7/02/2011

முதல் நாள் நிகழ்ச்சிக்கான ஆயத்தம்

சார்ல்சுடன் நகரில் இருக்கும் விடுதிகள் எங்கும் தமிழ்க் குரல்! வழமைக்கு மாறாக, நிறைய ஈழத்தமிழ் தேனாக வந்து பாய்கிறது காதுகளில். காலை ஆறு மணி தொடக்கம், பல விடுதிகளில் பல நண்பினரைச் சந்திக்கும் பொருட்டு போய் வந்திருக்கிறேன். மிக ஆவலாய் எழுந்து ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள் அனைவரும்.

வெளியே, நீலக்கடல் வெளி அம்சமாய்க் காட்சி அளிக்கிறது. காலை நேரக் காற்று வருடிச் செல்கிறது. தமிழ்க்கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. பனைநில தமிழ்ச் சங்கத்தாரோ தேனீக்களாய் இங்குமங்கும்.

அரங்கம் வடிவாய் அழகுறப்பட்டுக் காட்சியளிக்கிறது. இன்னும் பத்து மணித் துளிகளுக்குள், மங்கல இசை முழங்க, 2011 பேரவைத் தமிழ்த் திருவிழா, மேலைப்பெருமழைப் புலவர் பொ.வெ.சோமசுந்தரனார் நூற்றாண்டு விழாவாக எழுச்சி கொள்ளக் காத்திருக்கிறது.

சங்கே முழங்கு சங்கே முழங்கு
சங்கே முழங்கு சங்கே முழங்கு

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு சங்கே முழங்கு
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு


-- விழா அரங்கத்தில் இருந்து உங்கள் பழமைபேசி.

1 comment:

vasu balaji said...

அசத்துங்க வாழ்த்துகள்.