6/16/2008

வள்ளியாத்தாவும் மயிலாத்தாவும்

கொள்ளுக்கா புடுங்கயிலே
வள்ளுவ குலத்துப்பய
வளச்சுகிட்டான்!நான்

திமிறிகிட்டேன்!!

ம்ம்.. என்னவோ போ!
அடங்காத புள்ளைக்கு எவளோ,
ஒறங்காம கொள்ளாம ரா ராட்டுனாளாம்!!


உனக்கென்னடி ஆத்தி? வண்ணானுக்கு வண்ணாத்தி

மேல ஆசை; வண்ணாத்திக்கு கழுதை மேல ஆசை!

பக்தி முத்தி, பூனை கருவாட்டு பானைய,
கக்கத்துல இடுக்கிக்கிட்டு மோட்சத்து போச்சாம்!


நான் ஒண்ணும் பச்ச கண்டா ஒட்டுறவளும் இல்ல;
பருவங்கண்டு தப்புறவளும் இல்லடி.

களத்து மேட்டு கதயச் சொல்லவா? இல்ல, வடக்குமின்னா
ஓடி, பொறவால ஒளிஞ்ச கத சொல்லவா??


(.......இது ஏதோ அந்த விவகாரம்னு கொஞ்ச தாமதமாத் தான்
புரிஞ்சது நமக்கு. வளயப் போனாலும் வழில போவனும்; நமகெதுக்கு
இந்த ஞாயம்னு புடிச்சோம் ஓட்டம் திரும்பி பாக்காம....)

No comments: