4/01/2022

உக்ரைன் போர் 36ஆம் நாள்

 


தலைநகர் கீய்வ் பகுதிக்கு அருகில் இருந்த இரஷ்யப் படைகள் தற்போதைக்கு பின்வாங்கிக் கொண்டன. அப்படைகள் நாட்டின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்கு அனுப்பப்படலாம், அல்லது எரிபொருள் நிரப்பிக் கொண்டு மீண்டும் முற்படலாமென்கின்றன செய்திகள்.

சில நகரங்கள் தொடர் வான்வெளித் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன. தரைவழி நகர்தலில் இரு தரப்புக்கும் எந்தவொரு குறிப்பிடத்தகுந்த முன்னேற்றமும் இல்லை. இருவாரங்களுக்கு முன்பிருந்த நிலையேதான் தொடர்கின்றது.

போர் முடிவுக்கு வரும் அறிகுறி கண்ணுக்கெட்டிய தொலைவில் இல்லை. இரஷ்யாவுக்குக் கணிசமான வெற்றி, குறைந்தபட்சம் டான்பாஸ், லுகான்ஸ்க் மாநிலங்கள் பிடிபடும் வரையிலும் தொடருமென்றே எதிர்பார்க்கலாம். பிடிபட்ட பின்னர், கிழக்குப் பகுதிகளை(பெருவாரியாக இரஷ்யமக்கள் வாழும் பகுதிகள்) விடுவித்தது வெற்றியெனும் அளவில் பிரச்சினை முடிவுக்கு வரலாம்.

இரஷ்யாவின் நாணயம் போருக்கு முன்பிருந்த மதிப்பினைக் கிட்டத்தட்ட மீட்டெடுத்துக் கொண்டது. இரஷ்யாவின் 650 பில்லியன் டாலர் தங்கம் இருக்கும் வரையிலும் நாணய மதிப்புக்குப் பெரிதாகப் பாதிப்பு வராது என்பது பொதுப்பார்வையாக இருக்கின்றது. https://www.reuters.com/business/finance/sanctions-savaged-russia-teeters-brink-historic-default-2022-03-16/

எல்லைக்கருகில் இருக்கும் இரஷ்யநகர் ஒன்றில் இருக்கும் பெட்ரோல் கிடங்குகளை உக்ரைன் ஹெலிஹாப்டர்கள் தாக்கி அழித்ததாக இரஷ்யா சொல்கின்றது. உக்ரைன் மறுக்கவும் இல்லை; ஏற்கவும் இல்லை. உண்மையாக இருக்குமேயானால்,  உலகப்போருக்குப் பின்னர் இரஷ்யா தாக்கப்படுவது இதுவே முதன்முறை. https://www.aljazeera.com/news/2022/3/31/russian-troops-leave-chernobyl-nuclear-power-plant-ukraine-says-liveblog

உக்ரைன் அதிபரை இரஷ்யாவால் நெருங்க முடியவில்லையா அல்லது வேண்டுமென்றே விட்டு வைத்திருக்கின்றதா? பெரிய தலைவராகக் கட்டமைத்து, பின்னர் அவரை சரணடையச் செய்வதன் மூலம் தன் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்வதாக இருக்கலாமென்கின்றார் ஐநா முன்னாள் அலுவலர் ஸ்காட் ரிக்.

No comments: