4/03/2022

41ஆவது நாளில் உக்ரைன் போர்

 

மேற்குப் பகுதியிலிருந்து பின்வாங்குகின்றோமென சென்ற வாரத்தில் இரஷ்யா அறிவித்திருந்தது. அதற்கேற்ப, படிப்படியாக மேற்குப் பகுதியில் எல்லாப் பகுதிகளும் உக்ரைன் வசம் வந்துவிட்டன. பின் வாங்கியதற்கு என்ன காரணம்? இருவேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. முதலாவது, இது வரையிலும் இரஷ்யத் தரப்பில் காயம்பட்டோர், உயிரிழந்தோர், பிடிபட்டோரென 45 ஆயிரம் பேர் வரையிலும் இருக்குமெனச் சொல்லப்படுகின்றது. இவர்களுள் உயிரிழந்த முன்னணித் தளபதிகள் 15 பேர். ஆக அனுப்பப்பட்ட ஒரு இலட்சத்து 90 ஆயிரம் பேர்கள் என்பது ஒரு இலட்சத்து 45 ஆயிரம் என்றாகி விட்டது. அடுத்தது, கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிதான் இரஷ்யாவுக்குத் தேவையான நிலம், தன் கப்பற்போக்குவரத்துக்கான நிலம். ஆகவே, இங்கிருக்கும் படையினரையும் கிழக்கில் குவித்து அந்தப் பகுதியை மட்டும் பிடிப்பதென்பதான நோக்கமாக இருக்கலாம்.

பொதுவாக நிலத்தைப் பிடிப்பது எளிது. ஆனால் நிர்வகிப்பது கடினம் என்பது பொதுவழக்கு. வரலாற்றுப் பார்வையில், ஆப்கானிஸ்தான், வியட்நாம், ஈராக் எனப் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. insurgency: a condition of revolt against a government that is less than an organized revolution and that is not recognized as belligerency. 41 நாட்கள் ஆகியும் மேரியுபோல் எனும் நகரை வீழ்த்த முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால் ஒரு நகரும் முற்றாக வீழ்ந்துவிடவில்லை. காரணம், அங்கிருக்கும் பெருவாரியான பொதுமக்களும் எதிர்ப்பாக இருப்பதுதான். 

கிழக்குப் பகுதியைக் கைப்பற்றிக் கொண்டாலும் கூட, தொடர்ந்து நிர்வகிக்க முடியாதென்பதே மேற்குலகப் பார்வையாக இருக்கின்றது. எடுத்துக்காட்டாக, கஷ்மீரை எடுத்துக் கொள்வோம். 1947இல் இருந்தேவும் பிணக்குகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. 2021ஆம் ஆண்டினைப் பொறுத்த மட்டிலும், “This year total 355 people were killed, among them 49 were civilians, 178 armed rebels (militants), and 128 Indian occupying forces,” the APHC stated in its annual report, adding that 484 people were injured. இது பாகிஸ்தான் தரப்புச் செய்தி.  At least 182 militants, 43 security men and 34 civilians were killed in militancy violence in Jammu and Kashmir in 2021. இது அரசு தரப்பு. கஷ்மீரில் 9 இலட்சம் இராணுவ வீரர்கள் இருப்பதாகச் சொல்கின்றார் பாகிஷ்தான் பிரதமர்.  சீன எல்லையில் மட்டுமே 2 இலட்சம் வீரர்கள் இருப்பதாக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு செய்தபடியினாலே குறைந்தது ஆக மொத்தம் 3 இலட்சம் வீரர்கள் இருப்பதாக நாம் எண்ணிக் கொள்ளலாம். இதற்கெல்லாம் பெரும் செலவாகும். இந்தியா பெரிய நாடு, இத்தனை வீரர்களை ஒதுக்க முடியும். இரஷ்யாவால் முடியுமா?

உக்ரைனைச் சுற்றிலும் நேட்டோ நாடுகள். ஆயுத சப்ளை இருந்து கொண்டேவும் இருக்கும். அப்படியாகப்பட்ட இன்சர்ஜன்சியை இரஷ்யாவால் எதிர்கொள்வது சவாலாகவே இருக்கும் என்கின்றார் ஆய்வியலாளர் ஜெனிஃபர் காஃப்ரல்லா.

https://www.thedefensepost.com/2022/03/15/ukraine-insurgency-russia/

https://zeenews.india.com/india/with-eye-on-china-india-shifts-50000-additional-troops-to-border-in-historic-move-report-2372351.html

https://www.newindianexpress.com/nation/2022/jan/01/182-militants-killed-in-jammu--kashmir-in-2021-dgp-dilbagh-singh-2401887.html


No comments: