1/04/2013

உறுவது கூறல்

இந்த அடியவனை
ஏளனத்துடன்
தீண்டத்தகாதவனாய்
இறக்கப் பார்வையில்
இழிந்து பார்ப்பவனுக்கு
தெரிந்திருக்க நியாயமில்லை
அவனிழுக்கும் மூச்சுக்காற்றில்
என் நாசி நுகர்ந்ததின்
எச்சமும் கலந்திருக்கக்கூடுமென!!

No comments: