2/18/2023

warning

"unfortunately அதுதான்  சென்றமுறை பைலா ரிவியூ செய்தப்ப, அவசர அவசரமா பைலா பாஸ் செய்தமாரிதான் எல்லாருடைய அனுபவமும்கூட. சென்றமுறை போர்டு இருந்தப்பவந்து, ஒரு வருசம் போர்டு இநேக்டிவா இருந்திட்டு, கடைசில தேர்தலுக்காக அவசர அவசரமா  240 பேருல் ரொம்ப ரொம்ப கொறஞ்சு பேரு ஓட்டுப் போட்டு தீர்மானங்களும் பைலா சேஞ்சஸ்மு நிறைவேற்றப்பட்டு இருக்கு. கான்ஸ்டியூசன் ஆக இருக்கட்டு, பைலா சேஞ்சஸாக இருக்கட்டும், they make it very difficult to change it. இருங்க, let me finish it... I have the floor.. anyway, coming back to point... ... கூட்டம் போட்டுப் பேசி பலரோடு கருத்துகளும் கேட்கப்பட்டுத்தான் பைலா சேஞ்ச் ஆகணும். சும்மா மெயில்ல yes or no கேட்டுப் பாஸ் ஆகக் கூடாது. அதுதான் டெமாக்ரடிக் வே. I may kind of a warning. state of Illinios law supersedes our bylaw. so what is happening, earlier bylaws is unethical, it was not the correct way to do, so that was a warning; நடந்தது நடந்து போகட்டும். இனிமேலும் நடக்கப் போற changes வந்து, அது முறைப்படி நடக்கலைனு சொன்னா, am challenging, and warning, and this should be challenged in court of law, and we don't want to face another court of law, and I am serious about this. And, I talked to sevral experts on this, they agreed with me on this. Thank you for the time."  -முன்னாள்தலைவரின் பேச்சு.

பதிலளித்துப் பேசிய இந்நாள் தலைவரும் நாகரிகமாக, முறையான பதில்தான் கொடுத்துக் கொண்டிருந்தார். அதாவது, மாற்றங்களைக் கொண்டு வந்து செயற்குழுவின் முன்னாள் வைத்தால், இருக்கும் பைலாவை மாற்ற பொதுக்குழுவுக்கு 30 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டு, மாற்றலாமெனச் சொல்லிக் கொண்டிருந்தவர், திடுமென அவரது பேச்சில் மாற்றம் ஏற்பட்டு, “மாற்றத்துக்கு பைலால ஆர்டிகிள் 12ல இடம் இருக்கு. அதெல்லாம் நீங்க படிச்சீங்ளா என்னானு தெரியலை. அதனாலத்தான் தடித்த வார்த்தைகளை பேசிட்டு இருக்கீங்க. This is not a place to do warning. அப்படிப் பண்றதுன்னா உங்களுக்குத் தெரிஞ்ச வழியில நீங்க பண்ணுங்க. இந்தமாரியெல்லாம் பேசிட்டு இருக்காதீங்க. உங்க வயதுக்கு இதெல்லாம் நல்லது கிடையாது. நீங்க நாலு பேரு சேர்ந்து மிரட்டலாம்னு நினைச்சா அது நடக்காது.” செயலர் இடைமறித்து பேச்சின் போக்கினை மாற்றுகின்றார்.

என்னுடைய நயாப்பைசா: நான் பலமுறை என்னுடைய இந்த குறிப்பினை மீண்டும் மீண்டும் வாசித்து, யோசித்தும் விட்டேன். அமைப்பின்பால் நாட்டம் கொண்ட எவனொருவனும் முன்னாள்தலைவரைப் போலத்தான் பேசியாக வேண்டும். அந்த இடத்தில் நான் இருந்திருந்தாலும் அப்படித்தான் பேசி இருப்பேன். ”அறிவுறுத்துகின்றேன் அல்லது எச்சரிக்கிறேன்” என்பது அப்படியானதொரு தடித்த சொல்லா? அக்கறையின்பாற்பட்ட சொல்லாக ஏன் இருக்கக் கூடாது? சரி, அது முறையற்ற சொல் என்றே வைத்துக் கொள்வோம். பொறுப்பில் இருக்கும் தலைவரது பேச்சு சரியானதா? தனிநபர்த் தாக்குதலுக்கு மடைமாற்றிச் செல்வது ஏன்? காரணம், prejudice. அண்மையில் அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டுக்குழுக் கூட்டத்தின் போது பிரசிடெண்ட் பேசுவார். எதிர்க்கட்சி உறுப்பினர் உரத்த குரலில், “பொய்யர்” எனக் குரல் எழுப்புவார். அதற்குப் பிரசிடெண்ட்டும் எதிர்த்துக் குரலெழுப்பி அக்கப்போரில் இறங்கினால் அவரது மாண்பு எப்படி இருக்கும்? A fiduciary duty is the legal responsibility to act solely in the best interest of another party. “Fiduciary” means trust, and a person with a fiduciary duty has a legal obligation to maintain that trust. இதற்குக் கட்டுப்பட்டவர்தாம் பொறுப்பில் இருப்பவர்.

விழாக்கள் நடத்துவதும் பணம் பண்ணுவதும் புகழ்மாலை பாடுவதும் அல்ல தமிழ்ப்பணி. பண்பாட்டில், வாழ்வின் விழுமியத்தில் மேம்பாடு கொள்வதுதான் தமிழ்ப்பணி.

No comments: