புதுசா வந்து இந்த பதிவைப் படிக்குறவங்க, முந்தின பதிவைப் படிச்சுட்டு வந்து கணக்குப் போட்டியில கலந்துக்குங்க.
கணக்கு -1:
காலே அரைக்கால் காசுக்கு
நாலே அரைக்கால் வாழைக்காய்
காசுக்கு எத்தனை வாழைக்காய்?
கணக்கு-2:
ஒரு தென்னந்தோப்புல ஏழு வேலிகள் இருந்துச்சு. ஒவ்வொரு வேலிக்கும் ஒருத்தன்னு மொத்தம் ஏழு காவல்காரங்க. அப்ப, அந்தத் தென்னந்தோப்புல ஒரு திருடன் திருடப் போறான். இந்த காவக்காரங்களும் திருடங்க. அவங்க எல்லாருமே ஒன்னு சொன்னா மாதிரி திருடங்கட்ட சொல்லுறாங்க, "நீ எடுத்துட்டு வர்ற தேங்காயில பாதி எனக்குத் தரணும்"னு. அவனும் ஒத்துக்கறான். அப்படி அவன் ஒவ்வொருத்தருக்கும் இருக்குறதுல பாதியா ஒவ்வொரு வேலியிலயும் குடுத்துட்டு வெளில வரும்போது, கையில ஒரே ஒரு தேங்காய் இருக்குது. அப்ப, அவன் மொத்தமாப் பறிச்ச தேங்காய்க எவ்வளவு?
குறிப்பு: உங்க விடைய பின்னூட்டத்துல பதியுங்க.
மவனே, இது எனக்கு ரொம்பப் பிடிச்சு இருக்கு. இப்பத்தான் நண்பர் அனுப்புனாரு. காலத்துக்கு ஏத்த, நெஞ்சைத் தொடுற பாட்டு:
தன்னை வியந்து தருக்கலும்தாழ்வின்றிக் கொண்ணே வெகுளி பெருக்கலும்
முன்னைப் பழம்பொருள் வெஃகும் சிறுமையும்
தன்னை அழிக்கும் படை!
பொருளுரை: பழமை என்ற பெயரில் முன்னோர்களது உழைப்பையும் அதன் பயனான அறிவையும் புறக்கணிப்பது, நுனிக்கிளையில் அமர்ந்து அடி மரத்தை வெட்டும் மூடத்தனமான செயல்.
கெராமத்துல பெரியவங்க சொல்லுவாங்க,
"சாரோலையப் பாத்து குருத்தோலை சிரிக்கப்படாது"ன்னு.