1/07/2013

காதில் புகை

அவள் வரைந்திருந்த
செடியின் 
பூவைக் கொய்து
அவளுக்கே கொடுத்தேன்!
சட்டையில் 
தைத்துக்கொண்ட பின்
செடியிலிருந்த
கனியைப் பறித்து
இது அப்பாவுக்கு
ஊட்டியபடியே
கண்கள் விரிய
மோவாய் உயர
வலுவாய்ச் சிரித்தாள்!
வீட்டு வெளியெங்கும்
சிரிப்புச் சில்லுகள்!!
அடுப்பங்கரையில்
காதில் புகை
அம்மாவுக்கு!!!

1 comment:

இராஜராஜேஸ்வரி said...

கண்கள் விரிய
மோவாய் உயர
வலுவாய்ச் சிரித்தாள்!
வீட்டு வெளியெங்கும்
சிரிப்புச் சில்லுகள்!!

அழகு ..!