7/06/2013

புவியைக் காப்பாற்றும் பொருட்டு...

எழுந்து
காலைக்கடன் முடித்து
மின்னஞ்சல் பார்த்து
தட்சுடமில் பார்த்து
சிஎன்என் பார்த்து
தினமலர் பார்த்து
பிபிசி கண்ணுற்று
நக்கீரன் பார்த்து
புதியதலைமுறை பார்த்து
தமிழ்மணம் பார்த்து
பேசுபுக் மேலிருந்து கீழாக இறக்கியபின்
கூகுள்+க்குச் சென்று பார்த்து
குழுமப் பக்கங்களுக்குச் சென்று கண்டு
இவையாவினின்று கிளைத்த பக்கங்களுக்கு
போய் அவையாவும் படித்தறிந்து
எதைக் கையிலெடுப்பது என
தீர்மானிப்பதற்குள் நண்பகல் வந்துவிடுகிறது!
பசித்ததற்கேற்ப புசித்தான பின்
மீண்டும் முதலிலிருந்தே துவங்க 
வேண்டி இருக்கிறது எல்லாமும்!!
இப்படியாய் அனைத்தும் அறிந்து
சிக்கலுக்குத் தீர்வு இது என நினைக்கும் போதே
இருள் சூழ்ந்து உறக்கம் வந்து கவ்வி விடுகிறது!
எனக்கு எப்போது உகந்த நேரம் கிடைக்கும்?
இந்த உலகம் எப்போது சுபிட்சமடையும்??


2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சான்சே இல்லை...!

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/07/blog-post_6.html) சென்று பார்க்கவும்... நன்றி...