6/12/2008

தெரிந்ததில் சில - 1

கிளி வாங்கப்போய்...

அம்மா தன் குழந்தைகளுக்கு ஒரு கிளி வாங்கித் தர நினைச்சா. கிளி விக்கறவனைப் பார்த்துக் கேட்டா,"ஏம்ப்பா இந்தக் கிளி சத்தம் போடுமா?"

"போடாதும்மா. சாதுவான கிளி"

"மரியாதை இல்லாம பேசுமா?"

"பேசாதும்மா. நல்ல கிளி. அதோட இடது கால்ல கட்டியிருக்கற நூலைப் புடிச்சு லேசா இழுத்தீங்கன்னா, ஒரு குறள் சொல்லும். வலது கால்ல கட்டியிருக்கற நூலை இழுத்தீங்கன்னா, ஒரு ஆத்திச்சூடி சொல்லும்"

"ரெண்டையும் புடிச்சு இழுத்தா?"

"கீழ வுழுந்துருவேண்டி, நாசமாப்போன பன்னாடை!"ன்னு கத்துச்சு கிளி.

குழிப்பந்து(கோல்ஃப்) விளயாடப்போய்...

ஒருத்தர் குழிப்பந்து விளயாட்ட கத்துக்க வந்து இருந்தாரு. அவுரு பந்த அடிச்சாரு. அடிகோல் எறும்புப் புத்து மேல போய் விழுந்து, கொஞ்ச எறும்புக செத்து போயிருச்சு. மறுபடியும் முயற்சி செஞ்சாரு.இந்த தடவயும் கொஞ்ச நெறயவே எறும்புக செத்துப் போச்சு. எறும்புகளோட தலைவன் சொன்னான், "எல்லாரும் ஓடிப் போய் அடிபடாத எடமாப்போய் நின்னுக்குங்க"னு.

உடனே, எல்லா எறும்புகளும் ஓடிப்போயி குழிப்பந்து மேல நின்னுகிச்சு.

No comments: