3/07/2011

காங் - திமுக கூட்டணி தொடர்கிறது!!

தில்லியில் இருக்கும் நமது தமிழ் வலைஞர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நம்மிடம் பகர்ந்து கொண்ட பின் தேதியிட்ட தகவல் கீழே வருமாறு:

நாடு பெரும் சவால்களைச் சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில், நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும், மதவாத சக்திகளை வேரோடு முறியடித்து நெருக்கடிகளைக் களையும் பொருட்டும் பேராயக் கட்சி(காங்கிரசு) மற்றும் ஆளும் கட்சிக் கூட்டணியைத் தொடர்வது என முடிவு செய்திருக்கிறார்கள். முறிந்தது கூட்டணி எனக் கொண்டாடியவர்கள், கொண்டாட்டங்களை நிறுத்தி புலம்பல்களைத் துவங்க இதுவே சரியான தருணம் எனவும் தெரிவிக்கிறார். துப்பிய பாக்குத் தூளை? அவ்வ்வ்.....

16 comments:

நிகழ்காலத்தில்... said...

//இனி காங்கிரசில் இருந்து யாராவது சிவகங்கை சின்னபையன்கள் பேச்சு வார்த்தைக்கு வரலாம். எதுவும் நடக்கலாம்.முள்ளும் மலரும் கிளைமாக்ஸ் போல கூட இருக்கலாம். ஆனால் தலைவரே எங்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தாயே அது போதும் தலைவா.//

நீங்க இப்படி சொல்லுவீங்கன்னுதான் நாங்களும் இப்படி சொல்லி வச்சுஇருக்கோம்.. அவ்வ்வ்வ்

பழமைபேசி said...

@@நிகழ்காலத்தில்...

பங்காளி, அல்லாரும் ஒரு உசாரோடத்தான் இருக்கீங்கன்னு சொல்லுங்க...

வருண் said...

முறிவுனு பதிவு எழுதும்போதே எல்லாருக்கும் அது "பொய்"னு தெரியும்! :)))

பழமைபேசி said...

//அபி அப்பா has left a new comment on your post "காங் - திமுக கூட்டணி தொடர்கிறது!!":

அன்பு பழமைபேசி அய்யா! நீங்கள் இப்படி ஒரு பதிவு போட்டிருப்பதாக என் நண்பன் பாண்டிச்சேரியில் இருந்து போன் மூலமாக படித்து சொன்னவுடன் பதில் போட அவசரமாக வீட்டுக்கு வந்தேன். ஆனால் என் வேலையை நண்பர் நிகழ்காலத்தில் மிகச்சுலபமாக ஆக்கியிருக்கின்றார்.காங்கிரஸ் ஆடிய ஆட்டம் ரொம்பவே திமுக தொண்டர்களை பாதித்தது. கூட்டனி தர்மம் என்பது ஒருபக்கம் மட்டும் தானா என்கிற ஒரு சராசரிக்கும் மேலான கோவத்தின் வெளிப்பாடாக ஒரு வாரத்துக்கும் மேலாக 89க்கு பின்னே வருமே அந்த 90 ஆ என்கிற தலைப்பில் கூடத்தான் காங்கிரசை கடுமையாக சாடியிருந்தேன். அதே போல பல்லிடுக்கில் சிக்கிய பாக்குத்தூளும் அதை விட அதிகமான கோபத்தில் எழுதப்பட்டது தான். ஆனால் இப்போது கூட்டனி திரும்பவும் முடிவாகிவிட்டதா என்பது சரியாக தெரியாத பட்சத்தில் துப்பிய பாக்குத்தூளை திரும்பவும் எடுத்து வாயிலா போட்டுக்கொள்ள முடியும்? தான் கக்கியதை தானே நக்கும் நாய்க்கும் திமுக தொண்டனுக்கும் வித்யாசம் இருக்கின்றது பழமைபேசி அய்யா. அவர்கள் திரும்பவும் வந்து எங்களிடம் சேரவேண்டும் என்கிற ஆவல் ஒரு சதம் கூட எங்கள் தொண்டர்களிடம் இல்லவே இல்லை. எங்கள் உணர்வுக்கு மதிப்பளித்து திமுக உயர்நிலை செயல்திட்ட குழுவில் தலைவர் எடுத்த முடிவு எங்களுக்கு போதுமானது என்கிற அளவில் திருப்தி கொள்ள வேண்டியது தான். இந்த இரண்டு நாளில் காங்கிரஸ்காரன் தூக்கத்தை கெடுத்த திருப்தியில் இருக்க வேண்டியது தான். வேறு என்ன செய்ய முடியும் சொல்லுங்கள். திரும்பவும் சொல்கின்றேன் முள்ளும் மலரும் கிளைமாக்ஸ் ஞாபகப்படுத்தி பார்த்து கொள்ளுங்கள்.
//

அண்ணே, உங்களைப் போன்ற உண்மை விசுவாசிகளின் நலன் கருத்தில் கொள்ளுற மாதிரி இருந்தா நானும் மகிழ்ச்சி அடைவேன்.

Chitra said...

தேர்தல் வரும் வரை, என்ன என்ன கூத்தெல்லாம் அரசியலில் நடக்க போகுதோ?

ஓலை said...

பழமை! ஏதாவது எழுதலாம்னு நினைச்சேன். இங்கு நிறைய தீவிர ஆதரவாளர்கள் ஒன்று சேர்ந்திருப்பதால், பேசாம வேடிக்கைப் பார்கிறேன் பழமை.

ramalingam said...

இந்த பிரணாப் ஒரு நல்ல காரியம் நடக்கவே விட மாட்டாரா?

மதுரை சரவணன் said...

nallaa thodarumm...

ராஜ நடராஜன் said...

துப்பிய பாக்குத்தூளுக்கு இஃகிகீ சொல்லலாமுன்னுதான் வந்தே.அபி அப்பாவின் உணர்வு பூர்வமான பின்னூட்டம் அதை தடுத்து விட்டது.

ராஜ நடராஜன் said...

பழமைண்ணா பாட்டு கேளுங்க:)

http://pazhankanji.blogspot.com/2011/02/blog-post_06.html

உடன்பிறப்பு said...

ஹி..ஹி...

தாராபுரத்தான் said...

அடி..ப்...

பெருசு said...

// துப்பிய பாக்குத் தூள் // ஒரு காலத்தில் பேராசிரியர் உதிர்த்த வார்த்தையின் மரூஉ. (உதிர்ந்த மயிர்) அண்ணன் நாஞ்சில் மனோகரன் எழுதிய கருவின் குற்ற்ம் கவிதை நினைவுக்கு வந்தால் நான் பொருப்பல்ல.

பெருசு said...

// துப்பிய பாக்குத் தூள் // ஒரு காலத்தில் பேராசிரியர் உதிர்த்த வார்த்தையின் மரூஉ. (உதிர்ந்த மயிர்) அண்ணன் நாஞ்சில் மனோகரன் எழுதிய கருவின் குற்ற்ம் கவிதை நினைவுக்கு வந்தால் நான் பொருப்பல்ல.

குறும்பன் said...

இன்றைய தினமணி செய்தியின் படி திமுக - 121, காங்கிரஸ் - 63, பாமக - 30 (ஒன்னு காலியா), விடுதலைச் சிறுத்தைகள் - 10, கொங்குநாடு முன்னேற்றக் கழகம் - 7, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 2, மூவேந்தர் முன்னேற்றக் கழகம் - 1.

http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest%20News&artid=387581&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=

Mahesh said...

//நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும்//

நம்பரோம் சாமி நம்பரோம்... ஃம்ம்ம்ம்ம்ம்ம்ம்