7/10/2013

பசுங்கொழுந்து

பழுப்பிலைக்கு உயிரூட்டி
அதை உன் மகளாக்கி
கொஞ்சி மகிழ்ந்தவளே!
நீ வாரிக் கொஞ்சுகையில்
கொஞ்சமாயது கசங்கிவிட
நர்சுக்கு போனைப் போடு
சொல்லி அழுதவளே!!
பசுங்கொழுந்து வந்திருக்கும்
வேளை பார்த்துத்தானா,
என் பசுங்கொழுந்து வந்திருக்கும்
வேளை பார்த்துத்தானா
பாதகர் வந்து வெட்ட வேணும்
அந்த ரோட்டோர பூவரசனை?!


No comments: