4/08/2023

perceptions

காரணமே இல்லாமல்
ஒருவரை பிடிக்கல;
காரணமே இல்லாமல் ஒருவரை பிடிச்சி போச்சு,
இதற்கு பின்னால்
ஒரு காரண காரிய இருக்கும்.
அது ஏதேனும் ஒன்றை காரணமாக அமைந்து இருக்கும்.
இது பெரும்பாலும் 
உணர்வு சார்ந்த காரணமாக இருக்கலாம்.



ஒருவரைப் பார்க்கின்றோம். நம்முள் சட்டென ஒரு நிலைப்பாடு உருவெடுக்கும். அந்நபரின் தோற்றம்,  ஆடை அணிகலன்கள், பேச்சுநடை, அங்க அசைவுகள் இவற்றின் பேரிலான நம் கடந்தகால நினைவுகளின்  அடிப்படையிலான யூகங்கள் அந்த நிலைப்பாட்டைத் தோற்றுவிக்கும். பின் அது சேமிப்பிலும் பதிவாகும். இப்படிப் பதிவாகும் நினைவுப்பதிவுகள்தாம் நாள்தோறும் எண்ணற்ற நிலைப்பாடுகளை நம்முள் விதைக்கின்றன. அவற்றைக் கேள்விக்குள்ளாக்காத வரையிலும், அது தொடரும். இப்படித்தான் ஒருவர் அவுட் டேட்டட்(தேய்வழக்கு) ஆவது.

மேற்கண்ட காணொலியைப் பார்க்கின்றோம். ஒருவருக்குப் பாலுணர்வு அடிப்படையிலான பார்வை அமையக் கூடும். ஒருவருக்கு, உடற்கட்டமைப்பு, அதன்பின்னால் ஆன உணவுப்பழக்கம், உடற்பயிற்சி என எண்ணங்கள் விரியலாம். மற்றவருக்கு மயிர்ப்பராமரிப்பு, ஒப்பனை, அதுசார்ந்த கூறுகள் குறித்தான கவனக்குவியல் ஏற்படலாம். மற்றவருக்கு நடன அசைவுகளின் கோர்வை குறித்தான அறிதல் ஏற்படலாம். இன்னொருவருக்கு அரங்க அமைப்பின் பின்னணி, அறைகலன் குறித்த நாட்டம் பிறக்கலாம். இப்படி எல்லையே இல்லை. அது, அவரவரின் கடந்த கால அனுபவத்தையும் கொடுக்கப்படும் முன்னுரிமையையும் பொறுத்து அமையும்.

இருவர் உள்ளம் என்கின்ற படத்தில் வரும் பாடல் இப்படிச் சொல்கின்றது. பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்,  பாடல்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம், கொடிகள் எல்லாம் பலவிதம், கொடிக்குக் கொடி ஒருவிதம், கொண்டாட்டம் பலவிதம், நானதிலே ஒரு விதம், இரவு பகல் என்று எதுவுமில்லை இன்று, உறவில் இன்பம் கண்டு உருகிடிவோம் என்றும்!

People see what they want to see! Often, what people want to see never has anything to do with the truth.


 

No comments: