மணிகண்டன் கனகசபை
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் தகவல்தொடர்புக்குழு உறுப்பினர். தொடர்ந்து தொடர்பில் இருந்து கொண்டு, பேரவை நிகழ்ச்சிகள், திருவிழா முதலானவற்றின் காணொலிகளைப் பராமரித்து வந்தவர்.
தொடர்ந்து ஒத்துழைப்புக் கொடுப்பது என்பது, தனிப்பட்ட உறவுகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை அனைத்து மட்டங்களிலும் வெற்றிகரமாகச் செயல்படுவதற்கான ஒரு மிக முக்கியமான பண்பாகும். இது வெறுமனே ஒருமுறை உதவுவது அன்று; மாறாக, ஒரு பொதுவான இலக்கை அடைய, ஒரு நல்லுறவைப் பேண, தொடர்ந்து இணைந்து செயல்படும் மனப்பான்மையைக் குறிக்கிறது. அந்த வகையில் திரு.மணிகண்டன் அவர்களுக்கு நன்றிகள் உரித்தாகுக.
திட்டங்கள் மாறும்போதோ அல்லது புதிய சவால்கள் வரும்போதோ, வளைந்து கொடுத்து, புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஒத்துழைக்கத் தயாராக இருக்க வேண்டும். அப்படியாக, திரு மணிகண்டன் அவர்கள் சிறப்புச் சேர்த்தார். விழாவில் நம்மைக் கண்டதுமே, வேலைகளுக்கு ஆட்கள் வேண்டுமாயெனக் கேட்டு, சில பலரை அறிமுகப்படுத்தினார். இஃகிஃகி, நமக்குத்தான் எவரையும் நினைவில் இருத்திக் கொள்ள முடியவில்லை. ஆனால் அறிமுகப்படுத்தப்பட்ட நண்பர்கள் வந்து, இடைக்கிடை, ‘அண்ணா, எதனா செய்யணுமா? எதனா செய்யணுமா??’ எனக் கேட்டபடி இருந்தனர்.
மேற்படி இவரால் அறிமுகப்படுத்தப்பட்ட நண்பர்களுள் ஒருவர் வந்து, ‘அண்ணே, மாரி செல்வராஜ் அவர்களுக்குத் தொண்டை வலியாம்; இன்ன மருந்துதான் வேண்டுமென்கின்றார். டாக்டரின் மருந்துச் சீட்டு இருந்தால்தான் வாங்க முடியும்’, என்றார். மருத்துவர் திரு. செந்தில் சேரன் அவர்களை அழைக்க, அவர் தமக்கு அந்த உரிம அனுமதி இல்லையென்றும், இன்னாரை அழையுங்களென, ஒருங்கிணைப்பாளர் திருமிகு. மீனா இளஞ்செயன் வழியாகத் தொடர்பு கொள்ளப் பணித்தார். திருமிகு மீனா அவர்கள், மருத்துவர் சுஜாந்தி இராஜாராம், மருத்துவர் சுஜாதா சஜிவன் ஆகியோரைத் தொடர்பில் கொணர்ந்தார். நண்பரிடம் அவர்களைக் கோர்த்துவிட்டபின் நாம் விடுபட்டுக் கொண்டோம். ஆனாலும் மற்றவர்கள் விடவில்லை. அடுத்தடுத்து மருத்துவம் குறித்த உதவிகளுக்கு முறைப்பாடுகள் வந்து கொண்டிருந்தன. சார்லட் மருத்துவர் இராஜேஷ் தோட்டா அவர்களிடமும் மகர் அவர்களிடமும் தள்ளிவிட்டுக் கொண்டோம். இந்த நேரத்தில் அவர்களுக்கும் நன்றிகள் உரித்தாகுக.
𝐖𝐡𝐞𝐫𝐞 𝐨𝐭𝐡𝐞𝐫𝐬 𝐬𝐚𝐰 𝐨𝐛𝐬𝐭𝐚𝐜𝐥𝐞𝐬, 𝐓𝐡𝐢𝐫𝐮 𝐌𝐚𝐧𝐢𝐠𝐚𝐧𝐝𝐚𝐧 𝐬𝐚𝐰 𝐬𝐩𝐚𝐜𝐞𝐬 𝐰𝐚𝐢𝐭𝐢𝐧𝐠 𝐭𝐨 𝐛𝐞 𝐟𝐢𝐥𝐥𝐞𝐝, 𝐚𝐧𝐝 𝐡𝐞 𝐟𝐢𝐥𝐥𝐞𝐝 𝐭𝐡𝐞𝐦 𝐰𝐢𝐭𝐡 𝐬𝐞𝐫𝐯𝐢𝐜𝐞, 𝐤𝐢𝐧𝐝𝐧𝐞𝐬𝐬, 𝐚𝐧𝐝 𝐩𝐮𝐫𝐩𝐨𝐬𝐞.
அன்புடன் தாங்கள் செய்யும் ஒவ்வொரு பணியும், இந்த நாளை ஒரு மறக்க முடியாத அழகான நினைவாக மாற்றும் ஆற்றல் கொண்டது. தங்கள் உதவிகள் ஏதோவொரு வகையில், ஏதோவொரு தருணத்தில் தங்கள் வாழ்விற்கான பொருண்மியத்தைக் கொடுக்க வல்லது. சிறப்புகள் பெற்றிடுவீர் திரு மணிகண்டன் கனகசபை.
-பழமைபேசி.
#PROTeam #FeTNA2025

No comments:
Post a Comment