சித் தலைவர், கரகாட்ட வனஜா முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டார். கரகாட்ட வனஜா, பொறுப்பேற்ற அவரது மகள் இருவருக்கும் ஊரார் வாழ்த்து!!

$@#********$@#

தாம் அடித்துவந்திருந்த பர்சுகளை பார்த்துக் கொண்டிருந்த பிக்பாக்கெட்காரனுக்கு அந்த பர்சைப் பார்த்ததும் ஒரே அதிர்ச்சி அழுகை! அந்தப் பர்சில் அவனது மனைவி போட்டோ!!

$@#********$@#

அமோகவெற்றி பெற்ற நாட்டாமை மனைவி வனிதாமணிக்கு இன்று பதவியேற்பு நாள். ஊராட்சிமன்றக் கதவுகள் திறக்கப்படுவதற்குச் சற்று முன்பாகத்தான் நாட்டாமையின் பரமவைரி நடேசனும் வனிதாமணியும் ஓடிப்போனதாகத் தகவல்!!

$@#********$@#

A loveங்றதை எழவு எழவுன்னு சொல்லி எழவெடுக்கிறவனை வெச்செல்லாம் என்னால பாடம் நடத்த முடியாது; பேசாம நீங்க டி.சி வாங்கிட்டுப் போயிடுங்க!!

$@#********$@#

காசு, பணம், சொத்தெல்லாம் போயிடிச்சேன்னு ஒரே அழுகை. அவங்க அம்மாவுக்கும் அப்பாகிட்ட செம திட்டு. கடைசியில அவரும் மனசொடிஞ்சி மோனோபோலியத் தூக்கிக் குப்பைல போட்டுட்டாரு.

$@#********$@#

கூட மனைவியும் வரவில்லை. திருமணவீடுதானே, ஒரு இலட்டு தின்னலாமென்று இலையிலிருந்த இலட்டைத் தொடவும் எதிர்வரிசையிலிருந்து செருமல். அது வேறு யாருமல்ல, அவனுடைய பேலியோகுருதான்!!

$@#********$@#

”மச்சான் நெறைய கிரிடிட்கார்டு அப்ளிகேசனா வந்து தள்ளுதுதடா” என்றான் மெயில் பாக்சடியிலிருந்த கேசவன். “அவன் குடுத்துருக்கிற ரிட்டர்ன் என்வ்லப்புலயே போட்டனுப்பு. தபால்காரனாவது பொழைக்கட்டு. ரூமுக்கு எடுத்துகினு வந்து தொலைக்காதராப் பண்ணாட!” என்றான் முரளி!!

$@#********$@#

பூவா தலையா போடுவதில் எப்போதும் இறுதிப்பயன் அவனுக்கே! அவன் வென்றிருந்தால் அவன் விருப்பம். அவள் வென்றிருந்தால், அவனது விருப்பமன்னவெனக் கேட்டு, அதற்கெதிரானதைக் கையிலெடுப்பாள்!.

$@#********$@#

எங்கப்பா பீடி குடிச்சுக் குடிச்சு செத்துப் போய்ட்டாரு. பீடி குடிக்காத நீங்க சாகவே மாட்டீங்கல்லண்ணா? கேட்கிற பையனுக்கு என்ன பதில்?? அவனே சொல்லிக் கொண்டான்; நாமெல்லாம் ரெம்ப நாளைக்காச்சிம் இருப்பம்ணா!!

$@#********$@#

விவசாயம் செய்து வாழ்ந்து கெட்ட குடும்பத்தைச் சார்ந்த மாடசாமி மெல்லிய குரலில் கேட்டுக் கொண்டிருக்கிறார், “இரவது கூடை தக்காளி விளைஞ்சிருக்கு. விக்கக் காசு வேணும்! கைமாத்தா அம்பது ரூபாய் கிடைக்குமா?”

$@#********$@#

செவ்வாய் கிரகத்துல தண்ணி இருக்காம்டாவெனச் சொன்ன குமாரிடம் சொல்கிறான், ‘அடப் போடா... வீட்டுக்காரிகளுக்குத் தண்ணி காட்டிட்டுத் தண்ணியில நாம இருக்குறதுதான்டா பெரிய விசியம்!’

$@#********$@#

கோயமுத்தூருக்குள் வந்து கோயமுத்தூருக்கு வழி கேட்ட மடையன்கூடப் பேசினதில் என் கண்ணாடி எங்கு போனதென்று தெரியவில்லையென்றவனிடம் சொல்கிறான், ‘கண்ணாடியப் போட்டுட்டே கண்ணாடியத் தேடுறவன் மாமடையன்!!’

$@#********$@#

”தமிழர் ஒற்றுமை ஓங்குக” இந்த வாசகத்தை விழா மொழியாக வைத்துக் கொள்ளலாமா வேண்டாமா என்பதில் கைகலப்பு!

$@#********$@#

முன்னெச்சரிக்கை நினைப்பில், கடன் வாங்கணும்னுதானுங்க அலைஞ்சிட்டு இருக்கேனென்றவனிடம் சொன்னான், நானும் அதுக்குதானுங்க வந்தேன். உங்களுக்கு எவ்ளோ வேணும்? மாசமானா வட்டி கரெக்டா வந்திடணும்!! எடுங்க ஆர்.சி.புத்தகத்தை!!

$@#********$@#

நிலா குரூப் ஒருபக்கமும் வேணி குரூப் ஒருபக்கமும் அமர்ந்து விழாவை இரசிக்க, இரண்டு குரூப்பும் கலந்துவிடாமல் பார்த்துக் கொண்டார் ரோசாமணி. செயலர் தட்டச்சிக் கொண்டிருந்தார், விழா வெற்றி! விழாத வெற்றி!!

$@#********$@#

இரவியின் வாதத்துக்குக் கடைசியில் ரேணுகா ஒப்புக்கொண்டு விட்டாள். ஆமாம். இரவி அவளை வழிக்குக் கொண்டு வந்தது இதைச் சொல்லித்தான், ‘உன்னுடைய வாதத்துக்கு உடன்பட்டால் அது தவறில்தான் போய் முடியுமென்பதற்கு நம் திருமணத்தைக் காட்டிலும் வேறென்ன சான்று இருந்து விட முடியும்?’

$@#********$@#

மூனாம் நம்பர் டேபிள்ல பில் கொடுக்காமப் போனவன் தின்ன மூனு ஆம்லட், ரெண்டு அவிச்ச முட்டை, ஒரு எக் பொரியல் எந்தக் கணக்குல.... சொல்லி முடிப்பதற்குள் கல்லாமேன் கணக்கெழுதி விட்டார் பேலியோநாதன் கணக்கில்.

$@#********$@#

காயத்ரி, ரேவதி, மனோரஞ்சிதம், இவற்றுள் ஏதோவொன்றென்றான். கேட்டுவிட்டு, அனைத்தும் தள்ளுபடியென்றாளவள். ஏனென்ற கோபாவேசம் அவனுக்கு. பார்த்து விட்டு மிகவும் அமைதியாகச் சொன்னாள், ’’அதுல எதாவது ஓடியடைஞ்சிருந்தா நான் ஏன் இங்க இருக்கேன்? பாப்பாவுக்கு நானே பேர் செலக்ட் செய்றேன்’’.

$@#********$@#

ஃபேசுபுக்கில் அன்ஃபிரண்ட் செய்த முத்துமாரியைப் பழிவாங்கக் காத்திருந்த கதிரேசனுக்கு இன்று மகிழ்ச்சியான நாள். முத்துமாரியின் காதலி, கதிரேசனின் ஃபிரண்ட் ரிக்வொசுட்டை ஏற்றுக் கொண்டு விட்டாள்; அன்ஃபிரண்ட் செய்யப்பட்ட முத்துமாரிக்கு அன்ஃபிரண்டின் வலி இப்போது புரியத் துவங்கியது.

$@#********$@#

”அம்மாவோட பர்சு இங்கிருக்குப்பா. வேணுமின்னேதான் விட்டுட்டுப் போயிருக்காங்கன்னு நினைக்கிறேன். தொட்றாதீங்க”, அறிவுறுத்திவிட்டு பள்ளிக்குப் புறப்படுகிறாள் மகள்.

$@#********$@#

அவன் செத்து மடிந்தான். இவள் உயிர்த்தெழுந்தாள். கூடவே, ஊற்றிக் குடிக்கும் பாவனையிலிருந்த வடிவான கண்ணாடிதம்ளருக்கும் சோகேசில் நல்லதொரு இடம் கிடைத்திருக்கிறது.

$@#********$@#

ஊர்லிருக்கிற வீட்டை வித்திட்டு ஆர்ச்சர்ட் தெருவுல வீடு வாங்கலாம்னு இருக்கேனென்றான் சார்லட் சரவணன். செரி, ஊரிலிருந்து தெருவுக்கு வரணும்னு ஆசைப்படுற. உன் விருப்பமென்றான் கிரீன்சுபரோ கனகவேல்.

$@#********$@#

கலைமாமணி கவிக்குயில் கார்மேகம் அழைத்து, புதுசாக் கவிதைகள் கொஞ்சம் போட்டிருக்கிறேன்; பார்த்து விட்டீர்களா தம்பீ என்றார். ’இதா, இப்பவே எல்லாத்துக்கும் லைக் போட்டுட்டு, வானதிகிட்டவும் கூப்பிட்டுச் சொல்லிடுறனுங் அண்ணே’யென்றான் யுனிக்சு அட்மின் வினோத்.

$@#********$@#

பேருந்துப் பயணத்தின் போதான பேச்சினிடையே, உங்களை நம்பலாம்தானேயென்று கேட்டான். அப்படியெல்லாம் உள்ளதச் சொல்லி உங்க மனசைக் காயப்படுத்துவனா நானு என்று நம்பிக்கை குலையாமல் இவன் பதிலுரைக்கவும், மகிழ்ச்சியுடன் நம்பிக்கையோடு இறங்கிப் போனார்கள் இருவரும்.

$@#********$@#

மனைவிகிட்டக் கேட்டுச் சொல்றேன் என்றதற்கு, ’இப்பவே கேட்டுச் சொல்லுங்க பிரதர்’ என்று சொல்லி முடிக்கவும் பதில் வந்தது, "எப்பக் கேட்டாலும் அவ இல்லன்னுதான் சொல்லப் போறா. அதுக்கு ஏன் இந்த அவசரப்படுறீங்க?!"

$@#********$@#

வந்த அழைப்புக்கு, அலோ, அலோவென்று கத்திப் படக்கென வைக்கப்பட்டுவிட, “அதென்ன ராங்காலாப்பா?” என்றாளவள். ‘இல்ல, ரைட்கால், ராங்பெர்சன்” என்றார் அப்பா.

-பழமைபேசி.