7/14/2022

மழைத்தூரல்

மழைக்காலம், நிறைய சாலை விபத்துகள், மரணங்கள் பற்றிய செய்திகள். கவனக்குறைவும் புரிதற்குறைவும் மேலோங்கி இருப்பதுதான் காரணம்.

1. எந்த நேரத்திலும் வெளிச்சமின்மை(இன்விசிபிலிட்டி) ஏற்படலாம். முகில்கள் நகர்ந்த வண்ணமே இருக்கும். திடீரெனக் கார்முகில் வரக்கூடும். அப்படி இடைப்படும் போது இருள்குவியும். நமக்கான பார்வையின் தூரம் குறையக் கூடும். ஆகவே, நல்ல சூரிய வெளிச்சமிருந்தாலும் ஹெட்லைட் போட்டுக் கொள்ள வேண்டும்.

2. சாலையில் நுண்ணிய தகடு போன்ற நீர்ப்படலம் இருந்து கொண்டே இருக்கும். ஒருதுளி டீசல்/ பெட்ரோல்/ லுபிரிகண்ட் ஆயில் போன்ற எண்ணெய்த் துளிகள் கலக்கும் போது வழுக்க நேரிடும்.

3. ஆங்காங்கே நீர் தேங்கும் போது, நீர்ப்பாலம்(hydroplaning) தோன்றி விடும். அதாவது வண்டியின் டயருக்கும் நிலத்துக்கும் இடையே கனமான நீர்ப்பாளம்(layer) இருக்கும். வேகமாகச் செல்லும் போது, டயருக்கும் நிலத்துக்குமான உராய்வு இல்லாமலே போய்விடும். வண்டியின் வளைவு, வேகம், பிரேக் என்பதெல்லாவற்றுக்கும் இந்த உராய்வுதான் அடிப்படை. அதுவே இல்லாதபோது, கட்டுப்பாடின்றிப் பயணிப்பதும் இடம் பெற்று விடுகின்றது. 

4.குறைவான வேகத்தில் செல்லும் போது, நீரை அடித்து விலக்குவதற்கான கால அவகாசம் டயர்களுக்கு ஏற்படுகின்றன. எனவே நிலைத்தன்மை ஏற்படும்.

5. கானல்நீர் கண்களைப் பறிக்கும். மினுமினுப்புகள் கவனத்தைச் சிதறடிக்கும். ஆகவே போதிய இடைவெளியுடன் பயணிப்பது அவசியம்.

Overall you want to be extra cautious in wet weather. Slow down, avoid hard braking or turning sharply and allow ample stopping distance between you and the cars in front of you.


2 comments: