7/01/2011

2011 பேரவைத் தமிழ் விழா - கோலாகலத் துவக்கம்

கடற்பரப்பில், ஒளிப்புனலில் கண்டேன்! அந்தச் சோலையிலே, மலர்களிலே, தளிர்கள் தம்மில், எங்கும் இன்புற்ற நினைவுகளைக் கண்டேன். ஆம், கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களுக்கு முன்னர், இதே சார்ல்சுடனுக்கு வந்திருந்தேன். 2011 பேரவைத் திருவிழாப் பணிகள் துவக்கவிழாவிற்கு வந்திருந்தேன். என்னே ஒரு இனிமையானதொரு நாள்?

அதே நினைவுகளொடு, டென்னசி மாகாணம் மெம்பிசு நகரில் இருந்து பேருவப்புடன் இன்றைய நாளில், அதே சார்ல்சுடனுக்கு வந்திருக்கிறேன். இடையிடையே, தமிழ் உறவுகளிடம் இருந்து அழைப்புகள். இப்படியாக, இதோ சார்ல்சுடன் நகருக்கு வந்திருக்கிறேன். கடந்த ஆண்டு கண்ட உறவுகளையும், புதிதாய்க் காணப் போகும் உறவுகளையும் காணப் பேரவலுடன் சார்ல்சுடன் மீனகத்திற்குள் அடியெடுத்து இன்னமும் இருப்பது முப்பதே மணித்துளிகள்தாம்.

இத்திருவிழாவினை நடத்துவதற்கு, தம் உழைப்பைக் கொடுத்தவர்கள் ஏராளம். ஒரு குடும்ப விழாவில் என்னென்ன கூறுகள் நிகழுமோ, அத்துனையும் இங்கே உண்டு. ஆழக்கடலில் முக்குளித்து முத்துக் கிடைத்தது போன்றதொரு உணர்வுதான் உழைத்தவர் அனைவருக்கும்.

நிகழ்ச்சிகளைத் தர இருக்கும் பல்வேறு தமிழ்ச்சங்கத்தினரையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். வர இருக்கும் மூன்று நாட்களிலும், பல்வேறு நிகழ்ச்சிகள், பேரின்பக் கூறுகள் இடம் பெறப் போகிறது. அண்மையில் இருக்கும் தமிழருக்கெலாம், இப்போதும் காலம் தாழ்ந்து விடவில்லை. இக்கணமே புறப்பட்டு வாருங்கள். விழாக் காணுவோம்! கொண்டாடுவோம்!!

விருந்தினர்க்கு வரவேற்பு அளிக்குமுகமாக, மாலை விருந்து நடக்கப் போகும் சார்ல்சுடன் மீனக வளாகத்தில் இருந்து,

பணிவுடன்,
பழமைபேசி.

2 comments:

சத்ரியன் said...

மாண்புமிகு மணி அவர்களின்,

நேரடி வர்ணனைத் துவங்கிவிட்டது.... வாருங்கள் மக்காஸ்! வந்து படித்து மகிழுங்கள்!

Rathnavel Natarajan said...

வாழ்த்துக்கள்.