7/08/2009

Fetna .. தமிழ்த் திருவிழாச் சிதறல்கள் - 2

வெறும்வெளியில இருந்து
தங்கச் சங்கிலி எடுத்தாரு!
வாயில இருந்து
லிங்கமெல்லாம்
எடுத்தாரு!
மண்டையச் சொரிஞ்சி
அதுல திருநீறு
எடுத்தாரு!


ஒன்னுமில்லாத வீட்ல
இருந்து தங்கப் பொதையல்
எடுத்தாரு!
வெத்துச் சொம்புக்குள்ள
இருந்து புள்ளையாரு
எடுத்தாரு!
உடைக்காத முட்டையில
இருந்து எலுமிச்சம்பழம்
எடுத்தாரு!

உரிக்காத தேங்காயில
மாங்கா கூட
எடுத்தாரு!
அந்த மாங்காக் கொட்டையில
காந்தி நோட்டு
எடுத்தாரு!


அடப் புள்ளையக்

குடுத்துபிட்டு ரூபாநோட்டு
எடுத்தாரு! ஆனா
அவரைப் பிணையில எடுக்க
யாருமில்லையே?
அய்யோபாவம்
அவரைப் பிணையில எடுக்க
யாரும் இல்லையே??



திருக்குவளை இருக்கு! ஆமா,
இருகுவளையா இருக்கு!!


இலக்கிய வட்டச் சொற்பொழிவில் கவிஞர் செயபாசுகரன்.

(விழா பற்றிய முந்தைய இடுகைகளுக்கு, தமிழ்விழா(Fetna) எனும் வகைப்பாட்டுச்(label) சுட்டியைச் சொடுக்கவும்!)

3 comments:

அப்பாவி முரு said...

//திருக்குவளை இருக்கு//

இதேதும் உள்குத்து இருக்கா?

"உழவன்" "Uzhavan" said...

போலிகளின் நிலைமை இதுதான். அருமை.

தீப்பெட்டி said...

நன்றி..
:)