7/02/2013

வயிறேகும் பேராறு!!











கரைகரைந்த பெருவெள்ளம்
நங்கூரம் பாய்ச்சிவிட
வாரம் அறுபது டாலர்
பேசி முடிவானது
மெம்ஃபிசு வழித்தங்கல்!
கூதற்கால வெள்ளத்தினால்
வயிறேகி வீதி வருகிறாள்
சுட்டெரிக்கும் கோடையில்!!
அடுத்த கூதலுக்கும்
தப்பாமல் அமைந்து வரும்
மற்றுமொரு வீடுதன்னில்
வழித்தங்கலும் வயிறுதங்கலும்!
இந்த அப்பனறியாப் பிள்ளைகளும்
தாவளம் போட்டுக்கொள்ள
நாள் ஓட்டி நாளையும்
ஓடிக்கொண்டுதான் இருக்கும்
சீற்றமிகு மிசிசிப்பி பேராறு!!


1 comment:

அம்பாளடியாள் said...

சிறப்பான வரிகள் தொடர வாழ்த்துக்கள் சகோதரரே .