2/04/2013

யாவரும் கேளிர்

சுவர்ப்பலகையில்
தான் வரைந்திருந்த
கோணல்மாணல் குலதேவதையை
அவள் வணங்கிக் கொண்டிருக்க
என்னடா செய்திட்டு இருக்க வினவலுக்கு
தங்கச்சிப் பாப்பா நல்லாயிருக்கணும்னு
கும்பிடுறன்ப்பா என்றதும்
தூக்கிவாரிப் போட்டது நமக்கு!
உனக்கேதடா தங்கச்சிப் பாப்பா?
மறுவினவலுக்குச் சொல்கிறாள்
எனக்கு சிறுசாயிடிச்சுன்னு
டொனேசன்ல போட்ட
பட்டுப் பாவாடையப் போடுற பாப்பா
எனக்குத் தங்கச்சிதானேப்பா?
அதான் அந்தப்பாப்பா நல்லாயிருக்கணும்னு
சாமிகிட்ட சொல்லிட்டு இருக்கேன்ப்பா!
மனம் மகிழ்ந்து நாசி திளைக்க
முகமறியா அக்குழந்தைமணம்
வீடெங்கும்!!

நன்றி: தென்றல்  

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

குழந்தை மனம் தெய்வீகம்...