9/25/2009

அழைப்பு: Washington DC'யில் பதிவர் கூடல்!


மக்கா, அமெரிக்கத் தலைநகரிலே பொன்மாலைப் பொழுது! இந்தியக் குழந்தைகள் நல நிதிக்கான ஒரு தமிழ் விழா!! நமக்கும் ஒரு அழைப்பு!!!

AIMS India Foundation வழங்கும் பொன்மாலைப் பொழுது! 5.30 to 9.30pm. South Lakes High School, 11400 South Lakes Drive, Reston, VA – 20191. மேலதிகத் தகவலுக்கு: http://www.mydonations.com/aimsindia


Dear Members of AIMS,

AIMS India Foundation is plannig for a fund raiser music concert on Saturday Sep 26th, 2009 in Virginia. This is a live orchestra with the talented people in the Washington DC Metro area. The funds raised from this concert will be used for our ongoing educational programs in India. Around 5000 village kids are benefiting from our educational program each year. We are in the 8th year now and your support has helped our people in India and motivated us to successfully run this organization all these years. Please come for the concert and donate generously and help us help our kids in India.


Thank You


Vasu
President


=====================================


தமிழ் இலக்கிய ஆய்வுக் கூட்டம்

வரும் ஞாயிற்றுகிழமை, செப்டம்பர் 27, 2009 அன்று நடைபெறவிருக்கும் கூட்டத்தில் நாம் ஆய்வு செய்யத் திட்டமிட்டுள்ள புறநானூற்றுப் பாடல்களில் (102, 103, 104, 105, 106, 107) உள்ள அருஞ்சொற்களுக்குப் பொருள் அடங்கிய கோப்பு இந்தத் தொடுப்பில் உள்ளது.


அன்புடன்,
பிரபாகரன்


=====================================

மக்கா நான், வட கரோலைனால இருந்து உங்களை எல்லாம் பார்க்க வாறேன். சித்த நீங்களும் ஊட்லயே இருக்காமக் கொள்ளாம நிகழ்ச்சிகளுக்கு வாங்க! அங்க சந்திப்போம். என்ன நாஞ்சொல்றது?

போற்றுமின், மறவீர் ! சாற்றுதும், நும்மை;
ஊர்க்குறு மாக்கள் ஆடக் கலங்கும்
தாள்படு சின்னீர் களிறு அட்டு வீழ்க்கும்
ஈர்ப்புடைக் கராஅத்து அன்ன என்ஐ
நுண்பல் கருமம் நினையாது,
‘இளையன்’ என்று இகழின், பெறல் அரிது, ஆடே!

யானையை முதலை வெல்லுமா? அதெப்படி?? இளையன் என்று இகழின் பெறல் அரிது ஆடே(வெற்றி)! என்னதான் நம்ம பெரியவங்க சொல்லி வெச்சு இருக்காங்க... வாங்க தெரிஞ்சுகுவோம்! என்னோட அலைபேசி எண்: 980 322 7370.

Washington D.Cல இருக்குற, அந்த பகுதியில இருக்கிற நண்பர்களே, இந்த அரைவேக்காடு அந்த பக்கமா வரப் போறேன். சித்த முடிஞ்சா வாங்க, சந்திப்போம்!!

12 comments:

vasu balaji said...

அசத்திட்டு வாங்க.

க.பாலாசி said...

//குழந்தைகள் நல நிதிக்கான ஒரு தமிழ் விழா//

நல்ல நிகழ்ச்சி....சிறப்பிக்க வாழ்த்துக்கள்...

ஆரூரன் விசுவநாதன் said...

ம்ம்....கலக்குங்க.......


வாழ்த்துக்கள்

அன்புடன்
ஆரூரன்

ILA (a) இளா said...

konjam munnamE sollakoodathaa?

ஈரோடு கதிர் said...

கலக்கிட்டு வந்து ஒரு இடுகை போடுங்க மாப்பு

இராகவன் நைஜிரியா said...

தங்கள் பயணம் இனிதாக அமையவும், நண்பர்களை சந்திக்கவும் வாழ்த்துகள்

ப்ரியமுடன் வசந்த் said...

பயணம் சிறக்க வாழ்த்துக்கள் சார்

பழமைபேசி said...

@@வானம்பாடிகள்
@@க.பாலாஜி
@@ஆரூரன் விசுவநாதன்
@@கதிர் - ஈரோடு
@@இராகவன் நைஜிரியா
@@பிரியமுடன்...வசந்த்

நன்றி மக்களே!

//ILA(@)இளா said...
konjam munnamE sollakoodathaa?
//

ஆமாங்க, கொஞ்சம் அப்படி இப்படி இருந்துச்சு...நேற்றைக்குதான் பயணம் இறுதியாச்சு...

அது சரி(18185106603874041862) said...

//
‘இளையன்’ என்று இகழின், பெறல் அரிது, ஆடே!
//

ஆஹா....செம பஞ்ச் லைன்...

அது சரி(18185106603874041862) said...

//
Around 5000 village kids are benefiting from our educational program each year
//

Education opens door not for one kid but for a whole generation....sometimes for a whole community!

Great thing....

நசரேயன் said...

சந்திப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்

எம்.எம்.அப்துல்லா said...

இந்தியாவுக்கு சீக்கிரம் வாண்ணே :)