2/27/2022

ஏர்லிஃப்ட்

யார் இந்த டொயொட்டோ சன்னி என்கின்ற மாத்துண்ணி மேத்யூஸ்? அப்படியென்ன உலகசாதனை? டொயொட்டோ சன்னி, கேரளாவில் இருக்கும் கும்பநாடு எனுமிடத்தில் 1936ஆம் ஆண்டு பிறந்தவர். தொழில்மயமாக்கலின் துவக்ககாலத்தில், 1956ஆம் ஆண்டு கப்பல்வழியாக வேலைதேடிக் குவைத் நாட்டுக்குப் போய்ச் சேர்ந்தார் இவர். பல வேலைகளைச் செய்து வந்த இவர் படிப்படியாக வளர்ந்து, டொயொட்டோ ஏஜன்சி ஒன்றில் 1989ஆம் ஆண்டு வரையிலும் பணிபுரிந்து வந்தவர்தாம் டொயொட்டோ சன்னி. கூடவே இந்தியர்களுக்கான பள்ளிக்கூடம், இந்தியர்நல சங்கங்கள் போன்றவற்றையும் நடத்தி வந்தார்.

1990 ஆகஸ்ட் 2ஆம் நாள், ஈராக் படைகள் குவைத் நாட்டினைக் கைப்பற்றிவிட, ஈராக்கின் 19ஆவது மாநிலமாக அறிவித்துக் கொண்டார் சதாம் உசேன். அங்கிருந்த இந்தியர்கள் பதற்றம் கொள்ளத் துவங்கினர். இந்தியா அரசும் கவலை கொள்ளத் துவங்கியது. உடனடியாக வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தர்குமார் குஜ்ராலை அனுப்பி வைத்தார் பிரதமர் வி.பி.சிங்.

புறப்பட்ட ஐகே குஜ்ரால் குவைத் நாட்டிற்குச் செல்லவில்லை. மாறாக, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜேம்ஸ் பேக்கரைச் சந்தித்து அமைதியான முறையில், ஈராக் வெளியேறுவதற்கான வேலைகளுக்குத் தாம் பொறுப்பேற்றுக் கொண்டால் மட்டுமே அங்கிருக்கும் இந்தியர்களின் நலம் பாதுகாக்கப்படும். அல்லது, அவர்களை நாட்டுக்குத் திரும்ப அழைத்துக் கொள்ள ஒத்துழைக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். ஐநா சபை மூலமாகத் தீர்த்துக்கொள்வதற்கு அமெரிக்கா சம்மதிப்பதாகக் கூறினார் பேக்கர். உடனடியாக சவூதி அரேபியாவில் இருந்த அரசகுடும்பத்தைச் சந்தித்து ஒப்புதல் வாங்கிக் கொண்டார் குஜரால். அன்று மாலையே பாக்தாத் சென்றவர், ஈராக் அமைச்சர் தாரிக் அஜீஸைச் சந்தித்து, மறுநாள் காலை சதாம் உசேனோடு சந்திப்பு.

விமானப்படை விமானங்களை குவைத்துக்கு அனுப்பி, நாட்டுமக்களை அழைத்துக் கொண்டுவருவதென முடிவு செய்யப்பட்டு ஐநா சபையிடம் ஒப்புதல் கோரியது இந்திய அரசு. குவைத், ஈராக் உள்ளிட்ட வான்வழித்தடம் மூடப்பட்டிருப்பதால் எவ்வித விமானங்களும் இயங்குவதற்கு அனுமதியில்லை, ஆனால், ஜோர்டான் தலைநகரான அம்மானில் அனுமதிக்கலாமென முடிவு செய்யப்பட்டது. குவைத்துக்கும் அம்மானுக்குமிடையேயான போக்குவரத்துக்கான பேருந்துகளைத் தாம் வழங்குவதாகச் சொன்னார் சதாம் உசேன்.

இங்குதாம் பிரச்சினை. குவைத்தில் பல பாகங்களிலும் இருந்தனர் இந்தியர்கள். அவர்களிடம் உரிய பாஸ்போர்ட்கள் இல்லை. எல்லாமும் எம்ப்ளாயர்களிடம் இருந்தன. நிறுவனங்கள் எல்லாம் மூடப்பட்டு விட்டனர். நிறுவன முதலாளிகள் அண்டை நாடுகளுக்குள் தஞ்சம் புகுந்தும் இருந்தனர். இங்குதான், நாயகர் டொயொட்டோ சன்னி வருகின்றார். உள்ளூர் ஒருங்கிணைப்பு வேலைகளைச் சக இந்தியர்களான ஹர்பஜன் சிங் வேதி போன்றோடுடன் இணைந்து மேற்கொள்கின்றார். ஒவ்வொரு நபரையும் தேடிப் பிடித்து, முடியுமேயானால் அவர்களின் பாஸ்போர்ட்களைக் கைப்பற்றியெனக் களமாடுகின்றார். 1990, இந்தியப் பொருளாதாரம் அவ்வளவு சிறப்பாக இல்லை. இருந்தாலும், ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்சுக்குச் சொந்தமான விமானங்களில், ஒரு இலட்சத்து 76 ஆயிரம் பேரும் தாய்நாட்டுக்கு அழைத்து வரப்படுகின்றனர். சிவில் விமானங்களில், ஏர்லிஃப்ட் செய்யப்பட்டதன் அதிகபட்ச எண்ணிக்கை இதுவரையிலும் இதுவாகத்தான் இருக்கின்றது. குவைத் விமானநிலையத்தில் அனாதரவாக இருந்த பாகிஸ்தான் நாட்டுப் பணியாளர்களையும் இந்தப் பயண விமானங்கள் கொண்டு கரை சேர்த்தன என்பதுவும் குறிப்பிடத்தக்கது.   The airlift, which began in the first week of September 1990, lasted 59 days and involved 499 sorties. Mathews was among the last to leave. Then, there was a long waiting period and it was only after a few months that the new edition of the Guinness Book of World Records was published with Air India's achievements duly listed.

இந்தியர்கள் அனைவரும் திரும்ப அழைத்துக் கொள்ளப்பட்ட சில நாட்களிலேயே வளைகுடாப் போர்-2, பாலைவனக் கேடயம் எனும் பெயரில் துவங்கிற்று.

2016ஆம் ஆண்டு, ஜனவரி 22ஆம் நாள், ஏர்லிஃப்ட் எனும் பெயரில், நாத்துண்ணி மேத்யூசாக அக்சய்குமார் நடித்த திரைப்படமும் இதன் பின்னணி கொண்ட கதையுடன் வெளியானது.

https://www.news18.com/news/india/mathunny-mathews-the-real-life-hero-of-airlift-dies-in-kuwait-1407625.html


No comments: