Showing posts with label ஊர் மொழி. Show all posts
Showing posts with label ஊர் மொழி. Show all posts
10/27/2017
அலப்பறை
"அதான, கெடக்கறது கெடக்குது கெழவனத்தூக்கி மணைல வையுங்கற கணக்கா நம்ம பொழப்ப பாத்தாத்தானே வாழ்க்க ஒழுங்கா வோடும்..!! சரிதானுங்கோ?! "
"பின்ன? ஒதிய மரந்தான் தூணாகுமா? இல்ல, ஓட்டாங் கிழிசலுத்தான் காசாகுமா??"
"அதச்சொல்லுங்க, கூள குடியைக் கெடுக்குமாம், குட்டைக்கலப்பை காட்டைக் கெடுக்குமாம்..!! அப்படியில்ல இருக்கு இங்க பொழப்பு."
"சங்குல வார்த்தா தீர்த்தம், சட்டியில வார்த்தா தண்ணீங்றதெல்லாம் செரி வராதல்லொ? புள்ளீக பள்ளிக்கோடத்துல இருந்து வண்ட்டாங்கொ... போயி அவுகளுக்குத் திங்றதுக்கு எதுனா பொரி கல்ல குடுத்துப்போட்டு வாறன்... குஞ்சுகுளுவானுக அம்மணி, பொக்குன்னு போயிருமல்லொ??"
"அய்ய ஆமாங்கோ, பொடுசுவுளுக்கு திங்கறதுக்கு குடுத்துப்புட்டு, பொறவு சாவுகாசமா வந்து நம்ம பாட்டபூட்டங்காலத்து பழமொழிய நருவுசா எழுதிப்போடுங்கோ..!! காலத்துக்கு அழியாம காத்துப்புடலாமுங்க."
இடையில மூனாவது ஆளு வந்து:, "சபாஷ், சரியான போட்டி. ரெண்டு பேரும் இதோட விட்றாதீங்க. பழ மொழி பேசறதுல யாரு நம்பர் ஒண்ணுன்னு எங்களுக்கு உண்மை தெரிஞ்சாகனும். சும்மா பார்த்துக்குனு இருக்கறத விட, நாலு கத்துக்கின மாதிரியும் ஆச்சு. வயல்ல வேல பாக்க பொம்பள ஆளுங்கள கூப்பிட்டா, "கம்புக்கு களை வெட்டினமாதிரியும் ஆச்சு! அப்பிடியே தம்பிக்கு பொண்ணு பார்த்த மாதிரியும் ஆச்சு!”
”அடுத்தூட்டுக்காரங்கிட்ட வாங்குன கடனும் அடிப்பக்கத்துச் சிரங்கும் அடிக்கடி அரிக்கும்ங்ற கதையா, இந்த ஊர் நெனப்பு அப்பப்ப சொறிஞ்சுட்ருக்குதுங்க... என்னவன்னச் சொல்றீங்க?”
”க்கும், கண்டா ஒரு பேச்சு, காணாட்டி ஒரு பேச்சு”
“கள்ளிக்கு வேலியும் களவுக்குக் கூலியுமெதுக்குன்னு கேட்டா இப்படித்தான் இல்லாததும் பொல்லாததும் பேசுவீக அப்புனு”
”இரும்பும் கரும்பாகும், இட்டாலியும் பாழகுங்கற கணக்கா..... இது இனி எங்க போயி முட்டிக்கிட்டு முடியுமோ தெரியலையே...!! ”
“பொன்னே பொன்னேன்னு தாங்கி பொடக்காலீல விட்டு வெளுக்காம இருந்தாச் செரி.”
“கெரக, நம்ம பாட்டுக்கு கண்ட பழமொழிய எழுதிப்புட்டா - “சங்கிலிபுங்லிங் காட்டுக்குள்ள சனிய புடுச்சுக்கிட்டு ஆடுதா, ஏன்னு கேட்க போன என்னையும் புடிச்சுக்கிட்டு ஆட்டுத்தான்னு ஆகிப்போயிடாத எம்பொழப்பு?! இந்த ரெண்டாஜாமா ரவைல என்ன புள்ள வெட்டிப்பேச்சுன்னு எம்மச்சா பேசுவாருங்கோ...அக்காங்..!! போயி சித்த தூங்கிப்போட்டு வாரானுங்க.”
“நமக்கெல்லா வாயிமட்டு இல்லைனா, நாயி கால என்னைக்கோ கவ்விக்கிட்டு போயிருக்குமுங்க...”
“அப்படி என்னாத்த சொன்னாங்க, பட்டும் பவுசும் பொட்டில இருந்துச்சாமா, காக்காசு சந்தையில துள்ளுச்சாமா!”
“கந்தன்னா காவடியாடத்தான செய்வான்?”
“சொல்றவனுக்கு வாய், செய்யறவனுக்குத்தான் சொமை”
“கடலுன்னா உப்பு கரிக்கும்... காடுன்னா தட்டான் ரீரீன்னு ரீங்கத்தான் செய்யும்.... சும்மா புதுப்பொண்ணாட்டம் சிணுங்கல் எதுக்குன்னேன்??”
”எச்ச எலைய எடுன்னு சொன்னதுக்கு எலைய எண்ணிகிட்டு இருந்தானாம்! ஆரப்பா அது? இங்க வந்து எத்தினி லைக்கு, எத்தினி பின்னூட்டமுன்னு எண்ணிகிட்டு இருக்கறதூ??”
உடன் களமாடியவர்கள்: Mythili Thyag Krishna Raj Thirumurthi Ranganathan
10/26/2017
வேய்க்கானம்
தொறந்திருக்குற ஊட்டுக்குத் தொறப்புக்குச்சி தேடுறவனோடெல்லாம் சகவாசம் எதுக்குங்றேன்? ஓடியாடிப் பாடுபட்டுச் சேக்குற வழியப் பாத்தா உருப்புடுலாம். வேய்க்கானம்ங்றது நெம்ப முக்கியமல்லோ? ஏன்னா, ஒறவும் பகையும் கையில காசிருந்தாத்தான் வந்து சேரும். இருக்குற ஒறவு அந்து போறதும் அந்தக் காசாலத்தான் போகும். அதுனால வேய்க்கானம் நெம்ப முக்கியம்.
என்றா இவன் நெம்பத்தான் பாடம் போடுறானேன்னு யோசிக்கிறீங்ளாட்ட இருக்கூ? சொறிஞ்சு தேய்க்காத எண்ணெயும் பரிஞ்சு போடாத சோறும் இருந்தாயென்ன? இல்லாட்டியென்ன?? அதாஞ்சொல்றன். பின்ன. உங்களுக்குன்னு நான் இருக்குறது எதுக்கு? திருவுண்டானா திறமையும் வந்து சேரும்.
தெகிரியமா இருங்க!! ஒழுக ஒழுகப் பேசுனாக் காசாயிருமா? போயி, நீங்களும் உங்க பொழப்பு தழப்பைப் பாருங்க. நானும் என்ற பொழப்பைப் பாக்குறன்!!
-பழமைபேசி.
10/25/2017
குப்பமேனிப்பூவுல...
அவனுக்கென்னங்க, விட்டா, குப்பமேனிப்பூவுல விட்டஞ்செஞ்சு பூட்டுவேன்னு சொல்வான்! வெக்கமா மானமா சொல்லுங் பாக்குலாம். பின்ன? குத்துக்கல்லுக்கு என்ன கெடக்குது மழயா வெயிலா?? அவம் பொழப்பும் ஓடீட்டுதான இருக்குதூ? என்ன நாஞ்சொல்றது?
ஆமாங், நீங்க சொல்றது வாசுதுவந்தேன். ஏத்துவார ஏத்தி நாளொரு எலியும் புடிப்பான்; ஏய்ப்பாரை ஏச்சி நாளுக்கு நாலு குண்டா ராகிக்களியும் திம்பான் அவன்!! ஏது, நானு என்ன பேசறனா? இம், எலீ லவுக்க போட்டுச்சாஞ் சபையில! போங் போங், போயிப் பாடுபழமயப் பாருங் போங்!!
-பழமைபேசி.
ஆமாங், நீங்க சொல்றது வாசுதுவந்தேன். ஏத்துவார ஏத்தி நாளொரு எலியும் புடிப்பான்; ஏய்ப்பாரை ஏச்சி நாளுக்கு நாலு குண்டா ராகிக்களியும் திம்பான் அவன்!! ஏது, நானு என்ன பேசறனா? இம், எலீ லவுக்க போட்டுச்சாஞ் சபையில! போங் போங், போயிப் பாடுபழமயப் பாருங் போங்!!
-பழமைபேசி.
9/13/2012
அந்நியன்
ஏய்
வாங்கடி போயிறலாம்
கரும்பொறிய
வாங்கடி போயிறலாம்
கரும்பொறிய
கையில தூக்கிட்டு
எவனோ அந்நியன்
வர்றான்!
வாயாடி
கொக்குக்குத்
தெரியுமா
ஊர்க்காரனின்
எங்கோ போய்
விழுந்த விதை
நானென்று?!
படம்: நண்பர் வெட்டிக்காடு இரவிச்சந்திரன்
(பசுஞ்சோலைக்குப் பெயர் வெட்டிக்காடு?!)
மொளகாப் பத்து

எத்தனை நாள்தான்
கடத்திக் கொண்டிருப்பது?
இன்றைக்கு முடித்து
விட வேண்டியதுதான்!
முந்தைய நாள் இரவே
கடைசி வண்டி பிடித்து
ஆனைமலை போயாயிற்று
காசு வெட்டிப் போட்டு
மிளகாய் அரைத்துப் போடத்தான்!!
சினமடங்க
வெறி தீர
காசு வெட்டி
தன் கையாலாயே
மாசாணியம்மனுக்கு
மிளகாய் அரைத்துப் பூசி
வீடு வந்து சேர்ந்தாயிற்று!!
வள்ளீம்மக்கா
அல்லாரும்
தோட்டங்காட்டைப்
பாக்காம எங்க போய்ட்டீங்க?
உங்க கொழுந்தனாருமு
கொழுந்தனார் பொஞ்சாதியுமு
ஈரப்பதவலு எதுமு பாக்காம
உங்க கெணத்துக்குள்ள எறங்கி
மோட்டார் எடுத்துடாம இருந்துருந்தா
இராத்திரி பேஞ்ச மழைக்கு
பெட்டுக்கு தண்ணி வந்து
அல்லாம் நாசமாப் போயிருந்துக்குமக்கா!!
அட?
அதுவாட்டுக்கு மூலையில
கெடந்தது கெடந்தமாரியிருந்த
மொளகாவத்தலு
மூணு இராத்தலு
வீணாப் போனதுமில்லாம
இந்தக் கையிக ரெண்டுமு
என்னா எரி எரியுது?
கடத்திக் கொண்டிருப்பது?
இன்றைக்கு முடித்து
விட வேண்டியதுதான்!
முந்தைய நாள் இரவே
கடைசி வண்டி பிடித்து
ஆனைமலை போயாயிற்று
காசு வெட்டிப் போட்டு
மிளகாய் அரைத்துப் போடத்தான்!!
சினமடங்க
வெறி தீர
காசு வெட்டி
தன் கையாலாயே
மாசாணியம்மனுக்கு
மிளகாய் அரைத்துப் பூசி
வீடு வந்து சேர்ந்தாயிற்று!!
வள்ளீம்மக்கா
அல்லாரும்
தோட்டங்காட்டைப்
பாக்காம எங்க போய்ட்டீங்க?
உங்க கொழுந்தனாருமு
கொழுந்தனார் பொஞ்சாதியுமு
ஈரப்பதவலு எதுமு பாக்காம
உங்க கெணத்துக்குள்ள எறங்கி
மோட்டார் எடுத்துடாம இருந்துருந்தா
இராத்திரி பேஞ்ச மழைக்கு
பெட்டுக்கு தண்ணி வந்து
அல்லாம் நாசமாப் போயிருந்துக்குமக்கா!!
அட?
அதுவாட்டுக்கு மூலையில
கெடந்தது கெடந்தமாரியிருந்த
மொளகாவத்தலு
மூணு இராத்தலு
வீணாப் போனதுமில்லாம
இந்தக் கையிக ரெண்டுமு
என்னா எரி எரியுது?
9/09/2012
தனா

டே சின்ராசூ...
கருக்கடையா இருந்துக்கடா
பதனமாக் களத்து மேட்டைக் கூட்டி
நறுவிசு பண்ணிப்போடு!
எறவாரத்துத் தூக்குப்போசில
இருக்குற கஞ்சியக் குடிச்சபின்னால
மிச்சத்தை நாய்க்கு ஊத்தீட்டு
கழுவிக் கமுத்தீரு!!
சோளக்காடு
வய்க்கப்போருன்னு
கள்ளுக்கார வங்கணத்தி பொறவால திரிஞ்சி
பொழுதை வீணாக்கீறாத!!
இன்னிக்கு மேக்க இருந்து
உங்க மாமன் வர்ற நாளு
சூதானமா இருந்துக்கடா!
எல்லாஞ்செரி
மாமங்கோட
தனா வர்றாளா??
(படம் உதவி: http://www.desipainters.com/)
9/02/2012
செவ்வந்தி
புறக்கொல்லையில் இருக்கும் கிளுவமரத்து வேலியிலும், காரமடை மூலையில்
இருக்கும் அந்த ஒரே ஒரு வேம்பு மரத்திலும் குருவிகளின் சிலுசிலு சிணுங்கல்களுடன், ஊரோரத்தில்
இருக்கும் சின்னான் வீட்டுச் சேவலொன்றின் கூவலொலியும் சிறுகீற்றாய்க் காதில் விழுகிறது.
கணங்கள் பல கழிந்தன. கோம்பக்காட்டு மாறனின் தந்தையார் குரல்
கொடுத்தார். “முதல்ல பாலைக் கறக்கறது ஆரு? மந்திரீப்பா நீயே கறந்துரு!”,
கட்டுத்தறியில் சாணம் அகற்றி, அண்ணன் சீதனமாய் அனுப்பி இருக்கும்
கனகவள்ளியை இடம் மாற்றிக் கட்டிக் கொண்டிருந்தாள் சம்பங்கி. விருகல்பட்டிக்கு வாழ்க்கைப்பட்டு
பதினைந்து ஆண்டுகளானாலும், ஆறுக்குட்டி அண்ணன் தனக்காக இப்போது அனுப்பி வைத்திருக்கும்
கனகவள்ளியைப் பார்த்து சம்பங்கிக்குக் கடலளவு மகிழ்ச்சி. கனகவள்ளி காலடி எடுத்து வைத்த
இந்த ஆவணி மாதம் முழுதும் அவள் புறக்கொல்லையில்தான் அதிகம் வசிக்கிறாள்.
”இந்தா பெரீவளே பொற்கொடி! கெழக்க வெளுத்துத் திண்ணைக்கு வெயில்
சித்தங்கூரத்துல வரப் போகுது புள்ளை, எந்திரீங்க வெள்ளண்ண!!”, சம்பங்கியின் மாமியார்
தன் பெயர்த்திகளை விரட்டத் துவங்கினாள்.
“ஆத்தா, எனக்கு இன்னுந் தூக்கம் முறியலை ஆத்தா!”
“பெரியவ நீயே இப்பிடி விளங்காமக் கொள்ளாமத் தூங்குறியே? எளையவ
பூங்கொடி, எந்திரின்னா எந்திரிக்கவா போறா? ரெண்டும் பொட்டைகளாப் பெத்துப் போட்டுட்டு
உங்கம்மா எங்க போய்த் தொலைஞ்சாளோ? ஒரு வாய்க் காப்பித் தண்ணி கூட நாந்தாம் போட்டுக்
குடிக்கோணுமாட்ட இருக்கூ?”, அன்றைய புலம்பல் நல்லபடியாகவே துவங்கியது.
தன் மாமியாரின் குரல் கேட்டதும் அடுக்களைக்குத் திரும்பினாள்
சம்பங்கி. அடுப்பில் உலை காய்ந்து அரிசி வெந்து சோறு மகிழ்ந்து வந்து கொண்டிருந்தது.
துடுப்பால் கிளறி விட்டுத் துடுப்பில் ஒட்டியிருந்த ஓரிரு பருக்கைகளை எடுத்து வாயில்
போட்டுச் சுவைத்தாள்.
“இன்னும் பாதி வேக்காடு வேகணுமாட்ட இருக்கு?!” என நினைத்தவாறே
எரிந்து கொண்டிருந்த விறகுகளை ஒன்று கூட்டி உள்ளே நகர்த்தினாள். கண்ணடுப்பில் காய்ந்து
கொண்டிருந்த காப்பித் தண்ணியைக் கிண்ணத்தில் சற்று ஊற்றி, கருப்பட்டித் தூளையும் சேர்த்து
விளாவிக் கொண்டே தன் பார்வையை மேற்புறமாகக் கிடத்தினாள்.
மாலகோயில் மூலையில் தொங்கவிடப்பட்டிருக்கும் உறி ஒய்யாரமாய்
ஊசலாடிக் கொண்டிருந்தது அதிலிருந்த பால்க் குண்டாவை பதனமாய்க் கீழிறக்கினாள். பிறகு
காப்பித் தண்ணியோடு சிறுகப் பாலையும் சேர்த்தபின்னர், “இந்தாங்க அத்தை! காபி சூடாக்
கொண்டாந்து இருக்குறேன்!!” எனக் கூறியபடியே காப்பிக் கிண்ணத்தையும் குவளையையும் கொண்டுத்
போய் தன் மாமியாரின் அருகில் வைத்தாள் சம்பங்கி.
”ம்ம்… பெத்துப் போட்டிருக்குறது ரெண்டும் பொட்டைப் புள்ளைகளாப்
பெத்துப் போட்டுருக்குறா. விளங்குற கூறு அதிலிருந்தே விளங்குதே? எப்பப் பார்த்தாலும்
அந்தச் செனை மாட்டைச் சுத்தியே வந்தா, ஊட்டு வேலையெல்லாம் நேரத்துக்கு ஆரு பாப்பாங்களோ?
ஊட்டுக்குள்ள பொட்டைக்கன்னுகளாப் பெத்துப் போட்டுருக்குறா. அவ கொண்டாந்த மாடு என்னத்தை
ஈனப்போகுதோ? பொட்டைக் கன்னாவே ஈனுமா? நல்ல காளைக் கன்னாத்தான் போடப் போகுது அது! அதுக்குப்
போயி இந்த சீரும், சிறப்புமு??” தொடர்ந்து புலம்பிக் கொண்டிருந்தாள் மாமியார்க்காரியான
காட்டம்பட்டி தெய்வாத்தாள்.
காட்டம்பட்டி தெய்வாத்தாள் மிகவும் கண்டிப்பானவள், கெட்டிக்காரி,
வேளாண் தொழிலில் பல்லாண்டு அனுபவம் வாய்ந்தவளெனப் பட்டி தொட்டியெல்லாம் பேசுமளவுக்குப்
பெயர் எடுத்தவள். தன் ஒரே மகனான மந்திரியப்பனுக்கு இரண்டு பேறும் பெண் மகவாக அமைந்து
விட்டதே எனும் அகங்கலாய்ப்பு அவளைத் தொடர்ந்து ஆட்\கொண்டிருந்ததன் ஒரு முகம்தான் அவளது
இப்போதைய புலம்பல்.
தெய்வாத்தாளின் மருமகளும் மந்திரியப்பனின் மனைவியுமான சம்பங்கி,
தெய்வாத்தாளை விட மிகவும் திறமைசாலி. விருகல்பட்டி கிராமத்தில், நெகமத்துப் பள்ளிக்குச்
சென்று மேல்நிலைப் பள்ளிப் பாடம் கற்ற ஒரே பெண்மணி இவள்தான். எதையும் பொறுமையாக எதிர்கொள்பவள்.
ஏழ்மை கண்டு துவழ்ந்து போகாதவள்.
”பொற்கொடி, பூங்கொடி, எந்திரிங்க கண்ணுகளா! எந்திரிச்சி பல்
துலக்கித் தண்ணி வாத்துட்டு வாங்க. எங்கூடத் தோட்டத்துக்கு வருவீங்களாமா? உங்கப்பா
அங்க பசியோட காத்திட்டு இருப்பாரு. எந்திரிங்க கண்ணுகளா!”, பிள்ளைகளை எழுப்பினாள் சம்பங்கி.
”அம்மா, நம்ம கனகவள்ளிய தோட்டத்துக்கு நாந்தான் ஓட்டியாருவேன்!”,
எந்நேரத்திலும் கன்று ஈன்றெடுக்கும் நிலையிலுள்ள சினை மாடான கனகவள்ளியைத் தானே ஓட்டி
வருவேன் எனச் செல்லமாய் உரிமை கொண்டாடுகிறாள் சம்பங்கியின் இளையமகள் பூங்கொடி.
வானம் பொய்த்து விளைச்சலும் பொய்த்தது. உப்பாற்று அணைக்கட்டுக்காகத்
தன் தோட்டத்துக்கு அண்மையில் ஓடிக்கொண்டிருந்த அரசூர் ஓடையிலும் முன்பு போலத் தண்ணீர்
பெருக்கெடுப்பது இல்லை. ஏன் என்று கேட்டால் அரசியல் என்கிறார்கள். இயற்கையாக ஏற்பட்டிருக்கும்
ஓடையில் தண்ணீர் வரத்து இல்லை. மாறாகச் செயற்கையாய் கால்வாய்கள் உண்டு செய்யப்பட்டு
மேலானவர்கள் எனக்கருதப்படும் பலர் இருக்குமிடங்களுக்குத் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு
விட்டது.
ஆண்டுக்கு மூன்று போகம் விளைச்சல் கண்டவன் மந்திரியப்பன். இன்று
ஒரு போக விளைச்சலுக்கே அல்லாடுகிறான். விபரமறிந்த மச்சான் மருதாசலம் தன் தங்கையின்
வீடு சிறப்பாக இருக்க வேண்டுமென, தன்னிடத்தில் இருக்கும் ஒரே சினைமாடான கனகவள்ளியைச்
சம்பங்கிக்குச் சீதனமாய் அனுப்பி வைத்திருக்கிறான்.
”கனகவள்ளி ஈன வேண்டும். அது கொடுக்கப் போகும் பாலை உள்ளூர் கூட்டுறவுச்
சங்கத்தில் ஊற்றிக் குடும்பச் செலவைத் தன் கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்” என்பதே
சம்பங்கியின் ஆசை. பெண் மகவாக, கிடாரிக் கன்றாக ஈன்றெடுத்தால் இன்னும் சிறப்பு.
சினைமாட்டை ஓட்டியபடி இளையவள் பூங்கொடி முன்பக்கமாய்ச் சென்று கொண்டிருக்க. சோத்துப்
போசியும் கம்பங்கூழ்க் கலயமும் வாகாய் வைக்கப்பட்ட பொட்டிக்கூடையைச் சும்மாட்டுடன்
தலையில் வைத்துப் பூங்கொடிக்குப் பின்னால் நடந்து கொண்டிருந்தாள் சம்பங்கி. இவர்களுடன், பெரியவளான பொற்கொடி திருகணிச் சொம்பில் தன் தந்தைக்கான காப்பித் தண்ணியோடு என அனைவரும்
சென்று கொண்டிருந்தனர்.
கிராமத்தில் சொல்லப்படும் சொலவடையை நினைத்துப் புன்னகைத்தாள்
சம்பங்கி. அழகும் அன்புமாய்த் தனக்கு இரு பெண் பிள்ளைகள். ஊரே கேலி பேசுகிறது. ஆனால்
மாட்டுக்கான சொலவடை, “ஈனுறது கிடாரின்னா பட்டி பெருகிக் குடும்பம் தழைக்கும்!”.
சட்டென இறுகியது சம்பங்கியின் முகம். தன் அத்தை போடும் கூப்பாட்டுக்கு
ஏற்றாற்போல, “காளைக்கன்றுதான் கனகவள்ளி ஈன்றெடுப்பாளோ? அவ்வளவுதான், தன்கதி அதோகதி
ஆகிவிடுமே? ஆசை பொய்த்துப் போவது மட்டுமல்லாது, குடும்பம் விரிசல் கண்டு வாழ்க்கை இன்னுஞ்
சீரழியுமே??”, கவலை தோய்ந்து பெரும் இறுக்கத்துக்கு ஆளானாள் சம்பங்கி.
மனைவி மக்களைக் கண்டதும் முகில் விலகிய நிலாப் போல ஒளிர்ந்த
மந்திரியப்பன், “கண்ணுகளா வாங்கடா வாங்கடா… காலையில சோறுண்டீங்களாடா?”.
“ஆச்சுங்ப்பா… நீங்க சாப்புடுங்ப்பா, வயித்துப் பசியோட இருக்காதீங்க”,
பொற்கொடி குழைந்தாள்.
பசியாறிய பின்னர் மந்திரியப்பன் கடப்பாரையால் அருகு தோண்ட, தோண்டப்பட்ட
மண்ணை மண்வெட்டியால் வாங்கி, மண்ணில் ஊன்றியிருக்கும் அருகு வேர்களைக் கையால் களைந்தெடுத்துக்
கொண்டிருந்தாள் சம்பங்கி.
அருகில் இருக்கும் மேய்ச்சல் நிலத்தில் கனகவள்ளி மேய்ந்து கொண்டிருக்க,
பொற்கொடியும் பூங்கொடியும் வெங்கச்சாங்கல் பொறுக்கிக் கொண்டிருந்தனர்.
திடீரென மந்திரியப்பன் பெருங்குரலெடுத்து இரைந்தான். “சம்பங்கி,
போ, ஒடனே போயி கோம்பக்காட்டு மாறனைக் கூட்டியா போ!”.
அண்மையில் இருக்கும் பிறிதொரு தோட்டத்துச் சாளையை நோக்கி ஓடினாள்
சம்பங்கி.
இடக்கைப் பழக்கமுள்ள மந்திரியப்பன், தன் இடக்கையின் நடு விரலையும்
பெருவிரலையும் வளையமாக்கித் தன் வாயில் வைத்துச் சீட்டியடித்து அண்மையிலிருக்கும் ஆட்களை
வரவழைத்தான்.
நடப்பதையெல்லாம் பொற்கொடியும் பூங்கொடியும் விக்கித்துப் போய்ப்
பார்த்துக் கொண்டிருந்தனர்.
கனகவள்ளி இங்குமங்குமாய் அலைமோதினாள். முதலில் தலை வெளிப்படத்
தோன்றியது. கனகவள்ளியின் உடலனைத்தும் குறுகக்குறுக வெண்பனிக்குடத்தின் மேலாடையுடன்
தலை வெளிப்பட்டு, முன்னங்கால்கள் வெளிப்பட்டு, கடைசியாய்க் கீழே ”தொப்”பென
விழுந்து மண்ணை முத்தமிட்டது கன்று.
வெண்பனிக் குடத்தின் நீரும் மண்ணுமாக அப்பித் தரையில் கிடந்தது
இளங்கன்று. கனகவள்ளி தலையை மறுபக்கம் திருப்பித் தானீன்ற சேயைத் தன் நாவால் நக்கத்
துவங்கினாள். மெதுவாகக் கன்று தத்தித்தத்தி எழுந்தது. தன் பால்மடி நாடப்படுவதை உணர்ந்த
கனகவள்ளி, வாகாய் நகர்ந்து நின்றாள். தாயின் மடி முட்டிக் குடித்தது கன்று. அன்பொழுகத்
தன் மகவை இன்னும் நக்கிக் கொண்டிருக்கிறாள் கனகவள்ளி.

“வேண்டாம்! வேண்டாங் மாமா, சம்பங்கிக்குனு அவிக அண்ணங் குடுத்ததுங்க.
சம்பங்கியே கறக்கட்டுமுங்க!!”, வாஞ்சையாய்த் தன் மனைவியை ஏறிட்டான் மந்திரியப்பன்.
கணவனுக்குச் சோறு கொண்டு வந்த சோத்துப் போசியில், கடும்பால் எனப்படுகிற சீம்பாலைக் கறந்தாள் சம்பங்கி. தோட்டத்துச் சாளையில் வைத்தே அடுப்பு கூட்டிச் சீம்பால் திரட்டும் தயாரானது.
கணவனுக்குச் சோறு கொண்டு வந்த சோத்துப் போசியில், கடும்பால் எனப்படுகிற சீம்பாலைக் கறந்தாள் சம்பங்கி. தோட்டத்துச் சாளையில் வைத்தே அடுப்பு கூட்டிச் சீம்பால் திரட்டும் தயாரானது.
காப்பிக்காகக் கொண்டுவரப்பட்ட கருப்பட்டித் தூளைச் சிறிதாகச்
சீம்பால்த் திரட்டின் மீது தூவி, அதைக் கலயத்தில் இட்டாள் சம்பங்கி. கலயத்தைத் தூக்கிக்
கொண்டு வீட்டை நோக்கி எழுச்சியோடு ஓடினாள் மூத்த மகள் பொற்கொடி.
”ஆத்தா, மாடு கன்னுப் போட்டுருச்சி! ஆத்தா மாடு கன்னுப் போட்டுருச்சி!”
“அடப் பெரியவளே மொல்ல வாடா! அடப் பாத்து மொல்ல வாடா!! ஆமா, என்ன
கன்னுப் போட்டுருக்குது?”
“நம்ம கனகவள்ளி கிடாரிக் கன்னுதாம் போட்டுருக்குது ஆத்தா. செவலையா
நல்லா இருக்குது. அவபேரு செவ்வந்தி!!”
குறிப்பு: வல்லமை இதழின் செப்டம்பர் மாத முதல் பரிசு பெற்ற கதை இது!! http://www.vallamai.com/literature/articles/26935/
குறிப்பு: வல்லமை இதழின் செப்டம்பர் மாத முதல் பரிசு பெற்ற கதை இது!! http://www.vallamai.com/literature/articles/26935/
1/30/2012
ஆசகாட்டி?!
ஃபுல்வாயல் சேலகட்டி
வவுறுதெரிய ரவுக்கபோட்டு
ஆசகாட்டி மோசஞ்செய்யுற பொம்பள, ஒங்கள
அறிஞ்சிருந்தும் மோசம்போறது நாங்களே!!
***********************************************
பட்டுக்கோட்ட அறந்தாங்கி
பாத சொல்லும் தேவகோட்ட
நெத்திமட்டம் இராமனாடு
ஒன்னெனவு மெரட்டுதடி
ஆத்தப்பாரு ஊத்தப்பாரு
அலங்கானூரு தோப்பப்பாரு
செல்லூரு கரையப்பாரு
செவத்தபுள்ள நடையப்பாரு!!
***********************************************
ஆத்துக்குள்ள ரெண்டு முட்டை தத்தளிக்குதாம்
அழகான சாமி வந்து கோலம் போடுதாம்
திண்டுக்கல்லு பூசிவச்சு திண்டாடுதாம்
மாவுக்கல்லு பூசிவச்சி மாவாட்டுதாம்
சின்ன முத்தம்மா, பெரிய முத்தம்மா
கருவாட்டு முள்ளெடுத்து காதுதான் குத்தம்மா!!
மண்ணின் மணம் வீசும் இசைஞானி!!
9/15/2011
கம்பங்காடு
கஞ்சி வேற, கூழ் வேறன்னா கேட்டுக்கணும். ஊட்டுக்காரி பெப்பப்பேங்றாங்க... கஞ்சின்னா வடிச்செடுக்கிறது. கூழ்ன்னா, சோற்றைக் குழம்பு போல குழையவிட்டு நீர்மம் ஆக்கினது; கூழ்த்துளாவின்னா, சோறும் கூழும் கலந்த கலவை;
புக்கைன்னா, பருப்பைச் சேர்த்து வேகவெச்சி சோறோட குழைய விடுறது; கம்பங்களியை உப்புத் தண்ணியில ஊற வெச்ச தண்ணி, கம்பந்தண்ணி! கம்பை வேகவெச்சி, மெலிசா இருக்குற துணி அல்லது, தட்டை வெச்சி வடிச்செடுக்குறது கமபங்கஞ்சி; கம்பை நல்லா வேகவிட்டு, குழையவிட்டு
நீர்மம் ஆக்கி உப்புப் போட்டுக் குடிக்கிறது கம்பங்கூழ்!!
அதே கம்பை அரைச்சி மாவாக்கி, அந்த மாவை வேகுற தண்ணியில போட்டு எடுத்தா அது ஊதுமாக்கூழ்; கூழ்ல காய்கறி, விதைக்கொட்டைகளைத் தொடப்பம் போட்டுத் துளாவி விட்டா அது கம்பங்கூழ்த் துளாவி ஆய்டும்.
கம்பையும் பாசிப்பயறையும் ஒன்னா வேகவெச்சி கொஞ்சூண்டு நல்லெண்ணைய ஊத்தி உருசிபடத் தின்னா அது புக்கை. கம்பை ஆட்டாங்கல்லுல அரைச்சி கல்லுல ஊத்துனா கம்பந்தோசை. பனியாரக் கல்லுல ஊத்தினா குழித்தோசை அல்லது பனியாரம் ஆய்டும். அரைச்ச மாவை அவிய விட்டா, கம்பங் கொழுக்கட்டை ஆய்டும். நொதிக்க வெச்சி வேகவெச்சா, அது கம்பு இட்லி ஆய்டும்.
கோயமுத்தூர் காளிங்கராயன் வீதியில இருக்குற ஒரு கடையில இதெல்லாம் ஒரு காலத்துல சமைச்சிக் குடுத்துட்டு இருந்தாங்க. இன்னும் அந்தக் கடை இருக்கா? இல்லன்னா, ஆந்திர எல்லையில இருக்குற சிறீகாகுளம் போனாக் கிடைக்கும்.
புக்கைன்னா, பருப்பைச் சேர்த்து வேகவெச்சி சோறோட குழைய விடுறது; கம்பங்களியை உப்புத் தண்ணியில ஊற வெச்ச தண்ணி, கம்பந்தண்ணி! கம்பை வேகவெச்சி, மெலிசா இருக்குற துணி அல்லது, தட்டை வெச்சி வடிச்செடுக்குறது கமபங்கஞ்சி; கம்பை நல்லா வேகவிட்டு, குழையவிட்டு
நீர்மம் ஆக்கி உப்புப் போட்டுக் குடிக்கிறது கம்பங்கூழ்!!
அதே கம்பை அரைச்சி மாவாக்கி, அந்த மாவை வேகுற தண்ணியில போட்டு எடுத்தா அது ஊதுமாக்கூழ்; கூழ்ல காய்கறி, விதைக்கொட்டைகளைத் தொடப்பம் போட்டுத் துளாவி விட்டா அது கம்பங்கூழ்த் துளாவி ஆய்டும்.
கம்பையும் பாசிப்பயறையும் ஒன்னா வேகவெச்சி கொஞ்சூண்டு நல்லெண்ணைய ஊத்தி உருசிபடத் தின்னா அது புக்கை. கம்பை ஆட்டாங்கல்லுல அரைச்சி கல்லுல ஊத்துனா கம்பந்தோசை. பனியாரக் கல்லுல ஊத்தினா குழித்தோசை அல்லது பனியாரம் ஆய்டும். அரைச்ச மாவை அவிய விட்டா, கம்பங் கொழுக்கட்டை ஆய்டும். நொதிக்க வெச்சி வேகவெச்சா, அது கம்பு இட்லி ஆய்டும்.
கோயமுத்தூர் காளிங்கராயன் வீதியில இருக்குற ஒரு கடையில இதெல்லாம் ஒரு காலத்துல சமைச்சிக் குடுத்துட்டு இருந்தாங்க. இன்னும் அந்தக் கடை இருக்கா? இல்லன்னா, ஆந்திர எல்லையில இருக்குற சிறீகாகுளம் போனாக் கிடைக்கும்.
அம்மணிகிட்ட இருந்து அடுத்த கேள்வி... சோறு, களி, கூழுக்குண்டான வேறுபாடு என்ன? தானியத்தை அரிச்ச பின்னாடி பானையில போட்டு பருக்கை பருக்கையா வேக வெச்சா அது சோறு! உராஞ்சிக் கல்லுல போட்டு மாவாக்கினதை கொதிதண்ணியில போட்டு களிம்பு நிலைக்கு கொண்டு வர்றது களி; அதையே நீர்ம நிலைக்கு கொண்டாந்தா கூழ்!!
9/13/2011
ஆவுள்ளம்
அலுவலுக்குச் செல்லும் வேளையிது. எனினும் இதனால் ஏற்பட்ட பாதிப்பு அளப்பரியது. கொங்குநாட்டில், அன்பின் மிகுதியாலும் வாய் நீளுவது உண்டு. ”ஆவுளக் கண்டாரோளி என்னை வுட்டுட்டுப் போய்ட்டாளே” என நெகிழ்ந்து நெக்குருகித் துயரத்தை வெளிப்படுத்துவார்கள்.
'ஆவுள' என்றால் என்ன என்பதைப் பற்றி நாங்களெல்லாம் அறிந்து கொள்ளத் தலைப்பட்ட போது, சர்க்கார் பாளையம் (ஜக்கார் பாளையம்) கோவிந்தராசு அய்யா அவர்கள், ஆவுள்ளம் என்றால் என்ன என்பதைப் பற்றியும் நாடோடிச் சொலவடைகளைப் பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தார். இன்று அவர் எம்மோடு இல்லை. என்றாலும் அவரை நன்றியோடும் உருகிய உள்ளத்தோடும் நினைத்துப் பார்க்கிறேன்.
’ஆ’ என்றால் பசு. எங்கள் ஊருக்கு அண்மையில், ஆவுகளுக்கான கோயில் ஒன்றும் உண்டு. மால கோயில் என்பார்கள். ஆல் கொண்ட மால் கோயில் என்பது திரிந்து, மால கோயில் ஆயிற்று.
ஆவின் உள்ளம் தாய் உள்ளத்தைக் காட்டிலும் சிறந்ததாம். ஆகவேதான், ஆவுளச் சிறுக்கி, ஆவுளக் கண்டாரோளி என்றெல்லாம் ஒப்பாரிகளில் எடுத்தியம்புகிறார்கள்.
இதோ, அச்சொல்லாட்சிக்குக் கட்டியம் கூறும் படங்கள்!
'ஆவுள' என்றால் என்ன என்பதைப் பற்றி நாங்களெல்லாம் அறிந்து கொள்ளத் தலைப்பட்ட போது, சர்க்கார் பாளையம் (ஜக்கார் பாளையம்) கோவிந்தராசு அய்யா அவர்கள், ஆவுள்ளம் என்றால் என்ன என்பதைப் பற்றியும் நாடோடிச் சொலவடைகளைப் பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தார். இன்று அவர் எம்மோடு இல்லை. என்றாலும் அவரை நன்றியோடும் உருகிய உள்ளத்தோடும் நினைத்துப் பார்க்கிறேன்.
’ஆ’ என்றால் பசு. எங்கள் ஊருக்கு அண்மையில், ஆவுகளுக்கான கோயில் ஒன்றும் உண்டு. மால கோயில் என்பார்கள். ஆல் கொண்ட மால் கோயில் என்பது திரிந்து, மால கோயில் ஆயிற்று.
ஆவின் உள்ளம் தாய் உள்ளத்தைக் காட்டிலும் சிறந்ததாம். ஆகவேதான், ஆவுளச் சிறுக்கி, ஆவுளக் கண்டாரோளி என்றெல்லாம் ஒப்பாரிகளில் எடுத்தியம்புகிறார்கள்.
இதோ, அச்சொல்லாட்சிக்குக் கட்டியம் கூறும் படங்கள்!
அம்முகத்தைப் பாருங்கள். வாஞ்சை வழிந்தோடுகிறது!!
ஆவின் கண்ணைப் பாருங்கள். கனிவு கசியும் கண்கள்!!
5/05/2011
ஒஞ்சியுண்ட்டு வந்தேன்!
இந்தவாட்டி ஊருக்குப் போய்ட்டு வந்ததுல, கொஞ்சத்தை உள்ள புடிச்சுப் போட்டுட்டு வந்தேன். எங்க ஊட்டுக்குப் பக்கத்துல ஒரு கண்ணால மண்டபம் இருக்குங்க. அங்க ஒரு படுகக் குடும்பம், அந்த மண்டபத்துக்குப் பண்ணாடி வேலை செஞ்சிட்டு, அதுக்குள்ளயே குடி இருக்காங்க.
அவங்க ஊட்டுப் பொண்ணு ஒன்னு, என்ற மகளோட வெளையாட வந்துச்சு. வந்ததும், நான் ஒஞ்சியுண்ட்டு வந்தேன்..., நான் ஒஞ்சியுண்ட்டு வந்தேன்னு மழலைத்தனமா சொல்லிட்டு இருந்ததுங்க. ஊட்ல ஒறம்பரைக எல்லாம் இருக்கும் போதே போயி, ஊட்டுக்காரிகிட்ட அந்தப் பொண்ணு என்னவோ சொல்லுதே அது என்ன, என்னன்னு மறுக்கா, மறுக்கா கேட்டுட்டே இருந்தேன்.
என்னோட தொல்லை தாங்காத எங்க மாமா ஒருத்தரு, “மாப்பிள்ளை வாங்க சித்த”ன்னு சொல்லி அந்தப் பக்கம் கூட்டிட்டுப் போனாரு. “ஏன் மாப்பிளை, பொண்டு புள்ளைக இருக்குற எடத்துல வுடாம நச்சரீங்களே?”.
“இல்லீங்க மாமா, அந்த ஒஞ்சியுண்ட்டு வர்றது....”
“இன்னும் நீங்க அத வுடலையா? அந்தக் குழந்தை, தாய்ப்பால் உண்ட்டு வந்ததைத்தான் சொல்லுதுங்க”
நெம்ப சங்கட்டமாப் போச்சுது. வண்டியக் கிளப்பிட்டு தெக்க தோட்டம் போனவன், ஒறம்பரைக எல்லாம் ஊட்டுல இருந்து கிளம்பினவுட்டுத்தானுங்க வூட்டுக்கே வந்தேன். வந்ததும் நடந்தது அர்ச்சனை, ஏகத்துக்குமு!! அவ்வ்வ்.....
காண்ட்ரேக்டருங்றாங்க... ஆள் ஏஜெண்ட்டுங்கராங்க... இப்ப எல்லாம் எந்த ஊர்லயும், இந்திக்காரவங்கதான் தோட்டங்காடுகளுக்கு வேலை பார்க்க வர்றாங்க. அவங்களைக் கூட்டியாறதுக்கு ஒருத்தன். ஏஜெண்ட்டுன்னு சொல்லி அவனுக்கு நெம்ப மரியாதை.
அப்படித்தானுங்க, நானும் பெரியபாப்பநூத்துல இருக்குற எங்க பெரியம்மாவிங்க தோட்டத்துல உக்காண்ட்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்தாரு. அதைப் பார்த்த எங்க நங்கை, எங்க பெரியம்மாகிட்டப் போயிச் சொன்னாங்க, “ஏனுங், அந்த ஏஜெண்ட் வந்துருக்காருங்க!”, அப்படின்னு.
ஊட்டுக்குள்ள அரிசி அரிச்சிட்டு இருந்த எங்க பெரியம்மா சொல்லுச்சு, “யாரந்த கொத்துக்காரனா? இருக்கச் சொல்லு.. அவனுக்கு ரெண்டு கொத்து புடிச்சிட்டுத்தான் தரோணும் இந்தவாட்டி!”, அப்படின்னுச்சு. இஃகிஃகி, உங்களுக்கு எதும் புரியுதாங்க? இதானுங்க நம்பூர்ப் பழமைங்றது!!
கொத்துக்காரன்னு சொன்னா, கூலி வேலைக்கு ஆள் கூட்டியாறவனுங்க. கொத்து அப்படின்னு சொன்னா, கூட்டம், திரள், கும்பல்னு மொத்தமா இருக்குறதை சொல்றதுங்க. பூங்கொத்துன்னு சொல்றம் இல்லீங்களா? அது போல!
அப்படி, மொத்தமா ஆள் கூட்டியாறவன் கொத்துக்காரன். பத்து ஆள் கூட்டியாந்தா, ஒரு ஆள் கூலி அவனுக்கு. அந்த கூலியச் சொல்றது, கொத்து. அப்படி, அவனுக்கு குடுக்க வேண்டிய பணத்துல, ரெண்டு கொத்துப் பணத்தைத்தான் தரக்கூடாதுன்னு சொல்லிச் சொல்றாங்க எங்க பெரியம்மா. அவன் இனி என்ன மொள்ளமாரித்தனம் செய்தானோ? எங்க பெரியம்மா என்ன திருகுத்தனம் செய்தோ தெரீலீங்களே??
அவங்க ஊட்டுப் பொண்ணு ஒன்னு, என்ற மகளோட வெளையாட வந்துச்சு. வந்ததும், நான் ஒஞ்சியுண்ட்டு வந்தேன்..., நான் ஒஞ்சியுண்ட்டு வந்தேன்னு மழலைத்தனமா சொல்லிட்டு இருந்ததுங்க. ஊட்ல ஒறம்பரைக எல்லாம் இருக்கும் போதே போயி, ஊட்டுக்காரிகிட்ட அந்தப் பொண்ணு என்னவோ சொல்லுதே அது என்ன, என்னன்னு மறுக்கா, மறுக்கா கேட்டுட்டே இருந்தேன்.
என்னோட தொல்லை தாங்காத எங்க மாமா ஒருத்தரு, “மாப்பிள்ளை வாங்க சித்த”ன்னு சொல்லி அந்தப் பக்கம் கூட்டிட்டுப் போனாரு. “ஏன் மாப்பிளை, பொண்டு புள்ளைக இருக்குற எடத்துல வுடாம நச்சரீங்களே?”.
“இல்லீங்க மாமா, அந்த ஒஞ்சியுண்ட்டு வர்றது....”
“இன்னும் நீங்க அத வுடலையா? அந்தக் குழந்தை, தாய்ப்பால் உண்ட்டு வந்ததைத்தான் சொல்லுதுங்க”
நெம்ப சங்கட்டமாப் போச்சுது. வண்டியக் கிளப்பிட்டு தெக்க தோட்டம் போனவன், ஒறம்பரைக எல்லாம் ஊட்டுல இருந்து கிளம்பினவுட்டுத்தானுங்க வூட்டுக்கே வந்தேன். வந்ததும் நடந்தது அர்ச்சனை, ஏகத்துக்குமு!! அவ்வ்வ்.....
=========================
அப்படித்தானுங்க, நானும் பெரியபாப்பநூத்துல இருக்குற எங்க பெரியம்மாவிங்க தோட்டத்துல உக்காண்ட்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்தாரு. அதைப் பார்த்த எங்க நங்கை, எங்க பெரியம்மாகிட்டப் போயிச் சொன்னாங்க, “ஏனுங், அந்த ஏஜெண்ட் வந்துருக்காருங்க!”, அப்படின்னு.
ஊட்டுக்குள்ள அரிசி அரிச்சிட்டு இருந்த எங்க பெரியம்மா சொல்லுச்சு, “யாரந்த கொத்துக்காரனா? இருக்கச் சொல்லு.. அவனுக்கு ரெண்டு கொத்து புடிச்சிட்டுத்தான் தரோணும் இந்தவாட்டி!”, அப்படின்னுச்சு. இஃகிஃகி, உங்களுக்கு எதும் புரியுதாங்க? இதானுங்க நம்பூர்ப் பழமைங்றது!!
கொத்துக்காரன்னு சொன்னா, கூலி வேலைக்கு ஆள் கூட்டியாறவனுங்க. கொத்து அப்படின்னு சொன்னா, கூட்டம், திரள், கும்பல்னு மொத்தமா இருக்குறதை சொல்றதுங்க. பூங்கொத்துன்னு சொல்றம் இல்லீங்களா? அது போல!
அப்படி, மொத்தமா ஆள் கூட்டியாறவன் கொத்துக்காரன். பத்து ஆள் கூட்டியாந்தா, ஒரு ஆள் கூலி அவனுக்கு. அந்த கூலியச் சொல்றது, கொத்து. அப்படி, அவனுக்கு குடுக்க வேண்டிய பணத்துல, ரெண்டு கொத்துப் பணத்தைத்தான் தரக்கூடாதுன்னு சொல்லிச் சொல்றாங்க எங்க பெரியம்மா. அவன் இனி என்ன மொள்ளமாரித்தனம் செய்தானோ? எங்க பெரியம்மா என்ன திருகுத்தனம் செய்தோ தெரீலீங்களே??
1/14/2011
பொங்கல்
”டே கருணாநிதி, நீயி பெரியபோது போயிருவியா? இல்ல இங்கதான் இருப்பியா??”
“ஆமாண்டா, நானும் எங்க அக்கா ஜோதிலட்சியுமு இன்னிக்கு ஆறுமணி வண்டிக்கு பொள்ளாச்சி போயி, மாமன் கடையச் சாத்துனவுட்டு ஆனைமலை வண்டி புடிச்சிப் போலாம்னு எங்கம்மா சொல்லுச்சு! ஆமா, நீயி”
“எங்க பெரீம்மா செத்துப் போச்சில்ல? அதுனால இந்த வருசம் எங்களுக்கு நோம்பி இல்லடா. ஆனா, நான் லட்சுமாவரம், எங்கமுச்சியவிங் ஊருக்குப் போறேன்!”.
“அப்பிடியா? ஆனைமலை மாசாணியாத்தா கோயலுக்கு வருவியாடா அப்ப?”
“பாப்பு வந்தா, கூடா நானுமு வருவேன்!”.
சலவநாயக்கன் பட்டிப் புதூர் மின்வாரிய ஊழியரான குப்புசாமி அண்ணனின் மகன் கருணாநிதியும் மணியனும் ஒரே பள்ளியில் படிப்பவர்கள். மணியன் எட்டாம் வகுப்பு, கருணாநிதி ஏழாம் வகுப்பு. இருவரும் பள்ளிக்குக் கிட்டத்தட்ட ஐந்து மைல்தூரம் ஒன்றாக இணைந்தே சென்று வருவது வழக்கம்.
“மணீ, இங்க வா கண்ணூ. ஊருக்குப் போகாத இராசா... இங்கியே இரு... நாம நாளைக்கு உங்க பெரியத்தையப் பாக்குறதுக்கு தாளக்கரை போய்ட்டு வர்லாம்”
“போ அப்பத்தா... நான் எங்கமுச்சி ஊருக்குப் போறேன்...”
”உங்கம்மா உனைய நல்லாக் கெடுத்து வெச்சிருக்கா... இந்தக் கெழவி சொல்றத யாரு கேப்பாங்க? உள்ளந் தீயெரிய ஒதடு பழஞ்சொரியன்னு, பேசுறது மட்டும் தேனொழுகப் பேசுவா அவ!”, சந்தடி சாக்கில் மருமகளை வறுத்தெடுத்தாள் கிழவி.
”தம்பி, டிக்கெட் எடுத்தாச்சா?”
“இல்லீங்ணா, உடுமலைப் பேட்டை ஒன்னு குடுங்ணா!”
“ஒர்ருவா பத்து பைசா... செரியாச் சில்லறை வேணும்”
“இந்தாங், டிக்கெட் கிழிக்காமக் குடுங்ணா!”
மணியனுக்கு, பேருந்துச் சிட்டுகளைச் சேர்த்து வைப்பது நெடுநாள் வழக்கம். மூன்றாம் வகுப்பு படிக்கும் காலத்திலிருந்து, ஐந்தாண்டுகளாகத் தொடர்ந்து சேகரம் செய்து, சேமித்து வருகிறான்.
உடுமலைப் பேட்டையில், தளி சாலையும் பழனி சாலையும் சங்கமிக்கும் இடத்தைப் பழைய பேருந்து நிலையம் என அழைக்கப்படுவது உண்டு. அங்கே ஒரு போக்குவரத்து நிழற்கூடையும் ஒன்று இருக்கும்.
பேருந்து நிலையத்தில் ஏறினால், அமருவதற்கு இடம் கிடைக்காது என்பதற்காக, வைத்தியநாதன் மருத்துவர் அலுவலகம் முன்பாக ஏறி பேருந்து நிலையம் சென்று, அங்கே அனைவரும் இறங்கியவுடன் அமர்ந்து கொள்வது மணியனின் வழக்கம். அப்படியாகப் பழைய பேருந்து நிலையத்திற்கும், நடப்புப் பேருந்து நிலையத்திற்குமான கட்டணம் இருபத்தி ஐந்து பைசா. அதுதான் குறைந்தபட்ச கட்டணுமும் கூட.
இப்படிப் போக்குவரத்துக் கட்டணமானது, குறைந்தபட்ச கட்டணமான இருபத்தி ஐந்து பைசாவில் இருந்து ஐந்து, ஐந்து பைசாவாகக் கூடிக் கொண்டே போகும். இருபத்தி ஐந்து பைசா டிக்கெட் துவக்கம், ஒரு ரூபாய் இருபது பைசா டிக்கெட் வரையில், அனைத்து டிக்கெட்டு வகைகளையும் கட்டுக் கட்டாகச் சேர்த்து வருகிறான் மணி.
சலவநாயக்கன் பட்டிப் புதூரில் புறப்பட்ட, UBT, Udumalpet Bus Transport, நான்காம் இலக்கமிட்ட பேருந்தானது, கொசவம்பாளையம், மூங்கில்தொழுவு, சிக்கநூத்து, சிந்திலுப்பு, இலுப்பநகரம், ஆலாமரத்தூர், மாலகோயில் பிரிவு, பெதப்பம்பட்டி, பொட்டையம் பாளையம் பிரிவு, குறிஞ்சேரி, புக்குளம், ஏரிப்பட்டி கடந்து உடுமலை பழனிப் பாதையை அடைந்ததும் ஆயத்தமானான் மணி.
“பழைய பஸ்டேண்டு எல்லாம் எறங்கு!”, தன் அம்மா கொடுத்த பையில் இவனது பொருட்களும் இருக்கின்றனவா எனச் சரிபார்த்துக் கொண்டே இறங்க எத்தனித்தான்.
“டே மணீ... ஊருக்குப் போறயா கண்ணூ?”, ஏற்கனவே இறங்கியிருந்த சரசக்கா.
“ஆமாங் சின்னம்மா!”
”உடுக்கம் பாளையத்து வண்டிக்கு இன்னுமு நேரமிருக்குது... வா, மணி விலாசுல காப்பி வாங்கித் தாறேன்!”
“வேண்டாங் சின்னம்மா... எங்கம்மாவுக்குத் தெரிஞ்சா வையும்!”
“நாஞ்சொல்லிக்கிறேன் வா”, பயந்து பயந்து போய், மணி விலாசில் காப்பியைக் குடித்துவிட்டு, மூன்றாம் இலக்கமிட்ட வண்டியைப் பிடித்து லெட்சுமாபுரம் நோக்கிப் பயணிக்கலானான்.
RSR Bus Transports, இலக்கம் 3, பேருந்தானது பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு, பொரிக்கடை, தங்கம்மாள் ஓடை, சுடுகாட்டு நிறுத்தம், இராகலபாவிப் பிரிவு, கள்ளப்பாளையம் பிரிவு, முக்கோணம், மில்கேட்டு, பூலாங்கிணறு, சடையபாளையம் கடந்து, அந்த வளைவில் திரும்பிக் கொண்டிருக்கையில், மணியன் எதேச்சையாக வெளியே பார்த்தான்.
மெய் சிலிர்த்தது அவனுக்கு. ஆம், அவன் பிறந்த வீடான, அந்தியூர் அம்முலு அம்மா வீடு கண்ணில்பட்டது. தற்போது வேறொரு ஊரில் வசித்து வந்தாலும், அந்தியூர்தான் இவனுடைய பிறப்பிடம். தன் ஊர் அருகில், இரு மருங்கிலும் இருக்கும் புளியமரங்களை இவன் இரசித்துக் கொண்டிருந்தான். பேருந்தானது, கோமங்கலம், கெடிமேடு, கூளநாயக்கன்பட்டி, குழியூர் கடந்து லெட்சுமாபுரத்துக்குள் நுழைந்தது.
ஊர் முழுதும் காப்புக் கட்டுவதற்காக, பூளைப்பூவும், வேப்பிலையும், மாவிலையும் பெருவேகத்தில், துரித கதியில் இடம் மாறிக் கொண்டிருந்தது. பேருந்தை விட்டு இறங்கியதில் இருந்து, வினாயகர் கோவில் சமீபம் இருக்கும் தன் அமுச்சியின் வீட்டை அடையும் வரையிலும், “வா கண்ணூ.. ஊர்ல அம்மா நல்லா இருக்காங்ளா? உங்காத்தா நல்லா இருக்குதா? மழையா கண்ணூ? வா, ஒரு லோட்டாக் காப்பித் தண்ணி குடிச்சிட்டு போவியாமா... வா கண்ணூ, தெனைமாவு தின்னுட்டுப் போ...”, வரவேற்பும், விருதோம்பலும் இவனை வாரி அணைத்தது.
இருந்தாலும் இவனுள், அமுச்சியைப் பார்க்க வேண்டும்; அதற்கும் மேலாக வீட்டில் இருப்பவர்களைப் பார்க்க வேண்டும் எனும் ஆவல் மேலோங்கி இருந்தது.
எல்லா வீட்டு முற்றமும் சாணத்தால் மொழுகி, இளம் பெண்கள் ஆங்காங்கே நின்று மாவுக் கோலமும், அச்சுக் கோலமும் இட்டுக் கொண்டிருந்தார்கள். தெருமுனைகளில், பொங்கல் வாழ்த்து அட்டைகளோடு விடலையர் கூட்டம் சிலாகித்துக் குதூகலித்துக் கொண்டிருந்தார்கள்.
“டே மணீ... உங்கண்ணன் பிரவாகரன் வர்லியாடா?”, அதில் ஒரு வாலிபம் அவனது சகோதரனைக் கேட்டது.
“வல்லீங்ணா!”
லெட்சுமாபுரம் துவக்கப் பள்ளியருகே இருக்கும் பாறைக்காட்டுக்காரர் வீட்டருகே சென்று கொண்டிருந்தான் அவன். தபதபவென நான்கைந்து பேர் அவனைப் பார்த்ததும் ஓடோடி வந்தார்கள். சின்னபாப்பக்கா மகள் வடிவு, ஜெயமணியக்கா மகள் பத்து, டெய்லர் பழனிச்சாமியண்ணன் மகள் சரசுவதி.. அவர்களுடன் பாப்புவும்.
“மாமா, ஏன் நேத்தே வர்லே?”
“பள்ளிக்கூடம் இன்னிக்கித்தான் பாப்பு வுட்டாங்க?”
“செரி, எனக்கு என்ன கொண்டாந்தீங்க?”
உடுமலைப் பேட்டை, ஜாஸ்மின் சில்க் அவுசு மஞ்சப் பையை விரித்துக் காண்பித்தான்; அம்மா கொடுத்த அனுப்பிய கைமுறுக்கும், அதிரசமும் இருந்தன. பழனியப்பா பிரதர்சு கோழிப் பையைக் காண்பித்தான்; அவ்னது துணிமணிகள் இருந்தன.
“போங் மாமா, நீங்க என்ன கொண்டாந்தீங்க?”, எனப் பாப்பு கேட்கவும், உடன் இருந்த பெட்டைகள் ஆவலோடு அவனைப் பார்த்தன.
கால்ச்சட்டைப் பையில் கையை நுழைத்து, சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்த 90 பைசா பச்சை நிறப் பேருந்துச் சீட்டுக் கட்டு ஒன்றும், கொடுமுடி தீர்த்தம் எடுக்கப் போயிருக்கையில் எடுத்து வந்த பண்ணாங்கல் விளையாடுவதற்கான வெங்கச்சாங்கல் ஐந்தையும் எடுத்துக் கொடுத்ததுதான் தாமதம், “ப்ச்க்”, பாப்பு ஓடிப் போனாள்.
ஏஏஏ... இத பாருங்டா... இங்க மாமன் மவளுக்கும் அத்தை பையனுக்குமு இப்பவே பொங்கல் பொங்கிடுச்சிடோய்! தெருமுனையில் இருந்த வாலிபங்கள் சிரித்துக் கூக்குரலிட்டுக் கொண்டாடின.
“ஆமாண்டா, நானும் எங்க அக்கா ஜோதிலட்சியுமு இன்னிக்கு ஆறுமணி வண்டிக்கு பொள்ளாச்சி போயி, மாமன் கடையச் சாத்துனவுட்டு ஆனைமலை வண்டி புடிச்சிப் போலாம்னு எங்கம்மா சொல்லுச்சு! ஆமா, நீயி”
“எங்க பெரீம்மா செத்துப் போச்சில்ல? அதுனால இந்த வருசம் எங்களுக்கு நோம்பி இல்லடா. ஆனா, நான் லட்சுமாவரம், எங்கமுச்சியவிங் ஊருக்குப் போறேன்!”.
“அப்பிடியா? ஆனைமலை மாசாணியாத்தா கோயலுக்கு வருவியாடா அப்ப?”
“பாப்பு வந்தா, கூடா நானுமு வருவேன்!”.
சலவநாயக்கன் பட்டிப் புதூர் மின்வாரிய ஊழியரான குப்புசாமி அண்ணனின் மகன் கருணாநிதியும் மணியனும் ஒரே பள்ளியில் படிப்பவர்கள். மணியன் எட்டாம் வகுப்பு, கருணாநிதி ஏழாம் வகுப்பு. இருவரும் பள்ளிக்குக் கிட்டத்தட்ட ஐந்து மைல்தூரம் ஒன்றாக இணைந்தே சென்று வருவது வழக்கம்.
“மணீ, இங்க வா கண்ணூ. ஊருக்குப் போகாத இராசா... இங்கியே இரு... நாம நாளைக்கு உங்க பெரியத்தையப் பாக்குறதுக்கு தாளக்கரை போய்ட்டு வர்லாம்”
“போ அப்பத்தா... நான் எங்கமுச்சி ஊருக்குப் போறேன்...”
”உங்கம்மா உனைய நல்லாக் கெடுத்து வெச்சிருக்கா... இந்தக் கெழவி சொல்றத யாரு கேப்பாங்க? உள்ளந் தீயெரிய ஒதடு பழஞ்சொரியன்னு, பேசுறது மட்டும் தேனொழுகப் பேசுவா அவ!”, சந்தடி சாக்கில் மருமகளை வறுத்தெடுத்தாள் கிழவி.
”தம்பி, டிக்கெட் எடுத்தாச்சா?”
“இல்லீங்ணா, உடுமலைப் பேட்டை ஒன்னு குடுங்ணா!”
“ஒர்ருவா பத்து பைசா... செரியாச் சில்லறை வேணும்”
“இந்தாங், டிக்கெட் கிழிக்காமக் குடுங்ணா!”
மணியனுக்கு, பேருந்துச் சிட்டுகளைச் சேர்த்து வைப்பது நெடுநாள் வழக்கம். மூன்றாம் வகுப்பு படிக்கும் காலத்திலிருந்து, ஐந்தாண்டுகளாகத் தொடர்ந்து சேகரம் செய்து, சேமித்து வருகிறான்.
உடுமலைப் பேட்டையில், தளி சாலையும் பழனி சாலையும் சங்கமிக்கும் இடத்தைப் பழைய பேருந்து நிலையம் என அழைக்கப்படுவது உண்டு. அங்கே ஒரு போக்குவரத்து நிழற்கூடையும் ஒன்று இருக்கும்.
பேருந்து நிலையத்தில் ஏறினால், அமருவதற்கு இடம் கிடைக்காது என்பதற்காக, வைத்தியநாதன் மருத்துவர் அலுவலகம் முன்பாக ஏறி பேருந்து நிலையம் சென்று, அங்கே அனைவரும் இறங்கியவுடன் அமர்ந்து கொள்வது மணியனின் வழக்கம். அப்படியாகப் பழைய பேருந்து நிலையத்திற்கும், நடப்புப் பேருந்து நிலையத்திற்குமான கட்டணம் இருபத்தி ஐந்து பைசா. அதுதான் குறைந்தபட்ச கட்டணுமும் கூட.
இப்படிப் போக்குவரத்துக் கட்டணமானது, குறைந்தபட்ச கட்டணமான இருபத்தி ஐந்து பைசாவில் இருந்து ஐந்து, ஐந்து பைசாவாகக் கூடிக் கொண்டே போகும். இருபத்தி ஐந்து பைசா டிக்கெட் துவக்கம், ஒரு ரூபாய் இருபது பைசா டிக்கெட் வரையில், அனைத்து டிக்கெட்டு வகைகளையும் கட்டுக் கட்டாகச் சேர்த்து வருகிறான் மணி.
சலவநாயக்கன் பட்டிப் புதூரில் புறப்பட்ட, UBT, Udumalpet Bus Transport, நான்காம் இலக்கமிட்ட பேருந்தானது, கொசவம்பாளையம், மூங்கில்தொழுவு, சிக்கநூத்து, சிந்திலுப்பு, இலுப்பநகரம், ஆலாமரத்தூர், மாலகோயில் பிரிவு, பெதப்பம்பட்டி, பொட்டையம் பாளையம் பிரிவு, குறிஞ்சேரி, புக்குளம், ஏரிப்பட்டி கடந்து உடுமலை பழனிப் பாதையை அடைந்ததும் ஆயத்தமானான் மணி.
“பழைய பஸ்டேண்டு எல்லாம் எறங்கு!”, தன் அம்மா கொடுத்த பையில் இவனது பொருட்களும் இருக்கின்றனவா எனச் சரிபார்த்துக் கொண்டே இறங்க எத்தனித்தான்.
“டே மணீ... ஊருக்குப் போறயா கண்ணூ?”, ஏற்கனவே இறங்கியிருந்த சரசக்கா.
“ஆமாங் சின்னம்மா!”
”உடுக்கம் பாளையத்து வண்டிக்கு இன்னுமு நேரமிருக்குது... வா, மணி விலாசுல காப்பி வாங்கித் தாறேன்!”
“வேண்டாங் சின்னம்மா... எங்கம்மாவுக்குத் தெரிஞ்சா வையும்!”
“நாஞ்சொல்லிக்கிறேன் வா”, பயந்து பயந்து போய், மணி விலாசில் காப்பியைக் குடித்துவிட்டு, மூன்றாம் இலக்கமிட்ட வண்டியைப் பிடித்து லெட்சுமாபுரம் நோக்கிப் பயணிக்கலானான்.
RSR Bus Transports, இலக்கம் 3, பேருந்தானது பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு, பொரிக்கடை, தங்கம்மாள் ஓடை, சுடுகாட்டு நிறுத்தம், இராகலபாவிப் பிரிவு, கள்ளப்பாளையம் பிரிவு, முக்கோணம், மில்கேட்டு, பூலாங்கிணறு, சடையபாளையம் கடந்து, அந்த வளைவில் திரும்பிக் கொண்டிருக்கையில், மணியன் எதேச்சையாக வெளியே பார்த்தான்.
மெய் சிலிர்த்தது அவனுக்கு. ஆம், அவன் பிறந்த வீடான, அந்தியூர் அம்முலு அம்மா வீடு கண்ணில்பட்டது. தற்போது வேறொரு ஊரில் வசித்து வந்தாலும், அந்தியூர்தான் இவனுடைய பிறப்பிடம். தன் ஊர் அருகில், இரு மருங்கிலும் இருக்கும் புளியமரங்களை இவன் இரசித்துக் கொண்டிருந்தான். பேருந்தானது, கோமங்கலம், கெடிமேடு, கூளநாயக்கன்பட்டி, குழியூர் கடந்து லெட்சுமாபுரத்துக்குள் நுழைந்தது.
ஊர் முழுதும் காப்புக் கட்டுவதற்காக, பூளைப்பூவும், வேப்பிலையும், மாவிலையும் பெருவேகத்தில், துரித கதியில் இடம் மாறிக் கொண்டிருந்தது. பேருந்தை விட்டு இறங்கியதில் இருந்து, வினாயகர் கோவில் சமீபம் இருக்கும் தன் அமுச்சியின் வீட்டை அடையும் வரையிலும், “வா கண்ணூ.. ஊர்ல அம்மா நல்லா இருக்காங்ளா? உங்காத்தா நல்லா இருக்குதா? மழையா கண்ணூ? வா, ஒரு லோட்டாக் காப்பித் தண்ணி குடிச்சிட்டு போவியாமா... வா கண்ணூ, தெனைமாவு தின்னுட்டுப் போ...”, வரவேற்பும், விருதோம்பலும் இவனை வாரி அணைத்தது.
இருந்தாலும் இவனுள், அமுச்சியைப் பார்க்க வேண்டும்; அதற்கும் மேலாக வீட்டில் இருப்பவர்களைப் பார்க்க வேண்டும் எனும் ஆவல் மேலோங்கி இருந்தது.
எல்லா வீட்டு முற்றமும் சாணத்தால் மொழுகி, இளம் பெண்கள் ஆங்காங்கே நின்று மாவுக் கோலமும், அச்சுக் கோலமும் இட்டுக் கொண்டிருந்தார்கள். தெருமுனைகளில், பொங்கல் வாழ்த்து அட்டைகளோடு விடலையர் கூட்டம் சிலாகித்துக் குதூகலித்துக் கொண்டிருந்தார்கள்.
“டே மணீ... உங்கண்ணன் பிரவாகரன் வர்லியாடா?”, அதில் ஒரு வாலிபம் அவனது சகோதரனைக் கேட்டது.
“வல்லீங்ணா!”
லெட்சுமாபுரம் துவக்கப் பள்ளியருகே இருக்கும் பாறைக்காட்டுக்காரர் வீட்டருகே சென்று கொண்டிருந்தான் அவன். தபதபவென நான்கைந்து பேர் அவனைப் பார்த்ததும் ஓடோடி வந்தார்கள். சின்னபாப்பக்கா மகள் வடிவு, ஜெயமணியக்கா மகள் பத்து, டெய்லர் பழனிச்சாமியண்ணன் மகள் சரசுவதி.. அவர்களுடன் பாப்புவும்.
“மாமா, ஏன் நேத்தே வர்லே?”
“பள்ளிக்கூடம் இன்னிக்கித்தான் பாப்பு வுட்டாங்க?”
“செரி, எனக்கு என்ன கொண்டாந்தீங்க?”
உடுமலைப் பேட்டை, ஜாஸ்மின் சில்க் அவுசு மஞ்சப் பையை விரித்துக் காண்பித்தான்; அம்மா கொடுத்த அனுப்பிய கைமுறுக்கும், அதிரசமும் இருந்தன. பழனியப்பா பிரதர்சு கோழிப் பையைக் காண்பித்தான்; அவ்னது துணிமணிகள் இருந்தன.
“போங் மாமா, நீங்க என்ன கொண்டாந்தீங்க?”, எனப் பாப்பு கேட்கவும், உடன் இருந்த பெட்டைகள் ஆவலோடு அவனைப் பார்த்தன.
கால்ச்சட்டைப் பையில் கையை நுழைத்து, சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்த 90 பைசா பச்சை நிறப் பேருந்துச் சீட்டுக் கட்டு ஒன்றும், கொடுமுடி தீர்த்தம் எடுக்கப் போயிருக்கையில் எடுத்து வந்த பண்ணாங்கல் விளையாடுவதற்கான வெங்கச்சாங்கல் ஐந்தையும் எடுத்துக் கொடுத்ததுதான் தாமதம், “ப்ச்க்”, பாப்பு ஓடிப் போனாள்.
ஏஏஏ... இத பாருங்டா... இங்க மாமன் மவளுக்கும் அத்தை பையனுக்குமு இப்பவே பொங்கல் பொங்கிடுச்சிடோய்! தெருமுனையில் இருந்த வாலிபங்கள் சிரித்துக் கூக்குரலிட்டுக் கொண்டாடின.
12/27/2010
ஈரோடு பதிவர் சங்கமமும் நானும்!
”டே மணி, நீ அங்கண்ணந்தண்ணன் வண்டீல போயி, அனுப்பர்பாளையத்துல இருந்து பெரிய சர்வம் ரெண்டுமு, வாணா சட்டி நாலும் வாங்கியாந்துரு!”
“செரீங்ணா; இப்ப எதுக்குங் காசு பணம்; நான் மெதுவா கணக்கச் சொல்லீட்டு வாங்கிக்கிறேன்!”
“இல்றா, இந்தா வாங்கிக்கோ...”
அனுப்பர்பாளையம் என்ன? அனுமார் மலையேயானாலும், சாதி மதம் பார்க்காது ஓடிச் செல்வோம். ஊரார் திருமணங்கள், இன்னும் பிற நல்லவை கெட்டவைகளுக்கு, பிரதிபலன் ஏதும் பாராது ஓடிச் செல்லும் பூமி, கொங்கு பூமி. காலச் சற்கரம் சுழல, சுழல, சூழலும் மாறுகிறது. மனிதர்களும் மாறிவிடுகிறார்கள். இத்தனை நியதிகளையும் வென்று, அதே பண்பாடு கூடிய நிகழ்வை மீட்டெடுப்பது என்பது எவ்வளவு பெரிய காரியம்?
தனித்தன்மைப் பேறுகள் எல்லாம், உலகமயமாக்கலில் சின்னாபின்னமாகி, சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், அவற்றை வென்று, நின்று காட்டியிருப்பது இந்நிகழ்வு என்று சொன்னால் அது மிகையாகாது.
மாலையில், அருமை நண்பர், தளபதி நசரேயன் கூறிய சொற்கள் இந்த நடுநிசியிலும் எம்மை குதூகலப்படுத்துகிறது. “மணியண்ணே, உங்கூர்க்காரவுக பெட்னா விழாவையெல்லாம் தோறகடிச்சிட்டாங்கண்ணே; தலைவாழை இலை, இலக்கியச் சொற்பொழிவு, தொழில்நுட்பப் பாசறைன்னு நாலுங்கலந்து அமர்க்களப் படுத்திட்டாய்ங்கண்ணே....”
மெய் மறந்தேன்... மெய் சிலிர்த்தேன்... அவையிரண்டுமே, நான் ஆத்மார்த்தமாக நேசிக்கும் இரண்டு விழாக்கள். அவைகள் ஒப்பிடப்படும் போது, மகிழ்ச்சிப் பிரவாகம் ஊற்றெடுப்பது யதார்த்தமாகத்தானே இருக்கும்?
ஈரோடு பதிவர் சங்கமம், இன்னும் இன்னும் மெருகு கூடித் தமிழர் பண்பாடு போற்றும் பெருநிகழ்வாக உருவெடுக்க வேண்டும். ஈரோடு, கோவை, திருப்பூர், மதுரை, நெல்லை, சேலம், காரைக்குடி எனப் பண்பாடு கொட்டிக் கிடக்கும் பல ஊர்களிலும் முறை வைத்து ஆண்டுதோறும் நடத்தப்பட வேண்டும்.
சாளரத்தின் ஊடாய் வெளியே பார்க்கிறேன். கொட்டிக்கிடக்கும் பனியில், ச்சட்டனூகா மலைத்தொடர்கள் வெண்பனிப் போர்வையால் போர்த்தப்பட்டு இருக்கிறது. வளைந்து நெளிந்து ஓடும் டென்னசி நதியானவள் என்னைப் பார்த்துச் சிரிக்கிறாள். நானும் புன்னகைக்கிறேன், என் ஊர் மக்கள் எனும் பெருமிதத்தோடு! அவர்களை நினைத்துப் பெருமிதம் கலந்த மமதையோடு சிரிக்கிறேன்!!
நண்பர்களே, உங்களின் மீதான எதிர்பார்ப்பைக் கூட்டி இருக்கிறீர்கள்; பொறுப்புக் கூடி இருக்கிறது. உங்களிடம் வல்லமையும் இருக்கிறது. வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவைத் திருவிழா போல நீங்களும் இன்னும் பல விழாக்களை நடத்துவீர்கள்! இது திண்ணம்!! வாழ்க நீவிர்!!!
“செரீங்ணா; இப்ப எதுக்குங் காசு பணம்; நான் மெதுவா கணக்கச் சொல்லீட்டு வாங்கிக்கிறேன்!”
“இல்றா, இந்தா வாங்கிக்கோ...”
அனுப்பர்பாளையம் என்ன? அனுமார் மலையேயானாலும், சாதி மதம் பார்க்காது ஓடிச் செல்வோம். ஊரார் திருமணங்கள், இன்னும் பிற நல்லவை கெட்டவைகளுக்கு, பிரதிபலன் ஏதும் பாராது ஓடிச் செல்லும் பூமி, கொங்கு பூமி. காலச் சற்கரம் சுழல, சுழல, சூழலும் மாறுகிறது. மனிதர்களும் மாறிவிடுகிறார்கள். இத்தனை நியதிகளையும் வென்று, அதே பண்பாடு கூடிய நிகழ்வை மீட்டெடுப்பது என்பது எவ்வளவு பெரிய காரியம்?
தனித்தன்மைப் பேறுகள் எல்லாம், உலகமயமாக்கலில் சின்னாபின்னமாகி, சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், அவற்றை வென்று, நின்று காட்டியிருப்பது இந்நிகழ்வு என்று சொன்னால் அது மிகையாகாது.
மாலையில், அருமை நண்பர், தளபதி நசரேயன் கூறிய சொற்கள் இந்த நடுநிசியிலும் எம்மை குதூகலப்படுத்துகிறது. “மணியண்ணே, உங்கூர்க்காரவுக பெட்னா விழாவையெல்லாம் தோறகடிச்சிட்டாங்கண்ணே; தலைவாழை இலை, இலக்கியச் சொற்பொழிவு, தொழில்நுட்பப் பாசறைன்னு நாலுங்கலந்து அமர்க்களப் படுத்திட்டாய்ங்கண்ணே....”
மெய் மறந்தேன்... மெய் சிலிர்த்தேன்... அவையிரண்டுமே, நான் ஆத்மார்த்தமாக நேசிக்கும் இரண்டு விழாக்கள். அவைகள் ஒப்பிடப்படும் போது, மகிழ்ச்சிப் பிரவாகம் ஊற்றெடுப்பது யதார்த்தமாகத்தானே இருக்கும்?
ஈரோடு பதிவர் சங்கமம், இன்னும் இன்னும் மெருகு கூடித் தமிழர் பண்பாடு போற்றும் பெருநிகழ்வாக உருவெடுக்க வேண்டும். ஈரோடு, கோவை, திருப்பூர், மதுரை, நெல்லை, சேலம், காரைக்குடி எனப் பண்பாடு கொட்டிக் கிடக்கும் பல ஊர்களிலும் முறை வைத்து ஆண்டுதோறும் நடத்தப்பட வேண்டும்.
சாளரத்தின் ஊடாய் வெளியே பார்க்கிறேன். கொட்டிக்கிடக்கும் பனியில், ச்சட்டனூகா மலைத்தொடர்கள் வெண்பனிப் போர்வையால் போர்த்தப்பட்டு இருக்கிறது. வளைந்து நெளிந்து ஓடும் டென்னசி நதியானவள் என்னைப் பார்த்துச் சிரிக்கிறாள். நானும் புன்னகைக்கிறேன், என் ஊர் மக்கள் எனும் பெருமிதத்தோடு! அவர்களை நினைத்துப் பெருமிதம் கலந்த மமதையோடு சிரிக்கிறேன்!!
நண்பர்களே, உங்களின் மீதான எதிர்பார்ப்பைக் கூட்டி இருக்கிறீர்கள்; பொறுப்புக் கூடி இருக்கிறது. உங்களிடம் வல்லமையும் இருக்கிறது. வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவைத் திருவிழா போல நீங்களும் இன்னும் பல விழாக்களை நடத்துவீர்கள்! இது திண்ணம்!! வாழ்க நீவிர்!!!
12/13/2010
காதல்
பொன்னூத்து பெரியசாமியின் மகள் சின்ன பேபியும், வரியூட்டு ஆறுச்சாமியின் மருமகளுமான சிவகாமியும் தத்தம் பட்டி ஆடுகளை அடைக்கும் பொருட்டு, அரக்கன் இட்டேரியில் அவற்றை ஓட்டிக் கொண்டிருந்தார்கள். பழையூர் மாரிமுத்துவின் தோட்டத்தில் பாத்தி பிடிக்க வந்த இரங்கனும் அவன் மனைவி பொன்னியும், அவசர அவசரமாய் காட்டு இரக்கிரியைப் பறித்துக் கொண்டு இருந்தார்கள்.
இட்டேரியின் மறுபக்கம், இரங்கண கவுண்டர் தோட்டத்தில் கறவைக்காக மாடுகள் தயார் நிலையில் கட்டப்பட்டுக் கொண்டு இருந்தன. ”அதைக் கொண்டா, இதைக் கொண்டா” என இரைக்கும் கட்டளைகள், இன்னும் சிறிது நேரத்தில் இட்டேரி அடங்கி, இராக்கோழிகளும் ஆந்தைகளும் கோட்டான்களும் தத்தம் இரவினை எதிர்கொள்ள இருக்கின்றன என்பதைச் சொல்லாமற் சொல்லிற்று.
இன்றைக்கு மதியச் சாப்பாடு ஏனோதானோவென, பக்கத்துத் தோட்டத்தில் குடி இருக்கும் கந்தசாமி சாளையில் கழித்தாயிற்று. கந்தசாமியின் மகள் ஈசுவரி ஓடியோடித்தான் கவனித்தாள். சோறும் சாறும் சுவை பொருந்தியதாகத்தான் இருந்தது. இருந்தும், அப்பச்சிக்கு மனநிறைவு இல்லை. இராச்சோறை நோக்கிக் கிளம்பினார் அப்பச்சி.
வயது எண்பதுகளில் இருக்கும். கட்டுக் குலையாத தேகம். முகவனூர் செந்தோட்டத்துக்காரர் என்றால், வடக்கே செஞ்சேரி மலைதொட்டு தெற்கே பெதப்பம்பட்டி வரையிலும், மேற்கே சமுத்தூர், காளியாபுரம், சின்னப்பம் பாளையத்திலிருந்து கிழக்கே பூளவாடி, பெரியபட்டி வரையிலும் பிரசித்தம். வம்புதும்புக்குச் செல்லாமல், ஏழைபாழைகளிடம் கண்டிப்பும், அதே நேரத்தில் கருணையும் கொண்ட ஒரு மத்தியதர உழவன்.
மகனைத் தன் உடன்பிறந்தவளின் மகளுக்கே கட்டிக் கொடுத்ததுதான் அவருக்கே வினையாகப் போனது. மூத்த சகோதரி தெய்வாத்தாவுக்கு ஒரே மகள். ஆனைமலையில் பெரிய விவசாயக் குடும்பம். தனது அண்ணன் மகனையே, வீட்டோடு மருமகனாக ஆக்கிவிட்டாள். மகன் தங்கவேலும், அத்தையின் அன்புக்குக் கட்டுப்பட்டு ஆனைமலையிலேயே பண்ணையம் பார்த்துக் கொண்டு இருக்க, அப்பச்சி மட்டும் இருக்கும் மூணு வள்ளத்துப் பூமியையும் தனியாளாய் இருந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்.
தலையில் உருமாலை. நிமிர்ந்த நெஞ்சம். செம்பழுப்பு நிறமேறிய கைத்தறிச் சட்டை. இவருக்காகவே பிரத்தியேகமாக, வேலூர் சின்னக்காளி செய்து கொடுத்த செருப்பு. எப்பேர்ப்பட்ட முள்ளும் ஒடிந்துதான் போகணுமே ஒழிய, தைக்க இயலாத மாட்டுத்தோல்ச் செருப்பு அது. கறந்து எடுத்துச் செல்லப்படும் பால், வலதுகை தூக்குப் போசியில்!
எதிர்ப்படும் ஊர்க்காரர்களுடன் பாடுபழமையைப் பேசியபடியே, இராமச்சந்திராவரத்து அப்பன் வீட்டைக் கடந்து மேற்குத் தெருவில் நுழைந்தார் அப்பச்சி.
“டே... அப்பனு... நெகமத்துல இந்தக் கிழமை யாவாரம் எப்டறா போச்சு?”
“இந்த வாரந் தேவுலீங்க பெரீப்பா... என்ன கெரகம், நெறைய வடக்கத்துக்காரனுக வந்துதல... சம்பல் குறைஞ்சி போச்சிங்க பெரீப்பா...”
“செரி... கூடைக்கு எவ்வளவுதேன் கெடச்சது?”
“தக்காளிக்கு ஏழுமு, பாவக்காய் மூட்டைக்கு பதினாறுமு கெடச்சது...”
“செரி... பெரீம்மாகிட்டச் சொல்லி, அடுத்த வாரம் நம்முளதையுங் கொண்டு போய்ப் போடு...”
“ஆகுட்டுங்...”
சந்தில் நுழைந்து, படலைத் திறந்து உள்ளே நுழைந்தார் அப்பச்சி. சிறிது ஏமாற்றம். வீட்டுக் கதவு சாத்தப்பட்டு இருந்தது. அமுச்சியும் திண்ணையில் இருந்திருக்கவில்லை. எப்போதும் திண்ணையில் இருக்கும், வெத்தலை பாக்குத் தட்டும் இருந்திருக்கவில்லை. தூக்குப்போசியைத் திண்ணையிலேயே வைத்துவிட்டு, அருகில் இருக்கும் நெசவாளியான கோயிந்தன் வீட்டுக்குச் சென்றார்.
“சரசூ... சரசூ...”
பரபரத்துப் போனாள் சரசு. நம் வீட்டுக்கு செந்தோட்டத்துக்கார அய்யன் வந்திருப்பதில் அவளுக்கு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி. மேலே, அட்டாலியில் இருந்த கிணத்துக்கடவுப் பாயை எடுத்து, திண்ணையில் விரித்தாள்.
“வாங்கய்யா... சொல்லி அனுப்பி இருந்தா, அவங்கப்பனே வந்திருப்பாருங்களே? இருங்க, காப்பியப் போட்டு எடுத்தாரேன்!”
“அட புள்ள... அதுக்கென்ன இப்போ! ஆத்தா இங்க இருக்காளான்னு பாக்க வந்தம்புள்ள!!”
“இங்க வல்லீங்களே... இருங்க, நான் வேணா ஒரு எட்டு மூலையூட்டுல இருக்காங்களான்னு....”
“வேண்டாம் புள்ள... அங்க எல்லாம் அவ போமாட்டா...”
மீண்டும் வீட்டுக்கு வந்தவர், திண்ணையிலேயே அமர்ந்து விட்டார். சிறிது நேர யோசனைக்குப் பிறகு செருப்பைப் போட்டுக் கொண்டு புறப்படலானார்.
வீட்டில் இருந்து, கொங்கல் நகரம் ஆறேழு மைல் இருக்கும். தெற்கே இருக்கும் பள்ளத்தைக் கடந்து, அணிக்கடவு, இராமச்சந்திராவரம் கடந்து, நாகூர்க்காரன் தோப்பைக் கடந்துவிட்டால் தன் மகள் பரிமளாவின் தோட்டம். அப்பச்சியும், அமுச்சியும் பரிமளாவின் தோட்டத்துக்குச் செல்வதென்றால், எப்போதும் நடந்து செல்வதுதான் வழக்கம். கண்ணை இறுகக் கட்டிவிட்டாலும், சரியாகப் போய்ச் சேர்ந்துவிடும் அளவுக்கு பழக்கப்பட்ட தடம் அது.
”டொக்... டொக்...”
“டே மணியா... உங்கம்மாவை எழுப்புடா... சுண்டாச்சட்டியில இருக்குற மொளகாப் பொடிய சீக்கிரம் எடுக்கச் சொல்றா...”, அப்பா என்னை எட்டி ஒரு உதைவிட்டார். அப்பா எள் என்றால், அம்மா எண்ணெயாக இருந்தாள்.
சாளை விளக்கெதுவும் போடாமல், டக்கென அடுப்படிக்குச் சென்று, ஒரு சின்னக் குண்டாவில் எண்ணெய் ஊற்றிக் காய்ச்ச ஆரம்பித்தாள். அப்ப, கையில் ஈட்டியுடன் சுவரில் சாய்ந்து நின்று கொண்டிருந்தார். நான் ஓடிப் போய், அம்மாவின் பின்னால் நின்று கொண்டேன்.
சிறிது நேர இடைவெளிக்குப் பின், மீண்டும்.... “டொக்... டொக்...”
இம்முறை வாய்திறந்தார் அப்பா, “யார்றா அது இந்த நேரத்துல?”
“நாந்தேனுங்க... மாப்புளை... நாந்தேனுங்க...” அம்மா, என்னைத் தள்ளிவிட்டு ஓடினாள் பெரிய கொட்டத்துக் கதவை நோக்கி.
“இதேனுங்கப்பா..... உள்ளுக்கு வாங்க...”, அம்மா படபடத்தாள். களத்து மேட்டில் இருந்த கயிற்றுக் கட்டிலை எடுத்து வந்து முன்வாசலில் போட்டார் அப்பா.
“மாமா, மொதல்ல ஒக்காருங்க... நீ போயி எதனாப் போட்டு எடுத்துட்டு வா மொதல்ல...”, அம்மாவை விரட்டினார் அப்பா. அப்பிச்சி, தன் உருமாலையைத் தலையில் இருந்து எடுத்து உதறிக் கொண்டே உட்காரலானார்.
“ஏனுங்... கடைசி வண்டிய உட்டுப் போட்டீங்ளாக்கூ? புக்குளத்து பெரிய பாப்பாத்தி ஊட்ல இருந்துட்டு வர்லாமுங்ளே?”
“அப்ப, அவ இங்க வருலீங்ளா மாப்ள? வடக்க, ஊர்லிருந்துதானுங் வர்றேன்...”, மனிதர் ஆறடி உடலை ஆறுசாண் அளவுக்கு குறுக்கப் பார்த்தார். உடல் ஒருமுறை சிலிர்த்தது. கைகள் நடுங்கின. கூடவே, அம்மாவின் ஓலமும் பீறிட்டது.
“எழவு, நீயேண்டி இப்ப ஒப்பாரி வெக்கிறே? என்னாயிடிச்சின்னு, கேட்டும் கேக்காம இப்ப...?”,
அப்பாவின் குரலையும் தாண்டி, அம்மாவின் அலறல் ஆர்ப்பரித்தது. “ஏந்தேன் இப்படிச் செய்யுறீங்களோ? பெத்த புள்ளையும் உட்டுப் போட்டு, கட்டுனவ பொறகால போயிட்டான்... நீங்களும் எட்டுக்கேழுதரம் எங்கம்மாவை... நான் இந்த நாயத்தை எங்க போய்ச் சொல்வேன்... எனக்குன்னு ஊருசனம் உண்டா? ஒன்னா??”
அம்மாவின் ஓலம் கேட்டு, பக்கத்து சாளையில் இருந்து நாகராசண்ணனும் செல்வராசண்ணனும் வந்திருந்தார்கள்.
“நான் ஒன்னுஞ் சொல்லலைங்க மாப்ள... நான் கடலைக்காட்டுக்கு நொவாக்ரானுமு, பருத்திக்கு சிம்புசுமு வாங்கலாம்ன்னு மேக்க போயிருந்தேன்... போன எடத்துல அவனுமு அகசுமாத்தா வந்திருந்தான்... வாங்க ஒரு எட்டு போலாமுன்னு தோட்டத்துக்கு கூப்ட்டான்... போய்ட்டு வந்தேன்... அதுக்கு, இவ....”
“பொண்டாட்டி பொறகால போனவம் பின்னாடிப் போனா, கேக்காம வேற என்ன பன்றதாமா? எங்கம்மா இனி எந்தக் குட்டையில வுழுந்தாளோ? எந்த வாய்க்கால்ல வடக்கமுன்னாப் போனாலோ??”, ஒப்பாரி பெருவேகமெடுக்க எடுக்க, அப்பச்சி நிலைகுலைந்து போனார்.
“ஏனுங் மாமா? நெம்பப் பேசிப் போட்டீங்களா?? தெகிரியமா இருங்கோ... அப்படியெல்லாம் அத்தை உங்களைத் தன்னந்தனியா உட்டுப் போட்டு எதுஞ் செஞ்சுற மாட்டாங்.... டே நாகராசு, மயிலை ரெண்டையும் புடிச்சுக் கட்டுங்டா வண்டிய...”
கண்ணிமைக்கும் நேரத்தில், மயிலைகள் அந்த ரேக்ளா வண்டியைச் செலுத்தத் தயார் நிலையில். நாகராசண்ணன், காளைகளின் கயிற்றைக் கையில் பிடித்தபடி வண்டியைத் தன்பிடியில் வைத்திருந்தார்.
“மாமா, வாங்க நீங்களுமு எங்ககோட... இங்கிருந்தா, அவ ஒப்பாரி வெச்சே உங்களைக் கொன்னுபோடுவா..”
வண்டி வல்லக்குண்டாபுரத்தைத் தாண்டி, அணிக்கடவு இட்டேரியில் சீறிப் பாய்ந்தது. யாரும், ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவில்லை.
”கிழவி, அரசூர் வாய்க்காலில் விழுந்து தொலைத்திருந்தாலும், சுல்தான்பேட்டையில் இந்நேரம் விபரம் தெரிய வந்திருக்கும். ஒன்று, கிணறுகளில் விழுந்திருக்க வேண்டும். அல்லது, மருந்தைக் குடித்துவிட்டுத் தோட்டங்காடுகளில் விழுந்து கிடக்கும். விடிந்தால், எல்லாம் தெரிந்துவிடப் போகிறது” என்கிற நினைப்பில் இருந்தார், மாமாவின் முன்னால் பீடி பிடிக்க முடியாத இக்கட்டான நிலையில் இருக்கும் அப்பா.
“என்றா நாகராசூ, அதென்ன? எதுத்தாப்ல எதோ வருது போல இருக்கு??”
“ஆமாங் சித்தப்பா... ஆரோ, மொட்ட வண்டீல வாறாங்ளாட்ட இருக்கூ?”
“நீ இழுத்துப் புடிச்சு ஓட்டு வாக்கலாம்... ஆருன்னு பாக்குலாம்...”, வண்டியில் இருந்த எனக்கும் பரபரப்புத் தொற்றிக் கொண்டது.
“சின்னானுமு மந்தராசலனுமாட்ட இருக்குங் மாப்ள!”, கம்மிய குரலில் அப்பச்சி. வண்டியை நிறுத்திவிட்டு முதலில் இறங்கினார் அப்பா.
“டே, சின்னா... என்றா, எதுனாத் தகவலு கெடச்சுதா?”
“என்ன தகவலுங் மச்சான்? பண்றதும் பண்ணிப் போட்டு... நீங்க பண்றது வெகு ஞாயமாக்கூ??”
“தெள்ளவாரி... புடுச்சி, முதுச்சிப் போடுவனாக்கூ... யாருகிட்ட, என்றா பேசுற?”
“பின்ன என்னங்க மச்சான்... பெரீப்பனக் கூட்டீட்டு வந்து உங்ககிட்ட வெச்சிட்டு.... அங்க பெரீம்மா, அழுது பொரண்டு ஊரைக் கூட்டீர்ச்சல்லோ? செரி... செரி... வாங்க அல்லாரும்... ஊட்டுக்குப் போலாம்....”
மொட்டை வண்டி மெதுவாகப் பின்னால் வந்து கொண்டிருக்க, எங்கள் ரேக்ளா பறந்தது வடக்கு திசையில். தெரு முனையிலேயே அப்பாவும், அப்பச்சியும் வண்டியில் இருந்து இறங்கிக் கொண்டனர். நாகராசண்ணன் வண்டியை வீதியில் நிறுத்தவும், நான் குதித்து வேகமாக ஓடினேன்.
நிறையப் பேர் கூடி இருந்தார்கள். “நான் கண்ணுக்குள்ள வெச்சிப் பார்த்துட்டு இருந்தனே எம்மவராசன? இப்படி உட்டுப் போட்டுப் போய்ட்டாரே?? இந்த பாழாப் போன முண்ட, நான் எப்பவும் பேசுறதுதான? ஒரு அடி வெச்சாப் போச்சு... நான் இழுத்துக் கட்டீட்டு சும்மா கெடப்பனே??
சாயுங்காலம் ஊட்டு வந்த மனுசனைக் கண்டுக்காம ஊட்டுக்குள்ள இருந்தது ஒரு குத்தமா? இப்பிடி நட்டாத்துல உட்டுப் போட்டு போய்ட்டாரே மவராசன்??”, இப்படியாக அமுச்சி ஒப்பாரியுடன், மற்றவர்களும் அழுதழுது மூக்கைச் சீந்திக் கொண்டிருந்தார்கள்.
அப்பா வந்து திண்ணையில் அமர்ந்தார். பொடக்காளியில் அடைத்து வைக்கப்படாத கோழி, சேவல்களைப் பிடித்து அடைத்துக் கொண்டிருந்தார் அப்பச்சி. நாங்கள் வந்திருப்பதை யாரும் கவனித்திருக்கவில்லை. பொறுமையாக இருந்த அப்பா, மெளனத்தை விடுத்துக் கத்தினார் பெருங்குரலில்.
“எழவு, கொஞ்சம் நிறுத்துறீங்களா? என்னாயிப் போச்சுன்னு இப்ப?? ஏனுங்க அத்தை, மனசுல இவ்வளவு பாசத்தை வெச்சீட்டு... மொதல்ல, ஊடுகள்ல ஆம்பளைகளைப் பேசுறதை எப்ப நிறுத்தப் போறீங்க அல்லாரும்?”
மயான அமைதி!
இட்டேரியின் மறுபக்கம், இரங்கண கவுண்டர் தோட்டத்தில் கறவைக்காக மாடுகள் தயார் நிலையில் கட்டப்பட்டுக் கொண்டு இருந்தன. ”அதைக் கொண்டா, இதைக் கொண்டா” என இரைக்கும் கட்டளைகள், இன்னும் சிறிது நேரத்தில் இட்டேரி அடங்கி, இராக்கோழிகளும் ஆந்தைகளும் கோட்டான்களும் தத்தம் இரவினை எதிர்கொள்ள இருக்கின்றன என்பதைச் சொல்லாமற் சொல்லிற்று.
இன்றைக்கு மதியச் சாப்பாடு ஏனோதானோவென, பக்கத்துத் தோட்டத்தில் குடி இருக்கும் கந்தசாமி சாளையில் கழித்தாயிற்று. கந்தசாமியின் மகள் ஈசுவரி ஓடியோடித்தான் கவனித்தாள். சோறும் சாறும் சுவை பொருந்தியதாகத்தான் இருந்தது. இருந்தும், அப்பச்சிக்கு மனநிறைவு இல்லை. இராச்சோறை நோக்கிக் கிளம்பினார் அப்பச்சி.
வயது எண்பதுகளில் இருக்கும். கட்டுக் குலையாத தேகம். முகவனூர் செந்தோட்டத்துக்காரர் என்றால், வடக்கே செஞ்சேரி மலைதொட்டு தெற்கே பெதப்பம்பட்டி வரையிலும், மேற்கே சமுத்தூர், காளியாபுரம், சின்னப்பம் பாளையத்திலிருந்து கிழக்கே பூளவாடி, பெரியபட்டி வரையிலும் பிரசித்தம். வம்புதும்புக்குச் செல்லாமல், ஏழைபாழைகளிடம் கண்டிப்பும், அதே நேரத்தில் கருணையும் கொண்ட ஒரு மத்தியதர உழவன்.
மகனைத் தன் உடன்பிறந்தவளின் மகளுக்கே கட்டிக் கொடுத்ததுதான் அவருக்கே வினையாகப் போனது. மூத்த சகோதரி தெய்வாத்தாவுக்கு ஒரே மகள். ஆனைமலையில் பெரிய விவசாயக் குடும்பம். தனது அண்ணன் மகனையே, வீட்டோடு மருமகனாக ஆக்கிவிட்டாள். மகன் தங்கவேலும், அத்தையின் அன்புக்குக் கட்டுப்பட்டு ஆனைமலையிலேயே பண்ணையம் பார்த்துக் கொண்டு இருக்க, அப்பச்சி மட்டும் இருக்கும் மூணு வள்ளத்துப் பூமியையும் தனியாளாய் இருந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்.
தலையில் உருமாலை. நிமிர்ந்த நெஞ்சம். செம்பழுப்பு நிறமேறிய கைத்தறிச் சட்டை. இவருக்காகவே பிரத்தியேகமாக, வேலூர் சின்னக்காளி செய்து கொடுத்த செருப்பு. எப்பேர்ப்பட்ட முள்ளும் ஒடிந்துதான் போகணுமே ஒழிய, தைக்க இயலாத மாட்டுத்தோல்ச் செருப்பு அது. கறந்து எடுத்துச் செல்லப்படும் பால், வலதுகை தூக்குப் போசியில்!
எதிர்ப்படும் ஊர்க்காரர்களுடன் பாடுபழமையைப் பேசியபடியே, இராமச்சந்திராவரத்து அப்பன் வீட்டைக் கடந்து மேற்குத் தெருவில் நுழைந்தார் அப்பச்சி.
“டே... அப்பனு... நெகமத்துல இந்தக் கிழமை யாவாரம் எப்டறா போச்சு?”
“இந்த வாரந் தேவுலீங்க பெரீப்பா... என்ன கெரகம், நெறைய வடக்கத்துக்காரனுக வந்துதல... சம்பல் குறைஞ்சி போச்சிங்க பெரீப்பா...”
“செரி... கூடைக்கு எவ்வளவுதேன் கெடச்சது?”
“தக்காளிக்கு ஏழுமு, பாவக்காய் மூட்டைக்கு பதினாறுமு கெடச்சது...”
“செரி... பெரீம்மாகிட்டச் சொல்லி, அடுத்த வாரம் நம்முளதையுங் கொண்டு போய்ப் போடு...”
“ஆகுட்டுங்...”
சந்தில் நுழைந்து, படலைத் திறந்து உள்ளே நுழைந்தார் அப்பச்சி. சிறிது ஏமாற்றம். வீட்டுக் கதவு சாத்தப்பட்டு இருந்தது. அமுச்சியும் திண்ணையில் இருந்திருக்கவில்லை. எப்போதும் திண்ணையில் இருக்கும், வெத்தலை பாக்குத் தட்டும் இருந்திருக்கவில்லை. தூக்குப்போசியைத் திண்ணையிலேயே வைத்துவிட்டு, அருகில் இருக்கும் நெசவாளியான கோயிந்தன் வீட்டுக்குச் சென்றார்.
“சரசூ... சரசூ...”
பரபரத்துப் போனாள் சரசு. நம் வீட்டுக்கு செந்தோட்டத்துக்கார அய்யன் வந்திருப்பதில் அவளுக்கு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி. மேலே, அட்டாலியில் இருந்த கிணத்துக்கடவுப் பாயை எடுத்து, திண்ணையில் விரித்தாள்.
“வாங்கய்யா... சொல்லி அனுப்பி இருந்தா, அவங்கப்பனே வந்திருப்பாருங்களே? இருங்க, காப்பியப் போட்டு எடுத்தாரேன்!”
“அட புள்ள... அதுக்கென்ன இப்போ! ஆத்தா இங்க இருக்காளான்னு பாக்க வந்தம்புள்ள!!”
“இங்க வல்லீங்களே... இருங்க, நான் வேணா ஒரு எட்டு மூலையூட்டுல இருக்காங்களான்னு....”
“வேண்டாம் புள்ள... அங்க எல்லாம் அவ போமாட்டா...”
மீண்டும் வீட்டுக்கு வந்தவர், திண்ணையிலேயே அமர்ந்து விட்டார். சிறிது நேர யோசனைக்குப் பிறகு செருப்பைப் போட்டுக் கொண்டு புறப்படலானார்.
வீட்டில் இருந்து, கொங்கல் நகரம் ஆறேழு மைல் இருக்கும். தெற்கே இருக்கும் பள்ளத்தைக் கடந்து, அணிக்கடவு, இராமச்சந்திராவரம் கடந்து, நாகூர்க்காரன் தோப்பைக் கடந்துவிட்டால் தன் மகள் பரிமளாவின் தோட்டம். அப்பச்சியும், அமுச்சியும் பரிமளாவின் தோட்டத்துக்குச் செல்வதென்றால், எப்போதும் நடந்து செல்வதுதான் வழக்கம். கண்ணை இறுகக் கட்டிவிட்டாலும், சரியாகப் போய்ச் சேர்ந்துவிடும் அளவுக்கு பழக்கப்பட்ட தடம் அது.
”டொக்... டொக்...”
“டே மணியா... உங்கம்மாவை எழுப்புடா... சுண்டாச்சட்டியில இருக்குற மொளகாப் பொடிய சீக்கிரம் எடுக்கச் சொல்றா...”, அப்பா என்னை எட்டி ஒரு உதைவிட்டார். அப்பா எள் என்றால், அம்மா எண்ணெயாக இருந்தாள்.
சாளை விளக்கெதுவும் போடாமல், டக்கென அடுப்படிக்குச் சென்று, ஒரு சின்னக் குண்டாவில் எண்ணெய் ஊற்றிக் காய்ச்ச ஆரம்பித்தாள். அப்ப, கையில் ஈட்டியுடன் சுவரில் சாய்ந்து நின்று கொண்டிருந்தார். நான் ஓடிப் போய், அம்மாவின் பின்னால் நின்று கொண்டேன்.
சிறிது நேர இடைவெளிக்குப் பின், மீண்டும்.... “டொக்... டொக்...”
இம்முறை வாய்திறந்தார் அப்பா, “யார்றா அது இந்த நேரத்துல?”
“நாந்தேனுங்க... மாப்புளை... நாந்தேனுங்க...” அம்மா, என்னைத் தள்ளிவிட்டு ஓடினாள் பெரிய கொட்டத்துக் கதவை நோக்கி.
“இதேனுங்கப்பா..... உள்ளுக்கு வாங்க...”, அம்மா படபடத்தாள். களத்து மேட்டில் இருந்த கயிற்றுக் கட்டிலை எடுத்து வந்து முன்வாசலில் போட்டார் அப்பா.
“மாமா, மொதல்ல ஒக்காருங்க... நீ போயி எதனாப் போட்டு எடுத்துட்டு வா மொதல்ல...”, அம்மாவை விரட்டினார் அப்பா. அப்பிச்சி, தன் உருமாலையைத் தலையில் இருந்து எடுத்து உதறிக் கொண்டே உட்காரலானார்.
“ஏனுங்... கடைசி வண்டிய உட்டுப் போட்டீங்ளாக்கூ? புக்குளத்து பெரிய பாப்பாத்தி ஊட்ல இருந்துட்டு வர்லாமுங்ளே?”
“அப்ப, அவ இங்க வருலீங்ளா மாப்ள? வடக்க, ஊர்லிருந்துதானுங் வர்றேன்...”, மனிதர் ஆறடி உடலை ஆறுசாண் அளவுக்கு குறுக்கப் பார்த்தார். உடல் ஒருமுறை சிலிர்த்தது. கைகள் நடுங்கின. கூடவே, அம்மாவின் ஓலமும் பீறிட்டது.
“எழவு, நீயேண்டி இப்ப ஒப்பாரி வெக்கிறே? என்னாயிடிச்சின்னு, கேட்டும் கேக்காம இப்ப...?”,
அப்பாவின் குரலையும் தாண்டி, அம்மாவின் அலறல் ஆர்ப்பரித்தது. “ஏந்தேன் இப்படிச் செய்யுறீங்களோ? பெத்த புள்ளையும் உட்டுப் போட்டு, கட்டுனவ பொறகால போயிட்டான்... நீங்களும் எட்டுக்கேழுதரம் எங்கம்மாவை... நான் இந்த நாயத்தை எங்க போய்ச் சொல்வேன்... எனக்குன்னு ஊருசனம் உண்டா? ஒன்னா??”
அம்மாவின் ஓலம் கேட்டு, பக்கத்து சாளையில் இருந்து நாகராசண்ணனும் செல்வராசண்ணனும் வந்திருந்தார்கள்.
“நான் ஒன்னுஞ் சொல்லலைங்க மாப்ள... நான் கடலைக்காட்டுக்கு நொவாக்ரானுமு, பருத்திக்கு சிம்புசுமு வாங்கலாம்ன்னு மேக்க போயிருந்தேன்... போன எடத்துல அவனுமு அகசுமாத்தா வந்திருந்தான்... வாங்க ஒரு எட்டு போலாமுன்னு தோட்டத்துக்கு கூப்ட்டான்... போய்ட்டு வந்தேன்... அதுக்கு, இவ....”
“பொண்டாட்டி பொறகால போனவம் பின்னாடிப் போனா, கேக்காம வேற என்ன பன்றதாமா? எங்கம்மா இனி எந்தக் குட்டையில வுழுந்தாளோ? எந்த வாய்க்கால்ல வடக்கமுன்னாப் போனாலோ??”, ஒப்பாரி பெருவேகமெடுக்க எடுக்க, அப்பச்சி நிலைகுலைந்து போனார்.
“ஏனுங் மாமா? நெம்பப் பேசிப் போட்டீங்களா?? தெகிரியமா இருங்கோ... அப்படியெல்லாம் அத்தை உங்களைத் தன்னந்தனியா உட்டுப் போட்டு எதுஞ் செஞ்சுற மாட்டாங்.... டே நாகராசு, மயிலை ரெண்டையும் புடிச்சுக் கட்டுங்டா வண்டிய...”
கண்ணிமைக்கும் நேரத்தில், மயிலைகள் அந்த ரேக்ளா வண்டியைச் செலுத்தத் தயார் நிலையில். நாகராசண்ணன், காளைகளின் கயிற்றைக் கையில் பிடித்தபடி வண்டியைத் தன்பிடியில் வைத்திருந்தார்.
“மாமா, வாங்க நீங்களுமு எங்ககோட... இங்கிருந்தா, அவ ஒப்பாரி வெச்சே உங்களைக் கொன்னுபோடுவா..”
வண்டி வல்லக்குண்டாபுரத்தைத் தாண்டி, அணிக்கடவு இட்டேரியில் சீறிப் பாய்ந்தது. யாரும், ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவில்லை.
”கிழவி, அரசூர் வாய்க்காலில் விழுந்து தொலைத்திருந்தாலும், சுல்தான்பேட்டையில் இந்நேரம் விபரம் தெரிய வந்திருக்கும். ஒன்று, கிணறுகளில் விழுந்திருக்க வேண்டும். அல்லது, மருந்தைக் குடித்துவிட்டுத் தோட்டங்காடுகளில் விழுந்து கிடக்கும். விடிந்தால், எல்லாம் தெரிந்துவிடப் போகிறது” என்கிற நினைப்பில் இருந்தார், மாமாவின் முன்னால் பீடி பிடிக்க முடியாத இக்கட்டான நிலையில் இருக்கும் அப்பா.
“என்றா நாகராசூ, அதென்ன? எதுத்தாப்ல எதோ வருது போல இருக்கு??”
“ஆமாங் சித்தப்பா... ஆரோ, மொட்ட வண்டீல வாறாங்ளாட்ட இருக்கூ?”
“நீ இழுத்துப் புடிச்சு ஓட்டு வாக்கலாம்... ஆருன்னு பாக்குலாம்...”, வண்டியில் இருந்த எனக்கும் பரபரப்புத் தொற்றிக் கொண்டது.
“சின்னானுமு மந்தராசலனுமாட்ட இருக்குங் மாப்ள!”, கம்மிய குரலில் அப்பச்சி. வண்டியை நிறுத்திவிட்டு முதலில் இறங்கினார் அப்பா.
“டே, சின்னா... என்றா, எதுனாத் தகவலு கெடச்சுதா?”
“என்ன தகவலுங் மச்சான்? பண்றதும் பண்ணிப் போட்டு... நீங்க பண்றது வெகு ஞாயமாக்கூ??”
“தெள்ளவாரி... புடுச்சி, முதுச்சிப் போடுவனாக்கூ... யாருகிட்ட, என்றா பேசுற?”
“பின்ன என்னங்க மச்சான்... பெரீப்பனக் கூட்டீட்டு வந்து உங்ககிட்ட வெச்சிட்டு.... அங்க பெரீம்மா, அழுது பொரண்டு ஊரைக் கூட்டீர்ச்சல்லோ? செரி... செரி... வாங்க அல்லாரும்... ஊட்டுக்குப் போலாம்....”
மொட்டை வண்டி மெதுவாகப் பின்னால் வந்து கொண்டிருக்க, எங்கள் ரேக்ளா பறந்தது வடக்கு திசையில். தெரு முனையிலேயே அப்பாவும், அப்பச்சியும் வண்டியில் இருந்து இறங்கிக் கொண்டனர். நாகராசண்ணன் வண்டியை வீதியில் நிறுத்தவும், நான் குதித்து வேகமாக ஓடினேன்.
நிறையப் பேர் கூடி இருந்தார்கள். “நான் கண்ணுக்குள்ள வெச்சிப் பார்த்துட்டு இருந்தனே எம்மவராசன? இப்படி உட்டுப் போட்டுப் போய்ட்டாரே?? இந்த பாழாப் போன முண்ட, நான் எப்பவும் பேசுறதுதான? ஒரு அடி வெச்சாப் போச்சு... நான் இழுத்துக் கட்டீட்டு சும்மா கெடப்பனே??
சாயுங்காலம் ஊட்டு வந்த மனுசனைக் கண்டுக்காம ஊட்டுக்குள்ள இருந்தது ஒரு குத்தமா? இப்பிடி நட்டாத்துல உட்டுப் போட்டு போய்ட்டாரே மவராசன்??”, இப்படியாக அமுச்சி ஒப்பாரியுடன், மற்றவர்களும் அழுதழுது மூக்கைச் சீந்திக் கொண்டிருந்தார்கள்.
அப்பா வந்து திண்ணையில் அமர்ந்தார். பொடக்காளியில் அடைத்து வைக்கப்படாத கோழி, சேவல்களைப் பிடித்து அடைத்துக் கொண்டிருந்தார் அப்பச்சி. நாங்கள் வந்திருப்பதை யாரும் கவனித்திருக்கவில்லை. பொறுமையாக இருந்த அப்பா, மெளனத்தை விடுத்துக் கத்தினார் பெருங்குரலில்.
“எழவு, கொஞ்சம் நிறுத்துறீங்களா? என்னாயிப் போச்சுன்னு இப்ப?? ஏனுங்க அத்தை, மனசுல இவ்வளவு பாசத்தை வெச்சீட்டு... மொதல்ல, ஊடுகள்ல ஆம்பளைகளைப் பேசுறதை எப்ப நிறுத்தப் போறீங்க அல்லாரும்?”
மயான அமைதி!
12/04/2010
நல்லாத்தான் காது குத்துறாய்ங்க....
(c-குணுக்கு, d-சந்திரபாவலி)
(கம்மல், கடுக்கண், சிலுவணி, காதுப்பூ, பூடி)
(தண்டொட்டி)
அலுக்குத்து
இட்டடுக்கி
கர்ணபூரம்
காதுச்சில்லறை
காதுப்பூ
குணுக்கு
கொப்பு
சந்திரபாவலி
சல்லடைமுருகு
சிலுவணி
தட்டுக்குச்சு
தண்டொட்டி
தளப்பம்
தாடங்கம்
தாளுருவி
கடுக்கன்
கம்மல்
வயிரவாளி
பூடி (பொகடி)
தோடு
"ஊழலற்ற ஆட்சியை தமிழகத்தில் அமைப்பேன்!!!" காது குத்துறாய்ங்கல்ல? மேல சொன்னதுகளையும் வாங்கிக் குடுக்கச் சொல்லுங்க... போட்டுக்கலாம்!!!
11/26/2010
கைத்தடி (HUCKLEBERRY FRIEND)
ஆசுதிரேலியாவில இருந்து பதிவர் மணிமேகலை அவங்க, Huckleberry Friend எனும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் கேட்டு இருந்தாங்க. நமக்கு இருக்கிற கடுமையான வேளைப்பளுவுக்கு இடையில, அதற்கான என் தரப்பு விபரங்களை உடனே கொண்டு சேர்க்க முடியலை.
அதான், இந்த நன்றி நவிலும் நாளுக்கான விடுப்பைப் பாவிச்சிகிட்டு இந்த இடுகைய இடுறேன். முதல்ல, அவங்களுக்கு சொல்ல விரும்புறது, ஒரு கிராமத்தான்கிட்ட இது போலக் கேட்டா, கிராமத்துத்தனமாத்தான் விடை வரும். இஃகி!
சரி, Huckleberry Friend அப்படின்னா என்ன? எளிமையானவனாக இருக்கலாம்; பெரிய பின்புலம் இல்லாதவனாவும் இருக்கலாம்; ஏழ்மையானவனாகவும் இருக்கலாம்; பெரிய படிப்பறிவு இல்லாதவனாகவும் இருக்கலாம்; மொத்தத்தில் அற்பனாகவும் இருக்கலாம்.
அப்படி இருந்தும், இக்கட்டான நேரங்கள்ல, ஏழைப்பங்காளனா வந்து உதவக் கூடிய ஒருவரைச் சொல்றதுதாங்க இந்தப் பதம். பசி, பட்டினி, மற்ற உணவுகள் கிடைக்காமை போன்ற நேரங்கள்ல நாம, தோட்டங்காட்டுல இருக்குற இரக்கிரியப் புடுங்கி கடைஞ்சி உங்றது இல்லையா? அது போலத்தானுங்க இதுவும். எந்த நேரத்துலயும் பசிக்கு உதவுற ஒரு கனிதான். அதை ஒப்பிட்டு, அவசரத்துக்கு உதவுற நண்பன்னு சொல்லிச் சொல்றதுதான் இந்த ஆங்கிலப்பதத்தின் பின்னணி.
சரி, இனி நம்ம வாழ்க்கையில அமைஞ்ச Huckleberry Friend பத்திப் பேசுலாமுங்க. ஆமாங்க, இது எனக்கு மட்டும் அல்ல; ஊர்ல சமகாலத்துல இருந்த எல்லாருக்குமே இதானுங்க Huckleberry Friend. அது என்ன??
ஆமாம்; சிஞ்சுவாடி காளியாத்தா கோயல் நோம்பிக்கிப் போனா வாங்குவேன். தை நோம்பியப்ப மாலகோயலுக்குப் போனா வாங்குவேன். தைப்பூசத்தப்ப செஞ்சேரிமலை தேரோட்டத்துக்குப் போகும் போதும் வாங்குவேன். முக்கோணம் முத்தாலம்மன் கோயில் நோம்பிக்குப் போனாலும் வாங்குவேன். கடைசியா, அம்பது நயாப் பைசாவுக்கு வாங்கினதா ஒரு நினைவு. அது என்ன??
அண்ணாக்கவுத்துக் கொத்துதானுங்க அது. அரைஞாண் கயிற்றுல தொங்கவுடுற அந்தக் கொத்துல மூணு சிறு பொருட்கள் இருக்குமுங்க. முதலாவது, சின்ன இடுக்கி. அதுல எதையும் பிடிச்சி உருவலாம், பிடுங்கலாம். இரண்டாவது, காதூசி. சும்மா ஒரு ரெண்டு விரக்கடை அளவுக்கு நீட்டமா வந்து, முனையில சின்னதா மடிப்போட இருக்கும். மூனாவதா, முள்ளூசி. சின்ன ஊசிங்க, அதுல கால்ல ஏறுன முள்ளைக் கடைஞ்சி எடுக்கலாம். பல் குத்தலாம்.
இதுதானுங்க என்னோட இடருய்தி. எந்த இடைஞ்சல்னாலும், இதைத்தான் முதல்ல பாவிப்பேன். கால்ல முள் ஏறிடுச்சா, இவர்தான் கை கொடுப்பாரு. காதுல குப்பை, அழுக்கு எடுக்கணுமா, இவர்தான் உதவுவாரு. பல் குத்தணுமா, இவர்தான்! பேனாவுல நிப்பைப் புடுங்கணுமா, இவர்தான். சாவி இல்லாத ஊட்ல பூந்து ஆட்டையப் போடணுமா, இவர்தான்! இப்படி, தேவைங்ற போது வந்து நிக்கிற இடருய்திங்க இது! கிட்டத்தட்ட நான் கல்லூரிப் படிப்பு முடியுற வரைக்கும், என்னுடலின் ஒரு அங்கமா இருந்தாருங்க இவரு!
அடுத்துச் சொல்லப் போனா, காக்காப் பொன்னு! இதுவும் பல வழிகள்ல நமக்கு உய்வனா இருந்தாருங்க. குறிப்பா, இளம்பிராயத்துல, பெண் தோழமை கிடைக்க உதவி செய்தது இதான்! ரேவதி, சுகுண சரசுவதி, சந்திரலேகா, கீதா, சாந்தாமணி அப்படின்னு ஊர்ல இருக்குற பொண்ணுக எல்லாம் நம்ம மேல ஒரே அன்பா, பந்த பாசமா இருப்பாங்க. எல்லாம், இந்த காக்காப்பொன்னு செய்த உதவிதான்!
ரேவதி அவங்க தோட்டத்துக் கொய்யாப்பழம் வேணுமா? கொஞ்சம் காக்காப்பொன்னு கொடுத்தாப் போதும், இனிப்பான கொய்யாப்பழம் என்னோட இடம் தேடி வரும். வீதம்பட்டி மாரியாத்தா கோயில் நோம்பிக்கு செய்த தினைமாவும், அரிசிமாவும் வேணுமா, சாந்தாமணிக்குக் கொஞ்சம் அள்ளிக்குடு காக்காப்பொன்னை... இப்படி நெம்ப உதவிகரமா இருந்துச்சுங்க இந்த காக்காப் பொன்னு!
எப்பவும் என்னோட பைக்கட்டுல காக்காப்பொன்னு கைவசம் இருக்கும். அது என்ன இந்த காக்காப்பொன்னு??
வாய்க்கா மேட்டுல இருக்குற கருங்கல்லு, கிணத்து மேட்டுல இருக்குற கருங்கல்லு, இப்ப்டித் தோண்டி எடுத்து கருங்கல்லுல அங்கங்க, மினுமினுன்னு மின்னிகிட்டு இருக்குமுங்க இந்த காக்காப்பொன்னு. மேல சொன்ன முள்ளூசிய வெச்சி சன்னமா நோண்டுனா, பாளம் பாளமா பெயர்ந்து வருமுங்க இந்த காக்காப் பொன்னு.
எந்த அளவுக்குப் பெருசா பேர்த்து எடுக்குறீங்களோ, அந்த அளவுக்கு உங்களுக்கான கிராக்கி கூடும். இதை அவிங்கங்க, பள்ளிக்கூடத்துப் பைக்கட்டுல ஒரு பொன்னாப் பாவிச்சு வெச்சிக்குவாங்க. எப்பவாச்சும் சிலேட்டுப் பென்சில் இல்லாதப்ப, அதை வெச்சி எழுதிக்கவும் செய்யலாம். இவர்னால, நான் அடைஞ்ச பலன்கள் கொஞ்ச நஞ்சமில்லங்க. ஆகவே, இவரும் நமக்கு ஒரு இடருய்திதானுங்க!
கொஞ்சம் வளர்ந்தவுட்டு, அமைஞ்ச Huckleberry Friend யாரு? கைத்தடிதானுங்க அது. வேலூர்ப் பள்ளிக்கூடத்துல இருந்து எங்க ஊட்டுக்கு அஞ்சு மைல். தினமும் அரக்கன் இட்டேரி வழியா நடந்து போய்ட்டு வரணும். அப்ப, போகும் போதும் சரி, வரும் போதும் சரி, எங்க எல்லார்த்து கையிலயும் கைத்தடி ஒன்னு இருக்கும்.
இது சமகாலத்துல வளர்ந்த, பெரியவங்களுக்கும் பொருந்தும். தோட்டங்காட்டுக்குப் போய் வரும் போதெல்லாம் கைத்தடியோடத்தான் போவாங்க, வருவாங்க. மூணு அடி நீளத்துல இருக்குற கைத்தடி எதுக்கும் உதவுமுங்க. பாம்படிக்கலாம்; ஓணானைப் புடிச்சி விளையாட்டுக் காட்டலாம். உயரத்தில தொங்குற கிளையக் கீழ சாச்சி, நெல்லிக்கா, சூரிக்கா பறிக்கலாம். சமயத்துல, லொள்ளுப் பேசுறவனையும் ஒரு காட்டுக் காட்டலாம். இடருக்கு உய்பவன் இடருய்தி.
Huckleberry Friendன்னு எப்படி ஒப்புமைப்படுத்திச் சொல்றாங்களோ, அதே போல இந்தக் கிராமத்தானும் அந்த மாதிரி அன்பு நண்பர்களைச் சொல்றது, அவிங்க என்னோட கைத்தடின்னு. இப்பத்தான், கைத்தடி அப்படிங்றதை இளக்காரமாப் பாவிக்கிறாய்ங்க. என்னைப் பொறுத்த மட்டிலும், கைத்தடி, கைத்தடிதானுங்க!!
அதான், இந்த நன்றி நவிலும் நாளுக்கான விடுப்பைப் பாவிச்சிகிட்டு இந்த இடுகைய இடுறேன். முதல்ல, அவங்களுக்கு சொல்ல விரும்புறது, ஒரு கிராமத்தான்கிட்ட இது போலக் கேட்டா, கிராமத்துத்தனமாத்தான் விடை வரும். இஃகி!
சரி, Huckleberry Friend அப்படின்னா என்ன? எளிமையானவனாக இருக்கலாம்; பெரிய பின்புலம் இல்லாதவனாவும் இருக்கலாம்; ஏழ்மையானவனாகவும் இருக்கலாம்; பெரிய படிப்பறிவு இல்லாதவனாகவும் இருக்கலாம்; மொத்தத்தில் அற்பனாகவும் இருக்கலாம்.
அப்படி இருந்தும், இக்கட்டான நேரங்கள்ல, ஏழைப்பங்காளனா வந்து உதவக் கூடிய ஒருவரைச் சொல்றதுதாங்க இந்தப் பதம். பசி, பட்டினி, மற்ற உணவுகள் கிடைக்காமை போன்ற நேரங்கள்ல நாம, தோட்டங்காட்டுல இருக்குற இரக்கிரியப் புடுங்கி கடைஞ்சி உங்றது இல்லையா? அது போலத்தானுங்க இதுவும். எந்த நேரத்துலயும் பசிக்கு உதவுற ஒரு கனிதான். அதை ஒப்பிட்டு, அவசரத்துக்கு உதவுற நண்பன்னு சொல்லிச் சொல்றதுதான் இந்த ஆங்கிலப்பதத்தின் பின்னணி.
சரி, இனி நம்ம வாழ்க்கையில அமைஞ்ச Huckleberry Friend பத்திப் பேசுலாமுங்க. ஆமாங்க, இது எனக்கு மட்டும் அல்ல; ஊர்ல சமகாலத்துல இருந்த எல்லாருக்குமே இதானுங்க Huckleberry Friend. அது என்ன??
ஆமாம்; சிஞ்சுவாடி காளியாத்தா கோயல் நோம்பிக்கிப் போனா வாங்குவேன். தை நோம்பியப்ப மாலகோயலுக்குப் போனா வாங்குவேன். தைப்பூசத்தப்ப செஞ்சேரிமலை தேரோட்டத்துக்குப் போகும் போதும் வாங்குவேன். முக்கோணம் முத்தாலம்மன் கோயில் நோம்பிக்குப் போனாலும் வாங்குவேன். கடைசியா, அம்பது நயாப் பைசாவுக்கு வாங்கினதா ஒரு நினைவு. அது என்ன??
அண்ணாக்கவுத்துக் கொத்துதானுங்க அது. அரைஞாண் கயிற்றுல தொங்கவுடுற அந்தக் கொத்துல மூணு சிறு பொருட்கள் இருக்குமுங்க. முதலாவது, சின்ன இடுக்கி. அதுல எதையும் பிடிச்சி உருவலாம், பிடுங்கலாம். இரண்டாவது, காதூசி. சும்மா ஒரு ரெண்டு விரக்கடை அளவுக்கு நீட்டமா வந்து, முனையில சின்னதா மடிப்போட இருக்கும். மூனாவதா, முள்ளூசி. சின்ன ஊசிங்க, அதுல கால்ல ஏறுன முள்ளைக் கடைஞ்சி எடுக்கலாம். பல் குத்தலாம்.
இதுதானுங்க என்னோட இடருய்தி. எந்த இடைஞ்சல்னாலும், இதைத்தான் முதல்ல பாவிப்பேன். கால்ல முள் ஏறிடுச்சா, இவர்தான் கை கொடுப்பாரு. காதுல குப்பை, அழுக்கு எடுக்கணுமா, இவர்தான் உதவுவாரு. பல் குத்தணுமா, இவர்தான்! பேனாவுல நிப்பைப் புடுங்கணுமா, இவர்தான். சாவி இல்லாத ஊட்ல பூந்து ஆட்டையப் போடணுமா, இவர்தான்! இப்படி, தேவைங்ற போது வந்து நிக்கிற இடருய்திங்க இது! கிட்டத்தட்ட நான் கல்லூரிப் படிப்பு முடியுற வரைக்கும், என்னுடலின் ஒரு அங்கமா இருந்தாருங்க இவரு!
அடுத்துச் சொல்லப் போனா, காக்காப் பொன்னு! இதுவும் பல வழிகள்ல நமக்கு உய்வனா இருந்தாருங்க. குறிப்பா, இளம்பிராயத்துல, பெண் தோழமை கிடைக்க உதவி செய்தது இதான்! ரேவதி, சுகுண சரசுவதி, சந்திரலேகா, கீதா, சாந்தாமணி அப்படின்னு ஊர்ல இருக்குற பொண்ணுக எல்லாம் நம்ம மேல ஒரே அன்பா, பந்த பாசமா இருப்பாங்க. எல்லாம், இந்த காக்காப்பொன்னு செய்த உதவிதான்!
ரேவதி அவங்க தோட்டத்துக் கொய்யாப்பழம் வேணுமா? கொஞ்சம் காக்காப்பொன்னு கொடுத்தாப் போதும், இனிப்பான கொய்யாப்பழம் என்னோட இடம் தேடி வரும். வீதம்பட்டி மாரியாத்தா கோயில் நோம்பிக்கு செய்த தினைமாவும், அரிசிமாவும் வேணுமா, சாந்தாமணிக்குக் கொஞ்சம் அள்ளிக்குடு காக்காப்பொன்னை... இப்படி நெம்ப உதவிகரமா இருந்துச்சுங்க இந்த காக்காப் பொன்னு!
எப்பவும் என்னோட பைக்கட்டுல காக்காப்பொன்னு கைவசம் இருக்கும். அது என்ன இந்த காக்காப்பொன்னு??
வாய்க்கா மேட்டுல இருக்குற கருங்கல்லு, கிணத்து மேட்டுல இருக்குற கருங்கல்லு, இப்ப்டித் தோண்டி எடுத்து கருங்கல்லுல அங்கங்க, மினுமினுன்னு மின்னிகிட்டு இருக்குமுங்க இந்த காக்காப்பொன்னு. மேல சொன்ன முள்ளூசிய வெச்சி சன்னமா நோண்டுனா, பாளம் பாளமா பெயர்ந்து வருமுங்க இந்த காக்காப் பொன்னு.
எந்த அளவுக்குப் பெருசா பேர்த்து எடுக்குறீங்களோ, அந்த அளவுக்கு உங்களுக்கான கிராக்கி கூடும். இதை அவிங்கங்க, பள்ளிக்கூடத்துப் பைக்கட்டுல ஒரு பொன்னாப் பாவிச்சு வெச்சிக்குவாங்க. எப்பவாச்சும் சிலேட்டுப் பென்சில் இல்லாதப்ப, அதை வெச்சி எழுதிக்கவும் செய்யலாம். இவர்னால, நான் அடைஞ்ச பலன்கள் கொஞ்ச நஞ்சமில்லங்க. ஆகவே, இவரும் நமக்கு ஒரு இடருய்திதானுங்க!
கொஞ்சம் வளர்ந்தவுட்டு, அமைஞ்ச Huckleberry Friend யாரு? கைத்தடிதானுங்க அது. வேலூர்ப் பள்ளிக்கூடத்துல இருந்து எங்க ஊட்டுக்கு அஞ்சு மைல். தினமும் அரக்கன் இட்டேரி வழியா நடந்து போய்ட்டு வரணும். அப்ப, போகும் போதும் சரி, வரும் போதும் சரி, எங்க எல்லார்த்து கையிலயும் கைத்தடி ஒன்னு இருக்கும்.
இது சமகாலத்துல வளர்ந்த, பெரியவங்களுக்கும் பொருந்தும். தோட்டங்காட்டுக்குப் போய் வரும் போதெல்லாம் கைத்தடியோடத்தான் போவாங்க, வருவாங்க. மூணு அடி நீளத்துல இருக்குற கைத்தடி எதுக்கும் உதவுமுங்க. பாம்படிக்கலாம்; ஓணானைப் புடிச்சி விளையாட்டுக் காட்டலாம். உயரத்தில தொங்குற கிளையக் கீழ சாச்சி, நெல்லிக்கா, சூரிக்கா பறிக்கலாம். சமயத்துல, லொள்ளுப் பேசுறவனையும் ஒரு காட்டுக் காட்டலாம். இடருக்கு உய்பவன் இடருய்தி.
Huckleberry Friendன்னு எப்படி ஒப்புமைப்படுத்திச் சொல்றாங்களோ, அதே போல இந்தக் கிராமத்தானும் அந்த மாதிரி அன்பு நண்பர்களைச் சொல்றது, அவிங்க என்னோட கைத்தடின்னு. இப்பத்தான், கைத்தடி அப்படிங்றதை இளக்காரமாப் பாவிக்கிறாய்ங்க. என்னைப் பொறுத்த மட்டிலும், கைத்தடி, கைத்தடிதானுங்க!!
11/25/2010
தாழி
பிறந்த மண்ணை அலசி ஆராய்வதில் கிட்டும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை எதுவும் இல்லை என்றே சொல்வேன். அதுவும், கொங்கு மண்ணை அலசுவதில் அடியேனுக்கு என்றும் அளப்பரிய மகிழ்ச்சிதான். கூகுள் வரைபடத்தில், நான் பிறந்து திரிந்த மண்ணைக் கூர்ந்து நோக்கினேன்.
லட்சுமாபுரம்
சிறு கூரையுடன் இருந்த இடம், ஒரு கைச்சாளையாக மாறி இருக்கக் கண்டேன். லெட்சுமாபுரம் எனும் அந்த அழகிய ஊரைச் சுற்றிலும் தோப்புகள் சூழக் கண்டேன். பரம்பிக்குளம் ஆழியாறு பிரதானக் கால்வாய் கரைபுரண்டு செல்வதைக் கண்டேன். அகமகிழ்ந்தேன்.
கூரைக்கல்லு
அமெரிக்கர்கள் நன்றி நவில்தலை சிரமேற்கொண்டிருக்கும் இவ்வேளையில், இந்தக் கொங்கனும் தன் மண்ணுக்கும் மக்களுக்கும் நன்றியை உரித்தாக்குகிறேன்.
கொங்கு நாட்டுக் கிராமங்களில், பள்ளம், படுகை, பாம்பேறி, கட்டுத்தரை, கோம்பை மேடு, குறுக்கு மேடு, இட்டேரி என எங்கும் நினைவுச் சின்னங்கள் வியாபித்திருப்பதை இன்றும் காணலாம்.
குத்தாரிக் கல்லு
குழிக்கல்லு
வட்டக்கல்லு
இத்தாழிகளில், இறந்தவர்கள் உடலோடு, அவர்களுக்குப் பிடித்தமானவற்றையும் இட்டு வைத்த வழக்கம் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அப்படி வைக்கப்பட்டு இருந்த பொருட்களில், விலைமதிப்பற்ற நகைகளும் உண்டு. இத்தாழிகளை முதுமக்கட்தாழிகள் எனப் பாடப்புத்தகத்தில் படித்ததும் உங்களுடைய நினைவுக்கு வரலாம்.
நீங்கள் இப்படியான இடங்களைப் பார்க்க நேரிட்டால், அவற்றை படம் எடுத்து அனுப்பும்பட்சத்தில், நான் மிகவும் நன்றி உடையவனாய் இருப்பேன்.
11/01/2010
10/20/2010
வங்கணத்தி
மாறாத தென்றல்
மங்காத மதியொளி
நிசப்தமான பொழுது
மெல்லிய விசும்பல்
ஈரேழு ஆண்டுகளாய்
மெய் கிடையாகி
கிடை மடியாறிச்
செல்லுமாடமது!
ஏன்டி?
நீயும் மூக்குறிஞ்சிச் சாவடிக்குறே??
இருக்குறது மாடமே ஆனாலும்
உடுத்துறது பட்டே ஆனாலும்
சாத்துறது தங்கமே ஆனாலும்
இன்னைக்கு சமைஞ்ச அவ,
நாளைக்கு
நான் யாருன்னு கேப்பாளோ?
நான் யாருன்னு கேப்பாளோ??
மங்காத மதியொளி
நிசப்தமான பொழுது
மெல்லிய விசும்பல்
ஈரேழு ஆண்டுகளாய்
மெய் கிடையாகி
கிடை மடியாறிச்
செல்லுமாடமது!
ஏன்டி?
நீயும் மூக்குறிஞ்சிச் சாவடிக்குறே??
இருக்குறது மாடமே ஆனாலும்
உடுத்துறது பட்டே ஆனாலும்
சாத்துறது தங்கமே ஆனாலும்
இன்னைக்கு சமைஞ்ச அவ,
நாளைக்கு
நான் யாருன்னு கேப்பாளோ?
நான் யாருன்னு கேப்பாளோ??
10/14/2010
கடும் பகை
பொன்னானையும் அம்மணியையும்
ஊருக்கு அனுப்பிவை!
காரி மாட்டை துங்காவிக்காரனுக்கு
புடிச்சுக்குடு!
இந்தா, கழுத்துல என்ன?
மாரப்பங்கிட்டக் கழ்ட்டிக்குடு!
மாடே இல்ல,
தவுட்டு மூட்டைக எதுக்கு?
ஆறானை வெச்சிக்கச்சொல்லிக் காச வாங்கு!
எல்லாமும் ஆச்சு,
விதைநெல்லுக்கு இன்னும் வேணும்
ஆயிரத்து முந்நூறு!
கெடை கொள்ளமுடியலடீ!
கெடை கொள்ளமுடியலடீ!!
மாமா, சொன்னாக் கோவிச்சிக்க
மாட்டீகளே?
நானுங்கூடா வர்றேன்
எதுத்தவாசக் கதவைத் தட்டுனா என்னோ?
காசுக்கு முடைன்னு சொன்னாத்
தராமலா போய்டுவாய்ங்க??
பன்னெண்டு ஆண்டுப் பகை
கட்டினவ மனசு மாறியிருக்கா
உடுவானா தங்கவேலூ??
தட்டினான்
பனிரெண்டு ஆண்டுகள்
தட்டாத தன் பங்காளி வீட்டுக் கதவை!
அருக்காணீ...
வாசல்லயே நிக்காட்டி என்னோ??
இந்தா....
தங்கான் வந்துருக்குறான்...
அந்தவெடக்கோழி ரெண்டையும்
அடிச்சுப் போட்டுச் சாறக் காச்சு!
காசுங்கிடைச்சது
மனமும் நெறஞ்சது
நடையா நடந்து வந்த
பன்னெண்டு வருசத்து
நீதிமன்றத்து வழக்கும் ஒழிஞ்சது!!
ஊருக்கு அனுப்பிவை!
காரி மாட்டை துங்காவிக்காரனுக்கு
புடிச்சுக்குடு!
இந்தா, கழுத்துல என்ன?
மாரப்பங்கிட்டக் கழ்ட்டிக்குடு!
மாடே இல்ல,
தவுட்டு மூட்டைக எதுக்கு?
ஆறானை வெச்சிக்கச்சொல்லிக் காச வாங்கு!
எல்லாமும் ஆச்சு,
விதைநெல்லுக்கு இன்னும் வேணும்
ஆயிரத்து முந்நூறு!
கெடை கொள்ளமுடியலடீ!
கெடை கொள்ளமுடியலடீ!!
மாமா, சொன்னாக் கோவிச்சிக்க
மாட்டீகளே?
நானுங்கூடா வர்றேன்
எதுத்தவாசக் கதவைத் தட்டுனா என்னோ?
காசுக்கு முடைன்னு சொன்னாத்
தராமலா போய்டுவாய்ங்க??
பன்னெண்டு ஆண்டுப் பகை
கட்டினவ மனசு மாறியிருக்கா
உடுவானா தங்கவேலூ??
தட்டினான்
பனிரெண்டு ஆண்டுகள்
தட்டாத தன் பங்காளி வீட்டுக் கதவை!
அருக்காணீ...
வாசல்லயே நிக்காட்டி என்னோ??
இந்தா....
தங்கான் வந்துருக்குறான்...
அந்தவெடக்கோழி ரெண்டையும்
அடிச்சுப் போட்டுச் சாறக் காச்சு!
காசுங்கிடைச்சது
மனமும் நெறஞ்சது
நடையா நடந்து வந்த
பன்னெண்டு வருசத்து
நீதிமன்றத்து வழக்கும் ஒழிஞ்சது!!
Subscribe to:
Posts (Atom)