7/10/2011

சினேகம்


கியான் கியான் குருவி நான்
கியான் கியான்க்கோ
கியான் கியான் குருவி நான்
கியான் கியான்க்கோ

நெல்லி மரமே நெல்லி மரமே
குஞ்சுக் குருவிக்கு
மாரிக்காலத்து கூடுகட்ட
இடம் தராயோ நீ?

நான் தரலை நான் தரலை
குஞ்சுக் குருவிக்கு
மாரிக்காலத்துக்கு கூடுகட்ட
இடம் தரலை நான்

கியான் கியான் குருவி நான்
கியான் கியான்க்கோ
கியான் கியான் குருவி நான்
கியான் கியான்க்கோ

தேக்கு மரமே தேக்கு மரமே
குஞ்சுக் குருவிக்கு
மாரிக்காலத்து கூடுகட்ட
இடம் தராயோ நீ?

நான் தரலை நான் தரலை
குஞ்சுக் குருவிக்கு
மாரிக்காலத்துக்கு கூடுகட்ட
இடம் தரலை நான்

கியான் கியான் குருவி நான்
கியான் கியான்க்கோ
கியான் கியான் குருவி நான்
கியான் கியான்க்கோ

பலா மரமே பலா மரமே
குஞ்சுக் குருவிக்கு
மாரிக்காலத்து கூடுகட்ட
இடம் தராயோ நீ?

நான் தரலை நான் தரலை
குஞ்சுக் குருவிக்கு
மாரிக்காலத்து கூடுகட்ட
இடம் தரலை நான்

கியான் கியான் குருவி நான்
கியான் கியான்க்கோ
கியான் கியான் குருவி நான்
கியான் கியான்க்கோ

வாழை மரமே வாழை மரமே
குஞ்சுக் குருவிக்கு
மாரிக்காலத்து கூடுகட்ட
இடம் தராயோ நீ?

நான் தருகிறேன் நான் தருகிறேன்
குஞ்சுக் குருவிக்கு
மாரிக்காலத்து கூடுகட்ட
இடம் தருகிறேன் நான்

காற்றும் வந்து இடியும் இடித்து
மழையும் பெயததே
அய்யோ பாவம் நெல்லி மரம்
முறிந்து வீழ்ந்ததோ

காற்றும் வந்து இடியும் இடித்து
மழையும் பெயததே
அய்யோ பாவம் தேக்கு மரமும்
முறிந்து வீழ்ந்ததோ

காற்றும் வந்து இடியும் இடித்து
மழையும் பெயததே
அய்யோ பாவம் பலா மரமும்
முறிந்து வீழ்ந்ததோ

காற்றும் போயி
இடியும் போயி
மழையும் போனதே
சினேகம் உள்ள வாழைமரத்தை
தெய்வம் காத்ததே!

சினேகம் உள்ள வாழைமரத்தை
தெய்வம் காத்ததே!!

தமிழாக்கம்: பழமைபேசி
பாடியது: திருமகள் பழமைபேசிக்காக, திருமதி பழமைபேசி.


2 comments:

இராஜராஜேஸ்வரி said...

சினேகம் உள்ள வாழைமரத்தை
தெய்வம் காத்ததே!!///

சினேகமுள்ள அருமையான பாட்டுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.

அரசூரான் said...

குடும்பத்தோட சினேகம் பாராட்டுதல் நடந்திருக்கு போல... அருமை.