2/08/2009

திருப்பூர் அவியல், சிங்கப்பூர் கிச்சடிக்குத் துணையாக, அமெரிக்கப்பூர் பள்ளையம்!

வணக்கம்! திருப்பூர்ல இருந்து அவியல், சிங்கப்பூர்ல இருந்து கிச்சடின்னு அட்டகாசமான, அருமையான பதிவுகள் வந்திட்டு இருக்கு. அவிங்க அளவுக்கு நம்மால தர முடியாட்டாலும், முடிஞ்ச அளவுக்கு அவிங்களுக்குத் துணையா நாமளும் அமெரிக்கப்பூர் பள்ளையம் எழுதினா என்னன்னு தோணிச்சி. ஏன்டா, கழகங்கள்லதான் இணை, துணைன்னு போட்டு நொங்கு எடுக்குறாங்க, உனக்கு இங்க‌ பதிவு போடுறதுலயுமான்னு நீங்க கேக்குறது புரியுது அண்ணாச்சி! இஃகிஃகி!!

நாங்கெல்லாம் திருமூத்திமலைத் தண்ணியில வளந்தவிக அண்ணாச்சி! அதான், இதுலயும் துணையா இருக்கலாமுன்னு, இஃகிஃகி!! இந்த நேரத்துல உடுமலைக்கு திருமூர்த்தி மலைத் தண்ணி கொண்டாந்த மகராசருக, வித்தியாசாகர் ஐயா, பெருந்தகை சாதிக்பாட்சா அவிங்களுக்கும், எங்க ஊர் மாதிரியான பட்டி தொட்டிகளுக்குத் திருமூத்திமலைத் தண்ணி கொண்டாந்த அண்ணன் ப. குழந்தைவேலு அவிகளையும் நன்றியோட நினைவு கூர்ந்துகிடுறேன். அரசியல்வாதிகளைக் கும்முறம்ல்ல? அப்பப்ப குளிர்விக்கவும் செய்யணும்... அப்பத்தான் அவிங்க இன்னும் நாலு நல்லது செய்வாக... இஃகி!

பள்ளையம்


அன்பு மெலிந்து போனால், தவறு தடியாகத் தெரியும்!

2/07/2009

அமெரிக்க வேலை:பாதிக்கப்பட்ட உடமைகள் சலுகை(TARP) நிதிக்கான கூடுதல் சட்ட‌ வரைவு

வணக்கம்! கண்டதைச் சொல்லி, பீதியக் கிளப்பி விளம்பரம் தேடுறதுக்கு அல்லங்க இந்த பதிவு. ஒரு விழிப்பு உணர்வுக்காகத்தான். ஆகவே, தப்பா நினைச்சிக்கிடாதீங்க. ரெண்டு சட்ட மற்றும் கூடுதல் சட்ட‌ முன் வரைவுகள், இப்ப ஒப்புதலுக்காகவும் அல்லது பாதி ஒப்புதலோடவும் இருக்குங்றது நம்ம எல்லார்த்துக்கும் தெரிஞ்ச விசயம்.

ஒன்னு பாதிக்கப்பட்ட உடமைகள் சலுகை(TARP) நிதிக்கான கூடுதல் சட்ட‌ முன் வரைவு, அடுத்தது பொருளாதார வளர்ச்சி தூண்டுத‌ல்(National economic stimulus package) நிதிக்கானது. இதுக ரெண்டுலயுமே, வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவது குறிச்சி, நேரிடையாகவே அல்லது மறைமுகமாவோ சொல்லப்பட்டு இருக்குங்றாங்க அரசியல் பக்கிக. எனக்கு முழுத் தகவலும் இப்ப கிடைக்கலை. வலையிலயும் தேடிப் பாத்தேன், நான் வேலை பாக்குற‌ நிறுவன அலுவலரும் கைய விரிச்சிட்டாரு. கிடைச்ச உடனே தர்றேன்னு சொல்லி இருக்காரு. ஒப்புதல் வாங்கி, சட்டமான அம்சங்களைக் கீழ குடுத்து இருக்கேன்.

சரி, சுருக்கமா அதன் விளைவுகளைப் பாக்கலாம் இப்ப. ஏற்கனவே பாதிக்கப்பட்ட உடமைகளுக்கான சலுகை நிதி வாங்கின‌ நிறுவனங்கள்ல வேலை பாக்குற ஊழியர்கள், தன்னோட H1B நீட்டிப்புக்கு போகும் போது மறுக்கப் படலாம். ஏற்கனவே இந்த அம்சம் முன்வரைவுல இருந்து, அப்புறம் தூக்கிட்டாங்களாம். இப்ப, குடியரசுக் கட்சிக்காரங்க என்ன செய்யப் போறாங்கன்னு தெரியலை. இந்த நிலைமைல இருக்குறவிங்க, அவிங்க அலுவலக சட்டத்தரணிகிட்ட கேட்டுத் தெரிஞ்சிக்குங்க. நானும், விபரம் தெரிய வர்றப்ப பதியுறேன்.

ஒரு நிறுவனத்துல வேலைக்கு சேரும் போது, அந்த நிறுவனத்தைப் பத்தி நல்லா விசாரிச்சிட்டு சேருங்க. ஒப்பந்த வேலைக்குப் போறதுன்னாக் கூட யோசிச்சி செய்யலாம். பாதிக்கப்பட்ட நிறுவனத்துல‌ ஏற்கனவே வேலை செய்யுறவிங்க, அடுத்த நல்ல வாய்ப்புகளையும் கருத்தில் கொள்ளுங்க.

நிரந்தரவாசிக்காக விண்ணப்பிச்சிருக்குறவிங்க, அதுக்கு முந்தைய நிலையான வேலைக்கான அங்கீகார நிலைக்கு(EAD) மாறலாமாங்றதையும் யோசிக்கலாம். ஏன்னா, சில பேர் அதற்கான வாய்ப்பு இருந்தும் H1Bலயே தொடர்வது உண்டு. காரணம், வருசா வருசம் நீட்டிப்புக்குப் போகவேண்டியது இல்லைன்னு.

மேற்படிப்புக்கு வர்றவிங்க, ஏற்கனவே படிச்சிட்டு இருக்குறவிங்க, அவிங்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு என்ன ஆச்சுன்னு கேட்டுத் தெரிஞ்சுக்குங்க. அது இனிமேல் இருக்காதுன்னு நினைக்கிறேன். ஒன்னும் விபரமாத் தெரிய மாட்டேங்குது. எல்லாம், இனியும் ஒரு மாசம் ஆகணும். இவனுக நல்லாக் குழப்பி, பல கலந்துரையாடல் நடத்தி, தெளிவா சொல்றதுக்கு எப்படியும் ஒரு மாசம் ஆகும்.

"The current amendment provisions were “ambiguous”. We expect more clarity to arise when it goes for reconciliation to the Congress!"

The amendment that passed isn’t as tough as the one Grassley proposed on Feb. 5, which would have prohibited firms from hiring H-1Bs altogether. The modified amendment instead makes TARP recipients jump through extra hoops before they can hire those foreign workers. Specifically, it subjects recipients of TARP funds to the same rules so-called H-1B dependent employers must follow. (An H-1B dependent employer is one whose workers brought in with that visa comprise 15% or more of the employer's total workforce.) These rules include:

1. The employer can’t displace any similarly employed U.S. worker with an H-1B hire within 90 days before or after applying for H-1B status or an extension of status.

2. The employer can’t place any H-1B worker at the worksite of another employer – meaning it can’t outsource a worker for a client – unless that employer first makes a “bona fide” inquiry as to whether the other employer has displaced or will displace a U.S. worker within 90 days before or after the placement of the H-1B worker.

3. The employer has to take good-faith steps to recruit U.S. workers for the job opening, at wages at least equal to those offered to the H-1B worker. The employer must offer the job to any U.S. worker who applies and is equally or better qualified than the H-1B worker.

The amendment falls short of preventing large banks from using H-1Bs brought into the U.S. by outsourcing firms like India-based Infosys (INFY), Wipro (WIT), and Tata, which are among the top recipients of petitions for the H-1B visa program. “Most of the H-1B use, and abuse, happens through relationships banks have with outsourcing firms,” says Hira. “I don’t think [the amendment] restricts them from working w those firms.” In other words, a bank could still legally force a laid-off American employee to train a replacement worker who is on an H-1B visa.

A related provision was passed in the U.S. House on Jan. 21 as an amendment to a bill that passed to reform TARP.

That measure, introduced by U.S. Representative Sue Myrick (R-N. Carolina), prohibits TARP recipients from outsourcing call-center work to foreign companies. The bill has not yet been taken up by the Senate. Source

அவசரத்துல கல்யாணம், அவகாசத்துல அழுகைன்னு பெரியவிங்க சொல்வாங்க. அதனால, புது வேலை, வேலை மாற்றம், அமெரிக்காவுக்கு படிக்க வர்றவிங்க, ஏற்கனவே பாதிக்கப்பட்ட நிறுவனங்கள்ல இருக்குறவங்க, அவசரப்படாம, தொலைநோக்குப் பார்வைல முடிவு எடுங்க! ஏய், என்ன அறிவுரையா? ஐயோ அப்பிடி எல்லாம் இல்லைங்க. என்னோட நண்பர் வெங்க்கிய நினைச்சேன்! எழுதினேன்!! இஃகிஃகி!!

பொறுப்பி(disclaimer): சட்டத்தரணிகளே குழம்பி இருக்குற இந்த நேரத்துல, நான் கொடுத்து இருக்குற தகவல்கள் சரியானதாகவும் இல்லாமல் இருக்க வாய்ப்பு இருக்கு. இஃகிஃகி!

அமெரிக்காவில், "இன்னைக்கு வீட்லயே இரு!" வழக்கம் அமல்

வணக்கம்! பொருளாதார மந்தம், அதன் விளைவுகள், எதிர் நடவடிக்கைகள்ன்னு நாலும், உலகம் பூராவும் நடந்துட்டு இருக்கு. இங்க அமெரிக்காவுல, பொருளாதார வளர்ச்சி(stimulus package) முடுக்குநிதிக்கான திட்ட முன்வரைவு, அமெரிக்க நடுவண் அரசாங்கத்தோட கீழ்சபையில ஒப்புதல் வாங்கி, மேல் சபையோட ஒப்புதலுக்கு போயிருக்கு. சனநாயகக் கட்சிக்கும் குடியரசுக் கட்சிக்கும் இடையில ஒரு பொதுவான ஒப்புதல் கை கூடினதை ஒட்டி, நேத்தைக்கே வாக்கெடுப்பு முடிஞ்சு, உடனே அதிபரோட ஒப்புதலுக்கு போகும்ன்னு எதிர்பார்த்தாங்க. ஆனா போகலை, திங்கள்கிழமை மேல்சபையில வாக்கெடுப்பு இருக்கும்ன்னு சொல்லுறாங்க அரசியல் பக்கிக!

இந்த நிதி ஒதுக்கீடு ($780 Billion) அமலுக்கு வந்தா, வேலை வாய்ப்பு பெருகும்ன்னு ஒரு எதிர்பார்ப்பு. நிதி ஆதாரம் கூடினா, சிறு தொழில்கள் பெருகலாம். பொருளாதாரம் ஏற்றப் பாதைக்கு திரும்பும்ன்னு ஒரு எதிர்பார்ப்பு. ஆனா, இந்த நிதி ஒதுக்கீடுனால ஒன்னும் பலன் இருக்காதுன்னும் சிலர் சொல்லுறாங்க. அது குறிச்ச வேடிக்கையான, ஒரு எள்ளல் மின்னஞ்சல் கூட உலகம் பூராவும் உலாவிகினு இருக்கு. அதனோட தமிழாக்கம் கடைசியில குடுத்து இருக்கேன்.

எனக்கு எங்க அமுச்சியவிங்க நினைவு வந்தது நேத்து. ஒன்னுமில்லைங்க, என்னோட அருமை நண்பர், திருச்சிக்காரப் பயல் Rockfort மகேந்திரன் கலிஃபோர்னியா மாகாண அரசுக்கு வேலை பாக்குறாரு. வழக்கம் போல அலைபேசில அழைச்சாக்க, எப்பவும் அலைபேசில கொறஞ்ச குரல்ல மருகுற ஆளோட சத்தம் வெகு தூக்கலா இருந்துச்சி. என்னடா இது ஆச்சரியமா இருக்கேன்னு கேட்டப்பதாங்க, எனக்கு எங்க அமுச்சியவிங்க ஞாவகம் வந்துச்சி.

சுருக்குப் பையில பணம் கொறச்சலா இருந்துச்சின்னு வையுங்க, திடீல்ன்னு எங்க தோட்டத்துல வேலை செய்யுற சுப்பனையும், வள்ளியையும் கூப்ட்டு இன்னைக்கி வீட்லயே இருந்துக்குங்கன்னு சொல்லிப் போடும் எங்க அமுச்சி. அது மாதர கலிஃபோர்னியா மாகாணத்துலயும், மாகாண அரசு வேலை செய்யுறவிங்களை மாசத்தோட முதல் வெள்ளிக் கிழமையும் கடைசி வெள்ளிக் கிழமையும் வேலைக்கு வர வேண்டாம்ன்னு சொல்லிப் போட்டாங்களாம். அதனாலதான், வீட்ல இருந்த நம்ம திருச்சிக்காரப் பய மகேந்திரனோட குரல் வலுவா இருந்துச்சுங்க. இந்த வழக்கத்தோட பேருதாங்க இன்னைக்கு வீட்லயே இரு(Furlough) வழக்கம்.

நேத்தைக்கு இதனால மட்டும் 38 மில்லியன் வெள்ளி மிச்சம் ஆச்சுதாம் மாகாண அரசுக்கு.மேலும் இந்தத் திட்டம் 2010ம் ஆண்டு பாதி வரைக்கும் தொடரலாம்ன்னு ஒரு யூகம் இருக்காம். ஏன்னா, கலிஃபோர்னியா அரசுக்கு 40 பில்லியன் பற்றாக்குறை இருக்குதாமுங்க, அதான்!
சரி இப்ப, அந்த மின்னஞ்சலோட தமிழாக்கத்தைப் பாப்பமா?

கேள்வி: அது என்ன பொருளாதார வளர்ச்சி முடுக்கு நிதி?
பதில்: இந்த நிதியை, அரசு கந்தாயங் கட்டுபவர்களுக்குத் தரும்.

கேள்வி: அரசுக்கு எப்படி இந்த நிதி கிடைக்கும்?
பதில்: கந்தாயங் கட்டுபவர்களிடம் இருந்து.

கேள்வி: ஆக, அரசு நமக்கே நம் பணத்தைத் திருப்பித் தருகிறது?
பதில்: கொஞ்சமா.

கேள்வி: இந்த நிதியோட நோக்கம்?
பதில்: நீங்க இந்த பணத்துல போயி நாலும் வாங்குவீங்க, அது பொருளாதார வளர்ச்சிய முடுக்கும்.

கேள்வி: அப்ப, அது சீனப் பொருளாதார வளர்ச்சியையல்ல‌ முடுக்கும்?
பதில்: டப்பிய மூடு?!

நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்கும் பாயும்!

கொசுறு: நம்ம ஊர்ல எல்லாம், காசு குடுத்துப் பதவி வாங்கி, வாங்கின பதவியில காசு பாப்பாங்க. நான் இருக்குற ஊர்ல, விளையாட்டுப் போட்டிக்கான நுழைவுச்சீட்டுக்கு இருக்கைய‌ சந்தையில விக்கிறாரு இவரு. அவரோட விபரம்.

2/05/2009

திமிசுக் கட்டையும், நாட்டுக் கட்டையும்!

வணக்கம்! இன்னைக்கு நம்ம வட்டாரத்தில அலசின விசயம் வந்துங்க‌, அமெரிக்காவுல ஒரு பெண் ஒரே பிரசவத்துல 8 குழந்தைகளப் பெத்துகிட்டதுதான். அந்தப் பொம்பளைக்கு ஏற்கனவே ஆறு குழந்தைக இருக்காம். இப்ப, ஆறு பையன், ரெண்டு பெண் குழந்தைக ஒரே பிரசவத்துல. ஆக மொத்தம், பதினாலு. தொலைக்காட்சி, புத்தகங்கள்ன்னு அவங்க அனுபவத்தை சொல்லுறதுக்கு பல கோடிக்கணக்கான வெள்ளிகள் மதிப்பு ஒப்பந்தம் காத்திட்டு இருக்காம். நாம என்னத்த சொல்ல?

சரி, தம்பி ஸ்ரீராம் நாட்டுக் கட்டை, திமிசுக் கட்டைகளப் பத்தி பதிவு போடச் சொல்லி இருக்காரு. இஃகிஃகி! அதை நாம பாப்பமா இப்ப‌?! பொதுவா நீங்க பல கட்டைகளக் கேள்விப்பட்டு இருப்பீங்க. நாட்டுக் கட்டை, திமிசுக் கட்டை, உருட்டுக் கட்டை, கர்லாக் கட்டைன்னெல்லாம். அது போக, கட்டை பிரம்மச்சாரின்னு சொல்லுறோம். பிரம்மச்சாரின்னா நமக்குத் தெரியும். இஃகிஃகி! அதென்ன கட்டை பிரம்மச்சாரி? அது ஒன்னும் இல்லங்க, கட்டையாட்டம் உறுதியான பிரம்மச்சாரி! கட்டைகள‌, ஒன்னொன்னா விலேவாரியாப் பாக்கலாம் வாங்க! என்ன செய்யுறது?! தெரிஞ்சோ தெரியாமலோ உள்ள வந்திட்டீங்க, பொறுமையா இருந்து படிச்சிட்டுப் போங்க! (என்னா வில்லத்தனம்?)


நாட்டுக் கட்டை: கட்டைன்னா உடல்ங்ற அர்த்தமும் இருக்கு. அதே சமயத்துல, மரக்கட்டையையும் கட்டைன்னே சொல்லுறோம். ஒசரங் குறைஞ்சதையும், சிறு பொருளையுங்கூட கட்டையா இருக்குன்னு சொல்லுறது உண்டு. உறுதியக் குறிக்கும் போதும் கட்டை உடம்புன்னு சொல்லுறோம். அப்புறம், நிலையில ஒன்னை நிறுத்துறதை நாட்டுதல்ன்னு சொல்லுறோம். உதாரணம், செங்கோல் நாட்டினான், நிலை நாட்டினான். அந்த வரிசையில, ஒன்னை நிலை நிறுத்துற கட்டைப் பொருளை நாட்டுக் கட்டைன்னு சொல்லுறது. நாட்டுப்புறத்துல இருந்து வர்ற கட்டைன்னு நீங்க சொன்னா, அதுக்கு நான் மாட்டேன்னு சொல்ல முடியுமா என்ன?!

திமிசுக் கட்டை: திமிசுன்னாங்க மேலும் கீழுமாவோ, அல்லது பக்கவாட்டுலயோ அசையுற ஒன்னு. படகுல இருக்கும், கைத்தறியில இருக்கும், இப்படி எங்கயும் அது இருக்கும். அந்த மாதிரியான கட்டைகளச் சொல்லுறது, திமிசுக் கட்டைன்னு. அது செய்யுற வேலை, ந்ல்லா வலுவா இருக்குறதுக்காக, நல்லா குண்டா, கனமா இருக்குற கட்டைகளைக் கொண்டு செய்து இருப்பாங்க. வாசல்ல, கல் மண்ணை வெச்சி காரை போட்ட பின்னாடி, கல்லுக மேல தூக்காம இருக்குறதுக்கு இப்பிடியான கனமான திமிசுக் கட்டைய மேலயும் கீழயுமா அடிப்பாங்க, அதுல கல்லுகெல்லாம் அமுங்கிடும். இந்த திமுசுக் கட்டைய, கிராமங்கள்ல எத்து மசைன்னும் சொல்லுவாங்க.

மசைன்ன உடனே எனக்கு இனியோன்னும் ஞாவகத்துக்கு வருது. எழுதுறதுக்கு மசை தீந்து போச்சுன்னு சொல்லுவோம். ஆமுங்க, பேனாவுல ஊத்துற அந்த நீல அல்லது கருப்பு நிற மைய(ink)ச் சொல்லுறது மசைன்னு. இஃகிஃகி! மாட்டு வண்டியில, அச்சாணிக்கு ஊத்துறது(lubricant) கூட மசைதான். அதை கீலுன்னும் சொல்லுறது உண்டு. விளக்கெண்ணயில, மெதுவான துணி, கரித்துண்டையும் ஊற வெச்சி, இந்த மசை செய்வாங்க. அதேபோல, வேங்கை மரத்தையுஞ் சொல்லுறது திமிசுன்னு. ஆக, சந்தனக் கட்டை, தேக்குக் கட்டை, இது மாதிரியான மரங்களோட வரிசையில வரும் இந்த திமிசுக் கட்டையும். ஆனா, நல்லாக் குண்டா, வாட்ட சாட்டமா, எதையும் அமுக்குற திமிசுக் கட்டை மாதிரி வர்ற பொம்பளையப் பாத்து திமிசுக் கட்டைன்னோ, எத்து மசைன்னோ நீங்க சொன்னா, அதுக்கு நான் எப்பிடி பொறுப்பாக முடியும்?

கர்லாக் கட்டை: கர்மம்ன்னா உங்களுக்குத் தெரியும், வேலை, பணி அல்லது ஆக்கம் அப்பிடின்னு. அதனோட தொடர்புச் சொல்தாங்க, கர்லா, வேலைக்கானங்ற அர்த்தத்துல வரும். அப்ப, வேலைக்கான கட்டையச் சொல்லுறது கர்லாக் கட்டை. உடற்பயிற்சியில, பயிற்சிக்கான வேலைக்குப் பொழங்குற கட்டைய கர்லாக் கட்டைன்னு சொல்றோம், அது உங்களுக்குத் தெரிஞ்சி இருக்கும். கட்டையா, சிறு உருவத்துல இருக்குறவிங்களை, கர்லாக் கட்டை கணக்கா இருக்கான்னு நீங்க சொன்னா, அது நல்லாவா இருக்கு? நீங்களே நல்லா ரோசனை செஞ்சி பாருங்க, என்ன?!

சரி, இதுக்கு மேலயும் ஒக்காந்து பொட்டி தட்டிட்டு இருந்தா எனக்கு பதார்த்தஞ் செய்யுற உருட்டுக் கட்டையில விழுந்தாலும் விழலாம். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு! நான் வாறேன்!!

இளமையில் தெரியாது; முதுமையில் நினைவிருக்காது!

2/04/2009

கனவில் கவி காளமேகம் - 13

வணக்கமுங்க! நாம குப்பை கொட்டிட்டு இருக்குற சார்லட்டைத் தலைமையிடமா வெச்சிருக்குற அமெரிக்க (bank of america) வங்கியோட நிலைமை பத்திதாங்க இன்னைக்கு எங்கயும் பேச்சு. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி, அல்லா வங்கியும் கீழவரம் போய்ட்டிருந்தப்ப, இது மாத்திரம் ஆலமரமா காட்சியளிச்சது. சரி, இருக்குற ஒரு விழுதை விட்டு, அடுத்த மரத்தையும் அணைச்சிக்குவோம்ன்னு மெரில் லின்ச்ச(Merrill Lynch) வாங்கினதுதாங்க தப்பாப் போச்சு. அணைச்சதுல, அந்த மரம் இந்த மரத்தையும் கீழ இழுக்குது. ஆமுங்க, அந்த மரத்தோட நிலைமை செரியில்லாமா, நிறையத் தொகை நட்டம் ஆயிடுச்சு.

ஆக மொத்தத்துல, ஒரு காலத்துல அம்பது வெள்ளிக்கு மேல இருந்த‌ பங்கு தொகை ஏழு வெள்ளிக்கு வந்துச்சு. சரி இனி இறங்காதுன்னு பாத்தா, இன்னைக்கு நாலு வெள்ளி எழுபது சதம் ஆயிடிச்சி. என்ன கூத்துன்னு கேட்டிங்கன்னா, அரசாங்கத்துகிட்ட அதிகப்படியா கையேந்தின நிறுவனங்கள்ல, அஞ்சு இலட்சம் வெள்ளிக்கு மேல யாருக்கும் ஊதியம் இருக்கப்படாதுன்னு சொல்லிட்டாங்களாம். ஆக, முக்கியப் புள்ளிகள் வெளில போயிடுவாங்கங்ற ஒரு இதுல, மறுபடியும் சரிவு. கெட்ட குடியே கெடும், பட்ட காலிலே படும்ங்றது இதுதானோ? அதை விடுங்க, நெம்ப நாளைக்கப்புறம் நேத்தைக்கு நம்ம கனவுல வந்த காளமேகம் அப்பிச்சி என்ன சொன்னாருன்னு பாக்கலாம் வாங்க!

"என்னடா பேராண்டி, பொங்கல் எல்லாம் நல்லாப் போச்சா? நல்லாதான இருக்கே?"

"வாங்க அப்பிச்சி, நெம்ப நாளா ஆளே காணோம்! எனக்கு உங்ககிட்ட கேக்க வேண்டியது ஒன்னு ரெண்டு இருக்குங் அப்பிச்சி!"

"கேள்டா, கேள்டா! அரை வேக்காடுக்கெல்லாம் ஆர்வம் வருதுன்னா, அது நல்ல விசியந்தான? கேளு, கேளு!!"

"அப்பிச்சி, இந்த செமக் கட்டைங்றாங்களே அது என்னுங்? செமையா இருக்குதுன்னு சொல்லுறாங்க, செமையா எழுதறன்னு சொல்லுறாங்க, செமையா அடிச்சிட்டன்னும் சொல்லுறாங்க. அந்த செமைன்னா என்ன?"

"ஆமாடா, அது தமிழ் வார்த்தைதேன்! உடகார்ங்றதை ஒக்காருன்னு சொல்றதில்லையா, அது மாதிரிதேன் இதுவும் மருவிப் போய்டிச்சி. தோட்டங் காட்ல இருக்குற பொழிய, கட்டைன்னும் சொல்லுறது உண்டு. கட்டை முறிஞ்சு, தண்ணி கடைப் போகுதுன்னெல்லாம் சொல்லக் கேட்டுருப்ப நீ! அப்ப மழைக் காலங்கள்ல போயி, இருக்குற கட்டைக எல்லாம் வலுவா இருக்கான்னு பாக்குறது உண்டு. அப்பச் சொல்லுறது, "இது செமக் கட்டை, ஒன்னும் முறியாதுன்னு!" அதாவது, இது செம்மையான கட்டை, ஒன்னும் சட்டை செய்யத் தேவையில்லன்னு. ஆக, நல்லா இருக்குற எதையும், செம்மையா, செமையா, செவ்வையான்னு சொல்லுறதும் வழக்கம் ஆயிடிச்சு. அதை ஒட்டி வாற சொலவடை ஒன்னு சொல்லுது, உக்கார்றவன் செமையா உக்காந்தா, செரைக்குறவனும் செமையாச் செரைப்பான்னு!"

"ஓ, அதானா இது? ஆமா, அந்தத் தொடையகராதின்னாங்?"

"நல்ல கேள்வியாத்தான் கேக்குற நீ இன்னைக்கி! தொடைன்னா, பாட்டோட ஒரு அங்கம். ஓசை குறிச்ச ஒன்னு. தமிழகராதிய வகைப்படுத்தும்போது சொல்லுறது, சதுரகராதின்னு. ஏன்னா, தமிழகராதிய நாலு வகையாப் பிரிக்கலாம். பெயரகராதி, the different signification of words. பொருளகராதி, containing words of the same signification. தொகையகராதி, containing collective nouns or generic words. தொடையகராதி, a rhyming dictionary. ஒத்த தொடை இருக்குற சொல்லுகளை வகைப்படுத்திச் சொல்லுறது தொடையராதின்னு."

"அப்பிடீங்களா அப்பிச்சி! இதுக்கு மேல நீங்க எதனாச்சியும் கேட்டு அக்கப்போர் செய்தாக்க, சுத்தமா எல்லாத்தையும் மறந்திடுவேன். நான் இப்ப தூங்கணும்!"

"ச‌ரிடா பேராண்டி, அப்ப இன்னைக்கு இது போதும். நீ தூங்கு, நான் வாறன்!"

இன்னைக்கு இதாங்க சொன்னாரு! அடுத்த தடவை என்ன சொல்லப் போறாரோ? வந்து, மனுசன் கேள்வி வேற கேப்பாரு. சும்மா, சொல்லிட்டுப் போகலாமில்ல?? எதுக்கும், மறுபடியும் வருவாருன்னு நம்புவோம்.


(......கனவுல இன்னும் வருவார்......)

2/02/2009

அமெரிக்காவில், சிக்காமலே சிங்கியடி!

வணக்கம் நண்பர்காள்! நேற்றைக்கு இங்க ஒரு முக்கியமான தினம். ஆமாங்க, வருடாந்திர பிடிபந்து விளையாட்டுத் தொடரோட உச்சப் போட்டி(super bowl). முதல் பாதி, அவ்வளவு விறுவிறுப்பா இல்லை. ரெண்டாவது பாதி, ஒரே விறுவிறுப்புதான் போங்க. முதல் பாதிக்கும் ரெண்டாவது பாதிக்கும் இடையில அமர்க்களமான சிங்கியடியும் நடந்துச்சு. மொத்தத்துல ஆட்டம் பூராவும் நல்லா இருந்துச்சுங்க! இஃகிஃகிஃகி!!

கடைசில நம்பிக்கை நட்சத்திரம் ஒபாமாவோட விருப்ப அணி(Pittsburgh), கடைசி நிமுசத்துல அதிகப்படியா நான்கு புள்ளிகளை எடுத்து வென்டுடுச்சுங்க. ஆட்டம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி, அவரோட குதூகலப் பேட்டியும் ஒலிபரப்பாச்சு. ஆட்டத்துல தோற்ற அணி, மெக்கெய்ன் மாகாணத்(Arizona)தோட அணிதானுங்க! இங்கயும் ஒபாமாவுக்கு ஒரு மகிழ்ச்சியான தருணம்.

நம்மெல்லாம், எப்பனாச்சும் சிக்கீட்டு சிங்கியடிக்குறோம்! ஆனாப் பாருங்க, ஒபாமாவோட நிர்வாகத்துல பதவிக்கு வர இருக்குறவிங்க, சிக்காமலே சிங்கியடிச்சுட்டு இருக்காங்க. ஒவ்வொருத்தரா, கட்ட வேண்டிய வரிய இவ்வளவு நாள், தவறுதலாக்(?) கட்டாம இருந்ததுக்கு, இப்ப வந்து சிங்கியடிச்சுட்டு இருக்காங்க. ஆமுங்க, பதவிக்கு வரும்போது வரி பாக்கி இருந்தா அவ்வளவு நல்லா இருக்காது. அதனால, எதிர்க்கட்சிக்காரங்க கிட்ட இதையும் அதையும் சொல்லி சமாளிக்கிற வேலை நடந்துட்டு இருக்கு.

ஆமா, சும்மா சிங்கியடி சிங்கியடின்னு சொல்லிப் பேசுறமே, அப்பிடீன்னா என்ன? (இஃகிஃகி, ஆரம்பிச்சுட்டான்டா இவனோட வேலையன்னு, நீங்க காய்ச்சுறது தெரியுதுங்களே?! லேசுபாசா எடுத்துக்குங்க, கோவப்படுறது உங்க உடம்புக்கு ஆகாது, ஆஆம்ம்மா!)

சிங்கின்னா, நாணமில்லாம, அதானுங்க அந்த வெக்கம், வெக்கம்! அந்த வெட்கமில்லாம, வெளிப்படையா நடந்துக்குற பொம்பளையச் சொல்லுறது சிங்கின்னு. சிங்கிகோடச் சேந்து போடற குதூகல ஆட்டத்தைச் சொல்லுறது சிங்காட்டம். (பாரு அவனை, தெள்ளவாரி! எவளோகூடப் போயி சிங்காட்டாம் ஆடிட்டு வாறான்!!) அப்புறம், ஒரு குறிப்பிட்ட சமூகத்துப் பொம்பளைகளையும் சிங்கின்னு சொல்லுறது உண்டு. சிங்கன்னா, சிங்கியோட ஆண்பால்.

அதேபோல, கூச்சம் இல்லாம, ரெண்டு கைகளையும் மடக்கி, முழங்கை முட்டிகளை வெளிப்புறமாப் பக்கவாட்டுல் நீட்டிட்டு, விலா எலும்புல மேலயும் கீழயும் அடிச்சுக்குறதை சிங்கியடின்னு சொல்லுறதாமுங்க. ஒரு கையோட உள்ளங்கைய, இன்னொரு கையோட தோள்பட்டையோட அக்குள்ல வெச்சிட்டு விலா எலும்புல அடிக்குறதைச் சொல்லுறது, ஒத்தைச் சிங்கியடி. ஆமாமா, நீங்கெல்லாம் நல்லா நல்லா, புறுக் புறுக்குன்னு ஒத்தச் சிங்கியடி அடிச்சிருப்பீங்க, அதுவும் நம்ம ராஜ.நடராஜன் அண்ணன் அவிங்க, நாள் முச்சூடும் அதே வேலைதேன். இஃகிஃகி!! போங்க, நீங்கெல்லாம் சிங்கியடிச்சுப் பாத்து நெம்ப நாளாயிருக்கும், போயிச் சிங்கியடிச்சுப் பாருங்க போங்க!!!

அடுப்பங்கரையில் கற்றதையெல்லாம் பிள்ளை பேசும்!

2/01/2009

சும்மா இல்ல‌, நாராசம் சிங்கிநாதம்!

வணக்கம்! தம்பி Sriram அவிங்க அப்பப்ப நம்ம பக்கத்துக்கு வந்து போவாரு. இப்பக் கொஞ்ச நாளாக் காணோம்! என்ன விசயமின்னு தெரியலை? நம்ம பக்கத்துக்கு வந்து போற தாக்கத்துல, வழக்கொழிந்த சொற்கள்ன்னு சொல்லி ஒரு தொடரைத் துவங்கி வெச்சு, அது நல்லபடியாப் போய்கிட்டு இருக்கு. அவருக்கும், தொடர்ல கலந்துக்குறவிங்களுக்கும் வாழ்த்துகளும் நன்றியும்.

அந்தத் தொடர்ல சந்தனமுல்லை நினைவுகூர்ந்த சொல்தாங்க, இந்த நாராசம். கேக்கவே நாராசமா இருக்குன்னு பொழங்குறது உண்டு. நாராசத்தை சலாகைன்னும் சொல்லுறது உண்டு. வைத்தியன் பாவிக்கிற சிறு கூரான இரும்புத் தண்டு (Needle-like tool of steel)தானுங்க இந்த சலாகை, நாராசம். அப்ப, இதைக் காதுல விட்டா எப்பிடி துன்பமும் வலியும் இருக்குமோ, அப்படியாக இந்தப் பேச்சு இருக்குங்றதை, நாராசமேத்துற மாதிரி இருக்குன்னு சொல்லுறது, அதாங்க நாராசமாயிருக்குன்னும் ஆயிடுச்சி. இஃகிஃகி!

அடுத்து, யாராவ‌து அக்க‌ப்போர் செய்திட்டு இருக்கும் போது, ஏம்ப்பா சிங்கிநாத‌ம் செய்துட்டு இருக்கேன்னு கேட்கிற‌து வ‌ழ‌க்க‌ம். சிணுங்க‌ல் நாத‌ம்ங்ற‌துதான் சிங்கிநாத‌ம்ன்னு ஆயிடுச்சுன்னும் சொல்லி இருந்தாங்க‌. சிங்கிநாத‌ம்ங்ற‌தே ஒரு சொல்தானுங்க‌. எதையும் மேம்போக்கா எடுத்துட்டு, லேசுபாசா, சிர‌த்தை இல்லாம‌ ந‌ட‌ந்துக்குற‌ ப‌ழ‌க்க‌ந்தானுங்க‌ இந்த‌ சிங்கிநாத‌ம்ங்ற‌து. இந்த‌ சொல், சிங்கியிலிருந்து வ‌ந்த‌ ஒரு தொடுப்புச் சொல். வ‌ர்ற‌ கால‌ங்க‌ள்ல‌, சிங்கி, சிங்க‌ன், சிங்கிய‌டிக்குற‌து ப‌த்தி பாக்க‌லாமுங்க‌.

ச்சும்மா, Sriram அவிங்க சும்மா இருந்தா ஆகாதுன்னு, சும்மா இருக்குற நேரத்துல நீங்களும் தொடர்ல கலந்துக்குங்கன்னு, சும்மா இல்லாம‌ ஒரு தொடர் எடுத்து விட்டதுல, சும்மா பல தகவல் கிடைக்குதில்ல?! அதான், இந்த தொடுப்பைச் சொடுக்கி, சும்மா பத்தின அருமையான பதிவையும் படிங்க, சும்மா படிங்க நல்லா இருக்கும். இஃகிஃகி!!