8/12/2008

கடற்கரைப் பயண அனுபவக்கோவை-3

நவசக்தி தமிழ் பண்பாட்டுக் குழுவினரின் கடற்கரைப் பயண, இறுதி நாள் பற்றிய அனுபவக்கோவை இது:


மூன்றாவது நாளில் எழுஞாயிறு நாமும் கண்டிட
வேண்டுமென விழைந்து நித்திரைக்கு சுபம்இட்டு
கிழக்கு நோக்கி நடையைக் கட்டினர் குழுமசக்திமார்
கூட்டம்! நல்லதொரு விடியல், ஆனாலும் நாணியது
ஆதவனின் உதயத்தை வெளிக்காட்ட நீலக்
கருமுகில் கூட்டம்; ஆதலினாலென்ன நாங்கள்
இளங்காலைப் பொழுதை நுகர்ந்து அதில் இன்பம்
காண்போம்என களிப்புகள் கொண்டார் எம்குழுமம்!

பின்புநல்ல பிட்டுகளும் கோதுமை ரொட்டிகளுமாய்
ஒன்றுகூடி விரதத்தை முறித்தார் எம்கூட்டம், அதே
பெரிய மேசையினில் பேச்சுக்களும் நகைகளுமாய்!
அலுவல்கள் நடந்தவண்ணம் அய்யா சண்முகநாதனும்
மணிவாசகமும் கொடுத்தார் ஈடு நடந்த குழுமத்தின்
உல்லாச செயல்பாட்டுக்கு; மீண்டு மொருமுறை நீல
வண்ணக்கடலில் குதூகலக் குளியல் போடவேண்டுமென
குலவை இட்டுச்சென்றார் குழுமச் செல்லப்பிள்ளைகள்!!

அதிகமாகவே ஆர்ப்பரித்தது அகலவனின் அலைகள்இன்று!
ஆதவனின் ஆதிக்கமும் அதிகமாகி தணலாய்ச் சுட்டதுமணல்!!
அன்புக் குழுமத்தின் ஆவேசக் குளியலும் அதிகமேஅதற்கேற்ப!!!
இப்படியாகக் குதூகலம் கண்டுமதியச் சோறும் மனமகிழ்வோடு
கொண்டுவிட்டு, ஆயத்தம் ஆயினர் வீடு திரும்ப; நொடியில்
சுத்தம்செய்தனர் அந்த அழகியகுடிலை சிரத்தையுடன், பின்பு
சீரணியாய் வாகனங்கள் தொடர்ந்தடைய, பலநல்ல நினைவுகளுடன்
பள்ளிகொண்டார் குழுமத்தினர் தத்தம்வீட்டில் மனநிறைவோடு!

No comments: