4/19/2022

56ஆவது நாளில் உக்ரைன் போர்

 


இரஷ்யாவின் பார்வையில்:

1. எல்லாம் திட்டமிட்டபடி போய்க்கொண்டிருக்கின்றது. மேற்குலக நாடுகளின் பொருளாதாரத் தடையினால் இரஷ்யாவை ஒன்றும் செய்துவிட முடியவில்லை. மக்களின் இயல்பு வாழ்க்கை வழமைபோலவே இயங்கிக் கொண்டிருக்கின்றது.

2. கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளைப் பிடித்தாயிற்று. இன்னும் எஞ்சியிருக்கின்ற கிழக்குப் பகுதிகளையும், நாஜிக்களிடமிருந்து விடுவித்து விட்டால் முழுவெற்றி. மே 9ஆம் நாளுக்குள் அவையும் இரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்.

3. உக்ரைனின் 1200 இராணுவக் கட்டமைப்புத் தளங்களை முற்றிலுமாக அழித்தொழித்தாயிற்று.

4. இரஷ்யாவின் பெட்ரோல்/எரிவாயு இல்லாமல் ஐரோப்பிய நாடுகளால் இயங்க முடியாதென்பதையும் நிரூபித்தாயிற்று.

மேற்குலக நாடுகளின் பார்வையில்:

1. இரஷ்யாவால் உக்ரைனைக் குறிப்பிட்ட 4 நாட்களுக்குள் கைப்பற்ற முடியவில்லை.

2. 50 ஆயிரம் இராணுவத்தினர் உயிரிழப்பு மற்றும் காயங்களுக்கு ஆட்பட்டிருக்கின்றனர். கப்பல்கள் பறிபோனதில், இரஷ்யத் தரப்பின் நேவி முற்றிலுமாகப் போரில் இருந்து ஒதுங்கிக் கொண்டது.

3.முன்னேறவிட்டுப் பின் சுற்றி வளைப்பதன் மூலம் பல பகுதிகள் மீண்டும் உக்ரைன் வசம் வந்திருக்கின்றன. அதனால் இரஷ்யாவின் தளபாடங்கள் உக்ரைன் வசம் வந்து கொண்டிருக்கின்றன.

4.பொருளாதாரத் தடையினால் 5 இலட்சம் பேர் இரஷ்யாவை விட்டு வெளியேறி இருக்கின்றனர். மே மாதம் முதல்வாரத்தில் நாடு திவாலானதாக அறிவிக்கும் சூழல் ஏற்படலாம்.

5. இரஷ்யாவின் மீதான தடைகள் நீண்டகாலத்துக்கும் நீடிக்கும். அதனால் நாடு முன்னெப்போதுமில்லாத அளவுக்கு பின்னடைவுகளைச் சந்திக்கும். தன் வசமுள்ள இராணுவத் தளபாடங்களைச் சீர்திருத்தக் கூட வழியில்லாமல் போகும். எல்லாமும் தளபாடங்களின் இருப்பு இருக்கும் வரையிலும்தான்.


No comments: