7/30/2011

இஃகி இஃகி - 1

கோடி
விண்மீன்கள்
ஒன்று கூடி
நின்றாலும்
ஒரு கதிரவன்
ஆக இயலாது!

#அமெரிக்க வெள்ளி

--------------------

புதைத்த குழந்தைக்காய்
அழுகின்றார்
பெற்றோர்!

புதைத்த
கூலிக்காய்
அழுகின்றான்
வெட்டியான்!!

இடையில்
புகுந்து
ஆட்டையைப்
போட்டது
எவரோ?!

#அரசியல்

-----------------------

கங்கையில்
மூழ்காமலே
கோட்டான்
அன்னமானது

இருந்த
காகம்
இறைத்தன
பொறுக்கப் போய்விட்டதால்!!

#வாசகர் சிந்தனைக்கு

----------------------------

புயலிடம்
ஓங்கி வளர்ந்த
மரங்களுக்கு அச்சம்!

தரைப்புல்லுக்கு
ஒருபோதும்
அச்சமென்பது
கிடையாதே!!

#திமுக தொண்டன்

----------------------------
முடியாது
என்பதும்
இயலாது
என்பதும்
வேறு வேறு!
ஒத்தன அல்ல!!

#தமிழ்

5 comments:

vasu balaji said...

/புயலிடம்
ஓங்கி வளர்ந்த
மரங்களுக்கு அச்சம்!

தரைப்புல்லுக்கு
ஒருபோதும்
அச்சமென்பது
கிடையாதே!!
/

அருமை.

சத்ரியன் said...

மணியண்ணே,

திமுக தொண்டனும், தமிழும்... அருமை.

ஓலை said...

Arumai pazamai.

Varik kavithaigal - nasar style ....

jalli said...

kongu 24 naadu padiththean.avinashi
thaan aarainaadu.matrapadi niraya home work seithullirkal.pothuvaa udumalai pollachi makkalukku kongukoottankal patri piddippuirukkathu.anaal unkalukku ullathu.appichi ooril valarnthathaal koota irukkkalam.thotarattum unkal eluththu pani.

இராஜராஜேஸ்வரி said...

rஅருமையான தொகுப்பு. பாராட்டுக்கள்.